புதன், 27 ஏப்ரல், 2011

அனர்த்தக் கல்வியின் அவசியம்

மாரிகாலம் அதுவும் டிசம்பர் மாதம் வந்துவிட்டால் இலங்கை மக்களுக்கு மிகவும் ஞாபகம் உள்ள தினமும் ஒன்று உள்ளது. பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், சொத்துக்களையும் ஒரே நேரத்தில் இழந்ததை யார்தான் மறக்க முடியும்.
இயற்கையின் விளையாட்டுக்களை என்னவென்று சொல்வது, ஆதலால்தான் அனர்த்தங்கள் ஏற்படுகின்ற போது எம்மை பாதுகாக்கவும் அதிலிருந்து மீளவும் தன்னை தயார் செய்வதன் நோக்காக கொண்டு இன்று முன்னோடித் திட்டமாக அனர்த்தக் கல்வியின் அவசியம் உணரப்பட்டு அது பாடசாலைகளில் எவ்வளவு முக்கியத்துவமுடையது என்பதை அனர்த்தப் பாதுகாப்பு கல்வி இன்று வலியுறுத்தி நிற்கின்றது எனலாம்.
அந்தவகையில், “அனர்த்தம்” எனும் போது இயற்கையின் பஞ்சபூதங்கள், இடம்மாறி, இடமாற்றம் ஏற்படுகின்ற போதுதான் இவ்வனர்த்தங்கள் ஏற்படுகின்றன. இடி, மின்னல், காற்று, மழை, வெள்ளம் என்பனவும் ஏற்பட்டு அதனூடாக பேர ழிவு ஏற்படுகிறது. மண்சரிவு, சூறாவளி, சுனாமி, பூமியதிர்ச்சி, எரிமலை போன்ற வகைகள் இயற்கையால் சாபமிட்டது போன்று எம்மை வந்தடைகின்றன.
எனவேதான் இயற்கையின் பாதுகாப்பில் இருக்கின்ற நாம் இவற்றினையும் தாங்கி வாழ்வதுடன் இதிலிருந்து பாதுகாப்பும் பெறுகின்ற நோக்கில் எமது பாதுகாப்பை நாம் தேடிக்கொள்ளும் முகமாக சுனாமிக்குப் பின்னராக இலங்கையில் இப்பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப் பட்டுள்ளமையானது மிகவும் வரவேற் கத்தக்கதான ஒரு விடயமாகவே கொள்ளலாம்.
சுனாமிக்குப் பின்னராக இலங்கையின் பாதுகாப்பில், ‘அனர்த்தப் பாதுகாப்பு’ என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகவே காணப்படுகிறது. ஏனெனில் எமக்கு ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்திய 2004 டிசம்பர் 26ம் நாளை மறக்க முடியாது. அவ்வாறான ஒரு சம்பவம் இனிமேல் ஏற்படுகின்ற போது நமது பாதுகாப்புக்கு நாமே உத்தரவாதமாய் அமைந்து விடுவதற்காக வேண்டிய இன்று பரவலாக இதன் முக்கியத்துவம் பேசப்படுகிறது.
எந்தவொரு விடயத்தையும் இலகுவாக பரப்புவதற்கு ஏற்ற இடம் பாடசாலையாகும். இவ்வாறான விழிப்புணர்வுகளை செயற்படுத்துவதற்கும் பாடசாலைக் கட்டமைப்பு உதவுகிறது.
அந்த வகையில் அதிகம் பாதிக்கப்படுகின்றவர்கள் என்கிற வகையிலும் மாணவர்களே என்பதாலும், எதிர்காலத்தில் இதனை மனதிற் கொண்டு செயற்படுத்துபவர்கள் மாணவர்கள்தான் என்பதாலும் பாடசாலைகளில் இது சம்பந்தமான கருத்துக்களை அழுத்துவது சாலச் சிறந்தது என்பதாலும் இதனை கல்வியோடு இணைத்து பார்க்கப்படுகிறது.
இன்று அனர்த்தங்கள் பல்வேறு வடிவங்களில் ஏற்படலாம். இயற்கையாக தோன்றும் அனர்த்தங்கள் வேறு, மனிதர்களால் தோற்றுவிக்கப்படுகின்ற அனர்த்தங்கள் வேறு எனவும் நோக்கலாம்.
இதிலிருந்து இளஞ்சிறார்களை பாதுகாத்து அல்லது தாக்கங்களைக் குறைப்பது அல்லது பாதிப்பிலிருந்து விடுபட்டு பிள்ளைகளின் நல்வாழ்வினையும், பாதுகாப்பினையும் உறுதி செய்கின்ற வகையில் சகல பாடசாலைகளிலும் இவற்றினை கொண்டு வரும் நோக்குடன் 2005ம் ஆண்டில் அனர்த்த முகாமைத்துவச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அனர்த்த இடர்க் குறைப்புக்குரிய சட்ட ஒழுங்குகளையும் நிறுவன ரீதியான ஒழுங்குகளையும் ஏற்படுத்தும் முகமாக இது கொண்டுவரப்பட்டிருக்கின்றது.
நாட்டில் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. அதாவது வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, பயங்கரவாதம் (தற்போது மிகவும் குறைந்துவிட்டது), சூறாவளி, சுனாமி போன்றவைகள் ஏற்படுகின்ற வேளைகளி லும், அதன் பின்னரான காலகட்டங்களிலும் இடர்களுக்கு ஈடுகொடுக்கக் கூடியவாறான சமுதாயத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக ஏற்படக்கூடிய சேதங்களைத் தடுப்பதும், தவிர்ப்பதும் பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழியாக கல்வி உலகம் காணப்படுகிறது.
எனவேதான் பாடசாலைகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இதனை வழங்குதல் சிறப்பாகும். காரணம் குடும்பத்தின் முகவராக காணப்படுகின்ற பாடசாலைகள் அறிவு, திறன் என்பவற்றை வழங்குகின்ற மாணவர்கள் உருவாகின்ற குடும்ப அங் கத்தவர்கள் காணப்படுவதானது நிலையான சமூக பாதுகாப்புக்கு வித்திட ஏதுவாக பாடசாலை அனர்த்தக் கல்வி செயன்முறை செயற்திட்டம் உதவுகிறது.
அதிகமான பாடசாலைகளில் அனர்த்தப் பாதுகாப்புக் குழுக்கள் நிறுவப்பட்டு அதற்கு பயிற்சிகளும் விழிப்புணர்வு பயிற்சிகளும் வழங்கப்பட்டு, பாடசாலைச் சூழலின் இடையூறுகள் அதிகம் பாதிப்புறும் தன்மை போன்றவைகள் பகுப்பாய்ந்து, இனங்காணப்பட்ட பாதுகாப்பான இடங்களையும் மற்றும் வெளியேறும் வழிகளையும் காட்டுகின்ற பாடசாலையினதும், கிராமத்தினதும் வரைபடங்களை காட்சிப்படுத்த வேண்டும். சகல சமூகத்தினது ஒத்துழைப்புடன் அவசர நிலைமையின் போது பாடசாலைச் சமூகத்தை எவ்வாறு பாதுகாப்புடன் வைத்திருந்து வெளியேற்றுவது போன்ற பாவனைப் பயிற்சிகள் மூலமாக மனித உயிர்களின் பாதுகாப்புக்கு வகை செய்து செயற்படவும் உதவுகின்றது.
இன்று நாட்டின் அனைத்து மாவட்டங் களிலுமுள்ள பாடசாலைகளில் கற்கின்ற அனைத்து மாணவர்களினதும் அனர்த்த ரீதியான பாதுகாப்பினை வழங்கும் வகை யில் பாடசாலை அனர்த்தப் பாதுகாப்புக்கான தேசிய வழிகாட்டி எனும் நூலினை கல்வியமைச்சு சமூக இசைவுக்கான கல்வி நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக வெளியிட்டுள்ளது.
இலங்கை ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பகத்தின் மிஹிZ அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்ப ட்டு வருவதுடன், தேசிய கல்வி நிறுவகம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் மனித உரிமைக்குமான அமைச்சு, ஆசிய அனர்த்த தயார் நிலை நிலையம்- பாங்கொக் எனவும் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பும் வழங்கி வருகின்றன.
எனவேதான் பாடசாலைகளில் மாணவர்களின் கற்றல் ஊடாக பாடசாலை அனர்த்தப் பாதுகாப்புத் திட்டத்தினை ஏற்படுத்தி அவசரகால செயற்பாட்டினூடாக அனர்த்தங்களைத் தடுக்கும் வகையில் எந்தவிதமான அனர்த்தத்தையும் எதிர்கொள் ளும் வகையறாக இத்திட்டம் முழுமையான அணுகுமுறையை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.
குறிப்பாக பாடசாலையில் அல்லது பாடசாலைச் சூழலில் ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளை சமாளித்து அதற் கேற்றவாறு துலங்கல்களை மேற்கொண்டு தடுக்கவும், குறைக்கவும் செயற்பாடுகளை மேற்கொள்ள உதவுகின்றது. இத்திட்டத்தின் ஊடாக செய்முறைப் பயிற்சிகள் அனைத்து பாடசாலைகளிலும் செயற்படுத்தப்படுகின்ற போது இன்னும் பயன் மிக்கதாகவும் திகழும் அல்லவா?
எனவே, இத்திட்டத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டமையினால்தான் கடந்த 2007ம் ஆண்டிலிருந்து பாடசாலை கலைத்திட்டத்தில் அனர்த்தம் தொடர்பான விடயங்களை விஞ்ஞானம், வாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும், புவியியல், குடியியலும் மக்களாட்சியும் என்கிற பாடங்களினூடாக இதனது செயற்பாடுகளை ஒருங்கிணைத்து இது தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இன்று தேசிய கல்விக் கல்லூரிகளில் அனர்த்த முகாமைத்துவத் திற்கான கற்கைகளும் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அனர்த்த இடர் முகாமைத்துவம் பற்றிய அடிப்படை அறிவு பற்றிய பாடநெறி 2008ம் ஆண்டிலிருந்து கட்டாய மாக்கப்பட்டும் உள்ளன.
ஆகவே, பாடசாலைகளில் மாணவர்க ளுக்கு செயற்பாட்டு ரீதியில் அமைந்த இத்திட்டத்தின் மூலமாக, எதிர்காலத்தில் எவ்விதமான இடையூறுகளிலிருந்தும் தன்னையும், தனது குடும்பத்தினையும் பாதுகாப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவதற்கு உதவுவதுடன், தலைமைத் துவக் கட்டுப்பாட்டுக்கு அமைவாக இயங்கும் ஒரு அமைப்பு உருவாக்கம் பெறுகின்றது என்ற உணர்வுடன் கூடியதான நிலை தோன்றியுள்ளது என்றே கூறலாம். ‘இடர், துன்பத்திலிருந்து நாம்பாதுகாப்பு பெறவும் மற்றவர்களுக்கு உதவவும் எம்மை அர்ப்பணிப்போம்’

லேபிள்கள்:

எழுத்தறிவு என்பது

எழுத்தறிவு என்றதும் எழுதுவது மட்டுமன்று. கேட்பதும், வாசிப்பதும் கூட எழுத்தறிவுக்குள் அடங்கும்.

சர்வதேச எழுத்தறிவு தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 8ஆம் திகதியன்று உலகளாவிய ரீதியில் நினைவுகூரப்பட்டு வருகிறது.

அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், எழுத்தறிவைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போன வளர்ந்தோருக்கு முறைசாராக் கல்வித் திட்டத்தின் மூலம் எழுத்தறிவைப் போதிக்கும் நோக்கத்துடனும் ஆண்டுதோறும் எழுத்தறிவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி தெஹ்ரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம் மகாநாட்டில் உலகளாவிய ரீதியில் எழுத்தறிவின்மையால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமுகமாக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன்போதே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக அனுசரிக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் 1965 நவம்பர் 17, திகதி யுனெஸ்கோ நிறுவனம் கூடியபோது செப்டம்பர் 8ஆம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாகப் பிரகடனம் செய்தது. இத்தினம் 1966ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

தனி மனிதனுக்கு மட்டுமன்றி, பல்வேறு தரப்பினருக்கும் சமுதாயங்களுக்கும் எழுத்தறிவு எவ்வளவு முதன்மையானது என்பதை எடுத்துரைப்பதே இந்த நாளின் குறிக்கோள்.

எந்த மொழியிலும் இலகுவான வசனங்களைக் கூட எழுதவும் படிக்கவும் தெரியாத நிலையே எழுத்தறிவின்மை என ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் இதனை வரையறுக்கிறது.

பொதுவாக எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைத் தருகின்றது.

இன்று எழுத்தறிவு பல வகைப்பட்ட தொடர்பாடல் முறைகளைப் பின்பற்றி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவற்றில் கணித்தலும், கணினி பயன்பாடும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் சுமார் 776 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வயது வந்தவர்களில் 5 பேரில் ஒருவருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. இவர்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள்.

அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறுவர்கள் பாடசாலை சென்று கற்கமுடியாத அற்ற நிலையில் உள்ளார்கள்.

உலக மயமாக்கத்தில் விழிப்புடன் செயற்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் எழுத்தறிவின்மை என்பது வெட்கப்படக்கூடிய விளைவு தான் என்றால் கூட அது தவறல்ல.

அதி நவீன தொழில்நுட்பத் திறனும் கணினிப் பயன்பாடும் இன்றைய உலகை ஆக்கிரமித்திருக்கும் இன்றைய சூழலில் எந்தவொரு நாடும் தனது மக்கள் எழுத்தறிவில் பின்தள்ளப்பட்டுள்ளனர் என்று கூற வெட்கப்பட்டே ஆக வேண்டும்.

இவ்வாறாக எழுத்தறிவைப் பெற்றுக் கொள்ள முடியாமைக்கான காரணங்களாக உள்ள சமூக நிலைகள் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வறுமை, போஷாக்கின்மை, அரசியல் நெருக்கடிகள், கலாசார பாகுபாடு, அடிமைநிலை போன்ற பல்வேறு காரணங்களால் எழுத்தறிவின்மை உலக நாடுகளில் இன்றும் காணப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

கல்வியறிவு அல்லது எழுத்தறிவின் முக்கியத்துவம் தான் என்ன?

தேசிய ரீதியிலும், சர்வதேசரீதியாக இது தொடர்பான செயற்திட்டங்கள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன? இவற்றைக் கொண்டு செல்வது யார் என்பன போன்ற வினாக்களுக்கு நாம் விடை காண வேண்டியதவசியம்.

வறுமையை ஒழித்தல், சிறுவர் இறப்பு வீதத்தைக் குறைத்தல், சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தல், பால் சமத்துவத்தை கட்டியெழுப்பல், முறையான அபிவிருத்தியை உறுதி செய்தல் சமாதானம் மற்றும் ஜனநாயகம் போன்ற பல விடயங்களின் அபிவிருத்தியையும் எழுத்தறிவு அபிவிருத்தியுடன் இணைத்து நோக்க வேண்டியுள்ளது.

யுனெஸ்கோவின் 'அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)” அறிக்கையின்படி தெற்கு மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6 %) படிப்பறிவில்லாமல் உள்ளனர்.

அதற்கடுத்த படியாக ஆபிரிக்கா (59.7 %), அரபு நாடுகள் (62.7 %) என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இலங்கையும் எழுத்தறிவு வீதமும்

எழுத்தறிவைப் பொறுத்தவரை தெற்காசியாவில் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையில் 5 முதல் 14 வயது வரை, கட்டாயக் கல்விக்கான வயதெல்லையாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை, கல்விசார் அபிவிருத்தித் திட்டங்களில் இணைந்து செயற்படுவதற்காக 1949 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி யுனெஸ்கோ அமைப்பில் இணைந்து கொண்டது.

இன்று இலங்கையின் எழுத்தறிவு வீதமானது நகர்ப்புறங்களிலேயே முன்னேற்றங் கண்டுள்ளது எனலாம்.

சுதந்திரம் கிடைத்து 62 வருடங்களுக்குப் பிறகும் கூட பெருந்தோட்டப்பகுதிகளில் அடிப்படை கல்வி வசதியை பெறத் தவறியவர்கள் ஏராளம் பேர் உள்ளனர்.

இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளி விபர திணைக்களத்தின் அறிக்கையின் படி இலங்கையின் நகர்ப்புறங்களில் எழுத்தறிவு 95 வீதமாகவும் கிராமப்புறங்களில் 93 வீதமாகவும் பெருந்தோட்டப் பகுதிகளில் 76 வீதமாகவும் உள்ளது.

இந்த வகையில், ஆண்கள் 94 சதவீத கல்வியறிவையும் பெண்கள் 91.1வீத கல்வியறிவையும் பெற்றுள்ளனர்.

யுனெஸ்கோவின் அபிவிருத்தித் திட்டங்களில் எழுத்தறிவித்தல் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. ஒவ்வொரு நாடுகளிலும் இத்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றமை இதன் முக்கிய அம்சம். அத்துடன் முதியோர்களுக்குக் கல்வி போதித்தல் பிரதான இடத்தை வகிப்பது வரவேற்கத்தக்கது

லேபிள்கள்:

கட்டாயக்கல்வி

ஒவ்வொரு மனிதனுக்கு தனது வாழ்வை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் இருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக, இன்றைய உலகில் மிகப்பல குழந்தைகள் இந்த வாய்ப்பு ஏதும் இன்றி வளருகின்றன. ஏனெனில் அவர்களது அடிப்படை உரிமையான ஆரம்பக் கல்வி கூட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. கல்வித் திட்டங்கள் பலவற்றின் காரணமாக, 2000ம் ஆண்டின் முடிவிற்குள் இந்திய கிராம ஜனத்தொகையின் 94% பேர்களுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாக ஆரம்பக் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டு விட்டன. 84% மக்களுக்கு நடுநிலைப் பள்ளிகள் 3 கி.மீ. தூரத்திற்குள் உருவாக்கப்பட்டு விட்டன. எஸ்.சி/எஸ்.டி பிரிவினரையும், பெண் குழந்தைகளையும் பள்ளிகளிள் சேர்க்க சிறப்பு மிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் ஐந்தாண்டு திட்ட காலகட்டத்திலிருந்தே ஆரம்பக் கல்வி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கல்வி நிலையங்களில் குழந்தைகள் சேர்ப்பு குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துள்ளது.
அதேபோல ஆரம்பக் கல்வி நிலையங்களுக்கும், அதற்கு அடுத்த கட்ட கல்விச் சாலைகளும் எண்ணிக்கையில் பெருகிவிட்டன. 1950-51 ஆண்டில் ஆரம்பக் கல்விக்கான பள்ளிகளில் 3.1 மில்லியன் மாணவர்கள் மட்டும் சேர்ந்தனர். 1997-98 ஆண்டைய கணக்கின்படி இந்த எண்ணிக்கை 39.5 மில்லியனாக உயர்ந்தது. ஆரம்பப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் ஆகியன 1950-51ம் காலகட்டத்தில் 0.223 மில்லியன்கள். இந்த எண்ணிக்கை 1996-97-ல் 0.775 மில்லியன்களாக உயர்ந்தது. 2002-2003 ஆண்டில் 6-14 வயதுள்ள குழந்தைகளில் 82% பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள், இதை 100% ஆக ஆக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
உலக மக்களின் வறுமையை முடிவுக்குக் கொண்டுவரவும், அமைதியும் பாதுகாப்பும் உள்ள வாழ்க்கையை மக்கள் வாழ்வதற்கும், ஒவ்வொரு நாட்டிலுள்ள குடிமக்கள், நலம் பயக்கும் முடிவுகளை தங்களுக்கும் தங்களது குடும்பங்களுக்கும் தேர்ந்தெடுக்க அவர்கள் திறனை மேம்படுத்துதல் அவசியம். இந்த நிலையை அடையவேண்டும் என்றால், உலகத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளும் தங்களின் ஆரம்பக் கல்வியையாவது, உயர் தரமுள்ள கல்வி கற்கும் சூழ்நிலை உள்ள பள்ளிகளில் பயில வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும

லேபிள்கள்:

தமிழ் மொழி கல்வியின் அவசியம்

தமிழ் மொழி கல்வியின் அவசியம் என்ன? தமிழ் மொழி கற்பதால் அப்படியென்ன சிறப்பு? தமிழக அரசு இதற்காக ஏன் சிறப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும்?

தமிழ்மொழி கல்வியின் முக்கியத்துவத்தை உணர ஆதிக்க அரசியல் கருத்தியலை புரிந்து கொள்வது அவசியம். இந்தி ஆதிக்கம், பார்ப்பனீய/இந்துத்துவ ஆதிக்கம் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தே இயங்குகின்றன. ஆரியர்களது ‘வருகையின்’ பின்னர் பார்ப்பனர்களின் வேத பாடல்களை ஏற்காமல் மாற்று சிந்தனைகளை முன்வைத்த சிந்தனையாளர்களின் கருத்துக்கள் சிதைத்து அழிக்கப்பட்டன. பார்ப்பனர்களின் பாடல் வடிவிலான வேண்டுதல்களும், புலம்பல்களுமான வேதங்கள் எஞ்சியிருந்தன. அவை கூட சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டன. சமஸ்கிருதமும், வேதமும் பார்ப்பனரல்லாதவர்களுக்கு மறுக்கப்பட்டது. பின்னர் இடைக்காலத்தில் மாற்று சிந்தனை கருத்துக்கள் களவாடப்பட்டு வைதீக வைணவ (பார்ப்பன) மதத்தில் உட்சொருகப்பட்டு சொந்த சிந்தனைகள் போல மாற்றப்பட்டன.

மண்ணின் மக்களது இலக்கியங்களான தத்துவங்கள், சிந்தனைகளை அழித்ததன் வழி முதலில் கல்விக்கும், அறிவிற்கும், சிந்தனைக்கும் தடை செய்து, சிலரது ஆதிக்கத்தை நிறுவ வேதம் படிக்க, சமஸ்கிருதம் படிக்க தடை பயன்பட்டிருக்கிறது. அறிதலும், கற்றலும், சிந்தனையும் இணைந்த வளர்ச்சி விடுதலையான சுதந்திர பறவையாக மனிதனை செழுமைப்படுத்தும். இதற்கு மொழியின் பங்கு அவசியமானது. அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் மொழியின் சொற்கள், சொலவடைகள் சமூக, அரசியல் பின்னணியை கொண்டவை என்பதை கூர்ந்து கவனிக்கும் போது விளங்கும். குறிப்பாக நமது கிராமங்களில் சொல்லப்படும் பல வார்த்தைகளின் பின்னால் பல நூற்றாண்டின் வரலாற்றை உள்ளடக்கிய பெரும் சமூக அரசியலே இருக்கிறது. இன்று இத்தகைய வார்த்தைகள் எத்தகைய பின்னணியில், யாரால், எதற்காக பயன்படுத்தப்படுகிறது?

உதாரணமாக குமரிமாவட்டத்தில் குழந்தைகளை பயங்காட்ட (அச்சமூட்ட) ‘பிள்ளைபிடிகாரன் வாறான்’, ‘சாக்குக்காரன் வாறான்’, ‘மூக்கறுத்து போடுவேன்’ சொல்வார்கள். பள்ளிக்கு செல்லும் காலங்களில் எங்களிடையே ‘பிள்ளைபிடிகாரன்’ பற்றிய வதந்திகள்/செய்திகள் பரவி பயத்தை அதிகரிக்கும். அப்போதெல்லாம் ஆளரவமற்ற நல்லுச்சைக்கு (மதியம்) பள்ளியிலிருந்து வீட்டுக்கு சாப்பிட போக பெரிய கிளாஸ்ல படிக்கிற அக்காமாரோ, அண்ணன்மாரோ கூட தான் போவது வழக்கம். பெரிய மரங்கள், பாரம்தூக்கும் கற்கள் இவற்றின் பின்னால் யாராவது மறைந்திருக்கிறார்களோ என்ற பயமும் கலந்து ஓட்டமும், நடையுமாக வீட்டுக்கு வருவோம். இவ்வளவு அச்சமூட்டும் ‘பிள்ளைபிடிகாரன்’, ‘சாக்குக்காரன்’ யாரையும் அப்போதெல்லாம் நேரடியாக பார்த்ததில்லை. பிச்சையெடுத்தல், உடல் உறுப்பு கொள்ளை, குழந்தை தொழில், பாலியல் தொழில் போன்ற கொடுமைகளுக்காக இரக்கமற்று குழந்தைகளை கடத்துபவர்கள் இன்றைய காலத்து பிள்ளைபிடிகாரன்கள். பிள்ளைபிடிகாரன் என்ற சொல் தமிழ்மொழியில் எப்படி அன்றைய காலத்தில் உருவானது?

திருவிதாங்கூர் மன்னர்களது ஆட்சி பார்ப்பனீயத்தின் தொட்டிலாக விளங்கியது. கோயில்கள், அரண்மனைகள் போன்ற மிகப்பெரிய கட்டிடவேலைகள் நடைப்பெற்றது. பார்ப்பன மதத்தின் நம்பிக்கையான ‘பலிகொடுத்தல்’ என்னும் பெருங்கொடுமை இந்த மன்னர்களையும், அவர்களை சார்ந்த குடும்பங்கள், நம்பூதிரிகளையும் பிடித்திருந்த நோயாக இருந்தது. அரண்மனை, அணைகள், கோயில்கள் கட்டும் போது கட்டடம் நிற்கவேண்டுமென்றால் உயிர்பலி கொடுக்கவேண்டுமென்ற மூடநம்பிக்கை பல்லாயிரம் உயிர்களை ‘பலி’வாங்கியிருக்கிறது. பலியிடுதல் என்னும் சொல்லின் பின்னால் இருக்கும் சமூக அரசியலில் உயிரை காணாமல் போக்கப்பட்டு, உயிரை இழந்தவர்கள் அவர்ணர்களாக கருதப்பட்ட சூத்திர, பஞ்சம சாதியினர் என்பது வரலாறு. கட்டிடம் நிலைநிற்க உயிர்ப்பலி கொடுக்க பிள்ளைகளை, அதுவும் தலைப்பிள்ளைகளை ‘பிடிக்க’ (கடத்த) பிள்ளைபிடிகாரன்கள் சாக்குப்பைகளுடன் வருவார்களாம். அதன் தொடர்ச்சியாக பெற்றோர்கள் பேச்சுகளில் உருவான சொல் ‘பிள்ளைபிடிகாரன்’. (இன்று கட்டிடங்களை நிலைநிறுத்த, வளர்ச்சிபெற என்ற பெயரில் ‘வாஸ்து சாஸ்திரம்’ என்ற பெயரில் நடக்கிறது இன்னொருவகை மோசடி).

ஆக, தமிழ்மொழி கற்க அவசியமில்லையென்றால் தனது சமூகத்தின் வரலாற்றை, சமூக அரசியலை அறிந்து, கற்று, சிந்தித்து மனிதவிழுமியங்களுடன் சுதந்திரமான மனிதத்தை உருவாக்க இயலுமா? ‘பிள்ளைபிடிகாரன்’ போன்ற பல சொற்கள் நமது கிராமப்புற மக்களிடம் புதைந்து கிடக்கின்றன. அவற்றில் சமூக அரசியலை அறிய தேவை எழுகிறது. அடக்கப்பட்டு அடிமையாக இருந்த மக்களின் இவ்வகை சொற்களை இலக்கியகுருசாமி ஜெயமோகன் போன்ற ஆதிக்கசாதி கருத்தியலில் ஊறியவர்கள் எப்படி பயன்படுத்திவருகிறார்கள் என்பது அப்போது வெளிச்சத்திற்கு வரும். சாதி,மத ஆதிக்கத்திலிருந்து விடுபட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்மொழிவழி கல்வி அடிப்படை. தமிழ்மொழி கல்வியில் எதை படிப்பது, எப்படி படிப்பது, அதன்வழி என்ன வகையான சமூகத்தை கட்டமைப்பது என்பதில் கவனம் செலுத்துவதும் அவசியம். மூடநம்பிக்கையையும், மதவெறியையும், சாதிவெறியையும் உருவாக்காதாவகையில் தமிழ்மொழி கல்வி அமையவேண்டும்.

லேபிள்கள்:

வெளிவாரிக் கல்வியின் தாக்கம்

ஆயிரமாயிரம் பட்டதாரிகளுக்கும், மாணவர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் தகவலுடன் ஆரம்பிக்கிறது இந்தக் கட்டுரை!
'பன்னிரண்டாம் வகுப்பு வரை முறையான பள்ளிக் கல்வியைப் பெறாமல், திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் மூலம் நேரடியாக இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்களின் பட்டம் செல்லாது!' என்று அதிரடியாக ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். 'திறந்தவெளிப் பல்கலைக்கழகம் மூலமாக வழங்கப்படும் கல்விக்கு நாங்கள் அனுமதியே வழங்கவில்லை!' என்று யு.ஜி.சி-யும் (பல்கலைக்கழக மானியக் குழு) கை விரித்திருக்கிறது. அப்படியானால், திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் கதி?

அப்பாவி ஏழை மக்களுக்கும், குடும்பச் சூழ்நிலைகளால் படிப்பைத் தொடர முடியாதவர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்ததுதான் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். அதில் படித்து, தேர்வுகள் எழுதி, பட்டங்கள் பெற்ற பலர் பல்வேறு பணிகளில் இருக்கிறார்கள். ஆனால், இப்போது ஆணிவேரையே அசைக்கும், 'அந்தப் பட்டம் செல்லுமா?' என்ற கேள்வி பல்லாயிரக் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது.

'நீங்கள் ஒன்றாம் வகுப்புகூடப் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட்ட வயது நிறைந்திருந்தால்போதும்... எம்.ஏ., படிக்கலாம் வாருங்கள்!' என்று சில தனியார் பல்கலைக்கழகங்கள் லேகிய விளம்பரம் கணக்காக பொதுமக்களைக் கூவிக்கூவி அழைத்தன. சில அங்கீ கரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களும்கூட அந்தப் போட்டியில் குதித்தன. இதில் அண்ணாமலை திறந்தவெளிப் பல்கலைக்கழகம் 'தாங்கள் வழங்கும் பட்டத்துக்கு முறையான அனுமதி தர வேண்டும்' என்று அரசிடம் கோரிக்கை வைத்தது. அரசும் 'திறந்தவெளிப் பல்கலைப் பட்டங்களையும் முறையான கல்லூரிப் பட்டங் களுக்கு இணையாகக் கருதலாம்' என்று அரசாணை பிறப்பித்தது. அண்ணாமலை திறந்தவெளிப் பல்கலைக்கழக மாணவர்களில் பலர் பொதுப் பணிகளில் வேலைவாய்ப்புகளும் பெற்றார்கள்.
2000-ம் ஆண்டில் மீண்டும், 'திறந்தவெளிப் பல்கலை மூலம் வழங்கப்படும் கல்வியானது ரெகுலர் முறையில் வழங்கப்படும் கல்விக்கு இணையானதா?' என்று கேள்வி எழுந்தபோது, முந்தைய அரசாணை சாயலிலேயே இன்னொன்றையும் வெளியிட்டது. அடுத்தடுத்து விவாதங்கள் கிளம்பியபோதும், இதேபோன்று சில அரசாணைகள் பிறப்பித்ததோடு தன் கடமையைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டது அரசு.

'இனி எல்லாம் சுகமே' என்று இருந்தபோது, முளைத்தது புது பூதம். பி.எஸ்.என்.எல். நிறுவன தமிழ்நாடு வட்டத் தலைமைப் பொது மேலாளர் 2004-ம் ஆண்டு, 'ப்ளஸ் டூ தேர்ச்சியைக் குறைந்தபட்சக் கல்வித் தகுதியாகக்கொண்ட ஒரு பணியிடத்துக்கு, பள்ளிகளில் முறையாக ப்ளஸ் டூ தேர்ச்சி அடையாமல், திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் வாயிலாக இளங்கலைப் பட்டம் பெற்றவர்களைப் பணிஅமர்த்தலாமா?' என்று கேள்வி எழுப்பினார். 'ஆனால், அவர்கள் ப்ளஸ் டூ படிக்கவில்லையே!' என்று சொல்லி தடா போட்டுவிட்டது கல்விக் குழு.
திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பட்டங்கள் மீதான குழப்ப மழுப்பல்கள் சூடு பிடித்தது அப்போதுதான்.
'முறையாகப் பள்ளிக்குச் சென்று பத்து மற்றும் ப்ளஸ் டூ வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள், திறந்தவெளிப் பல்கலைகழகங்களில் இளநிலை அல்லது முதுகலைப் பட்டங்கள் பெற்றிருந்தால் அவர்களை மட்டும் பொதுப் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுகளுக்குப் பரிசீலிக்கலாம்' என்றது அடுத்த அரசாணை. தற்காலிகத் தீர்வு தேடியே அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அது இன்னும் நிலைமையைச் சிக்கலாக்கியது. இந்த அரசாணையைச் சுட்டிக்காட்டி, அதற்கு முன் திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பட்டங்கள் மூலம் மட்டுமே (பள்ளியில் 10, +2 தேர்ச்சி அடையாதவர்கள்) பணி நியமனம் பெற்றவர்கள் அல்லது பதவி உயர்வு பெற்றவர்களின் பதவிகளைப் பறிக்கச் சொல்லி, மேலதிகாரிகளுக்குக் கடிதங்களைத் தட்டிவிடத் தொடங்கினார்கள் 'ரெகுலர்' பட்டதாரிகள். உடனே, கல்வித் துறை, 'திறந்தவெளிப் பல்கலைக்கழகம் மூலம் முதுகலைப் பட்டம் பெற்றவர்களை ரெகுலர் முறையில் கல்வி கற்றவர்களாகக் கருதி, பதவி உயர்வு வழங்கக் கூடாது' என்று ஓர் அரசாணை வெளி யிட்டது. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.
இது இப்படி இருக்க, தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியின் முதல்வராக ரமேஷ் என்பவர் நியமிக்கப்பட்டார். 'ரமேஷ் இளங்கலைப் பட்டம் பெறாமல், திறந்தவெளிப் பல்கலைக்கழகம் மூலம் நேரடியாக முதுகலைப் பட்டம் பெற்றவர். அதன் அடிப்படையில் அவர் முதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது!' என்று வழக்கு தொடர்ந்தார் மதன் கேப்ரியல். இவர் ரமேஷ§க்கு அடுத்த சீனியாரிட்டியில் இருந்த 'ரெகுலர்' பட்டதாரி.
உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்குத் தாவியது வழக்கு.
அப்போது தடாலடியாக, 'திறந்தவெளிப் பல்கலைப் படிப்புகளுக்கு தாங்கள் அனுமதி வழங்கவே இல்லை' என்று நீதிமன்றத்தில் அறிவித்தது பல்கலைகக்கழக மானியக்குழு (யு.ஜி.சி). கடந்த பிப்ரவரி அன்று வெளியான இறுதித் தீர்ப்பில், 'ரமேஷ் திறந்தவெளிப் பல்கலைக்கழகம் மூலம் இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாகப் பெற்ற முதுகலைப் பட்டப்படிப்பு செல்லாது. அதனால் அவரது முதல்வர் பணி நியமனம் சட்டத்துக்குப் புறம்பானது' என்று அறிவித்தது உச்ச நீதிமன்றம். வெடித்தேவிட்டது கண்ணி வெடி.
திறந்தவெளிப் பல்கலைக்கழகம் மூலம் பட்டம்பெற்றவர்களின் எதிர்காலத்தை ஆணியடித்ததுவிட்டது தீர்ப்பு. உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி முறையாக ப்ளஸ் டூ முடிக்காமல், திறந்தவெளிப் பல்கலைக்கழகம் மூலம் நேரடியாகப் பட்டம் பெற்றவர்களின் படிப்புகள் செல்லாது என்பதுதான் இன்றைய உண்மை நிலை.
''திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு இனி அரசுப் பணி வாய்ப்புகள் மறுக்கப்படுமா?" என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம் கேட்டோம். ''திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பட்டங்களின் அங்கீகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவாக அறிவித்துவிட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி எதுவும் செய்ய முடியாது. ஆனாலும், இந்த விஷயத்தை தமிழக அரசு கவனமாகப் பரிசீலித்து வருகிறது. திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் எத்தனை பேர் அரசுப் பணியில் இணைந்துள்ளனர் என்ற தகவல்களைச் சேகரித்து வருகிறோம். 'எடுத்தோம் கவிழ்த்தோம்' என்று செயல்படாமல் அவர்கள் அனைவரையும் அரவணைக்கவே அரசு விரும்பும்!" என்றார்.
ஆனால், சமீபத்தில் முடிந்த குரூப் 2 தேர்வுகளில் தேர்ச்சிஅடைந்த 128 பேர் திறந்தவெளிப் பல்கலைப் பட்டதாரிகள். அந்த 128 பேர்களின் முடிவை மட்டும் நிறுத்திவைத்திருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். இது தொடர்பாக கருத்து தெரிவிக்க 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் எவரும் முன்வரவில்லை. தேர்வாணையத்தில் உள்ள இணைச் செயலாளர், துணைச் செயலாளரும் திறந்தவெளிப் பல்கலைப் பட்டதாரிகள்தான் என்பது ஒரு ஸ்கூப்!
அரசுத் துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாமல், தற்காலிகத் தீர்வு தேடி, முன்னுக்குப் பின் முரண் அரசாணைகள் வெளியிட்டதால், ஒரு தலைமுறை இளைஞர்களே திக்கு தெரியாமல் திகைத்துக்கிடக்கிறார்கள். இந்த விஷயத்தில் இறுதி முடிவெடுக்க வேண்டியது எவராக இருந்தாலும், தாயுள்ளத்தோடு செயல்பட வேண்டியது அவசியம்!

லேபிள்கள்:

முன்பள்ளி கல்வியின் அவசியம்

இன்று எங்கு பார்த்தாலும் மாணவர் முன்பள்ளி நிலையங்களுக்கான விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்ற அளவுக்கு பெரிய பெரிய விளம்பரப் பலகைகளாக வீதிகள் தோறும் தொங்கவிடப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. இக்காலங்களில் குறிப்பாக வருட இறுதியிலும் ஆரம்பத்திலும் காண்கின்றோம்.
பொதுவாக இன்று கிராமங்களில் கூட ஆரம்பிக்கப்படுகின்ற முன்பள்ளிக் கூடத்திலும் ஆங்கிலத்தில் வகுப்புக்கள் நடாத்தப்படும் என்கிற பிரச்சாரம் பலமாகவே இருக்கும். பெற்றோரும் ஏதோ பிள்ளை சிறு பராயத்தில் சில ஆங்கிலச் சொற்களை பயில்வது நல்லதுதானே என்கிற எண்ணத்தில் பணத்தை வாரியிறைக்கின்றனர். முன்பள்ளிகளில் போட்டி போட்டுக்கொண்டு சேர்க்கின்றனர்.
ஆனால் அங்கு யார் யாரால் பிள்ளை பராமரிக்கப்படுகிறது என்றெல்லாம் எதுவுமே பார்க்கமாட்டார்கள். பாடத்திட்டத்தை தாண்டி பயிற்சிக் கொப்பிகளும், புத்தகங்களும் வாங்கிக்கொடுத்து முதுகில் பாரிய சுமையுடன் அனுப்பும் பெற்றோர்கள் கூட இக்கல்வியின் பயன்பாடுகள் பற்றிய அறிவின்றிச் செயற்படுவதுதான் பரிதாபத்திற்குரியதாகும்.
இன்று முன்பள்ளி எனப்படுகின்ற பாலர் கல்வியின் அவசியம் குறித்து பல்வேறு மட்டங்களில் பேசப்பட்டாலும் அது முறைசார்ந்த அமைப்புக்கள் ஊடாக இன்னும் வந்து சேரவில்லை. பாடசாலைக்கு தரம் ஒன்றில் சேரும் பிள்ளையை கையாளுவதற்கான முன்னோடித் திட்டமாகவே இம் முன்பயிற்சி அமைகிறது. ‘இங்குள்ளவர்கள் இவ்விளம்பராயத்துப் பிள்ளைகளை கையாளுவதற்குரிய பயிற்சிகளோ, பாடத் திட்டங்களோ இன்றியும் காணப்படுகின்றனர். இது பிள்ளையின் ஆக்கவூக்கத்திறனை மழுங்கடிக்கச் செய்கின்ற ஒரு விடயமாகவும் கொள்ளப்படுகிறது.
ஒரு காலகட்டத்தில் இலங்கையின் நகரங்களில் மட்டுமே இயங்கிய இப்பாலர் பாடசாலைகள் இன்று அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. இது கல்வியின் தேவையும், அவசியமும் உணரப்பட்டுள்ளமையைத் தெளிவாக்கியுள்ளது. அதனால்தானோ என்னவோ முன்பள்ளி நிலையங்களின் அதிகரிப்பும் காணப்படுகிறது.
போதிய வளப் பற்றாக்குறையுடன் இவை நடாத்தப்படுவதும் பெரும் குறைபாடாகக் கொள்ளலாம். இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்து பெளதீக வளத்தைக் கொண்டு செயற்பாடுகளுடன் கூடிய கற்றலையே இந்நிலையங்கள் ஆற்றவேண்டும். அதனைவிடுத்து வளப்பற்றாக்குறையுடன் அமைந்த கற்றலானது மாணவர்களின் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிடும். இதனால் நேரடியான கண்காணிப்பும், பார்வையும் அவசியமாகும்.
கடந்தகாலங்களில் பாலர் பாடசாலைக்கான திட்டங்கள் அரசினால் தயாரிக்கப்பட்டு, அதன் முக்கியத்துவமும் உணர்த்தப்பட்டிருந்தன. கடந்த 1953 ஆம் ஆண்டில் பாலர் பாடசாலைக்கான, பாடத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இவை “வேலைக்குகந்த மகிழ்ச்சி நிறைந்த இடங்களாக” அமையவேண்டும் என இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் இத்திட்டத்தின் நோக்கம் சரியான முறையில் அமையப் பெறாததால் உரிய இலக்கை அடையவில்லை. தொடர்ந்து 1961 ஆண்டில் தேசிய கல்வி ஆணைக்குழு பேராசிரியர் ஜே. ஈ. ஜயசூரிய தலைமையில் முன்பள்ளிகளின் அவசியம் சம்பந்தமான கருத்துக்களை அன்று தெரிவித்திருந்தது.
4 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்பள்ளி நிலையங்கள் வீட்டுச் சூழலில் உருவாக்கப்படுவதுடன் பிள்ளைகளின் உடல், உள விருத்தியுடன், முதிய ஆசிரியர் ஒருவரின் கண்காணிப்புடனும், உள்ளூராட்சி மற்றும் கல்வித் திணைக்களத்தின் அனுசரணைகளுடனும் இருக்க வேண்டும் எனப்பட்டது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தான் இங்கு கற்பிக்க வேண்டும் எனப் பல சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் அத்திட்டம் அரசின் போதிய அனுசரணையின்றி சோபையிழந்து போயிற்று.
தொடர்ந்து 1972 ஆண்டில் அரசினால் வெளியிடப்பட்டிருந்த புதிய கல்விச் சீர்திருத்தத்தில் முன்பள்ளிக் கல்வியின் அவசியம் பற்றியும் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் அதில் அரசின் பொறுப்புக்கள் செல்வாக்குச் செலுத்தவில்லை. பின்னர் கொண்டுவரப்பட்ட போகொட பிரேமரத்னா தலைமையில் சீர் செய்யப்பட்ட (1979) தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபாரிசுகளும் முன்பள்ளி சம்பந்தமான முக்கியத்துவத்தை வலியுறுத்தி இருந்தன.
அதேவேளை கடந்த காலத்தில் (1997) கொண்டுவரப்பட்ட பொதுக் கல்விச் சீர்திருத்தங்களில் முன்பள்ளி பற்றிய உள்ளடக்கம் மிகவும் பலமானதாக அமையப் பெற்றிருந்தமை விசேட அம்சமாகும். அதில் “3 - 5 வயதுக்கிடைப்பட்ட பிள்ளையின் முழு வளர்ச்சி முக்கியமானது. அதைக் கடந்த காலத்தைவிட கல்வியமைப்பில் கூடியளவு கவனம் ஈர்க்கும் விடயமாக பார்க்கவேண்டியுள்ளது.
தகுந்த வழிகாட்டலும், சிறந்த மேற்பார்வையும், அரசின் கட்டுப்பாடும் அமைகின்றபோது கூடிய பலனைத் தரும்” என்றும் கூறப்பட்டிருந்தது. அத்துடன் நாட்டின் பல பகுதிகளிலும் முன்பள்ளி நிலையங்கள் நடத்தப்பட்டாலும் அவை சிறந்த தரத்தில் காணப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஜனாதிபதி செயலணிக்குழு பின்வரும் சிபாரிசுகளையும் அப்போது செய்திருந்தது. அதாவது;
1. 3-5 வயதிற்கிடைப்பட்ட பிள்ளைகள் கூடியளவில் பங்குபற்றுவதற்கேற்ற வகையில் அதிக எண்ணிக்கையில் முன்பள்ளிகளை உருவாக்கி அவற்றிற்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்துதல்,
2. தகுந்த அதிகாரமுடையவர்களால் முன்பள்ளி ஆசிரியரின் தரம், பள்ளிவசதிகள், மேற்பார்வை போன்ற விடயங்களில் சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் முன்பள்ளிகளை ஒழுங்கமைத்தல்.
3. பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, மற்றும் பொருத்தமான முகவர் நிலையங்களைச் சேர்ந்த இக் குறிப்பிடப்பட்ட துறையில் திறமை வாய்ந்தோரால் இம் முன்பள்ளிக்கான அடிப்படைப் பாடத்திட்டத்தை அமைத்தல், மாகாண அமைச்சுகளுக்கு இப்பாடத்திட்டத்தை கையளிக்கும் முன் தயாரிக்கப்பட்ட வழிகாட்டியை ஆதாரமாகக் கொண்டு முன்னோடிச் சோதனை நடாத்துதல் வேண்டும். எவ்வாறாயினும் இவ்வாறு தயாரிக்கப்பட்ட பாடத்திட்டம் ஓர் வழிகாட்டியாக மாத்திரம் அமையுமேயொழிய ஆசிரியர்களின் சுய ஆக்கங்களை மழுங்கடிப்பதாக அமையமாட்டாது.
4. கல்வி உயர்கல்வி அமைச்சு இம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதோடு அவர்களுக்கு மாதிரி கற்பித்தலை விருத்தி செய்து கற்றலுக்கான பாடநூல்களையும் வழங்கவுள்ளது என்றும்,
5. ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் பிள்ளை வளர்ச்சிக்கான திணைக்களமும், பிள்ளைக் கல்வி நிலையம் ஒன்றும் நிறுவப்படவுள்ளது. இந்நிலையமானது பிள்ளை வளர்ச்சி பற்றிய அறிவையும், ஆய்வையும் நடத்தி ஓர் தகவல்களைப் பெறும் வங்கியை உருவாக்குவதோடு நடைமுறைப்படுத்தப்படும் முன்பள்ளிக்கான நிகழ்ச்சித் திட்டங்களை மதிப்பீடு செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளதையும் காணலாம்.
இவற்றின் அடிப்படையில் முன்பள்ளி நிலையங்கள் அமையப் பெற்று வந்தாலும் இங்கே அடிப்படையான அம்சங்கள் இன்றியும், முன்பள்ளிகளை தனிநபர்கள் தான் விரும்பியபடி நடாத்துவதால் பிள்ளையின் ஆரம்பப்படியிலேயே பிழைகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் தோன்றுவதாக சில பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
பாடசாலைக் கல்விக்கான அத்திவாரமாக அமைவது இந்த முன்பள்ளிக் கல்வியாகும். பிள்ளையின் முழுமையான அபிவிருத்தியை முன்பள்ளிகளில் சமநிலை கொண்ட தரம் பேணும் தினச் செயற்பாடுகள் ஊடாக ஓழுங்கமைத்து நடைமுறைப்படுத்துதல் அவசியமாகும். கல்வி உளவியலாளர்களது கருத்தின்படி “மனித மூளையின் முக்கியமான வளர்ச்சிப் பருவமானது குழந்தை கருவிலிருந்து முதல் 5 வருடங்களில் தான் அமைந்துள்ளது.
குழந்தையின் உடல், உள சமூக அபிவிருத்தி, பெற்றோர் தமது பிள்ளையின் மீது காட்டுகின்ற கரிசனையில் தங்கியுள்ளது. அத்துடன் இவை பிள்ளையில் விருத்தியடைவதானது பெற்றோர் தகுந்த முறையில் கவனம் செலுத்தி பராமரிப்பதிலேயே தங்கியுள்ளது என கல்வி உளவியலாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் இப்பருவப் பிள்ளைகள் இந்நிலையங்களில் கல்வி பயில்கையில் இவர்களை கையாள்பவர்கள் “ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்தி ஆசிரியர்கள்” என அழைக்கப்படுகின்றனர். இவ்வாறான ஆசிரியர்கள் இப் பிள்ளைகள் மீது காட்டுகின்ற செயற்பாடுகள் அமைதியானதும் உறுதியானதும், உயிர்த் துடிப்புள்ளதுமான விளையாட்டு அனுபவங்களைக் கொண்டு அமைதல் வேண்டும்.
பிள்ளையின் தசைநார், நுண்ணியக்க, பேரியக்க, அபிவிருத்திக்கு வலுவூட்டுவதற்கு உந்து சக்தியாக அமைதல் வேண்டும். அப்போதுதான் ஆரம்பக் கல்வியை பெறக் கூடியதான மனோநிலை, மனோ தைரியம், அப்பிள்ளையின் உளமதில் பதிய ஆரம்பிக்கும். ஆடல், பாடல், கதைகூறல், அறிந்து கொள்ளல், வரைதல், ஒட்டுதல், காட்சிப்படுத்தல் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளினுடாக பிள்ளையினது விருத்தித் திறனை மேம்பாடடையச் செய்கின்றதாய் அமைதல் வேண்டும். இச் செயற்பாடுகள் உரிய நேரத்தை வரையறுத்து மாணவர்களுக்கு அலுப்பூட்டாத வண்ணம் அமைத்துக்கொள்ளல் அவசியமாகும்.
எனவே, இவ்வாறு பல்வேறு கோணத்தில் முக்கியத்துவம் பெற்ற ஆரம்பப் பருவப் பிள்ளைகளுக்கான இக் கல்வியானது முறையாக அமைந்த புகுநிலைக் கல்வியாக அமைதல் வேண்டும். இதற்கு கூடியளவு முக்கியத்துவம் கொடுத்து தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் வியாபித்து அமைவதற்கு ஏற்ற கல்விச் சூழலை வழங்கும் முன்பள்ளி நிலையங்களை பெற்றோர் நாடுதல் அவசியம் என்பதை அறிந்து கொள்வதுடன், இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பதற்கொப்ப தராதரமற்ற முன்பள்ளி நிலையங்களும் பயிற்சிகள் அற்ற நிலையில் உள்ள ஆசிரியர்களும் இம்மாணவர்களை கையாள்கின்ற போது பிள்ளையின் கல்விப்போக்கு வேறுவிதமாக அமைவதற்கு ஏதுவாக அமைந்துவிடுகிறது.
இந்த நிலையை இல்லாமல் செய்வதற்கும், பிள்ளைகள் ஒழுங்கு முறையில் செயற்படுவதற்கும் முக்கியத்துவம் மிக்கதான முன்பள்ளி பாடசாலைகள் சிறந்து விளங்குவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளதா? என்பதையும் உரியவர்களும், பிள்ளைகளைப் பராமரிக்கின்ற அமைப்புக்களும் உரிய கவனமெடுத்து இக்காலங்களில் தொங்கவிடப்படுகின்ற முன்பள்ளிக்கான விளம்பரப் பதாகைகளில் மயங்கிடாது உரியவாறான வசதிகளும், வாய்ப்புக்களும் உள்ள இடங்களை தெரிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அமையப் பெறாத நிலையங்களை உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் இதனுடன் தொடர்புள்ள அரச அமைப்புக்கள் கண்காணித்துக் கொள்வதுடன், அறவிடும் பணம், சட்ட ரீதியான பதிவுகள், நிலையத்தின் சுற்றுப்புறச் சூழல் போன்ற பல விடயங்களில் கவனத்தை செலுத்துதலும் அவசியமாகும்.

லேபிள்கள்:

முன்பள்ளி கல்வியின் அவசியம்

இன்று எங்கு பார்த்தாலும் மாணவர் முன்பள்ளி நிலையங்களுக்கான விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்ற அளவுக்கு பெரிய பெரிய விளம்பரப் பலகைகளாக வீதிகள் தோறும் தொங்கவிடப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. இக்காலங்களில் குறிப்பாக வருட இறுதியிலும் ஆரம்பத்திலும் காண்கின்றோம்.
பொதுவாக இன்று கிராமங்களில் கூட ஆரம்பிக்கப்படுகின்ற முன்பள்ளிக் கூடத்திலும் ஆங்கிலத்தில் வகுப்புக்கள் நடாத்தப்படும் என்கிற பிரச்சாரம் பலமாகவே இருக்கும். பெற்றோரும் ஏதோ பிள்ளை சிறு பராயத்தில் சில ஆங்கிலச் சொற்களை பயில்வது நல்லதுதானே என்கிற எண்ணத்தில் பணத்தை வாரியிறைக்கின்றனர். முன்பள்ளிகளில் போட்டி போட்டுக்கொண்டு சேர்க்கின்றனர்.
ஆனால் அங்கு யார் யாரால் பிள்ளை பராமரிக்கப்படுகிறது என்றெல்லாம் எதுவுமே பார்க்கமாட்டார்கள். பாடத்திட்டத்தை தாண்டி பயிற்சிக் கொப்பிகளும், புத்தகங்களும் வாங்கிக்கொடுத்து முதுகில் பாரிய சுமையுடன் அனுப்பும் பெற்றோர்கள் கூட இக்கல்வியின் பயன்பாடுகள் பற்றிய அறிவின்றிச் செயற்படுவதுதான் பரிதாபத்திற்குரியதாகும்.
இன்று முன்பள்ளி எனப்படுகின்ற பாலர் கல்வியின் அவசியம் குறித்து பல்வேறு மட்டங்களில் பேசப்பட்டாலும் அது முறைசார்ந்த அமைப்புக்கள் ஊடாக இன்னும் வந்து சேரவில்லை. பாடசாலைக்கு தரம் ஒன்றில் சேரும் பிள்ளையை கையாளுவதற்கான முன்னோடித் திட்டமாகவே இம் முன்பயிற்சி அமைகிறது. ‘இங்குள்ளவர்கள் இவ்விளம்பராயத்துப் பிள்ளைகளை கையாளுவதற்குரிய பயிற்சிகளோ, பாடத் திட்டங்களோ இன்றியும் காணப்படுகின்றனர். இது பிள்ளையின் ஆக்கவூக்கத்திறனை மழுங்கடிக்கச் செய்கின்ற ஒரு விடயமாகவும் கொள்ளப்படுகிறது.
ஒரு காலகட்டத்தில் இலங்கையின் நகரங்களில் மட்டுமே இயங்கிய இப்பாலர் பாடசாலைகள் இன்று அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. இது கல்வியின் தேவையும், அவசியமும் உணரப்பட்டுள்ளமையைத் தெளிவாக்கியுள்ளது. அதனால்தானோ என்னவோ முன்பள்ளி நிலையங்களின் அதிகரிப்பும் காணப்படுகிறது.
போதிய வளப் பற்றாக்குறையுடன் இவை நடாத்தப்படுவதும் பெரும் குறைபாடாகக் கொள்ளலாம். இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்து பெளதீக வளத்தைக் கொண்டு செயற்பாடுகளுடன் கூடிய கற்றலையே இந்நிலையங்கள் ஆற்றவேண்டும். அதனைவிடுத்து வளப்பற்றாக்குறையுடன் அமைந்த கற்றலானது மாணவர்களின் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிடும். இதனால் நேரடியான கண்காணிப்பும், பார்வையும் அவசியமாகும்.
கடந்தகாலங்களில் பாலர் பாடசாலைக்கான திட்டங்கள் அரசினால் தயாரிக்கப்பட்டு, அதன் முக்கியத்துவமும் உணர்த்தப்பட்டிருந்தன. கடந்த 1953 ஆம் ஆண்டில் பாலர் பாடசாலைக்கான, பாடத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இவை “வேலைக்குகந்த மகிழ்ச்சி நிறைந்த இடங்களாக” அமையவேண்டும் என இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் இத்திட்டத்தின் நோக்கம் சரியான முறையில் அமையப் பெறாததால் உரிய இலக்கை அடையவில்லை. தொடர்ந்து 1961 ஆண்டில் தேசிய கல்வி ஆணைக்குழு பேராசிரியர் ஜே. ஈ. ஜயசூரிய தலைமையில் முன்பள்ளிகளின் அவசியம் சம்பந்தமான கருத்துக்களை அன்று தெரிவித்திருந்தது.
4 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்பள்ளி நிலையங்கள் வீட்டுச் சூழலில் உருவாக்கப்படுவதுடன் பிள்ளைகளின் உடல், உள விருத்தியுடன், முதிய ஆசிரியர் ஒருவரின் கண்காணிப்புடனும், உள்ளூராட்சி மற்றும் கல்வித் திணைக்களத்தின் அனுசரணைகளுடனும் இருக்க வேண்டும் எனப்பட்டது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தான் இங்கு கற்பிக்க வேண்டும் எனப் பல சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் அத்திட்டம் அரசின் போதிய அனுசரணையின்றி சோபையிழந்து போயிற்று.
தொடர்ந்து 1972 ஆண்டில் அரசினால் வெளியிடப்பட்டிருந்த புதிய கல்விச் சீர்திருத்தத்தில் முன்பள்ளிக் கல்வியின் அவசியம் பற்றியும் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் அதில் அரசின் பொறுப்புக்கள் செல்வாக்குச் செலுத்தவில்லை. பின்னர் கொண்டுவரப்பட்ட போகொட பிரேமரத்னா தலைமையில் சீர் செய்யப்பட்ட (1979) தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபாரிசுகளும் முன்பள்ளி சம்பந்தமான முக்கியத்துவத்தை வலியுறுத்தி இருந்தன.
அதேவேளை கடந்த காலத்தில் (1997) கொண்டுவரப்பட்ட பொதுக் கல்விச் சீர்திருத்தங்களில் முன்பள்ளி பற்றிய உள்ளடக்கம் மிகவும் பலமானதாக அமையப் பெற்றிருந்தமை விசேட அம்சமாகும். அதில் “3 - 5 வயதுக்கிடைப்பட்ட பிள்ளையின் முழு வளர்ச்சி முக்கியமானது. அதைக் கடந்த காலத்தைவிட கல்வியமைப்பில் கூடியளவு கவனம் ஈர்க்கும் விடயமாக பார்க்கவேண்டியுள்ளது.
தகுந்த வழிகாட்டலும், சிறந்த மேற்பார்வையும், அரசின் கட்டுப்பாடும் அமைகின்றபோது கூடிய பலனைத் தரும்” என்றும் கூறப்பட்டிருந்தது. அத்துடன் நாட்டின் பல பகுதிகளிலும் முன்பள்ளி நிலையங்கள் நடத்தப்பட்டாலும் அவை சிறந்த தரத்தில் காணப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஜனாதிபதி செயலணிக்குழு பின்வரும் சிபாரிசுகளையும் அப்போது செய்திருந்தது. அதாவது;
1. 3-5 வயதிற்கிடைப்பட்ட பிள்ளைகள் கூடியளவில் பங்குபற்றுவதற்கேற்ற வகையில் அதிக எண்ணிக்கையில் முன்பள்ளிகளை உருவாக்கி அவற்றிற்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்துதல்,
2. தகுந்த அதிகாரமுடையவர்களால் முன்பள்ளி ஆசிரியரின் தரம், பள்ளிவசதிகள், மேற்பார்வை போன்ற விடயங்களில் சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் முன்பள்ளிகளை ஒழுங்கமைத்தல்.
3. பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, மற்றும் பொருத்தமான முகவர் நிலையங்களைச் சேர்ந்த இக் குறிப்பிடப்பட்ட துறையில் திறமை வாய்ந்தோரால் இம் முன்பள்ளிக்கான அடிப்படைப் பாடத்திட்டத்தை அமைத்தல், மாகாண அமைச்சுகளுக்கு இப்பாடத்திட்டத்தை கையளிக்கும் முன் தயாரிக்கப்பட்ட வழிகாட்டியை ஆதாரமாகக் கொண்டு முன்னோடிச் சோதனை நடாத்துதல் வேண்டும். எவ்வாறாயினும் இவ்வாறு தயாரிக்கப்பட்ட பாடத்திட்டம் ஓர் வழிகாட்டியாக மாத்திரம் அமையுமேயொழிய ஆசிரியர்களின் சுய ஆக்கங்களை மழுங்கடிப்பதாக அமையமாட்டாது.
4. கல்வி உயர்கல்வி அமைச்சு இம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதோடு அவர்களுக்கு மாதிரி கற்பித்தலை விருத்தி செய்து கற்றலுக்கான பாடநூல்களையும் வழங்கவுள்ளது என்றும்,
5. ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் பிள்ளை வளர்ச்சிக்கான திணைக்களமும், பிள்ளைக் கல்வி நிலையம் ஒன்றும் நிறுவப்படவுள்ளது. இந்நிலையமானது பிள்ளை வளர்ச்சி பற்றிய அறிவையும், ஆய்வையும் நடத்தி ஓர் தகவல்களைப் பெறும் வங்கியை உருவாக்குவதோடு நடைமுறைப்படுத்தப்படும் முன்பள்ளிக்கான நிகழ்ச்சித் திட்டங்களை மதிப்பீடு செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளதையும் காணலாம்.
இவற்றின் அடிப்படையில் முன்பள்ளி நிலையங்கள் அமையப் பெற்று வந்தாலும் இங்கே அடிப்படையான அம்சங்கள் இன்றியும், முன்பள்ளிகளை தனிநபர்கள் தான் விரும்பியபடி நடாத்துவதால் பிள்ளையின் ஆரம்பப்படியிலேயே பிழைகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் தோன்றுவதாக சில பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
பாடசாலைக் கல்விக்கான அத்திவாரமாக அமைவது இந்த முன்பள்ளிக் கல்வியாகும். பிள்ளையின் முழுமையான அபிவிருத்தியை முன்பள்ளிகளில் சமநிலை கொண்ட தரம் பேணும் தினச் செயற்பாடுகள் ஊடாக ஓழுங்கமைத்து நடைமுறைப்படுத்துதல் அவசியமாகும். கல்வி உளவியலாளர்களது கருத்தின்படி “மனித மூளையின் முக்கியமான வளர்ச்சிப் பருவமானது குழந்தை கருவிலிருந்து முதல் 5 வருடங்களில் தான் அமைந்துள்ளது.
குழந்தையின் உடல், உள சமூக அபிவிருத்தி, பெற்றோர் தமது பிள்ளையின் மீது காட்டுகின்ற கரிசனையில் தங்கியுள்ளது. அத்துடன் இவை பிள்ளையில் விருத்தியடைவதானது பெற்றோர் தகுந்த முறையில் கவனம் செலுத்தி பராமரிப்பதிலேயே தங்கியுள்ளது என கல்வி உளவியலாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் இப்பருவப் பிள்ளைகள் இந்நிலையங்களில் கல்வி பயில்கையில் இவர்களை கையாள்பவர்கள் “ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்தி ஆசிரியர்கள்” என அழைக்கப்படுகின்றனர். இவ்வாறான ஆசிரியர்கள் இப் பிள்ளைகள் மீது காட்டுகின்ற செயற்பாடுகள் அமைதியானதும் உறுதியானதும், உயிர்த் துடிப்புள்ளதுமான விளையாட்டு அனுபவங்களைக் கொண்டு அமைதல் வேண்டும்.
பிள்ளையின் தசைநார், நுண்ணியக்க, பேரியக்க, அபிவிருத்திக்கு வலுவூட்டுவதற்கு உந்து சக்தியாக அமைதல் வேண்டும். அப்போதுதான் ஆரம்பக் கல்வியை பெறக் கூடியதான மனோநிலை, மனோ தைரியம், அப்பிள்ளையின் உளமதில் பதிய ஆரம்பிக்கும். ஆடல், பாடல், கதைகூறல், அறிந்து கொள்ளல், வரைதல், ஒட்டுதல், காட்சிப்படுத்தல் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளினுடாக பிள்ளையினது விருத்தித் திறனை மேம்பாடடையச் செய்கின்றதாய் அமைதல் வேண்டும். இச் செயற்பாடுகள் உரிய நேரத்தை வரையறுத்து மாணவர்களுக்கு அலுப்பூட்டாத வண்ணம் அமைத்துக்கொள்ளல் அவசியமாகும்.
எனவே, இவ்வாறு பல்வேறு கோணத்தில் முக்கியத்துவம் பெற்ற ஆரம்பப் பருவப் பிள்ளைகளுக்கான இக் கல்வியானது முறையாக அமைந்த புகுநிலைக் கல்வியாக அமைதல் வேண்டும். இதற்கு கூடியளவு முக்கியத்துவம் கொடுத்து தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் வியாபித்து அமைவதற்கு ஏற்ற கல்விச் சூழலை வழங்கும் முன்பள்ளி நிலையங்களை பெற்றோர் நாடுதல் அவசியம் என்பதை அறிந்து கொள்வதுடன், இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பதற்கொப்ப தராதரமற்ற முன்பள்ளி நிலையங்களும் பயிற்சிகள் அற்ற நிலையில் உள்ள ஆசிரியர்களும் இம்மாணவர்களை கையாள்கின்ற போது பிள்ளையின் கல்விப்போக்கு வேறுவிதமாக அமைவதற்கு ஏதுவாக அமைந்துவிடுகிறது.
இந்த நிலையை இல்லாமல் செய்வதற்கும், பிள்ளைகள் ஒழுங்கு முறையில் செயற்படுவதற்கும் முக்கியத்துவம் மிக்கதான முன்பள்ளி பாடசாலைகள் சிறந்து விளங்குவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளதா? என்பதையும் உரியவர்களும், பிள்ளைகளைப் பராமரிக்கின்ற அமைப்புக்களும் உரிய கவனமெடுத்து இக்காலங்களில் தொங்கவிடப்படுகின்ற முன்பள்ளிக்கான விளம்பரப் பதாகைகளில் மயங்கிடாது உரியவாறான வசதிகளும், வாய்ப்புக்களும் உள்ள இடங்களை தெரிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அமையப் பெறாத நிலையங்களை உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் இதனுடன் தொடர்புள்ள அரச அமைப்புக்கள் கண்காணித்துக் கொள்வதுடன், அறவிடும் பணம், சட்ட ரீதியான பதிவுகள், நிலையத்தின் சுற்றுப்புறச் சூழல் போன்ற பல விடயங்களில் கவனத்தை செலுத்துதலும் அவசியமாகும்.

லேபிள்கள்:

முன்பள்ளி கல்வியின் அவசியம்

இன்று எங்கு பார்த்தாலும் மாணவர் முன்பள்ளி நிலையங்களுக்கான விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்ற அளவுக்கு பெரிய பெரிய விளம்பரப் பலகைகளாக வீதிகள் தோறும் தொங்கவிடப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. இக்காலங்களில் குறிப்பாக வருட இறுதியிலும் ஆரம்பத்திலும் காண்கின்றோம்.
பொதுவாக இன்று கிராமங்களில் கூட ஆரம்பிக்கப்படுகின்ற முன்பள்ளிக் கூடத்திலும் ஆங்கிலத்தில் வகுப்புக்கள் நடாத்தப்படும் என்கிற பிரச்சாரம் பலமாகவே இருக்கும். பெற்றோரும் ஏதோ பிள்ளை சிறு பராயத்தில் சில ஆங்கிலச் சொற்களை பயில்வது நல்லதுதானே என்கிற எண்ணத்தில் பணத்தை வாரியிறைக்கின்றனர். முன்பள்ளிகளில் போட்டி போட்டுக்கொண்டு சேர்க்கின்றனர்.
ஆனால் அங்கு யார் யாரால் பிள்ளை பராமரிக்கப்படுகிறது என்றெல்லாம் எதுவுமே பார்க்கமாட்டார்கள். பாடத்திட்டத்தை தாண்டி பயிற்சிக் கொப்பிகளும், புத்தகங்களும் வாங்கிக்கொடுத்து முதுகில் பாரிய சுமையுடன் அனுப்பும் பெற்றோர்கள் கூட இக்கல்வியின் பயன்பாடுகள் பற்றிய அறிவின்றிச் செயற்படுவதுதான் பரிதாபத்திற்குரியதாகும்.
இன்று முன்பள்ளி எனப்படுகின்ற பாலர் கல்வியின் அவசியம் குறித்து பல்வேறு மட்டங்களில் பேசப்பட்டாலும் அது முறைசார்ந்த அமைப்புக்கள் ஊடாக இன்னும் வந்து சேரவில்லை. பாடசாலைக்கு தரம் ஒன்றில் சேரும் பிள்ளையை கையாளுவதற்கான முன்னோடித் திட்டமாகவே இம் முன்பயிற்சி அமைகிறது. ‘இங்குள்ளவர்கள் இவ்விளம்பராயத்துப் பிள்ளைகளை கையாளுவதற்குரிய பயிற்சிகளோ, பாடத் திட்டங்களோ இன்றியும் காணப்படுகின்றனர். இது பிள்ளையின் ஆக்கவூக்கத்திறனை மழுங்கடிக்கச் செய்கின்ற ஒரு விடயமாகவும் கொள்ளப்படுகிறது.
ஒரு காலகட்டத்தில் இலங்கையின் நகரங்களில் மட்டுமே இயங்கிய இப்பாலர் பாடசாலைகள் இன்று அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. இது கல்வியின் தேவையும், அவசியமும் உணரப்பட்டுள்ளமையைத் தெளிவாக்கியுள்ளது. அதனால்தானோ என்னவோ முன்பள்ளி நிலையங்களின் அதிகரிப்பும் காணப்படுகிறது.
போதிய வளப் பற்றாக்குறையுடன் இவை நடாத்தப்படுவதும் பெரும் குறைபாடாகக் கொள்ளலாம். இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்து பெளதீக வளத்தைக் கொண்டு செயற்பாடுகளுடன் கூடிய கற்றலையே இந்நிலையங்கள் ஆற்றவேண்டும். அதனைவிடுத்து வளப்பற்றாக்குறையுடன் அமைந்த கற்றலானது மாணவர்களின் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிடும். இதனால் நேரடியான கண்காணிப்பும், பார்வையும் அவசியமாகும்.
கடந்தகாலங்களில் பாலர் பாடசாலைக்கான திட்டங்கள் அரசினால் தயாரிக்கப்பட்டு, அதன் முக்கியத்துவமும் உணர்த்தப்பட்டிருந்தன. கடந்த 1953 ஆம் ஆண்டில் பாலர் பாடசாலைக்கான, பாடத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இவை “வேலைக்குகந்த மகிழ்ச்சி நிறைந்த இடங்களாக” அமையவேண்டும் என இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் இத்திட்டத்தின் நோக்கம் சரியான முறையில் அமையப் பெறாததால் உரிய இலக்கை அடையவில்லை. தொடர்ந்து 1961 ஆண்டில் தேசிய கல்வி ஆணைக்குழு பேராசிரியர் ஜே. ஈ. ஜயசூரிய தலைமையில் முன்பள்ளிகளின் அவசியம் சம்பந்தமான கருத்துக்களை அன்று தெரிவித்திருந்தது.
4 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்பள்ளி நிலையங்கள் வீட்டுச் சூழலில் உருவாக்கப்படுவதுடன் பிள்ளைகளின் உடல், உள விருத்தியுடன், முதிய ஆசிரியர் ஒருவரின் கண்காணிப்புடனும், உள்ளூராட்சி மற்றும் கல்வித் திணைக்களத்தின் அனுசரணைகளுடனும் இருக்க வேண்டும் எனப்பட்டது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தான் இங்கு கற்பிக்க வேண்டும் எனப் பல சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் அத்திட்டம் அரசின் போதிய அனுசரணையின்றி சோபையிழந்து போயிற்று.
தொடர்ந்து 1972 ஆண்டில் அரசினால் வெளியிடப்பட்டிருந்த புதிய கல்விச் சீர்திருத்தத்தில் முன்பள்ளிக் கல்வியின் அவசியம் பற்றியும் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் அதில் அரசின் பொறுப்புக்கள் செல்வாக்குச் செலுத்தவில்லை. பின்னர் கொண்டுவரப்பட்ட போகொட பிரேமரத்னா தலைமையில் சீர் செய்யப்பட்ட (1979) தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபாரிசுகளும் முன்பள்ளி சம்பந்தமான முக்கியத்துவத்தை வலியுறுத்தி இருந்தன.
அதேவேளை கடந்த காலத்தில் (1997) கொண்டுவரப்பட்ட பொதுக் கல்விச் சீர்திருத்தங்களில் முன்பள்ளி பற்றிய உள்ளடக்கம் மிகவும் பலமானதாக அமையப் பெற்றிருந்தமை விசேட அம்சமாகும். அதில் “3 - 5 வயதுக்கிடைப்பட்ட பிள்ளையின் முழு வளர்ச்சி முக்கியமானது. அதைக் கடந்த காலத்தைவிட கல்வியமைப்பில் கூடியளவு கவனம் ஈர்க்கும் விடயமாக பார்க்கவேண்டியுள்ளது.
தகுந்த வழிகாட்டலும், சிறந்த மேற்பார்வையும், அரசின் கட்டுப்பாடும் அமைகின்றபோது கூடிய பலனைத் தரும்” என்றும் கூறப்பட்டிருந்தது. அத்துடன் நாட்டின் பல பகுதிகளிலும் முன்பள்ளி நிலையங்கள் நடத்தப்பட்டாலும் அவை சிறந்த தரத்தில் காணப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஜனாதிபதி செயலணிக்குழு பின்வரும் சிபாரிசுகளையும் அப்போது செய்திருந்தது. அதாவது;
1. 3-5 வயதிற்கிடைப்பட்ட பிள்ளைகள் கூடியளவில் பங்குபற்றுவதற்கேற்ற வகையில் அதிக எண்ணிக்கையில் முன்பள்ளிகளை உருவாக்கி அவற்றிற்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்துதல்,
2. தகுந்த அதிகாரமுடையவர்களால் முன்பள்ளி ஆசிரியரின் தரம், பள்ளிவசதிகள், மேற்பார்வை போன்ற விடயங்களில் சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் முன்பள்ளிகளை ஒழுங்கமைத்தல்.
3. பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, மற்றும் பொருத்தமான முகவர் நிலையங்களைச் சேர்ந்த இக் குறிப்பிடப்பட்ட துறையில் திறமை வாய்ந்தோரால் இம் முன்பள்ளிக்கான அடிப்படைப் பாடத்திட்டத்தை அமைத்தல், மாகாண அமைச்சுகளுக்கு இப்பாடத்திட்டத்தை கையளிக்கும் முன் தயாரிக்கப்பட்ட வழிகாட்டியை ஆதாரமாகக் கொண்டு முன்னோடிச் சோதனை நடாத்துதல் வேண்டும். எவ்வாறாயினும் இவ்வாறு தயாரிக்கப்பட்ட பாடத்திட்டம் ஓர் வழிகாட்டியாக மாத்திரம் அமையுமேயொழிய ஆசிரியர்களின் சுய ஆக்கங்களை மழுங்கடிப்பதாக அமையமாட்டாது.
4. கல்வி உயர்கல்வி அமைச்சு இம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதோடு அவர்களுக்கு மாதிரி கற்பித்தலை விருத்தி செய்து கற்றலுக்கான பாடநூல்களையும் வழங்கவுள்ளது என்றும்,
5. ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் பிள்ளை வளர்ச்சிக்கான திணைக்களமும், பிள்ளைக் கல்வி நிலையம் ஒன்றும் நிறுவப்படவுள்ளது. இந்நிலையமானது பிள்ளை வளர்ச்சி பற்றிய அறிவையும், ஆய்வையும் நடத்தி ஓர் தகவல்களைப் பெறும் வங்கியை உருவாக்குவதோடு நடைமுறைப்படுத்தப்படும் முன்பள்ளிக்கான நிகழ்ச்சித் திட்டங்களை மதிப்பீடு செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளதையும் காணலாம்.
இவற்றின் அடிப்படையில் முன்பள்ளி நிலையங்கள் அமையப் பெற்று வந்தாலும் இங்கே அடிப்படையான அம்சங்கள் இன்றியும், முன்பள்ளிகளை தனிநபர்கள் தான் விரும்பியபடி நடாத்துவதால் பிள்ளையின் ஆரம்பப்படியிலேயே பிழைகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் தோன்றுவதாக சில பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
பாடசாலைக் கல்விக்கான அத்திவாரமாக அமைவது இந்த முன்பள்ளிக் கல்வியாகும். பிள்ளையின் முழுமையான அபிவிருத்தியை முன்பள்ளிகளில் சமநிலை கொண்ட தரம் பேணும் தினச் செயற்பாடுகள் ஊடாக ஓழுங்கமைத்து நடைமுறைப்படுத்துதல் அவசியமாகும். கல்வி உளவியலாளர்களது கருத்தின்படி “மனித மூளையின் முக்கியமான வளர்ச்சிப் பருவமானது குழந்தை கருவிலிருந்து முதல் 5 வருடங்களில் தான் அமைந்துள்ளது.
குழந்தையின் உடல், உள சமூக அபிவிருத்தி, பெற்றோர் தமது பிள்ளையின் மீது காட்டுகின்ற கரிசனையில் தங்கியுள்ளது. அத்துடன் இவை பிள்ளையில் விருத்தியடைவதானது பெற்றோர் தகுந்த முறையில் கவனம் செலுத்தி பராமரிப்பதிலேயே தங்கியுள்ளது என கல்வி உளவியலாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் இப்பருவப் பிள்ளைகள் இந்நிலையங்களில் கல்வி பயில்கையில் இவர்களை கையாள்பவர்கள் “ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்தி ஆசிரியர்கள்” என அழைக்கப்படுகின்றனர். இவ்வாறான ஆசிரியர்கள் இப் பிள்ளைகள் மீது காட்டுகின்ற செயற்பாடுகள் அமைதியானதும் உறுதியானதும், உயிர்த் துடிப்புள்ளதுமான விளையாட்டு அனுபவங்களைக் கொண்டு அமைதல் வேண்டும்.
பிள்ளையின் தசைநார், நுண்ணியக்க, பேரியக்க, அபிவிருத்திக்கு வலுவூட்டுவதற்கு உந்து சக்தியாக அமைதல் வேண்டும். அப்போதுதான் ஆரம்பக் கல்வியை பெறக் கூடியதான மனோநிலை, மனோ தைரியம், அப்பிள்ளையின் உளமதில் பதிய ஆரம்பிக்கும். ஆடல், பாடல், கதைகூறல், அறிந்து கொள்ளல், வரைதல், ஒட்டுதல், காட்சிப்படுத்தல் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளினுடாக பிள்ளையினது விருத்தித் திறனை மேம்பாடடையச் செய்கின்றதாய் அமைதல் வேண்டும். இச் செயற்பாடுகள் உரிய நேரத்தை வரையறுத்து மாணவர்களுக்கு அலுப்பூட்டாத வண்ணம் அமைத்துக்கொள்ளல் அவசியமாகும்.
எனவே, இவ்வாறு பல்வேறு கோணத்தில் முக்கியத்துவம் பெற்ற ஆரம்பப் பருவப் பிள்ளைகளுக்கான இக் கல்வியானது முறையாக அமைந்த புகுநிலைக் கல்வியாக அமைதல் வேண்டும். இதற்கு கூடியளவு முக்கியத்துவம் கொடுத்து தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் வியாபித்து அமைவதற்கு ஏற்ற கல்விச் சூழலை வழங்கும் முன்பள்ளி நிலையங்களை பெற்றோர் நாடுதல் அவசியம் என்பதை அறிந்து கொள்வதுடன், இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பதற்கொப்ப தராதரமற்ற முன்பள்ளி நிலையங்களும் பயிற்சிகள் அற்ற நிலையில் உள்ள ஆசிரியர்களும் இம்மாணவர்களை கையாள்கின்ற போது பிள்ளையின் கல்விப்போக்கு வேறுவிதமாக அமைவதற்கு ஏதுவாக அமைந்துவிடுகிறது.
இந்த நிலையை இல்லாமல் செய்வதற்கும், பிள்ளைகள் ஒழுங்கு முறையில் செயற்படுவதற்கும் முக்கியத்துவம் மிக்கதான முன்பள்ளி பாடசாலைகள் சிறந்து விளங்குவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளதா? என்பதையும் உரியவர்களும், பிள்ளைகளைப் பராமரிக்கின்ற அமைப்புக்களும் உரிய கவனமெடுத்து இக்காலங்களில் தொங்கவிடப்படுகின்ற முன்பள்ளிக்கான விளம்பரப் பதாகைகளில் மயங்கிடாது உரியவாறான வசதிகளும், வாய்ப்புக்களும் உள்ள இடங்களை தெரிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அமையப் பெறாத நிலையங்களை உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் இதனுடன் தொடர்புள்ள அரச அமைப்புக்கள் கண்காணித்துக் கொள்வதுடன், அறவிடும் பணம், சட்ட ரீதியான பதிவுகள், நிலையத்தின் சுற்றுப்புறச் சூழல் போன்ற பல விடயங்களில் கவனத்தை செலுத்துதலும் அவசியமாகும்.

லேபிள்கள்: