புதன், 25 ஜனவரி, 2012

ஆரம்பக்கல்வி; கலைத்திட்டம்

2.1.1 ஆரம்பக்கல்விப் பாடசாலைகள்.
தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகளை ஆரம்பக்கல்விப் பாடசாலைகள் எனலாம். வயது 5 தொடக்கம் 11 வரையிலான பருவத்தினர் இப்பாடசாலைகளில் கற்கின்றனர். அதேவேளை ஆரம்ப வகுப்புக்களான தரம்1 தொடக்கம் தரம் 5 வரையான வகுப்புக்களைக் கொண்ட வகை 111 பாடசாலைகளைத் தவிர வகை 11 வகை 1ஊ ääவகை யுடீ பாடசாலைகளிலும் ஆரம்ப வகுப்புக்கள் உள்ளன. அங்கும் ஆரம்பக் கல்வி கற்கும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப் படுகின்றனர். 1991ம் ஆண்டில் கல்வியமைச்சின் புள்ளிவிபரப்படி மொத்தமாகவுள்ள 10520 அரசினர் பாடசாலைகளுள் 9527 பாடசாலைகளில் ஆரம்பக் கல்வியைக் கற்பிக்கின்றர். எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இப்பாடசாலைகள் அனைத்தும் பௌதிக வளங்களில் சமமான வசதிகளைக் கொண்டவை எனவோ அன்றேல் ஆளணி வளத்தால் நிறைவுடையவையென்றோ கூறிவிட முடியாது.ஒவ்வொரு பாடசாலையும் தனித்துவம் மிக்க பௌதிக வளங்களையும் ஆளணியினரையும் கொண்டுள்ளது.
பாடசாலைகள் அனைத்திலும் ஆரம்பக்கல்விக் கலைத்திட்டம் பொதுவானதாக உள்ளது. கற்பிக்கும் ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்கப்படும் கற்றல் கற்பித்தல் திறன்கள் பொதுவானதாகவே எதிர்பார்க்கப்படுகின்றன. இந் நிலையில் பாடசாலைகளுக்கிடையேயான வேறுபாடுகள் நிரம்பவே காணப்படுகின்றன. பாடசாலையின் பௌதிக வளங்களில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுவதுடன் மாணவர் கற்றல் கற்பித்தலிலும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்து காணப்படுகின்றன. (தணிகாசலம்பிள்ளை.ச.நா 2008)
பாடசாலைகளின் நிர்வாகம் ஒரே தரமுடையனவாக இல்லாமையும் பாடசாலைகளுக்காக பௌதிக வளங்கள் சமமானப் பங்கீடு செய்யப்படாமையும் கற்பிக்கும் ஆசிரியர்களின் ஆற்றல்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளும் பாடசாலைகளை வேறு பிரித்துக் காட்டுவதனால் அனைத்து ஆரம்பப் பாடசாலைகளையும் ஓரே தரத்தல் நோக்குதல் கடினமாகவுள்ளது.
ஆரம்பக் கல்விப்பாடசாலைகள்ää ஆரம்பக் கல்வி பாடசாலைகளுக்குப் பொருத்தமான வகுப்பறைக் கட்டடங்களையும் தேவையான விளையாட்டு முற்றம்ää தோட்டம்ää உபகரணங்கள் என்பவற்றையும் கொண்டிருத்தல் வேண்டும்.சிறுவர்களின் கற்றலுக்கேற்ற கவின்நிலை கொண்ட வகுப்பறைகள் அமைக்கப்படுவதோடு விரும்புடன் கற்கும் சு10ழல் பாடசாலைகளில் நிலவுதல் அவசியமாகும்.
பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அனைத்து வசதிகளையும் அரசாங்கமே பாடசாலைகளுக்கு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் போதிய வளங்களைப் பெறாத பாடசாலைகள் இன்றும் உள்ளன. ஆரம்ப வகுப்புக்களில் கற்கும் மாணவரின் தொகைக்கேற்ப வகுப்பறைகள் அதிகரிக்கப்படுதலும் அங்கு கற்கும் மாணவர்களுக்குப் போதியதான விளையாட்டு முற்றம்ää உபகரணங்கள் என்பனவும் வழங்கப்படுதல் வேண்டும்.
மாணவர் தொகைக்கும்ää வகுப்பறைகளின் எண்ணிக்கைக்கும் ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதே ஆரம்பக்கல்விக் கலைத்திட்டத்தைச் சிறப்பாகக் கற்பிக்க ஆசிரியர்களை ஊக்குவிக்கும் நடைமுறையாகும். இத்தகைய வளங்களுடன் ஆரம்பக்கல்விப் பாடசாலைகள் இருப்பின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல் இலகுவானதாகும்.
ஆரம்பக்கல்விப் பாடசாலைகளிற் பெரும்பாலானவை கிராமப் புறங்களிலேயே காணப்படுகின்றன. நகரப்புறங்களில் காணப்படும் ஆரம்ப பாடசாலைகளில் வசதி வளங்கள் அதிகமானதாகவுள்ளமையால் நகரப் பாடசாலைகளை நோக்கி நகரும் கிராமப்புற மாணவர்கள் இன்று அதிகரித்துள்ளனர். ஆனால் அரசாங்க பாடசாலைகள் அனைத்தும் ஓரே தரமுடைய கற்றல் கற்பித்தலைப் பெற வேண்டுமானால் கிராமப்புறப் பாடசாலைகளுக்குச் சகல வளங்களும் போதியளவு பங்கீடு செய்யப்படுவது அவசியமாகும்.


2.1.2 ஆரம்பக்கல்வி; கலைத்திட்டம்
ஐந்து ஆண்டுகளைக் கொண்ட ஆரம்பக்கல்விப் புலம் கலைத்திட்ட விருத்தியினதும் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளினதும் வசதி கருதி மூன்று முதன்மை நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முதன்மை நிலை 1 – தரங்கள் 1 உம் 2 உம்
முதன்மை நிலை 2 – தரங்கள் 3 உம் 4 உம்
முதன்மை நிலை 3 – தரம் 5
தரம் 1 இல் பிரவேசிக்கும் பிள்ளையை இனங்காண்பதற்கு வசதியான செயற்பாடுகள் இனங்காணப்பட்டுள்ளன.
பொதுக்கல்வி நிலை இறுதியில் மாணவர்களிடம் விருத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் என விதந்துரைக்கப்பட்ட அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அத்தேர்ச்சிகளைக் கட்டியெழுப்புவதற்குப் பொருத்தமான அடித்தளத்தை இட்டுச் செல்லும் கலைத்திட்டமாகää தேர்ச்சி சார்ந்த கலைத்திட்டமாக உள்ளது.


பாடவிடயங்கள் நான்காக வகுக்கப்பட்டுள்ளன.
மொழி
கணிதம்
சமயம்
சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்.
பிள்ளையின் ப10ரண விருத்திக்கு மொழிää கணிதத் தேர்ச்சிகளுடன் வேறு சில தேர்ச்சிகளும் விருத்தி செய்யப்படவேண்டியது அவசியாகும்.எடுத்துக்காட்டு@ அழகியல்ää ஆக்கம்ää விஞ்ஞானம்ää விழுமியம்ää உடல் விருத்திää சுகாதாரம் சார்ந்த தேர்ச்சிகள்.


இத்தேர்ச்சிகளைத் தனித்தனிப்பட்ட அலகுகள் மூலம் முன்வைப்பதை விட பிள்ளைகளுக்குப் பொருத்தமான கருப்பொருள்கள் மூலம் வெளிக்கொணர்ந்து எய்துவதே சிறந்ததென ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 16 கருப்பொருள்களைக் கொண்ட சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் எனும் பாடப்பரப்பு முன்பைவிட ஒன்றிணைக்கப்பட்ட பண்பைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
• தரம் 1 இலிருந்து செயற்பாடுகள் சாhந்த வாய்மொழி ஆங்கிலமும்ää இரண்டாவது தேசிய மொழியும்(சிங்களம்ஃதமிழ்மொழிப் பாடங்கள்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
• முதன்மை நிலை 2 இலிருந்து முறைசார் ஆங்கிலம் சேர்க்கப்பட்டுள்ளது.
• தரம் 1 இலிருந்து தொடர்ச்சியாக பாட இணைச் செயற்பாடுகளும்ää தரம் 5 இல் பிள்கைளின் விருப்புக்கும்ää தேவைக்கும்; ஏற்ப பொருத்தமான விரும்புப் பாடங்களைக் கற்பதற்கும் கால அட்டவணையில் வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
• ஆரம்பக்கல்விப் பருவத்தினருக்குப் பொருத்தமாக மேற்கொள்ளக்கூடிய கற்றல்-கற்பித்தல் முறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை:

 விளையாட்டுக்களும் விநோதச் செயற்பாடுகளும்.
 செயற்பாடுகள்.
 எழுத்து வேலைகள்.

முதன்மை நிலை 1 இல் விளையாட்டுக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் அதிக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதன்மை நிலைகள் மூன்றிலும் கற்றல் - கற்பித்தல் முறைகள் ஒழுங்கமைக்கப்பட்டுப் படிப்படியாக மாறிச் செல்லும் விதத்தில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

பிள்ளையின் முன்னேற்றம்ää கற்றல் இடர்பாடுகள் தொடர்பாக தகவல் வழங்கப்படுகின்ற அதாவதுää தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய தொடர் கணிப்பீட்டிற்காக முன்னுரிமை பெறுகின்ற கணிப்பீட்டுச் செயல்முறையை நடைமுறைப்படுத்தல்.

யாவருக்கும் கல்வியை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு அதற்குத் தரநிர்ணயமுள்ள ஒவ்வொரு முதன்மை நிலை இறுதியிலும் மாணவர்கள் கட்டாயமாக பாண்டித்தியம் அடையவேண்டிய அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு முதன்மைநிலை இறுதியிலும் எதிர்பார்க்கின்ற அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகளில் சகல மாணவர்களும் பாண்டித்தியம் அடைய வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு முதன்மை நிலையும் ஒரே ஆசிரியரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒரு பிள்ளையின் அடைவை இன்னொரு பிள்ளையின் அடைவோடு ஒப்பிட்டுத் தீர்மானம் எடுக்கும் முறைமையை விடுத்து. குறித்துவொரு நோக்குடன்ää நியதியுடன் அடைவை ஒப்பிட்டு தீர்மானம் மேற்கொள்வதற்குää நியதிசார்ந்த அடிப்படைக் கணீப்பீடு முறை அறிமுகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முதன்மைநிலை 1 இன் பிள்ளைகள் தரம் 5ஃ6இன் பிள்ளைகளுடன் சேர்ந்து ஒழுங்கமைப்புடன் செயற்பாடுகளிலும் விளையாட்டுக்களிலும் ஈடுபடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு முதல் முதன்மை நிலை ஒன்று தொடக்கம் இரண்டாவது தேசிய மொழியும் அறிமுகம் (சிங்களம்ஃதமிழ்) செய்யப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு முதல் செயற்பாடு அடிப்படையிலான வாய்மொழி ஆங்கிலம் கணித பாடத்துடனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் உடல்ää உள விருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் விதத்தில் உடலியக்கச் செயற்பாடுகள் எனும் வேலைத்திட்டம் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் முதன்மை நிலை 01இல் இருந்து அறிமுகம் செய்யப்படுகின்றது.



ஆரம்ப வகுப்பு மாணவர்களின் பல்திறன்சார் தேர்ச்சிகளைக் கவனத்திற் கொண்டே பாடங்களை ஒன்றிணைத்துக் கற்பிக்க அவை திட்டமிடப்பட்டுள்ளன
 தாய்மொழி.
 கணிதம்.
 சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்.
 சமயம் சார்ந்த செயற்பாடுகள்.
 அழகியற் செயற்பாடுகள்.
என்பன அவற்றுள் அடங்கியுள்ளன.

2.1.3 ஆரம்பக்கல்வி சாhந்த தேர்ச்சிகள்.
ஆரம்பப் பாடசாலைப் பராயத்தில் மாணவர்கள் தாம் சுவீகரித்துக் கொள்ள வேண்டிய திறன்கள்ää உணர்வுகள்ää மனவெழுச்சிகள் என்பன சாரந்த தேர்ச்சிகள் பின்வருமாறு அறியப்பட்டுள்ளன.
1. பேச்சு எழுத்து.
சரளமாகக் கருத்துக்களைப்பரிமாறிக் கொள்ளல்ää வாசிப்புää எழுத்து என்பவற்றுடன் எளிதான எண்களைக் கணித்தல் தொடர்பான திறன்களைப் பெற்றுக் கொள்ளல்ää தாய்மொழி தவிர நாட்டில் வழக்கில் உள்ள ஏனைய மொழிகளின் எழுத்துக்களை இனங்காணும் திறமையைப் பெறுதல்.
2. திடகாத்திரமான வாழ்வு.
உடல்ää உளää சமூகச் சுகநலனுக்கு அடிப்படையான பழக்கங்களையும் மனப்பாங்குகளையும் சிறு பராயந்தொட்டே வளர்த்துக் கொள்ளல். தனிப்பட்ட சுயமான சுற்றாடற் சுகாதாரத்துக்கும் அத்துடன் உகந்த அத்தகைய நடத்தைக் கோலங்களைக் கொண்ட வாழ்க்கையை நடத்திச் செல்வதற்காக ஏனையோரையும் வழிப்படுத்துதல்.
3. தொழில்நுட்பத்தைச் சார்ந்த தொழிற்பயிற்சி.
எதிர்கால வாழ்வில் பிரவேசிப்பதற்கு அவசியமான திறன்கள்விருத்தி செய்யப்படல் புதிய தொழில்நுட்பத்தை மதித்தல். இயன்றவரை அதனைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பளித்தல் ஆகியவற்றின் வாயிலாக தொழிலின் கௌரவத்தையும் உழைப்புச் சக்தியையும் பற்றிய விளக்கத்தைப் பெறல்.

4. வரலாற்றோடு இணைந்த அறிவைப் பெறல்.
நாட்டின் உரிமைகளையும் தனித்துவத்தையும் இனங்கண்டு கொள்ளல்ää அவ்வுரிமைகளைக் கட்டியெழுப்பிய தேசிய வீரர்களைப் பற்றிய விளக்கத்தைப் பெறல். அவ்வுரிமைகளை மதித்தல்.
5. சமயத்தில் ஈடுபாடு கொள்ளலும் நற்பண்புகளைக் கடைப் பிடித்தலும்.
சமய வழிபாட்டு முறைகளைப் பயின்று கொள்ளல். தமது சமயத்தின் மீது ஈடுபாடு கொள்ளுதலும் ஏனைய சமயங்களை மதித்தலும்ää ஒரு நற்பிரசையாய்மிளிர வேண்டிய நற்பண்புகளை விருத்திசெய்தல். சமயஞ்சார்ந்த ஆசாரங்கள் பற்றிய நடை முறையான பயிற்சியைப் பெறல்.
6. சுற்றாடல் பற்றிய விளக்கம்.
இயற்கையின் கொடைகளையும் மனிதனின் ஆக்கங்களையும் வாழும் சுற்றாடலையும் பற்றிய அடிப்படை விளக்கத்தைப் பெறல். அதனூடாக விஞ்ஞான ப10ர்வமாகச் சிந்திக்க வழிப்படுத்தப்படல். இயற்கை வளங்களைக் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற மனப்பாங்கை விருத்தி செய்து கொள்ளல்.
7. பிள்ளைகளின் ஈடுபாடுகளை வளர்க்க ஆவன செய்தல்.
ஓய்வு நேரத்தை அர்த்தமுள்ளதாகவும் பயனுறுதியாக செலவிடுவதைப் போலவே இரசனையையும் விருத்தி செய்வதற்காகக் கவின்கலைச் செயற்பாடுகள் மேம்படப் பாடசாலையை ஒரு விருப்பமான இடமாக அமைத்தல்.
8. தேசிய ஒருமைப்பாடு.
தேசிய தனித்துவத்தைக் காத்துக் கொண்டு பல்வேறு மதங்களைச் சேரந்த பல்வேறு மொழிகளைப் பேசும் ஏனைய மக்களோடு ஒன்றி வாழுதல்.
9. விழுமிய வளர்ச்சி.
கண்ணுக்குப் புலனாகும் ஏனைய புலனாகாத சுற்றாடல் மீது அன்பும்ää பரிவும் கொண்ட வாழ்க்கைக்குத் தம்மைப் பழக்கிக் கொள்ளல். பரஸ்பரம் அமைதியான வாழ்க்கையை உடைய ஒரு சமூகத்துக்காகத் தம்மைப் பழக்கிக் கொள்ளல்.

இத்தகைய உயரிய நோக்கங்களை உள்ளடக்கிய ஆரம்பக்கல்விப் பாடத்திட்டத்தின் அமுலாக்கமே ஆரம்பக்கல்வி எனலாம். பிள்ளைகளிடத்தில் இவை தொடர்பில் ஏற்படும் கற்றல் விருத்தியே ஆரம்பக்கல்விப் பரப்பின் சிறப்பை வெளிக்காட்டி நிற்கின்றது. (தணிகாசலம்பிள்ளை.ச.நா 2008)

2.1.4 ஆரம்பக்கல்விக் குறிக்கோள்களும்ää தேர்ச்சிகளும்.
ஆரம்பக்கல்வியின் பொதுவான குறிக்கோள்கள் 1985ம் ஆண்டுப் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
1. அன்றாடக் கருமங்களுக்குத் தேவையான எழுத்துää வாசிப்புää கருத்து வெளிப்பாடு என்பன தொடர்பான திறன்களில் விருத்தி பெறுதல்.
2. கொடுக்கல்ää வாங்கல் அன்றாட வாழ்க்கைத் தேவைகள் என்பனவற்றுக்கு அவசியமான கணிதஞ்சார் எண்ணக்கருக்கள் சார்ந்த திறமைகளில் வளர்ச்சியடைதல்.
3. உறுதியான வாழ்க்கைக்கு அவசியமான அடிப்படைச் சுகாதார அறிவினையும் பழக்கங்களையும் கைக்கொள்ளுதல்.
4. பண்டங்களுடனான செயற்பாடுகள் முறைசார் அவதானங்கள்ää விஞ்ஞானப10ர்வமான சிந்தனைää தம் சுற்றாடல் பற்றிய விளக்கம் என்பனவற்றுக்கு அவசியமான திறன்களைப் பெற வழிவகுக்கும் ஓர் அடித்தளம் இடப்படல்.
5. பேச்சு அல்லாத சாதனங்கள் வாயிலாகச் சுதந்திரமாகவும்ää ஆக்கபூர்வமாகவும் ஆய்வு ரீதியாகத் தம் கருத்துக்களையும் உணர்வுகளையும் வெளியிடுவதற்கான திறனைப் பெறல்.
6. விஞ்ஞான ப10ர்வமான சிந்தனையையும் ஆக்கத் திறன்களையும் பெறல்.
7. எதிர்காலக் கற்றல் செயற்பாடுகளுக்கு அவசியமான அடிப்படைப் பயிற்சியைக் கற்றுக் கொள்ளுதல். அத்தோடு திறமைகளும் ஈடுபாடுகளும் விருத்தியடைதல்.
8. பௌதீகää சமூகää கலாசார சுற்றாடல் பற்றிய இலகுவான அறிவினைப் பெறுதல்ää அவற்றை மதிக்கவும் பேணவும் தூண்டப்படுதல்.
9. ஒத்துழைப்புää விட்டுக்கொடுத்தல்ää துணிவுää பொதுச் சொத்துக்களைப் பேணல்ää சட்டத்துக்குப்பணிதல் போன்ற பண்புகளைப் படிப்படியாகத் தம்வாழ்வில் பயின்று கொள்ளுதல்.
10. தேசிய ஒருமைப்பாடுää நாட்டுப்பற்று என்பன சார்ந்த நல்ல மனப்பாங்குகள் விருத்தியுற வித்திடப்படல்.
2.1.5 கட்டாய ஆரம்பக்கல்வியின் அவசியம்

ஆரம்பக்கல்வி இன்று பிள்ளைகளின் அடிப்படை உரிமையாக வலியுருத்தப்படுகின்றது. வளர்முக நாடுகளின் அரசியல் சட்டங்களும் கல்விச் சட்டங்களும் இதனை வலியுறுத்துகின்றன. இலங்கையில் கட்டாயக்கல்விச் சட்டம் நீண்ட காலமாக இருந்து வந்த போதிலும் 1978 இல் தான் கட்டாயக் கல்வியை உறுதிப்படுத்தும் பிரமாணங்கள் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டன. இந்திய அரசியல் யாப்பின் 45 ஆவது பரிவு 1960 ஆம் ஆண்டளவில் 14 வயது வரை சகல பிள்ளைகளும் இலவசää கட்டாயக் கல்வியைப் பெற வேண்டும் என நிர்ணயம் செய்தது. அந்நாட்டின் அரசியல் யாப்பின் 83ஆவது திருத்தம் ஆரம்பக்கல்வி ஒரு மனித உரிமை எனப் பிரகடனம் செய்தது. இவ்வாறான சட்டங்கள் யாவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற சமூக இலக்கினை வலியுறுத்துகின்றன.

இன்றை சமூகம்ää முக்கியமாகப் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு ஆரம்பக்கல்வியாவது வழங்கப்படல் வேண்டுமென்று கோருகின்றனர். எனவே ஆரம்பக்கல்வி ஒரு சமூகக் கோரிக்கையாகி விட்டது. இந்திய ஆய்வுகளின்படி இச்சமூகக் கோரிக்கை நாடெங்கும் பரந்து காணப்படுகின்றது. வறிய பெற்றோர்கள் கல்வியை விரும்புவதில்லை என்ற வாதத்தை நவீன ஆய்வகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆரம்பக்கல்வி பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது என்ற வாதத்தை அண்மைக்கால ஆய்வுகள் ஏற்றுக்கொள்கின்றன. செலவுப் பயன் ஆய்வுகளின் படி (ஊழளவ- டீநnகைவையயெடலளளை) பொதுக்கல்விää இடைநிலைக்கல்விää உயர்கல்வி என்பவற்றை விட ஆரம்பக்கல்வி தனியாளுக்கும் சமூகத்துக்கும் பயனுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. வறியவர்களைப் பொறுத்தவரையில் பொருளாதார மேம்பாட்டுக்குக் கல்வியை விட்டால் வேறு மாற்று ஏற்பாடுகள் எதுவுமில்லை. இவ்வாறான பொருளாதார நோக்கினைப் பல கல்வியாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை எனினும்ää ஆரம்பக்கல்வியின் மீதான முதலீடு மனித வளத்தை உருவாக்கச் செய்யப்படுவது என்பது அண்மைக் காலக் கருத்தாகும். (

ஆதரவான கற்றல் சூழலில் மாணவர்கள் பயிலும் போது அவர்கள் பாடசாலை அனுபவத்தையிட்டு மகிழ்வடைகின்றனர். நண்பர்கள்ää விளையாட்டுää கல்வி என்பவை பிள்ளைகளுக்கு மகிழ்வூட்டுவன. இந்திய ஆய்வுகளின் படி பிள்ளைகள் கல்வியினால் பெறக்கூடிய எதிர்கால வாய்ப்புகளை விட உடனடியாகக் கற்றல் வழங்கும் மகிழ்ச்சிக்கே முக்கியத்துவம் வழங்குகின்றனர். எனினும் பாடசாலைச் சூழல் எப்போதும் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியை அளிப்பதில்லை. அவர்கள் இடையில் விலகிவிடவும் பாடசாலைச் சூழல் காரணமாகின்றது.

பிள்ளைகள் தமது பல்வேறு நலன்களைப் பேணிக் கொள்ளவும் ஆரம்பக்கல்வி உதவும். நல்ல உடல் நலம்ää நோயிலிருந்து பாதுகாப்பு என்பன கல்வியின் விளைவுகளாக ஆய்வுகள் இனங்கண்டுள்ளன. எழுத்தறிவு அதிகம் காணப்படும் நாடுகளில் சிசு மரணவீதம் குறைவாகக் காணப்படுகின்றது. இந்தியாவில் எழுத்தறிவு மிகுதியாக உள்ள கேரள மாநிலத்தில் சிசுமரணவீதம் 1000க்கு 14 எழுத்தறிவு குறைந்த மத்தியப் பிரதேசத்தில் சிசு மரணவீதம் 1000க்கு 94.

ஆரம்பக்கல்வி கற்போனுக்கு மட்டுமன்றி அவனைச் சேர்ந்தோருக்கும் உதவுகின்றது. பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி பெறுவதால் சமூக உறுப்பினர்களும் பயனடைய முடியும். கல்வி விரிவடையும் போது சமூகப் பிரச்சினைகளும் குறைய வாய்ப்புகள் ஏற்படுகின்றன. தகவல்களும் கருத்துக்களும் பரிமாறப்படும் போது சுற்றாடல் சீரழிவுää மக்கள் தொகைப் பெருக்கம்ää போதை மருந்துப் பாவனைää எய்ட்ஸ் நோய் பரவல் போன்ற சமூகப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு தோன்றுகின்றது. கல்வி வளர்ச்சியானது இத்தகவல் பரிமாற்றத்துக்கு உதவுகின்றது. ஆரம்பக்கல்வி வாய்ப்புகள் இலங்கையின் பாலிய குற்றங்களைக் குறைக்கவும் பிள்ளைத் தொழிலாளர்களைத் தொழிற் சந்தையிலிருந்து அகற்றவும் உதவியுள்ளது.

இன்று உலகளாவிய அளவில் மனித உரிமைகள் போன்று சனநாயகப் பங்கேற்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பெரும்பாலானவர்கள் அரசியல் செயற்பாட்டில் அக்கறையற்று அதில் பங்கேற்காவிடில் உண்மையான சனநாயகம் வளர்ச்சி பெற முடியாது. சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுமாயின் யாவருக்கும் ஆரம்பக்கல்வி வழங்கப்படல் வேண்டும் என்பது மற்றொரு முக்கியவாதம். இந்தியாவில் பட்டியல் வகுப்பினர்ää பழங்குடி மக்கள் என்று கூறப்படும் பின்தங்கிய பிரிவினருக்கு சிறந்த கல்வியை அரசியல்ää சமூக கலாசார வாழ்வில் அவர்கள் மற்றவர்களுக்கு ஈடான நாட்ட முடியும். இவ்வகையில் இலங்கையைப் பொறுத்தவரையில் இதுவரை சமூக நீதி கிட்டாத ஒரு இனக்குழுவினர் தோட்டத்தொழிலாளர்கள் இவர்களுக்குச் சமூக நீதிகிட்டிடக் கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். இதற்கு முன்னோடித் திட்டமாகவே “யாவருக்கும் ஆரம்பக்கல்வி” என்ற குரல் வலுவாக எழுந்துள்ளது. சமத்துவமற்ற கல்வி வாய்ப்புகளுக்கும் சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளுக்குமிடையே நேரடித் தொடர்புண்டு என்பது ஆய்வாளர் கருத்து.


“யாவருக்கும் ஆரம்பக்கல்வி” என்ற கொள்கைக்குச் சாதகமாக என்னதான் கூறினாலும் அதற்கு ஒரு எதிர்வாதமும் உண்டு. “பாடசாலைக் கல்வி மக்களுக்கு விடுதலை வழங்கி அவர்களுக்கு வலுவூட்டும் (நுஅpழறநசஅநவெ) இயல்புடையதாக இருத்தல் வேண்டும். இல்லையேல் யாவருக்கும் ஆரம்பக்கல்வி வழங்குவதால் பயனில்லை என்று சொல்கின்றது. அவ்வாதம்.

இன்னும் சற்றுக் கடுமையாகக் கூறினால் பாடசாலைக் கல்வி சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்டதல்லää சமூக கட்டுப்பாட்டுக்கான ஒர் கருவியாகவே பாடசாலைகள் இயங்கி வருகின்றன. மார்க்சிய கல்வியில் ஆய்வாளர்களின் நோக்கில் பாடசாலைக் கல்வியானது வரலாற்று ரிதியாக ஏற்றத் தாழ்வுள்ள வர்க்க சமூகத்தை மீள் உருவாக்கம் (சுநிசழனரஉவழைn ழுக ஊடயளள சுனைனநn ளுழஉநைவல)) செய்து வந்துள்ளது. உயர் வகுப்பினர்களுக்கு உயர்தரமான தனியார் துறைக்கல்வி சாதாரண பிரிவினருக்கு உள்ளுராட்சிப் பாடசாலைகளில் தரக்குறைவான சாதாரணக்கல்வி இவ்வாறான மீள் உருவாக்கத்தையே ஏற்படுத்தும் என அவர்கள் வாதிட்டனர்.)

லேபிள்கள்:

ஆரம்பக்கல்வியானது தனியொருவருடைய பாதுகாப்பான எதிர்காலம்

“இயற்கைத் தோற்றப்பாடுகளிடையே இருக்கின்றன எனக் கருதப்படும் தொடர்புகள் பற்றிய கருதுகோள் முன்மொழிவுகள் பற்றிய ஒரு படிமுறையான கட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனை சார்ந்த விமர்சன விசாரணை என்பதே ஆய்வு” என்னும் ஹேர்லிங்கர் கருத்துக்கு இணங்க இன்று ஆய்வும் அது சார்ந்த துறைகளும் வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றது. அவ்வாறான வளர்ச்சி ஏற்படுவதற்கு ஆய்வு என்பது மிகவும் அவசியமாகும்.

ஒரு கட்டிடத்தின் உறுதி அது அமைக்கப் பெற்றுள்ள அடித்தளத்தினைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது. அதுபோல மனிதனின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவது அவன் பெறுகின்ற ஆரம்பக்கல்வியினைப் பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகின்றது. அந்த வகையில் இன்று ஆரம்பக்கல்வி பிள்ளைகளின் அடிப்படை உரிமையாக வலியுறுத்தப்படுகின்றது. ஆரம்பக்கல்வியின் மீதான முதலீடு மனித பலத்தை உருவாக்கச் செய்யப்படுவது என்பது அண்மைக்கால கருத்தாகவும் காணப்படுகின்றது.

இதனுள் ஆரம்பக்கல்வியானது தனியொருவருடைய பாதுகாப்பான எதிர்காலம் (ளுநஉரசநவல குரவரசந) நல்வாழ்வு (ர்நயடவா டுகைந) தன்நம்பிக்கையுடையதான வாழ்க்கை (ளுநடக சுநடயைவெ டுகைந) என்பற்றுக்குத் துணை செய்யும் என்பதனை விஞ்ஞான ரீதியான பல்வேறு ஆய்வுகளும் இன்று வெளிப்படுத்தியுள்ளன.
அந்த வகையில் ஆரம்பக்கல்வியில் பெற்றோரின் வகிபங்கு புதியதொரு விடயமல்ல கல்விக்கும் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு பிள்ளைகளின் உள விருத்திää உடல் விருத்திää வாழ்க்கைப் பழக்க வழக்கங்கள்ää சமூக ஊட்டத்துக்கான கல்விää கலாசாரம் பற்றிய அடிப்படை விளக்கங்கள்ää சமயம் மற்றும் ஒழுக்கக்கல்விää மொழியறிவு முறையில் கல்வி மூலம் பெறப்படும் தொழில்கள்ää அறிவு போன்றவற்றினை வழங்குவதில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குறிப்பாகக் கூறுவதாயின் சமூக மயமாக்கத்திற்குத் தேவையான அடிப்படைகளை வழங்குவதில் பெற்றோர் முன்னிற்கின்றனர்.

“எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்பதற்கு இணங்க ஆரம்பத்தில் இருந்தே சீரான பாதையில் கற்றலை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் வழிகாட்டுபவர்கள் பெற்றோரே. அவ்வாறு ஆக்க ப10ர்வமாக பெற்றோர்கள் பங்களிப்பினை வழங்குகின்றபோது இன்றைய புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கு அமைய கல்வியின் குறிக்கோளுக்கு இயைபாக இன்றைய சிறார்களை நாளைய நாட்டின் நற்பிரஜைகளாக ஒவ்வொரு பாடசாலைகளினாலும் உருவாக்க முடியும்.
இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து என்பதற்கு இணங்க பசுமையான மாணவ பருவத்தில் ஆரம்ப நெறியில் பெற்றோரின் பங்களிப்பு என்பது அத்தியவசியமான ஒன்றாகவுள்ளது. எதிர்காலத்தில் பிள்ளைகள் படித்து முன்னேற வேண்டும். என்பது பெற்றோரின் அவாவாகும். இவ்வாறான முன்னோற்றத்திற்கும் ஆரம்பக்கல்வி என்பது அத்திவாரமாக அமைகின்றது. அதனை ஒழுங்கான சீரான முறையில் அமைத்துக் கொடுக்கும் பொறுப்புக்களை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்பி வைப்பதுடன் பெற்றோரின் கடமை முடிந்து விடவில்லை. பாடசாலையில் தமது பிள்ளைகள் யாருடன் பழகுகின்றார்கள்ää எவ்வாhறான நண்பர்களைத் தேடிக்கொள்கின்றார்கள்ää எவ்வாறு கல்வி கற்கின்றார்கள் போன்ற விடயங்களை ஆராய்ந்து அறிவதுடன் உரிய ஆசிரியருடன் சுமுகமான உறவினை வைத்திருத்தல் வேண்டும் என்ற ரீதியல் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும். அப்போதுதான் ஆரம்பக் கல்வியினை பிள்ளைகள் பயிலும் போது அதனை சிறப்பானதாக்கி தன்னை வளப்படுத்திக் கொள்ள முடியும். காரணம் கற்றல் என்பது குடும்ப வாழ்வின் ஒரு பகுதியே மனிதக் குடும்பத்தில் குடும்பம் பெரும் பங்கு புகட்டுகின்றது என்பதால் ஆரம்பக்கல்வியில் பெற்றோரின் பங்கு அவசிமாகவுள்ளது.
ஆளுமை விருத்திக்குப் பொருத்தமான காலப்பகுதியாகக் கொள்ளப்படுகின்ற ஆரம்ப கல்வியில் பொருத்தமான அனுபவங்களும் சந்தர்பங்களும் கிடைக்கும் இடத்து ஒரு பிள்ளை விரும்பத்தக்க பழக்க வழக்கங்கள்ää மனப்பாங்குää விழுமியங்கள்ää திறன்களää; சுயசிந்தனைää திறனாய்வுää சமூக இசைவாக்கமää; பெற்று எதிர்கால நடவடிக்கைக்கான அடிப்படைகளைப் பெற்றுக் கொள்கின்றது என்பது எடுத்துக் காட்டப்படுவதால் ஆரம்பக்கல்வியில் பெற்றோரின் பங்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்காலத்தில் சவால்களை எதிர் கொண்டு மிளிரும் ஒரு சமுதாயத்தைப் பிரசவிப்பதற்குத் தயராவது எனின் அதனை வைத்தியம் பார்க்கும் வைத்தியராக பெற்றோர்கள் பிள்ளையின் ஆரம்பக் கல்விக்கு உதவ வேண்டும் அப்போதுதான் பிள்ளையின் எதிர்காலம் பிரகாசமானதாக என்றும் ஒளிவிடும்.

லேபிள்கள்: