செவ்வாய், 25 நவம்பர், 2014

திருமணம் எனும் பந்தம்
இல்­லறம் எனும் இனிய பந்­தத்­திலே இணைந்து வாழ மனப் பொருத்தம், ஜோடிப் பொருத்தம், அந்­தஸ்துப் பொருத்தம் இவற்றை எல்லாம் புறம் தள்ளி இறுதி வரை வாழ்வை செப்­ப­னிட்டு செல்­வது இருவரது ஜாதகப் பொருத்­தங்­களே.
இன்­றைய கால கட்­டத்­திலே பெரும்­பாலும் மாப்­பிள்­ளைகள் வெளி­நா­டு­க­ளி­லேயே இருப்­பதால் பெண்ணை கொடுக்கும் பெற்றோர் ஜாதகப் பொருத்­தங்­க­ளையே பெரிதும் நம்பி செயற்­ப­டு­கின்­றனர். அதில் சிலர் இன்று ஜாதகப் பொருத்த நிச்­ச­யங்­களை சரி­யான ஆய்வு செய்­யாமல் பொருத்தம் அற்ற ஜாத­கங்­க­ளையும் பொருத்தம் என்று குறிப்­பிட்டு விடு­கின்­றனர். அதைப் பின்­பற்றி திரு­ம­ணத்தை செய்து விட்டு பின் அவஸ்தை நிலை பெறு­கின்­றனர். எப்­போதும் திரு­மணப் பொருத்தம் என்­பது குறைந்­தது மூன்று ஜோதி­டர்­க­ளிடம் என்­றாலும் காண்­பிக்­கப்­பட வேண்டும். அப்­போது தான் அதன் பொருத்தத் தன்­மையை நாம் ஓர­ள­விற்கு தெளி­வாக புரிந்து கொள்ள முடியும். கிரக நிலைப் பொருத்­தங்­களில் பெண்ணின் ஜனன லக்­னத்­திற்கு ஆண் ஜனன லக்னம் வசி­ய­மாக அமைந்தால் கிரக நிலை லக்ன வசியம் அமை­கின்­றது. இந்த நிலை கிரஹ நிலையில் உள்ள மற்­றைய தோஷ நிலை­களை நிவர்த்தி செய்து விடு­கின்­றன. பெண் ஆண் ஜாதக லக்­னங்கள் நேர்­கோட்டு நிலை­களில் அமைந்­தாலும் கிரக நிலையில் அனு­கூ­ல­மான பொருத்த நிலைகள் அமையும்.
பொது­வாக குடும்­பஸ்­தான அதி­பதி களத்­தி­ரஸ்­தான அதி­பதி கிரகங்கள் மறைவு நிலை நீச நிலைகள் பெற்று அமைந்தால் அதேபோல் அதற்கு ஈடான சம­தோஷ நிலை மற்­றைய ஜாத­கத்­திலும் அமைந்து இருப்­பதே மிகவும் விசே­ட­மாகும். ஒரே நட்­சத்­திரம் என அமையும் போது ஆண், பெண் இரு­வரும் ரோகிணி, திரு­வா­திரை, மகம், விசாகம், அத்தம், திரு­வோணம், உத்­த­ரட்­டாதி, ரேவதி இந்த எட்டு நட்­சத்­தி­ரங்­களும் மிக உத்­த­ம­மான நட்­சத்­திரம். அடுத்து அமை­கின்ற அஸ்­வினி, கார்த்­திகை, புனர்­பூசம், பூசம், பூரம், உத்­தரம், சித்­திரை, அனுஷம், பூராடம், உத்­த­ராடம் இந்த பத்து நட்­சத்­தி­ரங்­களும் ஒரே நட்­சத்­தி­ர­மாயின் மத்­தி­ம­மான பொருத்­தமே. மற்­றைய நட்­சத்­தி­ரங்கள் சிறப்­பா­ன­தாக எடுக்கக் கூடிய நிலை இல்லை. இதிலே மிருக சீரிடம், மகம், சுவாதி, அனுஷம் ஆகிய நான்கு நட்­சத்­தி­ரங்­களில் ஒன்று பெண், ஆண் யாருக்கு அமைந்­தாலும் பொருத்தம் பார்க்­கா­மலே திரு­மணம் செய்­யலாம் என்­கின்ற ஒரு விதியை ஜோதிட நூல்கள் கூறி நிற்­கின்­றன.
இருப்­பினும் இந்த நான்கு நட்­சத்­திரம் கொண்­ட­வர்­களில் வாழ்­வியல் அனு­பவ ரீதியில் போராட்டம் கொண்ட நிலை­யி­லேயே அமை­கின்­றன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. எனவே நட்­சத்­திரப் பொருத்­தங்­களில் இவை­களை மிகவும் முக்­கி­ய­மாக கவ­னித்துக் கொள்ள வேண்டும். பெண் ஜாத­கத்தில் குடும்­பஸ்­தானம் எனப்­படும் 2 ஆம் இடமும் களத்­தி­ரஸ்­தானம் எனும் 7 ஆம் இடமும் மாங்­கல்ய ஸ்தானம் எனப்­படும் 8 ஆம் இடமும் மிக மிக முக்­கி­ய­மாக கவ­னிக்­கப்­பட வேண்­டி­யவை.
திரு­மணப் பொருத்­தங்கள் மொத்தம் 14 உண்டு. இவற்றில் மிக முக்­கி­ய­மான பொருத்­தங்­க­ளாக கரு­தப்­ப­டு­பவை கிரகம், நட்­சத்­திரம், கணம், யோனி, ராசி, வசியம், ராசி­ய­தி­பதி, தாலி, புத்­திரர், ஆயுள். இதிலே யோனி அல்­லது வசியம் ராசி அல்­லது ராசி­ய­தி­பதி ஏதேனும் ஒன்று பொருந்தி இருந்தால் போது­மா­னது. யோனி, வசியம் இவை இரண்டும் பொருத்­தமே இல்­லாமல் அமை­கின்ற நிலையில் அத்­தி­ரு­ம­ணத்தை தவிர்ப்­பது நல்­லது. ஒரு சில ஜாத­கங்­களில் கிரக நிலைப் பொருத்தம் குறை­வாக அமைந்து மற்­றைய பஞ்­சாங்கப் பொருத்தம் அனைத்தும் மிகவும் சிறப்­பாக பொருந்தி இருந்தால் கிரக நிலை பொருத்­தத்­திற்கு முக்­கி­யத்­துவம் கொடுக்க வேண்­டிய நிலை இல்லை. அதே நேரம் கிரக நிலையில் செவ்வாய், சுக்­கிரன், ராகு, கேது தோஷ நிலைகள் ஒரு­வ­ருக்கு அமைந்து மற்­றை­ய­வ­ருக்கு அமை­யாது விடும் நிலையில் அந்த நிலை­யி­லுள்ள ஜாதகம் தவிர்க்­கப்­பட வேண்­டி­ய­தாகும். அதே­நேரம் இரு­வ­ருக்கும் செவ்வாய் தோஷம் மற்­றைய தோஷங்கள் சம­னாக அமை­கின்ற நிலை ஏற்­பட்டால் பாதிப்­புக்கள் அமை­யாது. முக்­கி­ய­மாக ரச்சு எனப்­படும் தாலிப் பொருத்தம் மிக முக்­கி­ய­மா­ன­தாக கரு­தப்­ப­டு­வ­தாகும். ஒரு பெண் தன் வாழ்­நாளில் பல­வித பிரச்­சி­னைகள், சஞ்­ச­லங்கள், துன்­பங்கள் என தொடர்ந்­தாலும் அப் பெண்ணின் அந்­தஸ்து மேன்மை சமூக மரி­யாதை என்­ப­ன­வற்றை நிலை நிறுத்தும் ஒரே விடயம் சுமங்­கலி என்­கின்ற நிலை­யாகும். தாலிப் பொருத்த நிலையில் ஐந்து வித­மான ரச்சு அமை­கின்­றது. சிரோ ரச்சு, கண்ட ரச்சு, நாபி ரச்சு, ஊரு ரச்சு, பாத­ரச்சு என்­கின்ற இந்த ஐந்து ரச்சு வரி­சை­களில் அமை­கின்ற நட்­சத்­தி­ரத்­தி­லேயே பெண் ஆண் நட்­சத்­திரம் அமைந்தால் தாலிப் பொருத்தம் அற்ற நிலை­யா­கின்­றது. ஒரு சில ஜோதிட நூல்கள் ஆரோ­கண அவ­ரோ­கண கதியில் அமைந்தால் தாலிப் பொருத்தம் உண்டு என்று கூறி­னாலும் கிரக நிலையில் உள்ள பெண் ஆண் ஆயுள் பாவமும் பெண்ணின் மாங்­கல்ய ஸ்தான கிர­கத்தின் நிலையும் நன்கு ஆய்வு செய்தே இந்த தாலிப் பொருத்த நிலை முடிவு செய்­யப்­பட வேண்டும். மாங்­கல்ய தோஷ நிலை தரும் கிரக அமைப்­புக்கள் சில பெண்கள் ஜாத­கத்தில் 8 ஆம் இடம் பாவக் கிர­கங்கள் அமை­வதும் செவ்வாய் சனி பார்வை 8ஆம் இடத்தை நோக்­கு­வதும் பாவக் கிரகபார்வை 8 ஆம் இடம் அமை­வது 7 ஆம், 8 ஆம் இடம் சூரியன் சுக்­கிரன், சேர்க்கை அமை­வது சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று எந்­தஸ்­தானம் அமை­வதும் சந்­திரன் பலம் குன்றி பாவக் கிரக சேர்க்­கை­யுடன் 8 ஆம் இடம் அமைவது குரு சுக்கிரன் 12 ஆம் இடம் அமைவது 9 ஆம் இடத்திற்குரிய கிரகம் சூரியனுடன் சேர்க்கை பெற்று 6 ,8, 12 ஆம் இடம் அமைவதும் அந்த ஸ்தான அதிபதிக் கிரகங்களும் 6ஆம், 8ஆம், 12ஆம் இடம் அமைவது என்பன பெண்களுக்கு மாங்கல்ய தோஷ நிலையைக் கொடுக்கும். திருமணம் எனும் பந்தம் அமைய திருமணப் பொருத்தத்தின் சூட்சும விடயங்கள் பல உண்டு.

லேபிள்கள்:

பரு­வக்­காதல் 

பருவக் காதல் பருவ மழையைப் போன்­றது. வண்ண வண்ண ஆடை அணிந்து நெளிவு சுழி­வு­களைப் பார்த்து கண்­ணாடி முன் தான் அழ­காக இருக்­கின்­றேனா? எனப் பல முறை ரசிக்கும் இளம் பெண்­க­ளுக்கு தன்­னையும் ஒருவன் ரசிக்­கின்றான் என்­றதும் அவளை அறி­யா­மலே அவன் மீது ஈர்ப்பும் விருப்­பமும் ஏற்­ப­டு­வது இயல்பே. ஆனால், அது இந்த பரு­வத்தில் ஏற்­படும் எதிர்ப்­பா­லி­னக்­ க­வர்ச்­சியே. இதை விட சிறந்த வாழ்வு உண்டு என்­பதை உணரும் முன்­னரே நிரந்­த­ர­மற்ற பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­த­ர­மான, பார­தூ­ர­மான முடி­வினை நோக்கி செல்­கின்­றனர் இன்­றைய இளம் பெண்கள்.

லேபிள்கள்:

 முன்­பள்ளி கல்­வித்­து­றையில் ஒரு புதிய திருப்பம்

நாட்டில் கல்­வித்­து­றையில் மிக வும் பின்­தங்­கி­யுள்ள மக்­க­ளாக பெருந்­தோட்­டத்­துறை மக்­களே கணிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளனர் என்­பது அனை­வரும் அறிந்த விட­ய­மாகும். நாட்டில் மலை­யக மக்­களின் தொகை ஆறு அல்­லது ஏழு விகி­த­மாக இருந்­தாலும் ஆண்­டு­தோறும் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் அனு­ம­தி­பெறும் மாணவர் எண்­ணிக்கை இன்னும் 05% விகி­தத்தை விடவும் அதி­க­ரிக்­காமல் இருப்­பது பெருந்­தோட்ட மக்கள் கல்­வியில் எவ்­வ­ளவு பின்­தங்­கி­யுள்­ளார்கள் என்­ப­தற்கு தெளி­வான சாட்­சி­ய­மாகும். கடந்த காலங்­களில் மலை­யக கல்­வித்­து­றையில் படிப்­ப­டி­யாக மாற்­றங்­களும் முன்­னேற்­றங்­களும் ஏற்­பட்­டு­வந்­துள்­ளன என்­பது உண்மை. ஆனா லும் நாம் கல்வி அபி­வி­ருத்­தியில் மற்­றைய துறை­யி­னரை எட்­டிப்­பி­டிக்க இன்னும் பல ஆண்­டுகள் செல்லும்.
பிள்­ளையின் கல்வி முன்­னேற்­றத்­திற்கு முன்­பள்ளிக் கல்வி அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும். இன்­றைய நவீன கல்­வி­மு­றையில் பிள்ளை பாட­சா­லையில் எதிர்­நோக்கும் சவால்­களை சமா­ளிக்க வேண்­டு­மானால் பாட­சா­லைக்கு செல்லும் முன்னர் பிள்ளை, முன்­பள்­ளியில் நன்கு ஆயத்­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும். நகர, கிராம பகு­தி­களில் பெற்­றார்கள் தங்கள் பிள்­ளைகள் பாட­சா­லைக்கு செல்லும் முன்னர் முன்­பள்­ளிக்கு அனுப்­பு­கி­றார்கள். இன்று இது ஒரு கட்­டாய தேவை­யா­கி­விட்­டது. ஆனால், பெரும்­பான்­மை யான பெருந்­தோட்­டங்­களில் முன்­பள்ளிக் கல்வி என்­பது இன்னும் கூட முற்­றிலும் அறி­யப்­ப­டாத ஒன்­றா­கவே உள்­ளது. முன்­பள்ளிக் கல்­வியின் முக்­கி­யத்­து­வத்தை பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பெருந்­தோட்ட பெற்­றார் கள் அறிந்­தி­ருந்­தாலும் பெருந்­தோட்ட பகு­தி­களில் முன்­பள்­ளிகள் இல்­லா­மையால் தமது பிள்­ளை­க­ளுக்கு இந்த வச­தியை பெற்­றுத்­தர முடி­யாத நிலையில் உள்­ளனர்.
பெருந்­தோட்டக் கல்வி எதிர்­பார்த்த அள­வுக்கு முன்­னே­றா­மைக்கு முன்­பள்ளிக் கல்வி வச­தி­யில்­லாமை முக்­கிய கார­ண­மாகும். இந்த பின்­ன­ணியில் பிரிடோ நிறு­வனம் கடந்த இரு­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் முன்­பள்­ளி­சா­லை­களை நடத்தி வரு­கி­றது. நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் இந்த நிறு­வ­னத்தால் முன்­பள்­ளிகள் நடத்­தப்­படும் பகு­தி­களில் பிள்­ளை­களின் அடைவு மட்­டமும் ஐந்தாம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்­தி­ய­டைவோர் எண்­ணிக்­கையும் முன்­பள்­ளிகள் இல்­லாத பகு­தி­க­ளோடு ஒப்­பி­டும்­போது மிகவும் அதி­க­மா­க­வுள்­ளது என்­பதை நுவ­ரெ­லியா மாவட்ட கல்வி அதி­கா­ரிகள் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றனர். ஆயினும் இவ்­வ­ளவு முக்­கி­யத்­துவம் வாய்ந்த முன்­பள்ளிக் கல்­வியை பெருந்­தோட்ட பிள்­ளைகள் பெறு­வ­தற்கு மலை­யக அர­சி­யல்­வா­திகள் எவரும் இது­வரை உத­வி­யதும் இல்லை. அதைப்­பற்றி பேசி­யதும் இல்லை. அதற்­காக வளங்கள் ஒதுக்­கி­யதும் இல்லை.
முன்­பள்­ளிகள் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­க­ளுக்கு தொழில்­வாய்ப்பைத் தரு­கி­றது
முன்­பள்­ளிக்­கல்வி மலை­யக கல்வி முன்­னேற்­றத்­துக்கு இன்­றி­ய­மை­யா­தது என்­ப­தை­விட, இலங்­கை­யி­லுள்ள எல்லா பெருந்­தோட்­டங்­க­ளிலும் சகல பிள்­ளை­க­ளுக்கும் முன்­பள்ளிக் கல்வி கிடைக்க செய்­வ­தானால் ஆயி­ரக்­க­ணக்­கான முன்­பள்­ளி­களை அமைக்க வேண்­டிய தேவை­யுள்­ளது. இவ்­வாறு முன்­பள்­ளிகள் அமைக்­கப்­ப­டும்­போது ஆயி­ரக்­க­ணக்­கான பெருந்­தோட்ட இளம் பெண்­க­ளுக்கு சமூக அங்­கீ­காரம் பெற்ற தொழில்­வாய்ப்பு கிடைக்கும். பெருந்­தோட்ட முன்­பள்­ளிக் ­கல்வி ஆயி­ரக்­க­ணக்­கான யுவ­தி­க­ளுக்கு வேலை­வாய்ப்பை தரும் ஒரு கெள­ர­வான தொழிற்­றுறை என்­பதை நாம் ஏற்­றுக்­கொள்­ளத்தான் வேண்டும்.
ஆயினும் முன்­பள்­ளி­களை எவரும் தாம் நினைத்­த­படி நடத்­தி­விட முடி­யாது. முன்­பள்ளி ஆசி­ரி­யர்கள் தர­மான பயிற்சி பெற்­ற­வ­ராக இருக்க வேண்டும். முன்­பள்ளி ஆசி­ரி­யை­க­ளுக்கு தர­மான பயிற்சி வழங்­கு­வ­தற்கு பெருந்­தோட்டப் பகு­தி­களில் அண்­மைக்­கா­லம்­வரை வாய்ப்­புக்கள் எதுவும் இல்­லாத நிலையில் பெருந்­தோட்ட பகு­தியில் திறந்த பல்­க­லைக்­க­ழங்­களில் முன்­பள்ளி ஆசி­ரி­ யை­க­ளுக்­கான கற்­கை­நெறி ஆரம்­பிக்க வேண்டும் என்ற பரிந்­துரை ஐந்து ஆண்­டு­ க­ளுக்கு முன்­னரே முன்­வைக்­கப்­பட்­டது. ஆனால் மலை­யக அர­சி­யல்­வா­திகள் எவ ரும் அந்த முயற்­சிக்கு உத­வி­ய­ளிக்­க­வு­மி ல்லை. ஊக்­கப்­ப­டுத்­த­வு­மில்லை. தனி­யொரு நிறு­வ­ன­மாகப் போரா­டியே ஹட்டன், கண்டி போன்ற பெருந்­தோட்ட பகு­தி­களில் திறந்த பல்­க­லைக்­க­ழங்­களில் தமிழ்­மொ­ழி யில் முன்­பள்ளி ஆசி­ரி­யை­க­ளுக்­கான பயி ற்சி நெறியை ஆரம்­பிப்­பதில் பிரிடோ நிறு­வனம் வெற்­றி­கண்­டது.
இந்த பின்­ன­ணியில் வரவு –- செலவுத் திட்­டத்தின் கல்வி மற்றும் கல்விச் சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்­கீட்டு விவா­தத்தில் பேசிய பிர­தி­ய­மைச்சர் பி.திகாம்பரம் பெருந்­ தோட்டங்­களில் முன்­பள்­ளிக்­கல்வி பர­வ லான முறையில் அபி­வி­ருத்தி செய்­யப்­பட வேண்டி­யதன் முக்­கி­யத்­துவம் குறித்தும் அரசு, முன்­பள்ளி ஆசி­ரி­யை­க­ளுக்கு வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்ள 2500ரூபா கொடுப்­ப­னவு பெருந்தோட்டப் பகுதி ஆசிரியை களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். தற்போது மாகாண சபை, பிரதேச சபை, நகர சபைகள் மூலம் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்திருந்தாலும் பெருந் தோட்ட முன்பள்ளி ஆசிரியைகளுக்கு இந் தக் கொடுப்பனவு ஒருபோதும் கிடைத்ததி ல்லை. அதுபற்றி எந்த வொரு மலையக அரசியல்வாதியும் பேசியதுமில்லை. இந்தப் பின்னணியில் பிரதியமைச்சரின் முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற உரை பெருந்தோட்ட முன்பள்ளிகளுக்கும் ஆசிரியைகளுக்கும் அங்கீகாரமும், அவர்க ளும் பாடசாலை ஆசிரியைகளுக்கு சமமான முறையில் மதிக்கப்படவும், கொடுப்பனவு களை பெறவும் வாய்ப்பை ஏற்படுத்தியுள் ளது.

லேபிள்கள்:

சிறுவர் துஷ்­பி­ர­யோகம்
சிறுவர் துஷ்­பி­ர­யோகம் பற்றி தண்­டனைச் சட்டக் கோவையின் 286, 288, 308, 345, 350, 352, 360 ஆகிய பிரி­வுகள் குறிப்­பி­டு­கின்­றன. ஆபா­சப்­படப் புத்­த­கங்கள், அரு­வ­ருக்­கத்­தக்க வெளி­யீ­டுகள், ஆபாச துண்டுப் பிர­சு­ரங்கள், சித்­தி­ரங்கள், அச்­சுப்­ப­திப்­புக்கள், புகைப்­ப­டங்கள் போன்­ற­வற்றை தயா­ரிக்­கின்­றமை விநி­யோ­கிக்­கின்­றமை சட்­டத்தின் கீழ் குற்­றங்­க­ளாகும். ஆபாச படங்­களை கண்­காட்­சிக்கு வைத்­தி­ருத்­தலும் குற்­ற­மா­கின்­றது.
இந்த வகையில் சிறு­பிள்­ளை­களை பயன்­ப­டுத்தி மேற்­படி பிர­சு­ரங்­களை தயா­ரிப்­பது, அல்­லது சிறு­பிள்­ளை­களை நாக­ரி­க­மற்ற முறையில் ஆபாசப் பட­மெ­டுப்­பது, சில ஆபாச காட்­சி­களை செய்­யும்­படி கூறி பட­மெ­டுப்­பது, அத்­த­கைய காட்­சி­களைக் கொண்ட ஆவ­ணங்­களை வைத்­தி­ருப்­பது சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளாகும். இத்­த­கைய நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் விதத்தில் சிறு­வர்­களை பயன்­ப­டுத்த பெற்­றோர்கள், பாது­கா­வ­ல­ர்கள் அனு­ம­தித்­தலும் குற்­ற­மாகும். வேறொ­ரு­வரின் பணிப்பின் பேரில் இத்­த­கைய ஆபாசப் படங்­களை தயா­ரிப்­பவர், கழு­பு­பவர் கட்­டா­ய­மாக அண்­மை­யி­லுள்ள பொலிஸ் நிலை­யத்தில் இது­பற்றி முறைப்­பாடு செய்­ய­வேண்டும். அவர் அவ்­வாறு பொலி­ஸுக்கு தகவல் கொடுக்கத் தவ­றினால் அதுவும் குற்­ற­மாகும். இத்­த­கைய ஆபா­சப்­ப­டங்­களை, ஆபாசக் காட்­சி­களை கண­னியில் இடு­கின்ற நப­ரொ­ருவர் தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மொன்றைப் புரி­ப­வ­ராவார். சிறு­பிள்­ளை­களின் பாலியல் துஷ்­பி­ர­யோகம் பற்­றிய படங்­களை தயா­ரிப்­ப­வரும், கண­னியில் இடு­கின்­றவர் அது­பற்­றிய விப­ரங்­க­ளையும் அவ்­வாறு தம்மை கேட்டுக் கொண்­டவர் பற்­றிய விப­ரங்­களை பொலிஸ் நிலை­யத்­திற்கு வழங்­குதல் வேண்டும். மேலும் சிறு­பிள்­ளைகள் பற்­றிய ஆபாச படங்­களை தயா­ரிக்கும் இடத்­தி­னு­டைய உரி­மை­யாளர், வாட­கைக்­காரர் கவ­னிப்­பவர் அறிந்து கொண்டே அவ்­வாறு செய்­வ­தற்கு இட­ம­ளித்தால் குற்றம் ஒன்­றுக்குப் பொறுப்­பா­ன­வ­ராக வேண்டும்.
தண்­டனைச் சட்­டக்­கோ­வையின் பிரிவு 288 இன்­ப­டி­யாக ஒரு பிள்­ளையை, பிள்­ளை­களை றோட்டில், அல்­லது வேறொரு இடத்தில் பிச்­சை­யெ­டுக்க விடு­கின்ற, தூண்­டு­கின்ற ஆளொ­ரு­வரும் தண்­டிக்­கப்­பட வேண்­டி­ய­வ­ராவார். சில நட­னங்­களை, சில செயற்­பா­டு­களை, பாடல்­களை பாட விடு­வதன் மூலம் பிச்­சை­யெ­டுக்­கின்ற செயற்­பாட்­டிற்கு கார­ண­மாக இருப்­ப­வர்கள், உறு­து­ணை­யாக இருப்­ப­துவும் குற்­ற­மாகும். சிறு­பிள்­ளை­களை பாவித்து பாலியல் தொடர்­பு­க­ளுக்கு வழி­வ­குத்துக் கொடுப்­ப­தற்கு உதவி புரி­வோரும் குற்றம் செய்­ப­வர்­க­ளா­கவே கரு­தப்­ப­டுவர். சட்­டத்­தினால் தடுக்­கப்­பட்ட பொருட்­களை சிறு­பிள்­ளை­களின் மூல­மாக கடத்­து­வ­தற்கு கார­ண­மாக இருத்­தலும் ஒரு குற்­ற­மே­யாகும். ஒரு சிறு பிள்­ளையின் பாது­கா­வ­லுக்கு பொறுப்­பா­ன­வர்கள் அல்­லது பெற்றோர் ஒரு சிறு­பிள்­ளையைக் கைவி­டுதல், பிள்­ளை­களை அநா­த­ர­வாக தவிக்க விடு­தலும் சட்­டத்தால் தடை செய்­யப்­பட்ட விட­ய­மாகும். 18 வய­திற்கு குறைந்த பிள்­ளையை வேண்­டு­மென்றே அடித்தல், அல்­லது பிள்­ளை­களைக் கவ­னிக்கத் தவ­று­வது அல்­லது அப்­பிள்­ளைக்கு ஊறு செய்­வது மனோ­வியல் ரீதியில் பாதிக்கச் செய்­வன என்­ப­ன­வையும் குற்­றங்­க­ளாகும். 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்ட திருத்தச் சட்­டத்தின் பிர­காரம் ஊறு என்­பது மன­நிலை பாதிப்­பி­னையும் உள்­ள­டக்கும்.
தண்­டனைச் சட்­டக்­கோ­வையின் பிரிவு 345இன் பிர­காரம் பாலியல் ரீதி­யாக இன்­னொரு நபரை சொற்­க­ளாலோ அல்­லது ஒரு செயல் மூல­மா­கவோ தொந்­த­ரவு செய்வது குற்­ற­மாகும். மற்­ற­வர்­களால் வர­வேற்­கப்­ப­டாத பாலியல் சேட்­டைகள், தொந்­த­ர­வுகள் போன்­ற­வையும் பிரிவு 345 இன் வரம்­பெல்­லை­யினுள் வரும். அதி­கா­ர­பூர்­வ­மான இடத்­தி­லி­ருந்தோ அல்­லது வேலை செய்யும் இடத்­தி­லி­ருந்தோ இத்­த­கைய பாலியல் சமிஞ்­ஞை­களைச் செய்­வது கண்­டிக்­கத்­தக்­கதும் தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும். இப்­பி­ரிவு பரந்த நோக்­கெல்­லையைக் கொண்­டது. கற்­ப­ழிப்புத் தவிர்ந்த ஏனைய எந்­த­வி­த­மான பாலியல் தாக்­கு­தல்­க­ளையும் உள்­ள­டக்கக் கூடிய பிரி­வாகும். இப்­பி­ரிவு சிறு­பிள்­ளைகள் தொடர்­பிலும் ஏற்­பு­டை­ய­தாகும்.
சிறு­பிள்­ளை­களைக் கடத்­துதல் என்­பது இலங்­கைக்குள் கடத்­து­வ­த­னையும், இலங்­கையை விட்டு கடத்­து­வ­தையும் உள்­ள­டக்கும். ஒரு பிள்­ளையின் கட்­டுக்­கா­வ­லுக்கு பொறுப்­பான ஆளி­ட­மி­ருந்து கடத்­துதல் ஆகும். ஆண் பிள்­ளைகள் 14 வய­திற்கு கீழ்­பட்ட போதும் பெண் பிள்­ளைகள் 16 வய­துக்கு கீழ்­பட்ட போதும் அல்­லது மன­நிலை குறை­வு­டைய ஆளாயின் அவ்­வாளின் பாது­காப்­பிற்கு பொறுப்­பான ஆளொ­ரு­வ­ரி­ட­மி­ருந்து கடத்­துதல் சட்­ட­மு­றை­யான பாது­காப்­பி­லி­ருந்து கடத்­துதல் எனக் கூறப்­படும். இந்த 14 வயது, 16 வய­தெல்­லை­யா­னது 18 எனச் சட்­டத்தில் சீர்­தி­ருத்தம் செய்­யப்­படல் வேண்டும் என இக்­கட்­டு­ரை­யாளர் கூறு­கின்றார்.
பிரிவு 360 (யு) இன் பிர­காரம் கடத்­தப்­ப­டு­ப­வரின் சம்­மதம் இருந்­தாலோ இல்­லையோ சட்ட விரோ­த­மான பாலியல் நோக்­கத்­திற்­காக கடத்­தப்­ப­டுதல் குற்­ற­மாகும். இந்த வகையில் விப­சார விடு­திக்கு அல்­லது ஒரு தங்­கு­மி­டத்­துக்கு இவர்­களை பாலியல் நோக்­கத்­திற்கு பாவிக்­கப்­ப­டு­வ­தற்­காக கடத்­தப்­படல் ஒரு பார­தூ­ர­மான குற்­ற­மாகும்.
பிரிவு 360 (டீ) இன் படி­யாக பாலியல் சுரண்டல் என்­பதன் வரை­வி­லக்­கணம் 06 உப­பி­ரி­வு­களில் கூறப்­பட்­டுள்­ளது. பாலியல் செயற்­பா­டுகள் எனத் தெரிந்து கொண்டே சிறு­பிள்­ளை­களை வைத்­தி­ருப்­பது, அத்­த­கைய சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­டு­க­ளுக்கு உத­வு­வது, தவ­றான பாலியல் படங்­க­ளுக்கு துணை புரி­வது பிரிவு (அ) இன் கீழ் வரு­கின்ற விட­ய­மாகும்.
பாலியல் உற­வு­களோ அல்­லது எந்­த­வ­கை­யான பாலியல் துஷ்பிர­யோ­கங்­க­ளுக்கோ சிறு­பிள்­ளை­களைப் பயன்­ப­டுத்­துதல் (ஆ) பிரிவின் கீழான பாலியல் சுரண்­டலாம்.
உப­பி­ரிவு (இ) இன்­படி ஒரு சிறு­பிள்­ளையை பாலியல் துஷ்பிர­யோ­கத்­திற்கு உட்­படும் வகையில் விளம்­ப­ரப்­ப­டுத்த செய்தல், அச்சு ஊடகம் மூலம் அதா­வது செய்­திப்­பத்­தி­ரிகை மூலம் தூண்­டுதல் குற்­ற­மாகும்.
உப­பி­ரிவு (ஈ) இன்­படி ஒரு சிறு­பிள்ளை மீதுள்ள செல்­வாக்கு கார­ண­மா­கவோ, சிறப்­பு­ரிமை கார­ண­மா­கவோ அல்­லது உற­வு­மு­றை­யான பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு வழி­வ­குத்­தலும் பாலியல் சுரண்­ட­லாகும்.
ஒரு சிறு­பிள்­ளையை அச்­சு­றுத்தி அல்­லது வன்­மு­றையைப் பாவித்து தன்­னு­டைய பாலியல் தேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்த முனை­வதும் பாலியல் சுரண்­ட­லாகும். பணம் கொடுத்து அல்­லது பொருட்­களைக் கொடுத்து ஆசை காட்டி சிறு­பிள்­ளை­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­துதல் பாலியல் சுரண்­ட­லாகும்.
360 (ஊ) சிறு­பிள்­ளை­களை விற்றல், சதி செய்தல், விற்க அல்­லது வாங்க தூண்­டுதல் செய்தல், அதற்கு ஒழுங்­க­மைத்துக் கொடுத்தல் குற்­ற­மாகும். இத்­த­கைய குற்­றங்­க­ளுக்கு 25 வருட கால சிறை­வாசம் நீதி­மன்­றத்­தினால் விதிக்­கப்­ப­டலாம்.
சிறு­பிள்­ளை­களை கட்­டா­ய­மாக வேலைக்கு அமர்த்­து­வது, அடி­மை­யாக வைத்­தி­ருப்­பது, விப­சா­ரத்­திற்கு வழி­வ­குப்­பது குற்­ற­மாகும். கட்­டாய வேலைக்கு வைத்­தி­ருத்தல் சிறு­பிள்­ளை­களை சம்­மதம் இருந்தோ இல்­லையோ குற்­ற­மாகும். கபட நோக்­குடன் சிறு­பிள்­ளை­களின் உடற்­பா­கங்­களை அகற்­றுதல், அவ்­வா­றான முயற்­சிக்குத் துணை­யாக இருப்­பது பார­தூ­ர­மான குற்­ற­மாகும்.
பிறக்­காத குழந்­தையை பெற்றுத் தரு­வ­தாக கூறி அல்­லது பெண்­களை பிள்­ளையைப் பெற்றுத் தரு­வ­தற்­காக ஆட்­சேர்ப்­பது சட்­டத்தால் தடுக்­கப்­பட்ட விட­யங்­க­ளாகும். பிறப்புப் பதிவுப் பத்­தி­ரங்­களில் தெரிந்து கொண்டே மாற்­றங்­களை செய்­வது, அதனை மாற்ற உத­வு­வது மோசடி செய்­வது சட்ட விரோ­த­மாகும்.
பிறந்த குழந்­தை­களை சிறு­பிள்­ளை­களை ஆஸ்­பத்­தி­ரிகள் சிறுவர் இல்­லங்கள், பாது­காப்பு நிலை­யங்­களில் இருந்து சட்ட விரோ­த­மான முறையில் தத்­தெ­டுப்­பது தண்­ட­னைக்­கு­ரி­ய­தாகும். பதி­னெட்டு வய­திற்கு கீழ் உள்­ள­வர்­களை ஆசை காட்டி மோசம் செய்­வது குற்­ற­மாகும்.
பிரிவு 363இன் படி சம்­மதம் இருந்­ததோ இல்­லையோ 16 வய­திற்கு குறைந்த சிறுமி பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­படும் போது அதனை அச்­சி­றுமி எதிர்த்­தது தடுத்­தது தொடர்­பான சாட்­சியம் அவ­சி­ய­மில்லை எனக் கூறு­கின்­றது.
பிரிவு 364 (யு) இன் படி­யாக தடுக்­கப்­பட்ட தகாத உறவு முறை­யான பாலியல் குற்றம் பற்றிக் குறிப்­பி­டு­கின்­றது. தாய் தகப்பன், தத்­தெ­டுத்த தாய் தகப்பன், சகோ­த­ர்கள், ஒரு தாய்க்குப் பிறந்த பிள்­ளைகள், ஒரு தகப்­ப­னுக்குப் பிறந்த பிள்­ளைகள் தமக்குள் செய்யும் திரு­ம­ணங்கள், பேரன் பேத்­திகள் திரு­மணம் போன்­றவை தடுக்­கப்­பட்ட உறவு முறை­களின் திரு­ம­ணத்­திற்குள் உள்­ள­டங்கும்.
ஒரு நப­ரு­டை­யதோ அல்­லது விலங்­கி­னு­டை­யதோ குதத்­தி­னூ­டாக உறவு கொள்­ளுதல் இயற்­கைக்கு முர­ணான குற்­றங்கள் என்ற வகு­தி­யினுள் வரும். 16 வய­திற்கு கீழ்­பட்ட ஒரு பிள்­ளை­யுடன் சம்­மதம் இருந்­ததோ இல்­லையோ பண்­பா­டற்ற முறையில் பாலியல் ரீதி­யாக துஷ்பிர­யோ­கப்­ப­டுத்­தப்­பட்டால் அந்­நபர் 10 வரு­டத்­திற்கு குறை­யாத 25 வரு­டத்­திற்கு மேற்­ப­டாத சிறைத்­தண்­ட­னையைப் பெறுவார். இத்­த­கைய விட­யங்­களை பார­தூ­ர­மான பாரியல் துஷ்பிர­யோகம் எனக் கூறுவர்.
பாலியல் குற்­றங்கள் தொடர்பில் பாதிக்­கப்­பட்­ட­வரின் பெயரை பாதிக்­கப்­பட்­ட­வரை அடை­யாளம் கண்டு கொள்ள வழி­ச­மைக்கும் விட­யத்தை எவ­ரா­வது அச்­சி­டுதல் அல்­லது வெளி­யி­டுதல் குற்­ற­மொன்­றாகும்.சிறு­பிள்­ளை­களை பாலியல் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்கும் போது 25 வருட கால சிறைத்­தண்­ட­னையும், தண்­டமும் விதிக்­கப்­ப­டு­வ­தோடு, பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு நட்­ட­ஈடும் வழங்­கும்­ப­டியும் நீதி­மன்றம் உத்­த­ர­விடும். 

லேபிள்கள்:

சந்­தி­ரனில்
வாழ்­வி­டங்­களை அமைக்கும் புதிய திட்டம்
விண்­வெளி நோக்­கிய உலக நாடு­களின் ஆய்வு நட­வ­டிக்­கைகள் சற்றே தீவிரம் பெற்­றுள்­ள­தாகத் தோன்­று­கி­றது. செவ்வாய்க் கோள் நோக்­கிய அமெ­ரிக்க மற்றும் இந்­திய ஆய்வுத் தொகு­தி­களின் விண்­ப­யணம், அக்கோள் நோக்கி விண்­வெளி வீரர்­களை அனுப்­பு­வது தொடர்­பான அமெ­ரிக்க ‘நாஸா’ நிறு­வ­னத்தின் ஒத்­தி­கைகள் மற்றும் சீன நாட்டின் சந்­திரன் நோக்­கிய அண்­மைய விண்­ப­ய­ணங்கள் என்­ற­வா­றான பல்­வேறு வகை­யான விண்­வெளி ஆய்வு முயற்­சிகள் ஆய்­வா­ளர்­களால் முனைப்­புடன் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.
கடந்த 12 ஆந் திகதி வால்­வெள்ளி ஒன்றில் ஆய்­வுத்­தொ­கு­தியை தரை­யி­றக்கும் ஐரோப்­பிய விண்­வெளி ஆய்வு நிறு­வ­னத்தின் முயற்சி நடந்­தே­றி­யது. எனினும், அம்­மு­யற்சி முழு ­வெற்­றி­ய­ளிக்­க­வில்லை எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது. இவ்­வா­றாக பல­நோக்­கி­லான ஆய்வு முனைப்­புக்கள் பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.
விண்­வெ­ளிக்கு விண்­வெளி ஆய்­வா­ளர்­களை அனுப்பி ஆய்­வு­களை மேற்­கொள்­ளுதல் என்­ப­தற்கு அப்பால், அங்கு மனிதக் குடி­யேற்­றங்­களை நிறு­வுதல், சுற்­றுலாத் தலங்­களை அமைத்தல் போன்ற விட­யங்­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான சாத்­தி­யங்கள் குறித்தும் ஆரா­யப்­பட்­டு­வ­ரு­கின்­றன. புவியின் மேற்­ப­ரப்புப் போன்று ஏனைய விண்­பொ­ருட்­களின் மேற்­ப­ரப்­புக்கள் மனித வாழ்­விற்கு உகந்­த­வை­யாகக் காணப்­ப­ட­வில்லை. அம்­மேற்­ப­ரப்­புக்­களில் உயி­ரி­னங்கள் வாழ்­வ­தற்­கேற்ற உவப்­பான கால­நிலை காணப்­ப­டா­த­துடன், ஆபத்­தான அண்­ட­வெளிக் கதிர்­களின் தாக்கம், அதி­க­ரித்த விண்­பொ­ருட்­களின் மோதல் என்­பவை உயி­ரா­பத்­தினை ஏற்­ப­டுத்­து­ப­வை­யாகக் காணப்­ப­டு­கின்­றன.
விண்­வெ­ளியில் மனிதர் குடி­யே­று­வ­தற்கு முன், மேற்­கு­றிப்­பிட்ட அபா­யங்­க­ளி­லி­ருந்து பாது­காப்­ப­ளிக்கும் வாழ்­வி­டங்­களைக் கட்­ட­மைப்­பது என்­பது கட்­டா­ய­மா­னது. அண்­மையில், நெதர்­லாந்தின் Noordwijk இல் அமைந்­துள்ள ஐரோப்­பிய விண்­வெளி தொழில்­நுட்­பக்­கூ­டத்தில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் முப்­ப­ரி­மாணப் பதி­யிகள் ஊடாக சந்­தி­ரனில் காணப்­படும் மூலப்­பொ­ருட்­களைப் பயன்­ப­டுத்திப் பாது­காப்­பான வதி­வி­டங்­களை ஆக்கும் வழி­மு­றைகள் குறித்துக் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் 350 இற்கும் மேற்­பட்ட அறி­வி­ய­லா­ளர்கள் கலந்து கருத்­துப்­ப­ரி­மா­றல்­களை மேற்­கொண்­டனர்.
சந்­தி­ரனில் மனிதக் குடி­யேற்­றங்கள் ஏற்­ப­டுத்தும் எண்ணம் ஈடேற வேண்­டு­மெனில், அதற்­கான அனைத்து விநி­யோக நட­வ­டிக்­கை­களும் புவி­யி­லி­ருந்தே மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். எனவே, பாது­காப்­பான வாழ்­விடக் கட்­ட­மைப்­புக்­களைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அனைத்துப் பொருட்­க­ளையும் புவி­யி­லி­ருந்து கொண்டு செல்­வ­தென்­பது பாரிய செல­வினை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமையும். ஆதலால், சந்­தி­ரனின் மேற்­ப­ரப்பில் காணப்­படும் மூலப்­பொ­ருட்­களை முப்­ப­ரி­மாணப் பதியி ஊடாக தேவைக்கு ஏற்ற வடி­வ­மாக மாற்­றி­ய­மைத்து, புவி­யி­லி­ருந்து கொண்டு செல்­லப்­படும் அவ­சி­ய­மான கட்­ட­மைப்புப் பொருட்­க­ளுடன் இணைத்து, சந்­தி­ரனில் உட்­கட்­டு­மா­னங்­களைக் கட்டியெ­ழுப்­பு­வது தொடர்­பாக ஐரோப்­பிய விண்­வெளி ஆய்­வா­ளர்கள் சிந்­தித்து வரு­கின்­றனர்.
நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் முன்­மொ­ழி­யப்­பட்ட திட்­டத்தின் பிர­காரம், புவி­யி­லி­ருந்து கொண்­டு­செல்­லப்­படும் கட்­ட­மைப்பு, காற்­றினால் நிரப்­பப்­பட்டு கவிகை வடி­வி­லான வாழ்­விடம் கட்­ட­மைக்­கப்­படும். பின்னர்,
அதன் வெளிப்­ப­குதி, சந்­தி­ரனின் மேற்­ப­ரப்பில் காணப்­படும் மூலப்­பொ­ருட்­களை முப்­ப­ரி­மா­ணப்­ப­தியி வாயி­லாக உரிய வடி­வங்கள் ஆக்கி காப்­புறை இடு­வ­தற்குத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இக்­காப்­புறை சந்­தி­ரனின் உயர்­வெப்­ப­நிலை மாறல்கள் அகப்­ப­கு­தியைச் சென்­ற­டை­யாமல் தடுப்­ப­துடன், அண்­ட­வெளிக் கதிர்ப்­புக்கள், விண்­பொருள் மோது­கைகள் ஆகி­ய­வற்­றி­லி­ருந்தும் பாது­காப்­ப­தாக அமையும் என ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். அத்­துடன் இதன் மேற்­ப­ரப்பில் அமைக்­கப்­படும் பாது­காப்­புடன் கூடிய சாள­ரங்கள் சூரிய ஒளியை உள்ளே அனு­ம­தித்து வாழ்­வி­டத்தின் அகப்­ப­கு­தியை பகல் நேரங்­களில் ஒளியூட்டும்.
சந்­தி­ரனின் மேற்­ப­ரப்­பி­லான வாழ்­விடம், மேற்­கு­றிப்­பிட்ட தொழில்­நுட்­பத்­தினைப் பயன்­ப­டுத்தி மூன்று புவி மாதங்­களில் கட்­டி­யெ­ழுப்­பப்­பட இயலும் என ஆய்­வா­ளர்கள் குறிப்­பி­டு­கின்­றனர். இது, நான்கு விண்­வெளி வீரர்கள் வதிந்து தமது ஆய்வு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளப் போது­மான அகக் கன­வ­ள­வினைக் கொண்­ட­தாக காணப்­படும். எதிர்­வரும் 40 வரு­டங்­களில் இவ்­வ­கை­யான கட்­ட­மைப்­புக்கள் ஐரோப்­பிய விண்­வெளி ஆய்­வ­கத்­தினால் சந்­தி­ரனில் அமைக்­கப்­ப­டலாம் என்ற எதிர்­பார்ப்பு நிலவுகின்றது.

லேபிள்கள்:

பெண் பிள்ளைகளின் தவறான தொடர்புகளும் விளைவுகளும் 

பக்­கு­வ­மற்ற இளம் ரீன் ஏஜ் வய­து­டைய பிள்­ளைகள் நல்­லது கெட்­டது எது என்­பது பற்றி சீர்­தூக்கி பார்த்து தீர்­மா­னங்­களை எடுக்க முடி­யாத வய­தினர். இவர்­களின் அனு­ப­வ­மற்ற தன்­மையும் அறி­யா­மையும் இவர்கள் தவ­று­களில் சிக்­கு­வ­தற்கு கார­ண­மாக இருக்­கின்­றன. இவர்­க­ளது நட­வ­டிக்­கைகள் மீது பெற்றோர் கண்­கா­ணிப்­பாக இருப்­ப­துடன் அவர்­க­ளது மன­நி­லை­களை புரிந்து அவர்­க­ளுக்கு ஒரு நல்ல ஆலோ­ச­க­ரா­கவும் அவர்­க­ளுடன் நட்­பா­கவும் அதே நேரம் கட்­டுக்­கோப்­பா­கவும் அவர்­களை வழி நடத்த வேண்டும். ஆனால், பெற்­றோர்­களோ இன்­றைய பொரு­ளா­தாரம், தமது முன்­னேற்­றங்கள், தமது உயர்­கல்வி, பதவி உயர்வு, போட்­டிகள், பொருள்­தே­டுதல் மற்றும் அவர்­களின் தனிப்­பட்ட நட­வ­டிக்­கைகள் போன்­ற­வற்­றுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து முழு மூச்­சாக ஓடிக்­கொண்­டே­யி­ருக்­கி­றார்கள். இந்­நி­லையில் தமது பிள்­ளைகள் கல்வி நட­வ­டிக்­கை­க­ளி­லேயே தம்மை முற்றும் முழு­தாக ஈடு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள் என்ற அசைக்க முடி­யாத நம்­பிக்­கையில் இருந்து வரு­கி­றார்கள். இறு­தியில் தமது பக்­கு­வ­மற்ற வய­தி­லுள்ள பிள்­ளைகள் விடு­விக்­கப்­பட முடி­யாத சிக்­கல்­களில் சிக்­கிய பின்­னரே திரும்பிப் பார்க்­கின்­றனர்.
ரீன் ஏஜ் இளம் வய­தி­ன­ருக்கு எவ்­வா­றான வழி­களில் தவ­றான தொடர்­புகள் ஏற்­பட முடியும்?
இவ்­வா­றான இளம் வய­தி­ன­ருக்கு சில சந்­தர்ப்­பங்­களில் வீடு­களில் தனி­மையே துணை­யா­கி­றது. இவர்­க­ளுக்கு கண்­கா­ணிப்­பற்ற தனிமை என்­பது மிகவும் ஒரு ஆபத்­தான விடயம் என்­பதை எவரும் உணர்­வ­தில்லை. இப்­ப­ரா­யத்­தினர் இரு வழி­களில் தவ­றான தொடர்­பு­க­ளுக்கும் சிக்­கல்­க­ளுக்கும் முகம் கொடுக்­கி­றார்கள். முத­லா­வது வழி இவர்­க­ளது அறி­யா­மையே பல­வீ­ன­மாகப் பயன்­ப­டுத்தி வீடு­களில் வந்­து­போகும் தெரிந்­த­வர்கள், உற­வி­னர்­க­ளா­லேயே ஏற்­படக் கூடும். அதா­வது இவர்கள் இப்­பிள்­ளை­க­ளுடன் அன்­பாகப் பேசி நட்­பாகப் பழகி தகாத உற­வு­வரை கொண்டுசெல்ல முடியும். இப்­பிள்­ளை­களோ இது குறித்து அறிவோ அனு­ப­வமோ இல்­லா­மை­யினால் இவ்­வா­றான வலை­க­ளிற்குள் சிக்­கிக்­கொள்ளும் பரி­தாபம் ஏற்­ப­டு­கின்­றது.
இரண்­டா­வது வழி இப்­பிள்­ளைகள் வெளி செல்லும் போது ஏற்­படும் ரீன ஏஜ் காதல் தொடர்­புகள் மீள­மு­டி­யாத சிக்­கல்­க­ளுக்கு முகங்­கொ­டுக்­கு­ம­ள­விற்கு போய்­வி­டு­கின்­றன. இவற்­றிற்கு பக்க பல­மாக இவர்­களின் கைகளில் கொடுக்­கப்­பட்ட கைய­டக்கத் தொலை­பே­சிகள், கணினிகள் இணை­யத்­த­ளங்கள் பேஸ்புக் என்­பன அமை­கின்­றன. தமது பிள்­ளைகள் அந்­த­ள­விற்கு போக­மாட்­டார்கள் என பெற்­றோர்கள் தமது மனங்­களில் கொண்­டி­ருந்த அசைக்க முடி­யாத நம்­பிக்கை எனும் பலமே இவ்­வா­றான சிக்­கல்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான பல­வீ­ன­மாக மாறு­கின்­றது.
இவ்­வா­றான ரீனேச் பரு­வத்தில் ஏற்­படும் தவ­றான தொடர்­பு­களின் பின் விளை­வுகள் எவை?
தவ­றான தொடர்­புகள் இளம் பிள்­ளை­களில் மீள­மு­டி­யாத உள­வியல் உடற் தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன. உள­வியல் தாக்­கங்கள் என்­கின்ற போது பிள்­ளைகள் பிற்­கால வாழ்க்­கை­யிலும் தமது திரு­மண வாழ்க்­கை­யிலும் பயந்­த­வர்­க­ளா­கவும் தன்­னம்­பிக்கை இழந்­த­வர்­க­ளா­கவும் வாழ்க்­கையில் வெறுப்­பு­டை­ய­வர்­க­ளா­கவும் உள­வியல் ரீதி­யா­கவே தீர்க்­கப்­பட முடி­யாத மனத்­தாக்­கங்­களில் சிக்கித் தவிக்­கின்­றனர். அத்­துடன் கல்­வியில் திற­மை­களை வெளிக்­காட்டும் தன்மை மங்­கிப்­போ­வதும் திரு­மண வாழ்க்­கையில் வெற்­றி­ய­டைய முடி­யாத பிரி­வு­க­ளுக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கும் முகங்­கொ­டுப்­பது வழ­மை­யாகி விடும்.
உடல் ரீதி­யான தாக்­கங்கள் என்­கின்ற போது பாலியல் தொற்று நோய்­க­ளுக்கு உள்­ளாதல், வேண்­டப்­ப­டாத கருத்­த­ரித்தல், கன்­னித்­தன்மை இழக்­கப்­ப­டுதல் என முக்­கிய மருத்­துவ ரீதி­யான சிக்­கல்கள் ஏற்­ப­டு­கின்­றன. இதன் பின்னர் இதற்­கான தீர்­வு­க­ளுக்­காக எமது பெற்­றோர்கள் ஏங்க வேண்டி உள்­ளது.
ரீனேச் பரு­வத்­தி­னரின் பிரச்­சி­னை­களை தடுப்­பது எவ்­வாறு?
பெற்­றோர்­க­ளா­கிய நாங்கள் முதலில் இவ்­வ­யது பிள்­ளைகள் எதிர்­கொள்­ளக்­கூ­டிய பிரச்­சி­னைகள் குறித்தும் அறிந்­தி­ருக்க வேண்டும். அத்­துடன் இவ்­வ­யது பிள்­ளைகள் பக்­கு­வ­மற்ற வய­து­டை­ய­வர்கள் அறி­யா­மை­யிலும் அனு­ப­வ­மற்ற தன்­மை­யிலும் உள்­ள­வர்கள் என்­ப­தனை மறந்­து­விடக் கூடாது. இவர்­களால் ஒரு அறி­வியல் ரீதி­யான தீர்­மா­னங்­களை எடுக்க முடி­யாது என்­ப­தனை நாம் அறிந்­தி­ருக்க வேண்டும்.
இவர்­களைக் கண்­கா­ணிக்க கண்­டிப்­புடன் நாம் நடந்து கொள்­வதன் மூலம் வெற்றி கொள்ள முடி­யாது. இவ்­வாறு கண்­டிப்­புடன் நடக்கும் பெற்­றோர்­களின் பிள்­ளைகள் அன்­பையும் அர­வ­ணைப்­பையும் வெளி­யி­டங்­களில் தேடு­வார்கள். தமது உணர்­வு­க­ளையும் மன நிலை­க­ளையும் வெளி­யார்­க­ளு­ட­னேயே பகிர்ந்து கொள்­வார்கள். இதனை வெற்றி கொள்ள நாம் எமது பிள்­ளை­க­ளுக்கு ஒரு விதத்தில் நல்ல நண்­பர்­க­ளா­கவே நடந்து கொண்டு அவர்­களை மனம்­விட்டுப் பேச சந்­தர்ப்பம் வழங்கி அவர்­க­ளது மன­நி­லை­களை அறிந்த வண்ணம் இருக்க வேண்டும். இதன் மூலமே அவர்­களைச் சுற்­றி­யி­ருக்கும் சூழ­லையும் அவர்­க­ளது உணர்­வுகள் குறித்தும் அறிந்து அதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடியும்.
இப்­ப­ரா­யத்­தி­ன­ருக்கு தனிமை ஆபத்­தா­னது. எனவே இதற்­கான சந்­தர்ப்­பங்­களைத் தவிர்க்க வேண்டும். அத்­துடன் குடும்­பத்­திற்குள் வந்து போகும் அறிந்­த­வர்­களால் ஏற்­ப­டக்­கூ­டிய துஷ்­பி­ர­யோ­கங்கள் குறித்து அறிந்­தி­ருக்க வேண்டும். ஆகையால் எமது பிள்­ளை­களை அனு­ம­தி­யின்றி தொடு­வ­தற்கு எவ­ரையும் அனு­ம­திக்கக் கூடாது என பிள்­ளை­க­ளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். கூடு­த­லா­கவும் தொடர்ச்­சி­யா­கவும் எவரும் தொடு­கையை ஏற்­ப­டுத்­தினால் பிள்­ளைகள் உட­ன­டி­யாக பெற்­றோர்­க­ளிடம் முறை­யி­டு­வ­தற்கோ அல்­லது கூச்­ச­லிட்டு கத்­து­வ­தற்கோ கற்றுக் கொடுக்­கப்­பட வேண்டும்.
எமது பிள்­ளை­களை மட்­டுமே அறிந்­தி­ருந்தால் போதாது அவர்­களைச் சுற்­றி­யி­ருக்கும் நண்­பர்கள் எப்­படிப் பட்­ட­வர்கள் என்­ப­தனை பற்றி ஒரு கண்­ணோட்டம் இருக்க வேண்டும்.
பக்­கு­வ­மற்ற இளம் வய­தினர் கைகளில் உள்ள கைய­டக்­கத்­தொ­லை­பே­சிகள் இணை­யத்­த­ளங்­களால் ஏற்­படும் தொடர்­புகள் நன்மை தீமைகள் குறித்து அறிந்­தி­ருக்க வேண்டும்.பாலியல் கல்­வியின் பங்­க­ளிப்பு என்ன?
இளம் பரா­யத்­தி­ன­ரையும் ரீன் ஏஜ் இது போன்ற தவ­றான தொடர்­பு­க­ளுக்கும் உற­வு­க­ளுக்கும் ஆளா­காமல் தவிர்ப்­ப­தற்கு பாலியல் கல்வி உத­வி­ய­ளிக்கும் என முடிவு செய்து மேலை­நா­டு­களில் அதனை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றனர். இதன் மூலம் தொடு­கை­யி­லி­ருந்து ஆரம்­பிக்கும் உற­வுகள் எது­வரை சென்று முடியும் என ஆரம்­பத்­தி­லேயே பிள்­ளைகள் அறிந்­தி­ருப்­பார்கள்.
இதன் மூலம் சம்­ப­வங்­களை ஆரம்­பத்­தி­லேயே தடுப்­ப­தற்கும் தவிர்ப்­ப­தற்கும் அவர்களால் முடிந்திருக்கக் கூடும். ஆனால் எமது பிள்ளைகளிற்கு இது போன்ற அறிவுகள் இல்­லா­மை­யினால் எல்லாம் முடி­வ­டைந்த பின்­னரே விளை­வு­களை உணர்­கின்­றார்கள். ஆனால், இன்­னொரு பக்­கத்தை பார்ப்­போ­மாயின் பாலியல் கல்­வியின் ஆரம்ப அறி­வுகள் சிறு­வர்­களை தவ­றாக வழி நடத்­தவும் அவர்­களின் மனங்­களைச் சிதைக்­கவும் உத­வி­ய­ளித்­து­வி­டுமே என அச்­ச­மா­கவும் உள்­ளது.
எனவே, பாலி­யற்­கல்­வியின் இரு புறங்­க­ளையும் சீர்­தூக்கிப் பார்த்தால் இது எந்­த­ள­விற்கு நடை­மு­றையில் பய­ன­ளிக்­கு­மென விவா­தித்­துக்­கொண்டே போகலாம்.
ஆனால், அள­வான பாலியல் தொடர்­பான ஆரம்ப அறிவு பாட­சாலை மட்­டத்தில் இருப்­பது நடை­மு­றையில் நடந்து கொண்­டி­ருக்கும் பல வித சிக்­கல்­க­ளி­லி­ருந்து சிறார்கள் தப்­பித்துக் கொள்­வ­தற்கு அவர்களுக்கு உதவியளிக்குமென நம்புகின்றேன்.
ujeyanthan

லேபிள்கள்:

பொன்மொழிகள்

அறிந்துகொள்ள வேண்டிய பொன்மொழிகள்
1. நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி
கவலை வாழ்க்கையின் எதிரி
2.முட்டாளின் முழு ஆயுள் வாழ்க்கை
அறிவாளியின் ஒரு நாள் வாழ்க்கைக்கு சமன்
3.வாழ்க்கை என்பது போர்க்களம். இதில் இரத்தமும் ரணங்களும் தவிர்க்க முடியாதவை. ஏனெனில் இவையே நம் வெற்றியை தீர்மானிப்பவை
4.நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாகப் பெற்றிருக்கவேண்டும்
5.வாழ்க்கை என்பது ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடுவதில்லை. புயலுக்கு நடுவே படகை செலத்துவது போன்றது.

லேபிள்கள்:

                                 பெண் கல்வி
இன்றைய போட்டி நிறைந்த உலகில் ஒவ்வொரு பெண்ணும் தன்னை ஒரு தனித்துவம் நிறைந்தவளாக உலகுக்கு காட்டக் கூடிய சக்தி கல்விக்கே உள்ளது.
ஒரு குடும்பத்தின் குலக்கொழுந்தாக இருக்கும் பெண்மணிகள் கண்டிப்பாக நல்ல கல்வி அறிவோடு இருந்தால் தான் அவர்களை அடியொற்றி உருவாக்கப்படுகின்ற எதிர்கால சந்ததியினரை நல்வழியில் இட்டுச் செல்ல முடியும்.
உலகில் உள்ள எல்லாச் செல்வங்களையும் விட கல்விச் செல்வமே மேலானது. காரணம் இது நாம் இறக்கும் வரை எம்மோடு கூட வரக்கூடிய அழியாச் செல்வமாகும். உதாரணமாக ஒரு சபையில் ஒருவரை அறிமுகப்படுத்தும் போது அவர் என்ன படித்திருக்கின்றார். என்ன பட்டங்களைப் பெற்றுள்ளார் என்றுதான் அறிமுகப்படுத்துகின்றோமே தவிர அவருக்கு எவ்வளவு சொத்துள்ளது.
அல்லது எவ்வளவு பணம் உள்ளது என்று அறிமுகப்படுத்துவது இல்லை. எனவே இந்த அழியாத செல்வத்தை உங்கள் எதிர்கால சந்ததியினருக்கு வாரி வழங்குவதோடு மட்டுமல்லாது அதன் முக்கியத்துவத்தையும் எம்மை செம்மைப்படுத்தும் விதத்தையும் நன்கு தெளிவுபடுத்த வேண்டும்.
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக நாம் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும்.

லேபிள்கள்: