புதன், 4 மே, 2011

புறூனர்

புறூனர்

குழந்தை உளவியல், குழந்தைக்கல்வி, அறிகை உளவியல் முத லாம் துறைகளில் அதீத ஈடுபாடு கொண்ட ஆய்வாளராக ஜெரோம் எஸ். புறூனர் விளங்கினார். 1915ஆம் ஆண்டு நியூயோர்க் நகரத்தில் பிறந்த புறூனர் 1941ஆம் ஆண்டில் ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் உளவியல் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார். ஹாவார்ட் பல்கலைக் கழகம், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முதலியவற்றில் பேராசிரிய ராகவும், பல்கலைக்கழக அறிகைக் கற்கை மையத்தின் பணிப்பாள ராகவும் அவர் பணியாற்றினார்.
“மக்களுக்கான ஒப்புதல்”(1944), “சிந்தனை பற்றிய கற்கை”(1956), “அறிதல் பற்றியது”(1962), “போதனைக்கான ஒரு கோட்பாட்டினை நோக்கி”(1966), “அறிகைச் செயல்முறை வளர்ச்சி”(1968), “கல்வியின் பொருத்தப்பாடு “(1971), “மொழியை நிகர்த்த தொடர்பாடல்” (1982) முதலாம் ஆய்வு நூல்கள் அவரால் எழுதப்பெற்றன.
குழந்தைகளின் கல்வியில், அவர்களால் திரட்டிக் கொள்ளப் படும் மொழி விருத்தியானது சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றது. குறியீடுகள் தொகுதியே மொழியாகின்றது. புறவுலகினை மனத்திலே பிரதிநிதித்துவம் செய்வதற்கு குறியீட்டுத் தொகுதி துணை நிற்கின் றது. சிந்தனையை இயக்குவதற்கும் அந்தக் குறியீட்டுத் தொகுதியே தளமாக அமைகின்றது.
கற்றல் மேம்பாடு தொடர்பான நான்கு அடிப்படை அமைப்புக் களை அவர் விளக்கினார். அவையாவன:
1) கற்பதற்கான உளநிலை கற்போனிடம் இருத்தல்.
2) கற்பவர் விளங்கிக் கொள்ளும் வகையில் அறிவுத் தொகு தியை அமைப்பாக்கிக் கொடுத்தல்
3) கற்பவர் ஈடுபடக்கூடிய வகையில் படிநிலை வரிசைக் கிரமப்படுத்தி அறிவை வழங்குதல்.
4) பொருத்தமான மீளவலியுறுத்தல்ளை ஏற்படுத்திக் கொடுத் தல்.
மேற்கூறியவற்றின் அடிப்படையில் சிறாரின் கல்வி தொடர் பான சிறப்பார்ந்த கருத்தொன்றினை அவர் முன்மொழிந்தார். “எந்தப் பாடத்தையும், எந்தப் பிள்ளைக்கும், எத்தகைய விருத்திப் படிநிலை களிலும் அறிவுசார் நேர்மையான அமைப்பில் கற்பிக்கலாம்” என்பது அவர் முன் மொழிந்த வலுவான ஒரு கருத்தாகும்.
சிறார்கள் உலகு பற்றிய அறிகையை மூன்று படிநிலைகளின் வழியாக வளர்த்தெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப் பிட்ட அறிகை விருத்திப் படிநிலைகள் வருமாறு:
1) செயல் வடிவப் படிநிலை
2) உளப்படிம வடிவப் படிநிலை
3) குறியீட்டு வடிவப் படிநிலை.

1) செயல் வடிவப் படிநிலையில் சிறார்கள் தொழிற்பாடு களின் வழியாக மட்டும் சூழலை விளங்கிக் கொள்ளுகின்ற னர். உதாரணமாக ஒரு தள்ளுவண்டியை அசைத்தும், உருட்டியும் தொழிற்படும் பொழுது உடலும் உள்ளமும் இணைந்து இயக்க நிலையில் அந்த வண்டியை விளங்கிக் கொள்ளுகின்றனர்.
2) உளப்படிம வடிவப் படிநிலையில் தொழிற்பாடுகள் மனப் படங்களாக உருவெடுக்கின்றன. தள்ளுவண்டி இல்லாத பொழுதும் அதனைப் பற்றிய படத்தை மனவடிவமாக உருவாக்கி வைத்திருக்கும் நிலையை இது குறிப்பிடு கின்றது. அதாவது பட்டறிவு, மனக்காட்சியாகப் பரிண மித்து நிற்றலை இப் படிநிலை சுட்டுகின்றது.
3) குறியீட்டு வடிவப் படிநிலையின் சிறார்கள் தாம் பெற்ற அனுபவங்களை மொழிக் குறியீடுகளாக்கும் ஆற்றலைப் பெறுகின்றனர். முன்னைய இரண்டு படிநிலைகளினதும் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக இது அமையும். உதாரண மாக இப்பருவத்தில் முன்னர் அனுபவித்த தள்ளு வண்டியை ‘தள்ளுவண்டி’ என்று எழுதி மொழிக் குறி யீட்டு வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்டு விளங்கு கின்றனர். “வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்” என்பதன் பொருளை விளங்கும் திறனைப் பெறுகின்றனர்.
செயல் வடிவப் படிநிலையிலிருந்து உளப்படிம வடிவப் படி நிலைக்கும் அதிலிருந்து குறியீட்டு வடிவப் படிநிலைக்கும் பொது வாக பிள்ளைகள் தாம் உள்வாங்கும் அனுபவங்களைப் பிரதி நிதித்துவப் படுத்துகின்றனர் என்பது புறூனரின் கருத்தாகும்.
பாலர் கல்வி ஆசிரியர்கள் மேற்கூறிய பிரதிநிதித்துவப்படுத்தற் செயற்பாட்டினை உய்த்துணர்ந்து செயற்பட முடியும். செயல் அனுபவங்கள், காட்சிசார் அனுபவங்கள் முதலியவற்றிலிருந்து பிள்ளைகளின் கற்றலை வளம்படுத்தலாம்.
பாலர்களுக்குரிய கல்வியை ஒழுங்கமைக்கும் பொழுது மேற் கூறியவை பற்றிச் சிந்தித்தல் வேண்டும்.
அறிவின் கட்டமைப்புப் பற்றிய மூன்று பண்புக் கூறுகளை புறூனர் வலியுறுத்தியுள்ளார். அவையாவன:
1) முறைமை (ஆழனந)
2) சிக்கனம் (நுஉழழெஅல)
3) வலு (Pழறநச)

1) முறைமை என்பது அறிவைப் பிரதிமை செய்யும் செயற் பாடாகும். அதாவது, காட்சிவடிவில், படிமவடிவில், குறியீட்டு வடிவில் அறிவு பிரதிமை செய்யப்படுகின்றது.
2) பெருந்தொகுதியான அறிவைச் சிக்கனப்படுத்தி, கருச்சுருக் கமாக்கி மூளையிலே பதித்துவைத்தல் சிக்கனம் எனப்படும்.
3) அறிவின் அமைப்பிலிருந்து ஆற்றல்மிக்க கண்டுபிடிப்புக் களை வெளிப்படுத்துதல் வலு எனப்படும்.
பிள்ளைகளுக்கு பொருத்தமான வகையில் கற்றல் பணிகள் திட்ட மிட்டு அமைக்கப்படுதல் வேண்டுமென புறூனர் வலியுறுத்தி னார். புலக் காட்சியாக்கத்தில் பிள்ளைகளின் விழுமியங்களும் அவர்களுக்குரிய பெறுமானங்களும் (ஏயடரநள) அதிக முக்கியத்துவம் பெறுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு