புதன், 4 மே, 2011

முன்பள்ளி கல்வி சிந்தனையாளர்கள்

ஜோன் பிரட்ரிக் கேர்பார்ட்
(1776 - 1841)

பெஸ்டலோசியின் மாணவர்களுள் ஒருவராகிய கேர்பார்ட், தமது ஆசிரியரின் கல்விக் கோட்பாடுகளுக்கு மேலும் வலுவூட்ட முயன்றார். கற்பித்தலில் உளவியலின் முக்கியத்துவத்தையும் செயல்முறைப் பாங்குகளையும் ஆழ்ந்து வலியுறுத்திய கல்வியாளராக அவர் விளங்கினார். இசை, கணிதம், தத்துவம், சட்டம் போன்ற பல்துறைகளில் இவர் பாண்டித்தியம் பெற்றிருந்தமையால் அனைத்து அறிவுப் புலங்களிலுமிருந்து கிடைக்கபெற்ற அனுபவங்களைச் சிறார் கல்வியியலிலே பயன்படுத்தினார்.
இவரால் எழுதப்பெற்ற பின்வரும் நூல்கள் இவரின் கல்விச் சிந்தனை களையும் தெளிவாக விளக்குகின்றன:

(1) “கற்பித்தலியற் கோட்பாடு பற்றிய சுருக்கம்”
(2) “கற்பித்தலியல் விஞ்ஞானம்”
(3) “கல்வி விஞ்ஞானம்”
(4) “கல்விக்கான கலைச் சொற்றொகுதி”
(5) “கற்பித்தலியற் சுருக்கம்”
(6) “புலக்காட்சி அடிப்படைகள்”

புலக்காட்சிகளை முன்னறிவோடு தொடர்பு படுத்திக் கற்கும் “தொடுபுலக்காட்சி” (யுppநசஉநிவழைn) யின் முக்கியத்துவம் இவரால் விரித்துரைக்கப்பட்டுள்ளது. ஒருவர் அறிவைத் திரட்டிக்கொள்வதில் அவரிடம் ஏற்கனவேயுள்ள அறிவின் களஞ்சியம் முக்கியத்துவம் பெறுதல் இந்த எண்ணக்கருவாற் புலப்படுத்தப்படுகிறது. பிற்காலத்தில் இக்கருத்தானது “அனுபவத் திரளமைப்பு” என்ற எண்ணக்கருவால் பியாசேயின் விருத்திமுறை சார்ந்த உளவியலில் நன்கு எடுத்தாளப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் உளவியல் ஆகிய துறைகளை விஞ்ஞானப்படுத்தும் பல்வேறு முயற்சிகளை இவர் முன்னெடுத்தார். இவர் வாழ்ந்த சூழல் விஞ்ஞான வளர்ச்சியோடு இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விஞ்ஞான மயப்படுத்தலோடு இணைந்த கற்பித்தலின் முக்கியத்துவம் அவரால் உணரப்பட்டிருந்தது. கற்பித்தலைக் கல்வியின் நடுநாயகக் கருத்தாக அவர் கொண்டார். கற்பித்தலின் விளைவாகவே சிந்தனையும் ஒழுக்கமும் முகிழ்த்தெழும் என்று அவர் கருதினார்.
கற்பித்தலியலை விஞ்ஞான மயப்படுத்த முயன்ற கேர்பர்ட், கற்பித்தல் தெளிவு கொண்டதாயும், செயலமைப்புவழி ஒருங்கிணைப்புடைய தாகவும், பொருத்தமான முறையியலை உள்ளடக்கியதாகவும் அமைக்கப்படல் வேண்டுமென்று விளக்கினார். இவை பின்வரும் ஆங்கில எண்ணக் கருக்களால் விளக்கப்படும்:
(ய) ஊடநயசநௌள
(டீ) யுளளழஉயைவழைn
(ஊ) ளுலளவநஅ
(னு) ஆநவாழன
கேர்பேர்ட்டின் மாணவராகிய சில்லர் என்பவர் இப்படிநிலைகளை மேலும் விரிவுபடுத்தி பின்வருமாறு நிரற்படுத்தினார்.
அ) தயாரித்தல்
ஆ) சமர்ப்பித்தல் அல்லது வழங்குதல்
இ) தொடர்புறுத்தல்
ஈ) செயலமைப்பு வழி ஒருங்கிணைத்தல்
உ) பிரயோகித்தல்
இந்தப் படிநிலைகள் ஆங்கிலத்தில் பின்வருமாறு விளக்கப்படும்:
ய) PசுநுPயுசுயுவுஐழுN
டீ) Pசநளநவெயவழைn
ஊ) யுளளழஉயைவழைn
னு) ளுலளவநஅ
நு) யுppடiஉயவழைn
சிறாருக்குரிய கற்பித்தல் தொடர்பாக கேர்பேர்ட் முன்வைத்த கருத்துக்களைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்:

1) சிறார்களுக்குக் கற்பிக்கத் தொடங்கும் பொழுது அவர்களது தொடுபுலக் காட்சியையும், அதனுடன் தொடர்புடைய முன் னறிவுத் திரளையும் அறிந்து கற்பித்தலை ஒழுங்கமைத்தல் வேண்டும்.
2) புலக்காட்சிப் பயிற்சிகள் கற்பித்தலிற் சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றன. வடிவங்களைத் தெளிவாக உற்றுகோக்கி உள் வாங்கிக் கொள்ளச் செய்வதன் வாயிலாக கணித அறிவை மேம் படுத்த முடியும்.
3) கட்டுப்பாடு, பயிற்சி ஆகியவை கற்பித்தலிற் சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றன. பயிற்சி எப்பொழுதும் தற்கட்டுப் பாட்டையும், தன்னடக்கத்தையும், சுய உறுதியையும் வளர்க் கின்றது. கட்டுப்பாடு, பயிற்சி ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க் கும்பொழுது, பயிற்சியையே மேலானதாகக் கொள்ளுதல் வேண்டும். பயிற்சியும் கற்பித்தலும் ஒன்றையொன்று தழுவி நிற்றல் வேண்டும்.
4) ஒழுக்க மேம்பாட்டைக் கற்பித்தல் வாயிலாகவே முன்னெடுக்க முடியும். ஒழுக்கம் என்பது அகத்திலிருந்து முகிழ்த்தெழுவதால் அகத்தைச் செழுமைப்படுத்த மிக விரிந்த அகல்விரி கற்பித்தல் துணைசெய்யும்.
5) கற்பித்தல் கவர்ச்சியும் நாட்டமும் (ஐவெநசநளவ) கொண்டதாக அமைக்கப்படுதல் வேண்டும். கவர்ச்சியானது ஆர்வத் தைத் தூண்டி வினைத்திறனுடன் முயற்சியடையச் செய்கின்றது. கவர்ச்சியை மலினப்பட்ட பொருளில் அவர் பயன்படுத்த வில்லை. கவர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகப் பாடப் பொருளை மலினமாக்கிவிடக் கூடாது.
6) பன்முனைப்பட்ட கவர்ச்சிகளைச் சிறார்களிடத்து வளர்த் தல் வேணடும். அதாவது ஒருவர் பல்வேறு பாடங்களை யும் கற்பதற்கு உற்சாகமளித்தல் வேண்டும். இதனால் ஒருவரது சிறப்புத் தேர்ச்சி நிராகரிக்கப்படுவதாகக் கொள்ளமுடியாது.
7) கற்பிக்கப்படும் பாடங்களை செய்தி வழங்கும் பிரிவில் அடங்கலாம் அல்லது உணர்ச்சியூட்டும் பிரிவில் அடங்க லாம். அதாவது அறிகை, எழுச்சி என்ற பிரிவுகளை அவர் சுட்டிக் காட்டுகின்றார். அறிகை சார்ந்த பாடப் பொருள் களை உணர்ச்சியூட்டும் வகையிலே கற்பித்தல் ஆசிரியருக் குரிய பணியாகும்.
8) பகுத்தறிதல், தொகுத்தறிதல் என்ற திறன்களை வளர்க்கும் வகையிலே கற்பித்தலைக் கட்டமைப்புச் செய்து அவற்றுக் குரிய பொருத்தமான பாடப் பொருள்களை அமைத்தல் வேண்டும் என்பது அவரால் குறிப்பிடப்படுகின்றது.
பெஸ்டலோசியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சிறுவர்க்கான கல்வியை வளம்படுத்தும் பல்வேறு நுண்ணுபாயங்களை இவர் முன் மொழிந்துள்ளார். கைத்தொழில் மயப்பட்டு மாற்றமடைந்து வளர்ந்து கொண்டிருந்த ஐரோப்பிய சூழலில், பொது மக்களுக்கான கல்வி விரிவடைந்துசென்ற நிலையில், அனைத்துச் சிறார்களையும் ஒரே வகுப்பறையிலே வைத்துக் கற்பிக்கும் கவிநிலையில் எதிர் நோக்கப்பட்ட பிரச்சினைகளுக்குரிய விடையாக அவரது கல்விச் சிந்தனைகள் அமைந்தன.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு