புதன், 4 மே, 2011

பிரெட்ரிக் புரோபல் முன்பள்ளி கல்வி சிந்தனையாளர்

பிரெட்ரிக் புரோபல்

ஜேர்மனியின் கிராமியப் பின்புலத்து வாழ்க்கை நிலைக்கள னாகக் கொண்ட ஒரு கல்வி முறைமையின் வெளிப்பாடுகளை புரோபலின் (1783-1852) ஆக்கங்களிலே காணமுடியும். சிறார் கல்வியிலே ‘குழந்தைப் பூங்கா முறைமையை’ முன்மொழிந்த சிறப்பும் இவருக்குரியது. பெஸ்டலோசியின் பள்ளிக்கூடத்தில் பெற்ற அனுபவங்களும் இவரது சிந்தனைகளை வளமூட்டின.
குழந்தைப் பருவத்திலே தமது தாயாரை இழந்த தவிப்பும் கிராமப் புறத்து இயற்கைச் சூழலிலே வாழ்ந்தும் கற்றும் பெற்ற அனுபவங்களும், ஆசிரியத் தொழிலிலே கிடைக்கப்பெற்ற பன்முக மான அனுபவங்களும் குழவிப் பூங்கா முறைமையை உருவாக்குவதற் குரிய தளங்களாயின. அக் காலத்து ஜேர்மனிய சிந்தனையாளர் களிடத்து முகிழ்த்திருந்த முழு நிறைவுக் கருத்தியல் (யுடிளழடரவந ஐனநயடளைஅ) இவரிடத்துச் செல்வாக்குச் செலுத்தியிருந்தது. இறைவன், இயற்கை, மனிதன் ஆகிய மூன்றும் இணைந்த முழுமையானதும், ஒருமையானதுமான கருத்தியல் இவரால் வலியுறுத்தப்பட்டது.
புரோபலின் கல்விக் கொள்கைகளை அவர் எழுதிய பின்வரும் நூல்களில் தெளிவாகக் கண்டு கொள்ளமுடியும்.
1. “குழவிப் பூங்கா கற்பித்தலியல்”
2. “மனிதனின் கல்வி”
3. “அன்னையின் விளையாட்டும்,
மழலையர் பாடல்களும்”
4. “விருத்திவழிக் கல்வி”.
ஒவ்வொருவரிடத்தும் கல்வி முழுவளர்ச்சியை ஏற்படுத்தல் வேண்டும். ஒவ்வொருவரதும் பன்முக ஆற்றல்களைக் கல்வி முனைப் புடன் வளர்த்தல் வேண்டும். இவற்றின் வாயிலாக மனிதரிடத்து உள்ளுறைந்து காணப்படும் இறையுணர்வை வெளிக்கொண்டு வருதல் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கான கல்வியின் முக்கியத்துவத்தை இவர் நன்கு உணர்ந்துகொண்டதுடன் தெளிவாக வெளிப்படுத்தியுமுள்ளார். மூன்று வயது தொடக்கம் ஏழுவயது வரையான குழந்தைகளுக்குரிய “குழவிப் பூங்கா” பள்ளியை அவர் திட்டமிட்டு அமைத்தார். அந்தப் பள்ளிக்கூடம் பின்வரும் பரிமாணங்களைக் கொண்டதாக அமைந் தது.
1) குழந்தைகள் தாம் விரும்பி ஈடுபடக்கூடிய செயல்களுக்கு பள்ளிக்கூடத்தில் வசதிகள் இருத்தல் வேண்டும்.
2) அத்தகைய செயல்களினால் தனது இயல்பை ஒரு குழந்தை அறிந்து கொள்ளவும், சூழலை விளங்கிக் கொள்ளவும் முடி யும்.
3) விரும்பி ஈடுபடும் நடவடிக்கைகள் அறிவுக்கும் செயலுக்கு மிடையேயுள்ள இடைவெளியைச் சுருக்கி ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.
4) கற்றல் மகிழ்ச்சி கொண்டதாகவும், விடுதலை உணர்ச்சி தருவ தாகவும் ஆக்கம் தரும் ஊக்கலை முன்னெடுப்பதாக வும் இருத் தல் வேண்டும்.
5) ஒவ்வொரு குழந்தையிடத்தும் காணப்படும் இயல்பான படைப்பாற்றலை வளர்ப்பதற்குரிய ஏற்பாடுகள் ஒழுங் கமைக் கப்படுதலே சிறந்தது.
6) சிறுவர்க்குரிய சிற்றரசு (ஆinயைவரசந ளுவயவந) ஒன்றை அமைத் தல், சுதந்திரத்தோடும் மகிழ்ச்சியோடும் அவர்கள் ஈடு படல் முதலியவை அவரது குழவிப் பூங்காவிலே இடம் பெற்றன.
7) அவருடைய குழவிப் பூங்காவில் பாட நூல்கள் பயன் படுத்தப்படவில்லை. அதாவது பாட நூல்கள் பொறிமுறை யான கற்றலுக்கே இடமளிக்கும் என்று அவர் கருதினார் .
8) பாடுதல், ஓடியாடி இயங்குதல், புதிதாக நிர்மாணம் செய்தல் (ஊழளெவசரஉவழைn) முதலியவற்றால் மொழியைப் பயன்படுத்துதலும், கருத்துக்களை வெளிப்படுத்துதலும் வளர்ச்சியடைகின்றன.
9) குழவிப் பூங்காவில் பாடல்கள் சிறப்பார்ந்த இடத்தைப் பெற்றன. குழந்தையின் உடல்வளர்ச்சி. உளவளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி முதலியவற்றுக்குப் பொருத்தமான ஐம்பது பாடல்களை அவர் தயாரித்து வைத்திருந்தார். அவர் இயற்றிய பாலர் பாடல்கள் உலகப் புகழ் பெற்றவை. பல பாடல்கள் இன்றும் வழக்கில் உள்ளன.
10) குழந்தைகள் கல்விக்குரிய நன்கொடைகளையும் தொழிற் செயற்பாடுகளையும் அவர் வழங்கினார். வண்ணப் பந்து கள், மர உருளைகள், கோளங்கள் முதலிய பல பொருள்கள் அவர் வழங்கிய நன்கொடைகளாகும். காகித அலங்காரம், களிமண் வேலை, றேந்தை பின்னுதல், ஓவியம் வரைதல் முதலியவை அவர் வழங்கிய தொழிற் செயற்பாடுகளுக்கு உதாரணங்களாகும்.
11) நன்கொடைகளும், தொழிற் செயற்பாடுகளும் குழந்தை களின் புலன்களுக்கு இங்கிதமான அனுபவங்களைத் தருகின்றன. பொருள்களின் வண்ணம், வடிவம், பருமன் முதலாம் அனுபவங்களையும், எண்ணறிவையும் அழகு ணர்ச்சியையும் வளர்க்கின்றன.
12) குழவிப் பூங்காவில் விளையாட்டுக்கள் சிறப்பார்ந்த இடத் தைப் பெறுகின்றன. மகிழ்ச்சி, இசைவாக்கம், விடுதலை உணர்வு, உளநிறைவு முதலியவற்றை விளையாட்டுக்கள் வழங்கு கின்றன. குழந்தையின் தனித்துவமான இயல்புகள் விளையாட்டுக்கள் வாயிலாக வெளிவருகின்றன. அதனால் குழந்தைகளின் ஆன்மபலம் வளர்ச்சியடைகின்றது.
13) மொழிகள், கலைகள், சமயக்கல்வி, இயற்கை அறிவு, உடல் உழைப்பு முதலாம் பாடங்கள் குழந்தைகளின் உள நிலைக்கு ஏற்றவாறு கற்பிக்கப்படும்.
14) குழவிப் பூங்காவில் ஆசிரியர் பயிர் வளர்க்கும் தோட்டக் காராய் இருந்து குழந்தைகளின் இயல்பான வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல் வேண்டும். குழந்தைகளின் இயல்பான ஆற்றல்களை அவர் மழுங்கடித்து விடலாகாது.
15) குழந்தைகளுக்குத் தரப்படும் பாதுகாப்பு வழியாக அவர் களிடத்திலே கட்டுப்பாடுகள் வளர்த்தெடுக்கப்படும். கூட்டுறவுச் செயற்பாடுகள் அதற்கு மேலும் வலிமையைத் தரவல்லது.
குழந்தைகள் கல்வியிலும், குழந்தைகளுக்கான பிரயோக உளவியற் புலத்திலும் பிரெட்ரிக் புரோபல் தனித்துவமான பங்களிப் பினைச் செய்துள்ளார். துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கிக் குழந்தை களுக்குக் கற்பிக்கும் எதிர்மறைப் பாரம்பரியத்தை உடைத்தெறிந்த வர்களுள் இவர் குறிப்பிட்டுக் கூறப்படக் கூடியவர். குழந்தைக் கல்வி என்பது ஒரு மகிழ்ச்சி தரும் பூங்காவாகவும், உற்சாகம் தரும் நந்தவன மாகவும் இருத்தல் அவரது இலட்சியமாக அமைந்தது.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு