புதன், 4 மே, 2011

முன்பள்ளி கல்வி சிந்தனையாளர் அல்பிரெட் பீனே

அல்பிரெட் பீனே

உளவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு எவ்வாறு உரிய முறை யில் கற்பிக்கலாம் என்பது தொடர்பான முன்மொழிவுகளை வழங்கு மாறு பிரான்ஸ் நாட்டின் கல்வி மந்திரி 1904ஆம் ஆண்டு ஓர் ஆணைக்குழுவினை அமைத்தார். ஒரு சிறப்பார்ந்த பாPட்சையின் அடிப்படையிலே தான் அத்தகைய சிறுவர்களை சாதாரண வகுப் பறையிலிருந்து உள வளர்ச்சி குன்றிய சிறுவர்கள் கற்கும் பள்ளிக் கூடங்களுக்கு இடம்மாற்றல் வேண்டுமென அந்த ஆணைக்குழு குறிப்பிட்டது. இந்நிலையில் மாணவரது நுண்மதி எந்த அளவிலே அமைந்துள்ளது என்பதைக் கண்டறியும் தேர்வினை உருவாக்கும் பொறுப்பு அல்பிரெட் பீனே (1857-1911) யிடம் கையளிக்கப் பட்டது.
குழந்தைகளின் கல்வி, குழந்தை உளவியல் முதலியவற்றில் நுண் மதித் தேர்வுகளை ஆக்கும் முயற்சிகளின் முன்னோடியாக பீனே விளங்குகின்றார். இவரது ஆய்வுகளுக்கு தியோடர் சிம்சன் என்பா ரும் உறுதுணை யாக விளங்கினார்.
பீனே தமது நுண்மதித் தேர்வினை வடிவமைப்பதற்கு முன்னர் ஆய்வு கூடங்களில் வழங்கப்பட்ட செய்முறைத் தேர்வுகளில் இருந்தே ஒருவரது உள ஆற்றல் நிச்சயிக்கப்பட்டது. பொருள்களை வகைப்படுத்து தல், வேறுபிரித்தறிதல், பொருள்களுக்கிடையேயுள்ள தூரத்தை நிச்சியித்தல், துலங்கல் வேகம் முதலியவற்றை அறிதலே ஆய்வு கூடங்களில் பெரும்பாலும் பாPட்சிக்கப்பட்டன.
ஆனால் பீனே அவர்கள் நாளாந்த வாழ்க்கையுடன் தொடர் புடையதும் நடப்பியல் தழுவியதும், ஆனால் சிக்கல் பொருந்தியது மான நுண்மதித் தேர்வினை சிறார்களுக்கென வடிவமைத்தார். ஐம்பது தேர்வு உருப்படிகளை அவர் முதலில் ஆக்கினார். அவற்றிலே சொல் சார்ந்த உருப்படிகளும் அமைத்தன. உடற்கூறுகளுக்குப் பெயரிடல், பொதுவான பொருள்களுக்குப் பெயரிடல், எண் மீட்டல், ஞாபகத்திலுள்ள கோலங் களை வரைதல், பொருத்தமான சொல்லை இட்டு எளிய வசனங்களை நிரப்புதல், அருவமான எண்ணக்கருக்களை விளக்குதல் முதலாம் உருப்படிகளை அவர் தமது நுண்மதித் தேர்விலே அமைத்தார். எளிதிலிருந்து கடினமானது வரை ஓர் ஒழுங்குமுறையில் அவற்றை நிரற்படுத்தி அமைத்தார்.
சிறார் கல்விக்கு அவர் வழங்கிய அடுத்த முக்கியமான பங்களிப் பாகக் கருதப்படுவது வயது அடிப்படையில் நுண்மதித் தேர்வினை ஒழுங் கமைத்தமையாகும். “கால வயது”இ “உளவயது” என்ற இரண்டு எண்ணக் கருக்களை அவர் தாம் அமைத்த தேர்வுகளை அடிப்பமை யாகக் கொண்டு விளக்கினார். இந்நிலையில் மூன்று வகையாக சிறுவர்களின் நுண்மதியாற்றல்களை இனங்கண்டு விளக்கக் கூடிய தாகவுள்ளது.
அ) கால வயதிலும் குறைவான நுண்மதியாற்றல்களைக் கொண்ட சிறுவர்கள்.
ஆ) கால வயதோடு சமாந்தரமாகச் செல்லும் நுண்மதியாற்றல் களைக் கொண்ட சிறுவர்கள்.
இ) கால வயதிலும் கூடிய உள ஆற்றல்களைக் கொண்ட சிறுவர்கள், அதாவது இவர்களின் உளவயதானது கால வயதிலும் கூடுதலாகக் காணப்படும்.
சிறாரின் நுண்மதியாற்றில் அளவீடு தொடர்பாக பீனே மேற் கொண்ட ஆய்வுகள் பல கண்டனங்களையும் எதிர் கொண்டன. “சிறார் தொடர்பான சிறுபிள்ளைத் தனமான ஆய்வை இவர் மேற் கொண்டுள்ளார்” என்ற கண்டனமும் முன்வைக்கப்ட்டது. “நுண் மதியை எண்ணளவுகளுக்குள் சிறைப்பிடித்துக் கொண்டுவர முடி யுமா?” என்ற வினாவும் இவர் மீது தொடுக்கப்பட்டது.
சிறார் கல்விக்கும் உளவியலுக்கும் பீனே தந்த பெரும் பங்களிப்பு நுண்மதி என்ற பண்பினை எண்ணளவுக்குள் கொண்டுவந்தமை என்ற பாராட்டையும் ஒரு சாரார் அவருக்கு வழங்குகினர்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பொது மக்களுக்கான கல்வி விரைந்து வளர்ச்சியடையத் தொடங்கியது. பல்வேறு வகை யான ஆற்றல் வேறுபாடுகளைக் கொண்ட சிறுவர்களை ஒரே வகுப் பறையில் இருத்திக் கற்பிக்கும் போது ஆசிரியர்கள் பல இடர்களை எதிர்கொண்டனர். இந் நிலையில் மாணவர்களை அவர்களின் உள ஆற்றல்களுக்கு ஏற்றவாறு குழுக்களாகப் பிரித்துக் கற்பிப்பதற்கு பீனேயின் நுண்மதித் தேர்வுகள் பயன்படுத்தப்பட்டன.
சிறுவர்களுக்குச் சீர்மியம் உரைப்பதற்கு அவர்களின் நுண்மதிக் குறைபாடுகளைக் கண்டறிதல் தேவையென உணரப்பட்டது. அந் நிலையிலும் பீனேயின் தேர்வுகள் பயன்ப்பட்டன. உளக் குறை பாட்டை ஆய்ந்தறிந்த பின்னரே கல்விசார்ந்த சீர்மியத்தைப் பொருத்தமான முறையில் வழங்க முடியும்.
உள ஆற்றல் குறைபாடுகளுக்கும், மனவெழுச்சிக் குழப்பங் களுக்கும் இணைப்புகள் காணப்பட்டமையால் பள்ளிக்கூட இசை வாக்க முறைமையை நெறிப்படுத்துவதற்கும் பீனேயின் தேர்வுகள் பயன்பட்டன.
உள ஆற்றல் மிகுந்து காணப்பட்ட சிறுவர்களும் ஒருவகையில் பள்ளிக்கூட அமைதிக்கும் பங்கம் விளைவிப்போராய்க் காணப் பட்டனர். அவர்களைக் கண்டறிந்து அவர்களைக் கல்வியில் முழுமையாக ஈடுபடுத் தக்கூடிய வகையில் அறைகூவற் கற்பித்தலை ஒழுங்கமைப்பதற்கும் பீனேயின் தேர்வுகள் மாணவர்களை இனங் காட்டும் சோதனைகளாக அமைந்தன.
பீனே வடிவமைத்த நுண்மதித் தேர்வுகள் பல நாடுகளில் பயன் படுத்தப்படலாயின. சிறார்களுக்குப் புலமைப் பரிசில் வழங்கல், சிறப் பார்ந்த சில பள்ளிக்கூடங்களுக்கு அனுமதி வழங்கல் முதலாம் தேர்வு களுக்குப் பல நாடுகளிலே பீனே பயன்படலானார்.
பீனேயின் தேர்வுகளை அடிப்படையாக வைத்து அமெரிக்க நாட்டு ஆய்வாளர்கள் தமது பண்பாட்டுச் சூழலுக்கேற்றவாறு நுண்மதிச் சோதனையை வடிவமைத்தனர். யாழ்ப்பாணத்துச் சூழ லில் பீனேயின் சோதனையை அடிப்படையாக வைத்து சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி முந்நாள் அதிபர் அமரர் சிவபாத சுந்தரனார், ஆசிரியர் கலாசாலை முந்நாள் விரிவுரையாளர் கலாநிதி சிவப் பிரகாசம், புலோலி வேலாயுதம் மகாவித்தியாலய முந்நாள் அதிபர் இராமநாதபிள்ளை ஆகியோர் தமிழில் சில நுண்மதிச் சோதனைகளை அமைத்தனர்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு