புதன், 25 ஜனவரி, 2012

ஆரம்பக்கல்வி; கலைத்திட்டம்

2.1.1 ஆரம்பக்கல்விப் பாடசாலைகள்.
தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகளை ஆரம்பக்கல்விப் பாடசாலைகள் எனலாம். வயது 5 தொடக்கம் 11 வரையிலான பருவத்தினர் இப்பாடசாலைகளில் கற்கின்றனர். அதேவேளை ஆரம்ப வகுப்புக்களான தரம்1 தொடக்கம் தரம் 5 வரையான வகுப்புக்களைக் கொண்ட வகை 111 பாடசாலைகளைத் தவிர வகை 11 வகை 1ஊ ääவகை யுடீ பாடசாலைகளிலும் ஆரம்ப வகுப்புக்கள் உள்ளன. அங்கும் ஆரம்பக் கல்வி கற்கும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப் படுகின்றனர். 1991ம் ஆண்டில் கல்வியமைச்சின் புள்ளிவிபரப்படி மொத்தமாகவுள்ள 10520 அரசினர் பாடசாலைகளுள் 9527 பாடசாலைகளில் ஆரம்பக் கல்வியைக் கற்பிக்கின்றர். எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இப்பாடசாலைகள் அனைத்தும் பௌதிக வளங்களில் சமமான வசதிகளைக் கொண்டவை எனவோ அன்றேல் ஆளணி வளத்தால் நிறைவுடையவையென்றோ கூறிவிட முடியாது.ஒவ்வொரு பாடசாலையும் தனித்துவம் மிக்க பௌதிக வளங்களையும் ஆளணியினரையும் கொண்டுள்ளது.
பாடசாலைகள் அனைத்திலும் ஆரம்பக்கல்விக் கலைத்திட்டம் பொதுவானதாக உள்ளது. கற்பிக்கும் ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்கப்படும் கற்றல் கற்பித்தல் திறன்கள் பொதுவானதாகவே எதிர்பார்க்கப்படுகின்றன. இந் நிலையில் பாடசாலைகளுக்கிடையேயான வேறுபாடுகள் நிரம்பவே காணப்படுகின்றன. பாடசாலையின் பௌதிக வளங்களில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுவதுடன் மாணவர் கற்றல் கற்பித்தலிலும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்து காணப்படுகின்றன. (தணிகாசலம்பிள்ளை.ச.நா 2008)
பாடசாலைகளின் நிர்வாகம் ஒரே தரமுடையனவாக இல்லாமையும் பாடசாலைகளுக்காக பௌதிக வளங்கள் சமமானப் பங்கீடு செய்யப்படாமையும் கற்பிக்கும் ஆசிரியர்களின் ஆற்றல்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளும் பாடசாலைகளை வேறு பிரித்துக் காட்டுவதனால் அனைத்து ஆரம்பப் பாடசாலைகளையும் ஓரே தரத்தல் நோக்குதல் கடினமாகவுள்ளது.
ஆரம்பக் கல்விப்பாடசாலைகள்ää ஆரம்பக் கல்வி பாடசாலைகளுக்குப் பொருத்தமான வகுப்பறைக் கட்டடங்களையும் தேவையான விளையாட்டு முற்றம்ää தோட்டம்ää உபகரணங்கள் என்பவற்றையும் கொண்டிருத்தல் வேண்டும்.சிறுவர்களின் கற்றலுக்கேற்ற கவின்நிலை கொண்ட வகுப்பறைகள் அமைக்கப்படுவதோடு விரும்புடன் கற்கும் சு10ழல் பாடசாலைகளில் நிலவுதல் அவசியமாகும்.
பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அனைத்து வசதிகளையும் அரசாங்கமே பாடசாலைகளுக்கு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் போதிய வளங்களைப் பெறாத பாடசாலைகள் இன்றும் உள்ளன. ஆரம்ப வகுப்புக்களில் கற்கும் மாணவரின் தொகைக்கேற்ப வகுப்பறைகள் அதிகரிக்கப்படுதலும் அங்கு கற்கும் மாணவர்களுக்குப் போதியதான விளையாட்டு முற்றம்ää உபகரணங்கள் என்பனவும் வழங்கப்படுதல் வேண்டும்.
மாணவர் தொகைக்கும்ää வகுப்பறைகளின் எண்ணிக்கைக்கும் ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதே ஆரம்பக்கல்விக் கலைத்திட்டத்தைச் சிறப்பாகக் கற்பிக்க ஆசிரியர்களை ஊக்குவிக்கும் நடைமுறையாகும். இத்தகைய வளங்களுடன் ஆரம்பக்கல்விப் பாடசாலைகள் இருப்பின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல் இலகுவானதாகும்.
ஆரம்பக்கல்விப் பாடசாலைகளிற் பெரும்பாலானவை கிராமப் புறங்களிலேயே காணப்படுகின்றன. நகரப்புறங்களில் காணப்படும் ஆரம்ப பாடசாலைகளில் வசதி வளங்கள் அதிகமானதாகவுள்ளமையால் நகரப் பாடசாலைகளை நோக்கி நகரும் கிராமப்புற மாணவர்கள் இன்று அதிகரித்துள்ளனர். ஆனால் அரசாங்க பாடசாலைகள் அனைத்தும் ஓரே தரமுடைய கற்றல் கற்பித்தலைப் பெற வேண்டுமானால் கிராமப்புறப் பாடசாலைகளுக்குச் சகல வளங்களும் போதியளவு பங்கீடு செய்யப்படுவது அவசியமாகும்.


2.1.2 ஆரம்பக்கல்வி; கலைத்திட்டம்
ஐந்து ஆண்டுகளைக் கொண்ட ஆரம்பக்கல்விப் புலம் கலைத்திட்ட விருத்தியினதும் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளினதும் வசதி கருதி மூன்று முதன்மை நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முதன்மை நிலை 1 – தரங்கள் 1 உம் 2 உம்
முதன்மை நிலை 2 – தரங்கள் 3 உம் 4 உம்
முதன்மை நிலை 3 – தரம் 5
தரம் 1 இல் பிரவேசிக்கும் பிள்ளையை இனங்காண்பதற்கு வசதியான செயற்பாடுகள் இனங்காணப்பட்டுள்ளன.
பொதுக்கல்வி நிலை இறுதியில் மாணவர்களிடம் விருத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் என விதந்துரைக்கப்பட்ட அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அத்தேர்ச்சிகளைக் கட்டியெழுப்புவதற்குப் பொருத்தமான அடித்தளத்தை இட்டுச் செல்லும் கலைத்திட்டமாகää தேர்ச்சி சார்ந்த கலைத்திட்டமாக உள்ளது.


பாடவிடயங்கள் நான்காக வகுக்கப்பட்டுள்ளன.
மொழி
கணிதம்
சமயம்
சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்.
பிள்ளையின் ப10ரண விருத்திக்கு மொழிää கணிதத் தேர்ச்சிகளுடன் வேறு சில தேர்ச்சிகளும் விருத்தி செய்யப்படவேண்டியது அவசியாகும்.எடுத்துக்காட்டு@ அழகியல்ää ஆக்கம்ää விஞ்ஞானம்ää விழுமியம்ää உடல் விருத்திää சுகாதாரம் சார்ந்த தேர்ச்சிகள்.


இத்தேர்ச்சிகளைத் தனித்தனிப்பட்ட அலகுகள் மூலம் முன்வைப்பதை விட பிள்ளைகளுக்குப் பொருத்தமான கருப்பொருள்கள் மூலம் வெளிக்கொணர்ந்து எய்துவதே சிறந்ததென ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 16 கருப்பொருள்களைக் கொண்ட சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் எனும் பாடப்பரப்பு முன்பைவிட ஒன்றிணைக்கப்பட்ட பண்பைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
• தரம் 1 இலிருந்து செயற்பாடுகள் சாhந்த வாய்மொழி ஆங்கிலமும்ää இரண்டாவது தேசிய மொழியும்(சிங்களம்ஃதமிழ்மொழிப் பாடங்கள்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
• முதன்மை நிலை 2 இலிருந்து முறைசார் ஆங்கிலம் சேர்க்கப்பட்டுள்ளது.
• தரம் 1 இலிருந்து தொடர்ச்சியாக பாட இணைச் செயற்பாடுகளும்ää தரம் 5 இல் பிள்கைளின் விருப்புக்கும்ää தேவைக்கும்; ஏற்ப பொருத்தமான விரும்புப் பாடங்களைக் கற்பதற்கும் கால அட்டவணையில் வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
• ஆரம்பக்கல்விப் பருவத்தினருக்குப் பொருத்தமாக மேற்கொள்ளக்கூடிய கற்றல்-கற்பித்தல் முறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை:

 விளையாட்டுக்களும் விநோதச் செயற்பாடுகளும்.
 செயற்பாடுகள்.
 எழுத்து வேலைகள்.

முதன்மை நிலை 1 இல் விளையாட்டுக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் அதிக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதன்மை நிலைகள் மூன்றிலும் கற்றல் - கற்பித்தல் முறைகள் ஒழுங்கமைக்கப்பட்டுப் படிப்படியாக மாறிச் செல்லும் விதத்தில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

பிள்ளையின் முன்னேற்றம்ää கற்றல் இடர்பாடுகள் தொடர்பாக தகவல் வழங்கப்படுகின்ற அதாவதுää தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய தொடர் கணிப்பீட்டிற்காக முன்னுரிமை பெறுகின்ற கணிப்பீட்டுச் செயல்முறையை நடைமுறைப்படுத்தல்.

யாவருக்கும் கல்வியை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு அதற்குத் தரநிர்ணயமுள்ள ஒவ்வொரு முதன்மை நிலை இறுதியிலும் மாணவர்கள் கட்டாயமாக பாண்டித்தியம் அடையவேண்டிய அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு முதன்மைநிலை இறுதியிலும் எதிர்பார்க்கின்ற அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகளில் சகல மாணவர்களும் பாண்டித்தியம் அடைய வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு முதன்மை நிலையும் ஒரே ஆசிரியரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒரு பிள்ளையின் அடைவை இன்னொரு பிள்ளையின் அடைவோடு ஒப்பிட்டுத் தீர்மானம் எடுக்கும் முறைமையை விடுத்து. குறித்துவொரு நோக்குடன்ää நியதியுடன் அடைவை ஒப்பிட்டு தீர்மானம் மேற்கொள்வதற்குää நியதிசார்ந்த அடிப்படைக் கணீப்பீடு முறை அறிமுகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முதன்மைநிலை 1 இன் பிள்ளைகள் தரம் 5ஃ6இன் பிள்ளைகளுடன் சேர்ந்து ஒழுங்கமைப்புடன் செயற்பாடுகளிலும் விளையாட்டுக்களிலும் ஈடுபடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு முதல் முதன்மை நிலை ஒன்று தொடக்கம் இரண்டாவது தேசிய மொழியும் அறிமுகம் (சிங்களம்ஃதமிழ்) செய்யப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு முதல் செயற்பாடு அடிப்படையிலான வாய்மொழி ஆங்கிலம் கணித பாடத்துடனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் உடல்ää உள விருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் விதத்தில் உடலியக்கச் செயற்பாடுகள் எனும் வேலைத்திட்டம் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் முதன்மை நிலை 01இல் இருந்து அறிமுகம் செய்யப்படுகின்றது.



ஆரம்ப வகுப்பு மாணவர்களின் பல்திறன்சார் தேர்ச்சிகளைக் கவனத்திற் கொண்டே பாடங்களை ஒன்றிணைத்துக் கற்பிக்க அவை திட்டமிடப்பட்டுள்ளன
 தாய்மொழி.
 கணிதம்.
 சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்.
 சமயம் சார்ந்த செயற்பாடுகள்.
 அழகியற் செயற்பாடுகள்.
என்பன அவற்றுள் அடங்கியுள்ளன.

2.1.3 ஆரம்பக்கல்வி சாhந்த தேர்ச்சிகள்.
ஆரம்பப் பாடசாலைப் பராயத்தில் மாணவர்கள் தாம் சுவீகரித்துக் கொள்ள வேண்டிய திறன்கள்ää உணர்வுகள்ää மனவெழுச்சிகள் என்பன சாரந்த தேர்ச்சிகள் பின்வருமாறு அறியப்பட்டுள்ளன.
1. பேச்சு எழுத்து.
சரளமாகக் கருத்துக்களைப்பரிமாறிக் கொள்ளல்ää வாசிப்புää எழுத்து என்பவற்றுடன் எளிதான எண்களைக் கணித்தல் தொடர்பான திறன்களைப் பெற்றுக் கொள்ளல்ää தாய்மொழி தவிர நாட்டில் வழக்கில் உள்ள ஏனைய மொழிகளின் எழுத்துக்களை இனங்காணும் திறமையைப் பெறுதல்.
2. திடகாத்திரமான வாழ்வு.
உடல்ää உளää சமூகச் சுகநலனுக்கு அடிப்படையான பழக்கங்களையும் மனப்பாங்குகளையும் சிறு பராயந்தொட்டே வளர்த்துக் கொள்ளல். தனிப்பட்ட சுயமான சுற்றாடற் சுகாதாரத்துக்கும் அத்துடன் உகந்த அத்தகைய நடத்தைக் கோலங்களைக் கொண்ட வாழ்க்கையை நடத்திச் செல்வதற்காக ஏனையோரையும் வழிப்படுத்துதல்.
3. தொழில்நுட்பத்தைச் சார்ந்த தொழிற்பயிற்சி.
எதிர்கால வாழ்வில் பிரவேசிப்பதற்கு அவசியமான திறன்கள்விருத்தி செய்யப்படல் புதிய தொழில்நுட்பத்தை மதித்தல். இயன்றவரை அதனைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பளித்தல் ஆகியவற்றின் வாயிலாக தொழிலின் கௌரவத்தையும் உழைப்புச் சக்தியையும் பற்றிய விளக்கத்தைப் பெறல்.

4. வரலாற்றோடு இணைந்த அறிவைப் பெறல்.
நாட்டின் உரிமைகளையும் தனித்துவத்தையும் இனங்கண்டு கொள்ளல்ää அவ்வுரிமைகளைக் கட்டியெழுப்பிய தேசிய வீரர்களைப் பற்றிய விளக்கத்தைப் பெறல். அவ்வுரிமைகளை மதித்தல்.
5. சமயத்தில் ஈடுபாடு கொள்ளலும் நற்பண்புகளைக் கடைப் பிடித்தலும்.
சமய வழிபாட்டு முறைகளைப் பயின்று கொள்ளல். தமது சமயத்தின் மீது ஈடுபாடு கொள்ளுதலும் ஏனைய சமயங்களை மதித்தலும்ää ஒரு நற்பிரசையாய்மிளிர வேண்டிய நற்பண்புகளை விருத்திசெய்தல். சமயஞ்சார்ந்த ஆசாரங்கள் பற்றிய நடை முறையான பயிற்சியைப் பெறல்.
6. சுற்றாடல் பற்றிய விளக்கம்.
இயற்கையின் கொடைகளையும் மனிதனின் ஆக்கங்களையும் வாழும் சுற்றாடலையும் பற்றிய அடிப்படை விளக்கத்தைப் பெறல். அதனூடாக விஞ்ஞான ப10ர்வமாகச் சிந்திக்க வழிப்படுத்தப்படல். இயற்கை வளங்களைக் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற மனப்பாங்கை விருத்தி செய்து கொள்ளல்.
7. பிள்ளைகளின் ஈடுபாடுகளை வளர்க்க ஆவன செய்தல்.
ஓய்வு நேரத்தை அர்த்தமுள்ளதாகவும் பயனுறுதியாக செலவிடுவதைப் போலவே இரசனையையும் விருத்தி செய்வதற்காகக் கவின்கலைச் செயற்பாடுகள் மேம்படப் பாடசாலையை ஒரு விருப்பமான இடமாக அமைத்தல்.
8. தேசிய ஒருமைப்பாடு.
தேசிய தனித்துவத்தைக் காத்துக் கொண்டு பல்வேறு மதங்களைச் சேரந்த பல்வேறு மொழிகளைப் பேசும் ஏனைய மக்களோடு ஒன்றி வாழுதல்.
9. விழுமிய வளர்ச்சி.
கண்ணுக்குப் புலனாகும் ஏனைய புலனாகாத சுற்றாடல் மீது அன்பும்ää பரிவும் கொண்ட வாழ்க்கைக்குத் தம்மைப் பழக்கிக் கொள்ளல். பரஸ்பரம் அமைதியான வாழ்க்கையை உடைய ஒரு சமூகத்துக்காகத் தம்மைப் பழக்கிக் கொள்ளல்.

இத்தகைய உயரிய நோக்கங்களை உள்ளடக்கிய ஆரம்பக்கல்விப் பாடத்திட்டத்தின் அமுலாக்கமே ஆரம்பக்கல்வி எனலாம். பிள்ளைகளிடத்தில் இவை தொடர்பில் ஏற்படும் கற்றல் விருத்தியே ஆரம்பக்கல்விப் பரப்பின் சிறப்பை வெளிக்காட்டி நிற்கின்றது. (தணிகாசலம்பிள்ளை.ச.நா 2008)

2.1.4 ஆரம்பக்கல்விக் குறிக்கோள்களும்ää தேர்ச்சிகளும்.
ஆரம்பக்கல்வியின் பொதுவான குறிக்கோள்கள் 1985ம் ஆண்டுப் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
1. அன்றாடக் கருமங்களுக்குத் தேவையான எழுத்துää வாசிப்புää கருத்து வெளிப்பாடு என்பன தொடர்பான திறன்களில் விருத்தி பெறுதல்.
2. கொடுக்கல்ää வாங்கல் அன்றாட வாழ்க்கைத் தேவைகள் என்பனவற்றுக்கு அவசியமான கணிதஞ்சார் எண்ணக்கருக்கள் சார்ந்த திறமைகளில் வளர்ச்சியடைதல்.
3. உறுதியான வாழ்க்கைக்கு அவசியமான அடிப்படைச் சுகாதார அறிவினையும் பழக்கங்களையும் கைக்கொள்ளுதல்.
4. பண்டங்களுடனான செயற்பாடுகள் முறைசார் அவதானங்கள்ää விஞ்ஞானப10ர்வமான சிந்தனைää தம் சுற்றாடல் பற்றிய விளக்கம் என்பனவற்றுக்கு அவசியமான திறன்களைப் பெற வழிவகுக்கும் ஓர் அடித்தளம் இடப்படல்.
5. பேச்சு அல்லாத சாதனங்கள் வாயிலாகச் சுதந்திரமாகவும்ää ஆக்கபூர்வமாகவும் ஆய்வு ரீதியாகத் தம் கருத்துக்களையும் உணர்வுகளையும் வெளியிடுவதற்கான திறனைப் பெறல்.
6. விஞ்ஞான ப10ர்வமான சிந்தனையையும் ஆக்கத் திறன்களையும் பெறல்.
7. எதிர்காலக் கற்றல் செயற்பாடுகளுக்கு அவசியமான அடிப்படைப் பயிற்சியைக் கற்றுக் கொள்ளுதல். அத்தோடு திறமைகளும் ஈடுபாடுகளும் விருத்தியடைதல்.
8. பௌதீகää சமூகää கலாசார சுற்றாடல் பற்றிய இலகுவான அறிவினைப் பெறுதல்ää அவற்றை மதிக்கவும் பேணவும் தூண்டப்படுதல்.
9. ஒத்துழைப்புää விட்டுக்கொடுத்தல்ää துணிவுää பொதுச் சொத்துக்களைப் பேணல்ää சட்டத்துக்குப்பணிதல் போன்ற பண்புகளைப் படிப்படியாகத் தம்வாழ்வில் பயின்று கொள்ளுதல்.
10. தேசிய ஒருமைப்பாடுää நாட்டுப்பற்று என்பன சார்ந்த நல்ல மனப்பாங்குகள் விருத்தியுற வித்திடப்படல்.
2.1.5 கட்டாய ஆரம்பக்கல்வியின் அவசியம்

ஆரம்பக்கல்வி இன்று பிள்ளைகளின் அடிப்படை உரிமையாக வலியுருத்தப்படுகின்றது. வளர்முக நாடுகளின் அரசியல் சட்டங்களும் கல்விச் சட்டங்களும் இதனை வலியுறுத்துகின்றன. இலங்கையில் கட்டாயக்கல்விச் சட்டம் நீண்ட காலமாக இருந்து வந்த போதிலும் 1978 இல் தான் கட்டாயக் கல்வியை உறுதிப்படுத்தும் பிரமாணங்கள் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டன. இந்திய அரசியல் யாப்பின் 45 ஆவது பரிவு 1960 ஆம் ஆண்டளவில் 14 வயது வரை சகல பிள்ளைகளும் இலவசää கட்டாயக் கல்வியைப் பெற வேண்டும் என நிர்ணயம் செய்தது. அந்நாட்டின் அரசியல் யாப்பின் 83ஆவது திருத்தம் ஆரம்பக்கல்வி ஒரு மனித உரிமை எனப் பிரகடனம் செய்தது. இவ்வாறான சட்டங்கள் யாவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற சமூக இலக்கினை வலியுறுத்துகின்றன.

இன்றை சமூகம்ää முக்கியமாகப் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு ஆரம்பக்கல்வியாவது வழங்கப்படல் வேண்டுமென்று கோருகின்றனர். எனவே ஆரம்பக்கல்வி ஒரு சமூகக் கோரிக்கையாகி விட்டது. இந்திய ஆய்வுகளின்படி இச்சமூகக் கோரிக்கை நாடெங்கும் பரந்து காணப்படுகின்றது. வறிய பெற்றோர்கள் கல்வியை விரும்புவதில்லை என்ற வாதத்தை நவீன ஆய்வகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆரம்பக்கல்வி பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது என்ற வாதத்தை அண்மைக்கால ஆய்வுகள் ஏற்றுக்கொள்கின்றன. செலவுப் பயன் ஆய்வுகளின் படி (ஊழளவ- டீநnகைவையயெடலளளை) பொதுக்கல்விää இடைநிலைக்கல்விää உயர்கல்வி என்பவற்றை விட ஆரம்பக்கல்வி தனியாளுக்கும் சமூகத்துக்கும் பயனுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. வறியவர்களைப் பொறுத்தவரையில் பொருளாதார மேம்பாட்டுக்குக் கல்வியை விட்டால் வேறு மாற்று ஏற்பாடுகள் எதுவுமில்லை. இவ்வாறான பொருளாதார நோக்கினைப் பல கல்வியாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை எனினும்ää ஆரம்பக்கல்வியின் மீதான முதலீடு மனித வளத்தை உருவாக்கச் செய்யப்படுவது என்பது அண்மைக் காலக் கருத்தாகும். (

ஆதரவான கற்றல் சூழலில் மாணவர்கள் பயிலும் போது அவர்கள் பாடசாலை அனுபவத்தையிட்டு மகிழ்வடைகின்றனர். நண்பர்கள்ää விளையாட்டுää கல்வி என்பவை பிள்ளைகளுக்கு மகிழ்வூட்டுவன. இந்திய ஆய்வுகளின் படி பிள்ளைகள் கல்வியினால் பெறக்கூடிய எதிர்கால வாய்ப்புகளை விட உடனடியாகக் கற்றல் வழங்கும் மகிழ்ச்சிக்கே முக்கியத்துவம் வழங்குகின்றனர். எனினும் பாடசாலைச் சூழல் எப்போதும் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியை அளிப்பதில்லை. அவர்கள் இடையில் விலகிவிடவும் பாடசாலைச் சூழல் காரணமாகின்றது.

பிள்ளைகள் தமது பல்வேறு நலன்களைப் பேணிக் கொள்ளவும் ஆரம்பக்கல்வி உதவும். நல்ல உடல் நலம்ää நோயிலிருந்து பாதுகாப்பு என்பன கல்வியின் விளைவுகளாக ஆய்வுகள் இனங்கண்டுள்ளன. எழுத்தறிவு அதிகம் காணப்படும் நாடுகளில் சிசு மரணவீதம் குறைவாகக் காணப்படுகின்றது. இந்தியாவில் எழுத்தறிவு மிகுதியாக உள்ள கேரள மாநிலத்தில் சிசுமரணவீதம் 1000க்கு 14 எழுத்தறிவு குறைந்த மத்தியப் பிரதேசத்தில் சிசு மரணவீதம் 1000க்கு 94.

ஆரம்பக்கல்வி கற்போனுக்கு மட்டுமன்றி அவனைச் சேர்ந்தோருக்கும் உதவுகின்றது. பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி பெறுவதால் சமூக உறுப்பினர்களும் பயனடைய முடியும். கல்வி விரிவடையும் போது சமூகப் பிரச்சினைகளும் குறைய வாய்ப்புகள் ஏற்படுகின்றன. தகவல்களும் கருத்துக்களும் பரிமாறப்படும் போது சுற்றாடல் சீரழிவுää மக்கள் தொகைப் பெருக்கம்ää போதை மருந்துப் பாவனைää எய்ட்ஸ் நோய் பரவல் போன்ற சமூகப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு தோன்றுகின்றது. கல்வி வளர்ச்சியானது இத்தகவல் பரிமாற்றத்துக்கு உதவுகின்றது. ஆரம்பக்கல்வி வாய்ப்புகள் இலங்கையின் பாலிய குற்றங்களைக் குறைக்கவும் பிள்ளைத் தொழிலாளர்களைத் தொழிற் சந்தையிலிருந்து அகற்றவும் உதவியுள்ளது.

இன்று உலகளாவிய அளவில் மனித உரிமைகள் போன்று சனநாயகப் பங்கேற்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பெரும்பாலானவர்கள் அரசியல் செயற்பாட்டில் அக்கறையற்று அதில் பங்கேற்காவிடில் உண்மையான சனநாயகம் வளர்ச்சி பெற முடியாது. சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுமாயின் யாவருக்கும் ஆரம்பக்கல்வி வழங்கப்படல் வேண்டும் என்பது மற்றொரு முக்கியவாதம். இந்தியாவில் பட்டியல் வகுப்பினர்ää பழங்குடி மக்கள் என்று கூறப்படும் பின்தங்கிய பிரிவினருக்கு சிறந்த கல்வியை அரசியல்ää சமூக கலாசார வாழ்வில் அவர்கள் மற்றவர்களுக்கு ஈடான நாட்ட முடியும். இவ்வகையில் இலங்கையைப் பொறுத்தவரையில் இதுவரை சமூக நீதி கிட்டாத ஒரு இனக்குழுவினர் தோட்டத்தொழிலாளர்கள் இவர்களுக்குச் சமூக நீதிகிட்டிடக் கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். இதற்கு முன்னோடித் திட்டமாகவே “யாவருக்கும் ஆரம்பக்கல்வி” என்ற குரல் வலுவாக எழுந்துள்ளது. சமத்துவமற்ற கல்வி வாய்ப்புகளுக்கும் சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளுக்குமிடையே நேரடித் தொடர்புண்டு என்பது ஆய்வாளர் கருத்து.


“யாவருக்கும் ஆரம்பக்கல்வி” என்ற கொள்கைக்குச் சாதகமாக என்னதான் கூறினாலும் அதற்கு ஒரு எதிர்வாதமும் உண்டு. “பாடசாலைக் கல்வி மக்களுக்கு விடுதலை வழங்கி அவர்களுக்கு வலுவூட்டும் (நுஅpழறநசஅநவெ) இயல்புடையதாக இருத்தல் வேண்டும். இல்லையேல் யாவருக்கும் ஆரம்பக்கல்வி வழங்குவதால் பயனில்லை என்று சொல்கின்றது. அவ்வாதம்.

இன்னும் சற்றுக் கடுமையாகக் கூறினால் பாடசாலைக் கல்வி சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்டதல்லää சமூக கட்டுப்பாட்டுக்கான ஒர் கருவியாகவே பாடசாலைகள் இயங்கி வருகின்றன. மார்க்சிய கல்வியில் ஆய்வாளர்களின் நோக்கில் பாடசாலைக் கல்வியானது வரலாற்று ரிதியாக ஏற்றத் தாழ்வுள்ள வர்க்க சமூகத்தை மீள் உருவாக்கம் (சுநிசழனரஉவழைn ழுக ஊடயளள சுனைனநn ளுழஉநைவல)) செய்து வந்துள்ளது. உயர் வகுப்பினர்களுக்கு உயர்தரமான தனியார் துறைக்கல்வி சாதாரண பிரிவினருக்கு உள்ளுராட்சிப் பாடசாலைகளில் தரக்குறைவான சாதாரணக்கல்வி இவ்வாறான மீள் உருவாக்கத்தையே ஏற்படுத்தும் என அவர்கள் வாதிட்டனர்.)

லேபிள்கள்:

ஆரம்பக்கல்வியானது தனியொருவருடைய பாதுகாப்பான எதிர்காலம்

“இயற்கைத் தோற்றப்பாடுகளிடையே இருக்கின்றன எனக் கருதப்படும் தொடர்புகள் பற்றிய கருதுகோள் முன்மொழிவுகள் பற்றிய ஒரு படிமுறையான கட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனை சார்ந்த விமர்சன விசாரணை என்பதே ஆய்வு” என்னும் ஹேர்லிங்கர் கருத்துக்கு இணங்க இன்று ஆய்வும் அது சார்ந்த துறைகளும் வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றது. அவ்வாறான வளர்ச்சி ஏற்படுவதற்கு ஆய்வு என்பது மிகவும் அவசியமாகும்.

ஒரு கட்டிடத்தின் உறுதி அது அமைக்கப் பெற்றுள்ள அடித்தளத்தினைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது. அதுபோல மனிதனின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவது அவன் பெறுகின்ற ஆரம்பக்கல்வியினைப் பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகின்றது. அந்த வகையில் இன்று ஆரம்பக்கல்வி பிள்ளைகளின் அடிப்படை உரிமையாக வலியுறுத்தப்படுகின்றது. ஆரம்பக்கல்வியின் மீதான முதலீடு மனித பலத்தை உருவாக்கச் செய்யப்படுவது என்பது அண்மைக்கால கருத்தாகவும் காணப்படுகின்றது.

இதனுள் ஆரம்பக்கல்வியானது தனியொருவருடைய பாதுகாப்பான எதிர்காலம் (ளுநஉரசநவல குரவரசந) நல்வாழ்வு (ர்நயடவா டுகைந) தன்நம்பிக்கையுடையதான வாழ்க்கை (ளுநடக சுநடயைவெ டுகைந) என்பற்றுக்குத் துணை செய்யும் என்பதனை விஞ்ஞான ரீதியான பல்வேறு ஆய்வுகளும் இன்று வெளிப்படுத்தியுள்ளன.
அந்த வகையில் ஆரம்பக்கல்வியில் பெற்றோரின் வகிபங்கு புதியதொரு விடயமல்ல கல்விக்கும் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு பிள்ளைகளின் உள விருத்திää உடல் விருத்திää வாழ்க்கைப் பழக்க வழக்கங்கள்ää சமூக ஊட்டத்துக்கான கல்விää கலாசாரம் பற்றிய அடிப்படை விளக்கங்கள்ää சமயம் மற்றும் ஒழுக்கக்கல்விää மொழியறிவு முறையில் கல்வி மூலம் பெறப்படும் தொழில்கள்ää அறிவு போன்றவற்றினை வழங்குவதில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குறிப்பாகக் கூறுவதாயின் சமூக மயமாக்கத்திற்குத் தேவையான அடிப்படைகளை வழங்குவதில் பெற்றோர் முன்னிற்கின்றனர்.

“எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்பதற்கு இணங்க ஆரம்பத்தில் இருந்தே சீரான பாதையில் கற்றலை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் வழிகாட்டுபவர்கள் பெற்றோரே. அவ்வாறு ஆக்க ப10ர்வமாக பெற்றோர்கள் பங்களிப்பினை வழங்குகின்றபோது இன்றைய புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கு அமைய கல்வியின் குறிக்கோளுக்கு இயைபாக இன்றைய சிறார்களை நாளைய நாட்டின் நற்பிரஜைகளாக ஒவ்வொரு பாடசாலைகளினாலும் உருவாக்க முடியும்.
இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து என்பதற்கு இணங்க பசுமையான மாணவ பருவத்தில் ஆரம்ப நெறியில் பெற்றோரின் பங்களிப்பு என்பது அத்தியவசியமான ஒன்றாகவுள்ளது. எதிர்காலத்தில் பிள்ளைகள் படித்து முன்னேற வேண்டும். என்பது பெற்றோரின் அவாவாகும். இவ்வாறான முன்னோற்றத்திற்கும் ஆரம்பக்கல்வி என்பது அத்திவாரமாக அமைகின்றது. அதனை ஒழுங்கான சீரான முறையில் அமைத்துக் கொடுக்கும் பொறுப்புக்களை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்பி வைப்பதுடன் பெற்றோரின் கடமை முடிந்து விடவில்லை. பாடசாலையில் தமது பிள்ளைகள் யாருடன் பழகுகின்றார்கள்ää எவ்வாhறான நண்பர்களைத் தேடிக்கொள்கின்றார்கள்ää எவ்வாறு கல்வி கற்கின்றார்கள் போன்ற விடயங்களை ஆராய்ந்து அறிவதுடன் உரிய ஆசிரியருடன் சுமுகமான உறவினை வைத்திருத்தல் வேண்டும் என்ற ரீதியல் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும். அப்போதுதான் ஆரம்பக் கல்வியினை பிள்ளைகள் பயிலும் போது அதனை சிறப்பானதாக்கி தன்னை வளப்படுத்திக் கொள்ள முடியும். காரணம் கற்றல் என்பது குடும்ப வாழ்வின் ஒரு பகுதியே மனிதக் குடும்பத்தில் குடும்பம் பெரும் பங்கு புகட்டுகின்றது என்பதால் ஆரம்பக்கல்வியில் பெற்றோரின் பங்கு அவசிமாகவுள்ளது.
ஆளுமை விருத்திக்குப் பொருத்தமான காலப்பகுதியாகக் கொள்ளப்படுகின்ற ஆரம்ப கல்வியில் பொருத்தமான அனுபவங்களும் சந்தர்பங்களும் கிடைக்கும் இடத்து ஒரு பிள்ளை விரும்பத்தக்க பழக்க வழக்கங்கள்ää மனப்பாங்குää விழுமியங்கள்ää திறன்களää; சுயசிந்தனைää திறனாய்வுää சமூக இசைவாக்கமää; பெற்று எதிர்கால நடவடிக்கைக்கான அடிப்படைகளைப் பெற்றுக் கொள்கின்றது என்பது எடுத்துக் காட்டப்படுவதால் ஆரம்பக்கல்வியில் பெற்றோரின் பங்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்காலத்தில் சவால்களை எதிர் கொண்டு மிளிரும் ஒரு சமுதாயத்தைப் பிரசவிப்பதற்குத் தயராவது எனின் அதனை வைத்தியம் பார்க்கும் வைத்தியராக பெற்றோர்கள் பிள்ளையின் ஆரம்பக் கல்விக்கு உதவ வேண்டும் அப்போதுதான் பிள்ளையின் எதிர்காலம் பிரகாசமானதாக என்றும் ஒளிவிடும்.

லேபிள்கள்:

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

அக்கரைப்பற்று அறிமுகம்

அறிமுகம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அமைந்துள்ள மூன்று மாவட்டங்களில் அம்பாறை மாவட்டமானது 21 பிரதேச செயலக பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதில் கிழக்குக் கரை ஓரமாக 12உம் மத்தியை அம்பாறை நகரைச் சுற்றி 09உம் அமைந்துள்ளது. மாவட்டத்தை நிர்வாகம் செய்வதற்கு ஒரு கச்சேரியை அம்பாறையில் அமைத்து அங்கே பல அரசாங்க திணைக்களங்களும் அமைத்து இம்மாவட்டத்தில் அரசு பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது. பல இன மக்கள் இப்பிரதேசத்தில் வசித்து வருகிறார்கள். இக்குடிசார் பரம்பலானது காலத்திற்குக் காலம் எல்லைகள் மாற்றப்பட்டு இப்போது சிங்களவர்களும் முஸ்லீம்களும் சம அளவு விகிதத்திலும் தமிழர்கள் மிகக் குறைந்த அளவு விகித்திலும் வசித்து வருகின்றனர். இங்கே பௌத்தம், இந்து ,இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்தோர் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இது ஒரு விவசாய மாவட்டமாக இனங்கானப்பட்டிருப்பதும் இலங்கையின் நெல்லை உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் முன்னனியில் இருக்கின்றது. இம்மாவட்டம் தனது எல்லைகளாக கடல் மட்டக்களப்பு மாவட்டம் , மொனறாகலை மாவட்டம் சபதுளை மாவட்டம் ஆகியவற்றுடன் எல்லைகளில் பாரிய மலைகள், நதிகள், குளங்கள், ஆறுகள், காடுகள், வயல் நிலங்கள் என்பவற்றைக் கொண்டுள்ளது.

விசேட சிறப்பம்சமாக கிழக்கில் கரையோரமாக துறைநீலாவணை தொடக்கம் குமணை வரையில் பாரிய கடல் பரப்பை கொண்டுள்ளதால் மீன்பிடி தொழிலுக்கு ஒரு சிறப்பான இயற்கை சூழலைக் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது. மேற்படி மாவட்டமானது பின்வரும் பிரதேச செயலாளர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன

1. ஆலையடிவேம்பு
2. அக்கரைப்பற்று
3. அட்டாளைச்சேனை
4. நிந்தவூர்
5. காரைதீவு
6. கல்முனை (தமிழ் பிரிவு)
7. கல்முனை (முஸ்லீம் பிரிவ)
8. திருக்கோவில்
9. பொத்துவில
10. லகுகல
11. தமணை
12. உகணை
13. பதியத்தலாவ
14. அம்பாரை
15. மகாஓயா
16. தெகியத்தக்கண்டிய
17. சம்மாந்துறை
18. சாய்ந்தமருது

19. நாவிதன்வெளி
20. இறக்காமம்

நிர்வாக எல்லை.


(ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவு)



அம்பாறை – அக்கரைப்பற்று பிரதான பாதையில் 6ம் மைல் கல்லில் தொடங்கி அக்கரைப்பற்றை நோக்கிய திசையில் செல்லும் போது வலது பக்கமாக உள்ள ஆலிம் நகர் ,கிறவல்குழி குடியிருப்பின் தெற்குப் புறமான பகுதியை உள்ளடக்கி தொடர்ந்து வரும் பாதையில் அல்-ஹிதாயா பாடசாலையில் மேற்குப் புறமான பாதையினூடாக வடக்காகச் சென்று அப்பாதை பெரியபள்ளிக்கு முன்பாக கிழக்காகச் செல்லும் மருத்துவர் வீதியினை சந்தித்து அதனைக் குறுக்கறுத்துச் செல்லும் முதலியார் வீதியினூடாக வடக்குப் புறமாகச் சென்று பின் தோம்பதோரின் சந்தியை அடைந்து


பின்னர் கிழக்காகச் செல்லும் இஸ்மாயில் ஸ்டோர் ஒழுங்கையின் ஊடாக கிழக்காகச் சென்று அக்கரைப்பற்று – கல்முனை பிரதான பாதையை அடைந்து பின்பு அதிலிருந்து தெற்கு நோக்கி சிறிது தூரம் சென்று அக்கரைப்பற்று சந்தை சதுக்கத்தை அடைந்து அதனூடாக பொத்துவில் வீதியில் கிழக்காகச் சென்று தொடர்ந்து அவ்வேலையானது அக்கரைப்பற்று தர்மரத்ண விகாரையின் எதிராகவுள்ள அக்கரைப்பற்று மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தையும் அதன் காணிகளையும் உள்ளடக்கி மீண்டும் பொத்துவில் வீதியை அடைந்து சிறிது தூரம் சென்ற பின் அக்கரைப்பற்று பத்திரகாளி கோவில் வீதியினூடாக சென்று பத்திரகாளி கோவிலையும் அதன் காணிகளையும் உள்ளடக்கி மீண்டும் பொத்துவில் வீதியை அடைந்து பின்னர் கிழக்காகச் சென்று அக்கரைப்பற்று பஸ் டிப்போவிற்கு அடுத்து வருகின்ற கடற்கரை வீதியானது சென்று கடற்கரையை அடையும் வரை.
பின் சின்னமுகத்துவாரம் அதன் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி பின் சின்னமுகத்துவாரத்தில் இருந்து பெரிய களப்பை ஊடறுத்து சாகாம வீதியில் உள்ள 7வது மைல் கல்லை அடைந்து அதிலிருந்து சாகாம வீதியினூடாக தாலிபோட்ட ஆற்றை அடைந்து அதிலிருந்து திருக்கோவில் பிரதேச செயலாளர் எல்லையையும், தமண பிரதேச செயலாளர் எல்லையையும் தொட்டு தமணை எல்லையில் உள்ள எகலகலகந்த மலை வரை செல்கிறது.











கிராம சேவை அலுவலர்களின் பிரிவுகள்

பிரிவின் பெயர் இலக்கம்

1. வாச்சிக்குடா ஏவி ஃ 01
2. ஆலையடிவேம்பு ஏபி ஃ 21ஏ
3. நாவற்காடு ஏவி ஃ 03
4. அக்கரைப்பற்று 7 ஏபி ஃ 21
5. அக்கரைப்பற்று 7ஃ1 ஏவி ஃ 05
6. அக்கரைப்பற்று 7ஃ2 ஏவி ஃ 6
7. அக்கரைப்பற்று 7ஃ3 ஏவி ஃ 07
8. அக்கரைப்பற்று 7ஃ4 ஏவி ஃ 8
9. அக்கரைப்பற்று 8 ஏபி ஃ 22
10. அக்கரைப்பற்று 8ஃ1 ஏவி ஃ 09
11. அக்கரைப்பற்று 8ஃ2 ஏவி ஃ 11
12. அக்கரைப்பற்று 8ஃ3 ஏவி ஃ 12
13 அக்கரைப்பற்று 9 ஏபி ஃ 22ஏ
14. சி;ன்னமுகத்துவாரம் ஏவி ஃ 14
15. கோளாவில் 1 ஏவி ஃ 16
16. கோளாவில் 2 ஏவி ஃ 17
17. கோளாவில் 3 ஏபி ஃ 23
18. பனங்காடு ஏவி ஃ 13
19. சின்னப்பனங்காடு ஏவி ஃ 19
20. கண்ணகிகிராமம் 1 ஏவி ஃ 20
21. கண்ணகிகிராமம் 2 ஏவி ஃ 21
22. அளிக்கம்பை ஏவி ஃ 22


அமைவிடம் :-

அம்பாறை மாவட்டத்தில் கிழக்குப் புறமாக அம்பாறை நகரில் இருந்து 16 மைல்களுக்கு அப்பால் அக்கரைப்பற்று பிரதேசம் அமைந்துள்ளது. இதன் தெற்குப்புறமாக ஆலையடிவேம்பு பிரதேசம் அமைந்துள்ளது. எமது பிரதேச செயலாளர் பிரிவும் மேலே குறிப்பிட்ட பிரிவையே உள்ளடக்கியுள்ளது. இப்பிரிவு 25628 ஆயிரம் மொத்த சனத்தொகையைக் கொண்டுள்ளது. 22 கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கிய பிரதேசமாகவும் காணப்படுகிறது. இதன் பரப்பளவு


90 சதுர கிலோ மீற்றராகும். ஆலையடிவேம்பு; பிரதேச செயலக பிரிவு பின்வரும் கிராமங்களை உள்ளடக்கியது.


1. அளிக்கம்பை
2. கண்ணகி கிராமம்
3. பனங்காடு
4. கோளாவில்
5. அக்கரைப்பற்று
6. ஆலையடிவேம்

இதனுடன் பல வயல் கண்டங்களையும் உள்ளடக்கியுள்ளது. பிரதானமான தில்லை ஆறு இதன் மேற்குப்புறமாக சென்று பனங்காட்டை ஊடறுத்து கிழக்குப்புறமாக செல்வதும் அக்கரைப்பற்று அண்மித்த பகுதிகளில் மட்டுமே குடியிருப்புக்களை மட்டும் கொண்டு அதனை சூழவுள்ள பகுதிகள் வயல்வெளிகளும் மேச்சல்தரைகளும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.




.
தரைத்தோற்றம்

இப்பிரதேசம் கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாள 75 – 120 உயரம் வரையுள்ளது. இது மணல்களையும் பாறைகளையும் கொண்ட பிரதேசமாகும். இப்பிரதேசம் கிழக்காக ¾ மைல் நீளமான கடல்வளமும் மேற்காக பயிர்ச்செய்கை நிலமும் வடக்காக குடிமனைகளும் தெற்காக வயலும் மலைசார்ந்த பிரதேசமும் காணப்படுகின்றன. இவற்றில் 10 ஏக்கர் சதுர அடிப்பரப்பும் 100 அடி உயரமும் கொண்ட இரண்டு மலைகளும் 10 ஏக்கர் சதுர அடிப்பரப்பும் 75 அடி உயரமும் கொண்ட ஒரு மலையும் குறகிய மலைத்தொடர்களும் காணப்படுகின்றன.

நீர்வளங்கள்
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அநேகமாக குடியிருப்பாளர்கள் குடிநீர் பெறுகின்றனர். இதில் கண்ணகி கிராம மக்கள் நல்ல குடிநீரைப் பெறுவது கஸ்டமாக உள்ளது. இவர்கள் வசிக்கின்ற பகுதியை அன்மித்து மலைகள் காணப்படுவது காரணமாகும். இப்பிரதேசத்தில் தில்லையாறு, பட்டியடிப்பிட்டிக் குளம், நீத்தையாறு, தாலிபோட்டாறு என்பனவும் காணப்படுகின்றன. மேலும் நீர் பெறுவதில் கஸ்டமான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் (கண்ணகி கிராமம் , அலிக்கம்பை) வாய்க்கால்களில் விடப்படும் தண்ணீர் மூலமும் குளாய் கிணறுகளில் பெறப்படும் தண்ணீர் மூலமும் தனது தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

கண்ணகி கிராமம் நில அடிப்பகுதியில் மலைப்பாங்கான பிரதேசமாக காணப்படுவதால் இங்கே கிணறுகள் தோண்டுவது மிகவும் கஸ்டமான ஒரு காரியமாகும். இங்கே வசிக்கின்ற மக்களுக்கு அரசாங்கம், பொதுத் தாபனங்கள் குளாய்க் கிணறுகள், பொதுக் கிணறுகள் என்பன அமைத்துக் கொடுக்க வேண்டும். இதே மாதிரியே அளிக்கம்பை கிராமமும் அமைந்துள்ளது.

ஆலையடிவேம்பு, வாச்சிக்குடா பகுதியில் வசிக்கின்ற மக்கள் அதிகம் சுத்தமில்லாத நீரையே தமது பாவனைக்கு பயன்படுத்திவருகின்றனர். பெரும்பான்மையான சலவைத் தொழிலாளர்கள் பட்டியடிப்பிட்டிக் குளத்தையும் வயற்செய்கைக்காக உப உணவுச்செய்கைக்காக தில்லையாற்றையும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கும் சுத்தமான நீரைப்பெறுவதற்கு பொதுக் கிணறுகள் நீர்வழங்கள் அமைப்புக்களை திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.


குறிப்பு

கண்ணகி கிராமம் தற்போது மீளக்குடியேற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டு;ள்ளது. இப்போது ஏற்கனவே உள்ள கிணறுகள் யாவும் தூர்ந்த நிலையிலேயே இடிபாடுகளுக்கு உட்பட்ட நிலையிலும் உள்ளது. இதனால் மீளக் குடியமர்வு செய்யும் போது பழைய கிணறுகளை புணரமைக்கவும் புதிதாக பொதுக் கிணறுகள் குளாய் கிணறுகளை அமைக்கவும் தேவை ஏற்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று குளம் ஃ பட்டியடிப்பிட்டி குளம்

பட்டியடிப்பிட்டி குளமானது வாச்சிக்குடாவில் அமைந்துள்ளது. இ;ப்பிரிவில் பெரும்பான்மையினராக சலவைத் தொழிலாளர்கள் வசிப்பதால் அவர்களே தமது தொழில் தேவைக்கு பயன்படுத்துகிறார்கள். இக்குளம் வருமாந்த மழை வீழ்;ச்சியினால் நிரப்பப்பட்டு வரட்சியான காலங்களில் வற்றிவிடுகிறது. ஆண்மைக்காலங்களில் ஆலையடிவேம்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட இக்குளத்தை முஸ்லீம்கள் ஆக்கிரமிப்பு செய்து சட்ட விரோதமாக கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதால் இக்குளம் விஸ்தீரணம் குறைந்து நீர் கொள்ளவு குறைந்து எதிர்காலத்தில் இக்குளத்தை நம்பி தொழில் செய்வோர்களும், விவசாயம் செய்வோர்களும் தொழிலை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.











கடல் வளம்

இப்பிரதேசத்தில் ¾ மைல் நீளமான கடல் வலயம் காணப்படுகிறது. இவ்வளமானது பல அடிப்படைத் தொழில்களுக்கு ஏதுவாகக் காணப்படுகின்றது. குறிப்பாக மீன்பிடித்தொழில் அபிவிருத்திக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் சின்னமுகத்துவாரம், கோளாவில், பனங்காடு போன்ற பகுதிகளில் வசிக்கும் அநேகர் மீன்பிடித்தொழிலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. போதியளவு தொழிலாளர் வசதி, சந்தை வாய்ப்பு, போக்குவரத்து, அனுபவம் என்பன செறிவாகக் காணப்படுவதனால் நவீன மீன்பிடி பயிற்சி அளிக்கும் அமைப்பினூடாக இத்தொழிலாளர்களுக்கு பயிற்சி, நிதி வசதி என்பன வழங்கினால் இப்பகுதியில் ஆழ் கடல் மீன்பிடித்தல் தொழிலை செய்து அதிகளவு வருமானத்தை இத்தொழிலைச் செய்யும் மக்கள் பெறக் கூடியதாக இருக்கும்.

தெங்கு வளம்:

ஆலையடிவேம்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் கிழக்காக கடற்கரை காணப்படுவதால் அதனை அண்மித்த பகுதியான சின்னமுகத்துவாரம் பகுதியில் பல தென்னம் தோட்டங்கள் காணப்படுகின்றன. அத்தோட்டம் அக்கரைப்பற்று 9, அக்கரைப்பற்று 7, அக்கரைப்பற்று 8 ங் குறிச்சியிலும் கோளாவில் பகுதிகளிலும் வீடுகளில் தென்னை மரங்கள் காணப்படுவதால் இப்பகுதியில் கிட்டத்தட்ட 150 ஏக்கர் காணப்படுகிறது. இவ்வளத்தினை அதிகரிக்க முடியும் ஏனெனில் சூறாவளி தாக்கியதில் பல தென்னந்தோட்டங்கள் சேதமாகின. அத்தோடு வீடுகளில் உள்ள பல மரங்கள் சேதமாகின. ஆனால் இருந்த அளவு இன்னும் மீளப் பெறப்படவில்லை. எனவே இப்பகுதியில் இப்போது தேங்காயின் விலையும் அதிகரித்து காணப்படுவதால் இப்பகுதியில் இலவசமாக நாற்றுத் தென்னை விநியோகம் செய்யப்படவேண்டும்.

இதனாலே இப்பகுதி தேவைகளை நிறைவேற்றவும் தும்பு, தெங்குப் பொருட்கள் தொடர்பான உற்பத்தித் தொழிற்சாலைகளை ஏற்படுத்த முடியும். இதனூடாக குடிசைக் கைத்தொழில் உற்பத்தியாக பிரஸ், தும்புத்தடி, கால் துடைப்பம், தென்னம் கள்ளு இது போன்ற பல உற்பத்திகளை செய்யலாம்.


ஆலையடிவேம்பு பிரதேசத்தின் அமைப்பும் பொதுவான கால நிலையும் (காலநிலை ஏற்கனவே தரப்பட்டுள்ளது. எனவே மண்ணமைப்பு மாத்திரமே இங்கு தரப்படுகிறது.)








இலங்கையின் கீழ் திசையான மட்டக்களப்பு மாநகரின் தென்புறமாக ஆலையடிவேம்பு பிரதேசம் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடக்கே அம்பாறை வீதியினையும் தெற்கே அளிக்கம்பையினையும் கிழக்கே கடலுடன் இணைந்த முகத்துவாரத்தினையும் மேற்கே இலுக்குச் சேனையையும் கொண்டு அமைந்துள்ளது. பொதுவாக இப்பிரதேசத்தின் தரைத்தோற்றம் வடமேல் திசையாக தாழ்ந்து அமைந்துள்ளதை இங்கே ஓடும் நீத்தை ஆறு விளக்குகிறது.

மண்

இப்பிரதேசத்தில் இறுகாத கடினமற்ற பொருட்களால் அமைந்து காணப்படுகிறது. மேற்போர்வையினை மட்படை எனலாம். இம்மட் பரம்பலானது சீராகப் பரவி காணப்படவில்லை. இப்படை 5 அடி – 20 அடிவரை ஆழமுள்ளதாக காணப்படுகிறது. இம்மண் தாய்ப்பாறையின் சிதைவினாலும் சேதன – அசேதன பொருட்களின் திரட்சியினாலும் இனங்காணப்படுகிறது.

பொதுவாக மண்ணியல் ஆளர்கள் ஆய்வு செய்தது போல் எமது பிரதேச மண்ணையும் ஆய்வுக்குட்படுத்தி ஆராய முடியும;




பொதுவாக ஆலையடிவேம்பு பிரதேசம் இடத்திற்கு ஏற்ப வேறுபட்ட மண் வகைகளை கொண்டமைந்தாலும் பொதுவான அயனமண் (ஊசுயுஏநுடு) என்ற வகையினுள் அடக்க முடிகிறது. இம்மண் வெப்பப்பகுதியிலும் வெப்பமும் ஈரமும் கொண்ட பருவகால காலநிலை உள்ள பகுதிகளில் பரம்பி உள்ளதால் எமது பகுதியிலும் இவற்றைக் காணலாம். எமது பகுதியில் எமது பகுதி மக்களின் அறிவுத்திறனைக் கொண்டு அதன் தன்மையினை மணல், களி, மணலும் களியும் சேர்ந்த இருவாட்டி என்ற 03 இனங்களாக பாகுபடுத்திக் கூறுவர். எமது பிரதேசத்தின் கிழக்கே கடற்கரை சார்ந்து மணலும் மேற்கே செல்லச் செல்ல இருவாட்டி மணலுமாகச் சென்று வயல் பாகங்களை அண்டிய பகுதி நீரைத்தேக்கி வைக்கக்கூடிய களியாக மாற்றமடைகிறது. மேலும் வடக்கே கருமணலும் தெற்கே செல்லச் செல்ல நரை நிறமுள்ள மணலும் கண்ணகிபுரம் மற்றும் அளிக்கம்பை சார்ந்த பகுதியில் பசைத்தன்மையுள்ள களி ஃ செம்மணலுமாக அமைந்து பரவலான நெற்செய்கையினை நிர்ணயித்துச் செல்கின்றது. மணல், இருவாட்டி சார்ந்த பகுதிகளில் தெங்குச் செய்கை, மரவள்ளி மற்றும் ஊடுபயிர்களையும் செய்கை பண்ணை மேற்கொள்ளப்படுகின்றது.

மழை வேளைகளில் வெள்ளம் பெருகும் போது மேற்படையிலுள்ள வளமுள்ள கனியுப்புக்கள் ஃ கூள்பொருட்கள் பி என்னும் படையில் தங்குகின்றது. இவை மஞ்சள், சிவப்பு நிறங்களைக் கொண்டு இரும்பு சத்துள்ள அமில மண்ணாக அமைந்துவிடுகிறது.

கடல் மண்வளம்:-

இப்பிரதேசத்தில் ¾ மைல் நீளமான கடற்கரையை கொண்டுள்ளதான அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில் இருந்து 500 யார் தூரத்தில் கிழக்கில் கடல் அமைந்துள்ளது. இங்கே கடற்கரை மணல் வளம் போதியளவு கிடைக்கின்றது. இந்த வளத்தை இப்பிரதேசத்தினதும் எமக்கு அடுத்ததாகவுள்ள அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினரும் கட்டடத் தேவைகளுக்கும் வேறு பல தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இப்பிரதேசத்தில் பொதுவாக மண்ணரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை குறிப்பிடல் வேண்டும். ஜனவரி-நவம்பரில் இடையிலான பகுதியில் மண்னெடுக்கப்படுகிறது. மணல் டிரக்டர், வண்டில்கள், கென்டர்களில் ஏற்றிச் செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

களிமண்வளம்

ஆலையடிவேம்பு உ.அ.அதிபர் பிரிவிற்கு மேற்குப்புறமாக அமைந்துள்ள வாச்சிக்குடா, அக்கரைப்பற்று – பட்டியடிப்பிட்டி குளத்தில் களிமண்ணும் அதை அண்மித்த பகுதியில் ஒரு வகை ஊத்தைக் களிமண்ணும் காணப்படுகின்றது. இவ்வகையான மண் அமைப்பு ஆலையடிவேம்பு, கோளாவில், பனங்காடு ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றது.

இந்தக் களிமண்ணை இப்பகுதியில் சட்டி, பானை செய்யவும் வேறு வகைகளில் வீட்டு அத்திவாரங்களை மூடுவதற்கும் வீதிகளின் ஓரங்களை நிரப்பவும் பாவிக்கிறார்கள். பட்டியடிப்பிட்டிக் குளத்தை சில முஸ்லீம்கள் அதிகாரமற்ற வகையில் நிரப்பி கடைகளைக் கட்டி வருவதால் குளத்தின் விஸ்தீரணம் குறைந்து கொண்டு செல்வதோடு எதிர்காலத்தில் இம்மண்ணினைப் பெறுவதற்கு வேறு இடம் ஒன்றைத் தேடவேண்டி இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.




கற்பாறைகள.;

அக்கரைப்பற்று மத்தியில் இருந்து 6 மைல்கள் தூரத்தில் கண்ணகி கிராமம் அமைந்துள்ளது. இது ஆலையடிவேம்பு பிரதேசத்தின் தெற்குப்புறமாக அமைந்துள்ள பகுதியாகும். இங்கே பாரிய மூன்று மலைகள் அமைந்துள்ளன. இவைகளில் 100 அடி உயரமும் 10 ஏக்கர் பரப்பும் கொண்ட 2 மலைகளும் 75 அடி உயரமும் 10 ஏக்கர் பரப்பும் கொண்ட ஒரு மலையும் காணப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து பல மலைத் தொடர்களும் காணப்படுகின்றன. 4 மைல் தொலைவில் அளிக்கம்பை கிராமமும் சூழ காடுகளும் காணப்படுவதால் விறகினைப் பயன்படுத்துவதாலும் வெடிமருந்துகளைப் பயன்படுத்தியும் கருங்கல்லை உடைக்கும் தொழிலை செய்யலாம். தற்போது இது நம்பிக்கை;குரிய சிங்கள முதலாளிமார்களுக்கு வெடிமருந்து வழங்கி அவர்கள் மூலமாக இ;ப்பிரதேசத்தின் கருங்கல் தேவையை அதிக விலை கொடுத்து பொது மக்கள் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

லேபிள்கள்:

புதன், 7 செப்டம்பர், 2011

மனித வளம்

மனித வளம் (human resources) என்பது மனிதர்களை நிறுவனங்கள் எவ்வாறு முகாமைத்துவப் படுத்துகின்றார்கள் என்பதை குறிக்கின்றது. இத் துறையானது பாரம்பரிய அதிகார ரீதியான செயற்பாட்டிலிருந்து தளத்தகைக்கு மாற்றம் பெற்றுள்ளது. இம் மாற்றமானது திறமை வாய்ந்த ஊக்கமுள்ள மக்களுக்கும் நிறுவனங்களின் வெற்றிக்கும் இடையிலான உறவு முறையை அறிந்து கொள்ள மிகவும் உதவுகின்றது. இத் துறையானது நிறுவனங்களின் உளவியலையும் அமைப்பு சார்ந்த கொள்கைகளையும் வளர்த்துள்ளது. மனித வளமானது உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டு இரண்டு வகையான மேல் விளக்கத்தை கொண்டுள்ளது.இது முதலாவதாக அரசியல் பொருளியலிலும் பொருளியலிலும் பயன்படுத்தப் பட்டது.


பயிற்சிநிறுவன தரத்தில் ஒரு வெற்றிகரமான மனிதவள முன்னேற்றத்திற்கான நிகழ்ச்சித் திட்டம் ஒரு தனிநபர் முக்கியமான தேவைகளை ஆற்றுவதற்கு தயார்ப்பத்துகின்றது. குறித்த காலத்தில் ஒழுங்கு படுத்தப்பட்ட அறிதலானது, செயற்பாட்டு ரீதியான ஒரு முன்னேற்றத்துடனான மாற்றத்தை வழங்குகின்றது என நட்வர் குறிப்பிடுகிறார். இந்த ஓழுங்கமைப்பில் மனித வள வளர்ச்சி என்பது ஒரு கட்டமைப்பைப் போன்றது.

முதலாவது கட்டமானது பயிற்சி, பின்பு தொழிலாழர்களை முன்னேற்றுதல், நல்லகல்வி, தனிப்பட்ட நபர்களினதும் நிறுவனங்களின் நீண்டகால தேவைகளையும், மனித வள மேம்பாடு சாதாரணமாக பின்வறுமாறு வரையறை செய்யப்படுகின்றது.

“ நிறுவனங்களின் விளைதிறனன முன்னேற்றும் முகமாக நிறுவனங்களின் அனைத்து தொழிலாளர்களினதும் திறமைகள் மற்றும் வெளிக்காட்களை தரமுயற்றுதல்”

மனித வள மேம்பாடுமனித வள மேம்பாட்டின் நோக்கமானது மனிதவளத்தின் முழுமையை வளர்ப்பதற்காக அறிவூத்துவன் ஊடகவூம் கல்வி, பயிற்சி சுகாதாரம் அனைத்து மட்டங்களில் ஊடாக வேலை வாய்ப்பு போன்றவற்றின் இணைந்த கொள்கைகளினால் பெறப்படுகின்றது.

முகாமைத்துவம்மனித வள முகாமைத்துவத்தில் மற்றும் ஒரு மறுபக்கத்தை பார்போமானால் நிறுவனத்தின் உடைய மனித மூலதனத்தை அதிகரிப்பதற்கு நிதி இடர்களை குறைப்பதற்கு உதவுகின்றது. திறமையாகவும் சட்டரீதியாகவும் ஒழுங்கான முறையிலும் செயற்படுத்துவது மனித வள முகாமையாளரின் பொறுப்பாகும்.

முக்கியமான செயற்பாடுகள்மனித வள முகாமைத்துவம் 7 முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

1.ஆட்சேர்ப்பும் தெரிவும்
2.பயிற்சியும் அபிவிருத்தியும்
3.செயற்பாட்டு மதிப்பீட்டு முகாமைத்துவம்
4.மேம்படல்,
5.இடமாற்றம்
6.கைத்தொழிலும் ஊழியர் உறவும்
7.எல்லா தனிப்பட்ட தரவுகளின் உடைய பதிவு பேணல்
8.மொத்த பரிசுகள் : ஊழியர் இலாபமும் நட்டமும்
9.வேலைகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் உள்ளக வாடிக்கையாளர்களுக்கு இரகசிய ஆலோசனை
10.தொழில் அபிவிருத்தி
11.தரமான இணைப்பு
12.மனித வள செயற்பாட்டோடு இணைந்த நேர அசைவு ஆய்வு
13.செயற்றிறன் மதிப்பீடு
மனித வளத்தின் நவீன கருத்துமனித வளமானது வணிகத்தினது நிறுவத்தினது ஒரு பகுதியாக இருந்தது மனித வள முகாமைத்துவ விவசாயத்தின் உடைய ஆரம்ப காலத்தில் இருந்து வளர்ந்து வந்துள்ளது 20ம் நூற்றாண்டின் நடுப்பபகுதில் இருந்து மனித வளம் தொடர்பான கருத்து வளர்ச்சி அடைந்து வந்துள்ளது எனினும் பல காரணங்களால் இதற்காக சவால்கள் எலுந்த போதிலும் மனித வளம் முன்னேறியது. நிறுவனங்களின் ஒரு நிரந்தமான இடத்தை பிடித்துள்ளது.

தனிப்பட்ட மறு மொழிஒரு தொழிலாளர் சந்தையின் மாற்றங்களுக்கு தனியார் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பது தொடர்பான கருத்துக்கள் புவியியல் பரப்பு துனியான இடமின்றி வேறு எவ்வளவூ தூரம் வேலைக்குச் செல்லும் தூரமானது நிறுவனத்தினாலும் போக்குவரத்து துறையினாலும் கட்டணம் செலுத்தப்பட்;ட முறையில் இருத்தல் வேண்டும். அது மட்டுமல்லாமல் யார் வேலைக்கு விண்ப்பிக்கின்;றார்களோ அதை தீர்மானிக்கும் அம்சம் வேலைப்பரப்பு உள்ளடக்கிதாக இருத்தல் வேண்டும் வேலைக் கட்டமைப்பு நிறுவனத்திக்குள் வேறுபட்ட வேலையினுடைய பெறுமதிகளும் மாதிகளும் இருத்தல் வேண்டும். மகோனே 1989ல் வேறுபட்ட வேலைக் கட்டமைப்புக்களை விருத்தி செய்தார்கள் அவையாவன தந்திரம் நிறுவன வேலை கட்டமைப்பற்றது உற்பத்தி சார்ந்த வித்தியாசம் ஊழியர்களுடைய வேறுபட்ட வயது வகை சரியான அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. உதாரணமாக அவர்களுடைய நடவடிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் நிறுவத்தின் உடையது

வேலை வாய்ப்புமனித வள மேம்பாடு நிறுவனதத்தினுள் மனித மூலதனத்தின் உடைய விரிவிக்கான ஒரு கட்டமைப்பாகும். அல்லது பிரதேசம் அல்லது தேசம் சார்ந்தது மனித வள மேம்பாடனது கல்வியிலும் பயிற்சியூடையதும் கட்டமைப்பாகும். வூpரிவாக பார்போமானால் போதுமான சுகாதாரமும் வேலைவாய்ப் கொள்கையூம் நிறுவனத்தின் உடையதும் தனியாரினதும் வளர்ச்சியையூம் தொடர்ச்சியான விருத்தியையூம் உறுதிப்படுத்துகின்றது. அடம்ஸ்மித் “தனிப்பட்டவரினது கொள்ளவது அவர்களுடைய கல்வியில் தங்கியூள்ளது” என கூறுகிறார். மனிதவள மேம்பாடானது நடுத்தரமானது அது பரந்த சுற்றாடலில் பயிற்சிக்கு கற்றலுக்கும் இடையில் உள்ள செயன் முறையில் இருந்து பெறப்படுகின்றது. முனித வள மேம்பாடானது விரிவான கருத்து அல்ல ஆனால் ஒரு அமைப்பு செயன் முறையின் தொடராகும். தேசிய உடன்பாட்டில் இது சுகாதாரமும் கல்வி வேலைவாய்ப்பு என்பவற்றிக் கிடையில் உள்ள தந்திரோபாய தொடர்பில் இருந்து பெறப்படுகின்றது.

கட்டமைப்பு மனித வள மேம்பாடானது ஒரு கட்மைப்பு அது தனிப்பட்ட அபிவித்திக்கவூம் நிறுவனத்தின் உடைய திருப்திக்காவூம் அனுமதி அளிக்கின்றது. தனிப்பட்டவரினது மேம்பாடானது தனியார் நிறுவனம் அல்லது தேசத்திற்கு நன்மை அளிக்கின்றது. ஓன்றிணைந்த பார்வையில் நோக்கும் போது மனித வள மேம்பாட்டு கட்டமைப்பானது ஊழியர்களை நிறுவனத்தின் உடைய செத்தாக நோக்குகின்றது. இது ஊழியர் விருத்தியினதும் வளச்சியினதும் பிரதான நோக்கு ஆகும். இது தனியான திறமையை விருத்தியை உறுதிப்படுத்துகின்றது. இந்த செயற்பாட்டின் மனித வள மேம்பாடானது உள்ளறை குழுப்பயிற்சிக்காக அல்லது வெளியீடானது தனிநபரின் உடைய செயற்பாட்டை விருத்தி செய்கின்றது.

லேபிள்கள்:

பாடசாலை முகாமைத்துவம்

பாடசாலைகள் சிறந்த முறையில் முகாமைசெய்யப்படுவதனால் நாட்டின் சுபீட்சகரமான எதிர்காலத்தை கட்டி எழுப்ப எனவே பாடசாலை முகாமை பற்றி சிந்திப்பது முக்கியமானது. இவ்புலமானது அதிபர் ஆசிரயர் மாணவர்கள் பெற்றௌர் சமூகம் நாட்டின் பொருளாதார அரசியல் உலககல்விப்போக்கு என்பவற்றை தன்னகத்தே சிந்தித்தல் வேணடும். முகாமைத்துவம் என்ற எண்ணக்கரு பல்வேறு பரிமாணங்களில் விளங்கப்படக்கூடியது. பொதுவாக ஒழுங்கமைந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிக்கோள்களை வினைத்திறனுடனும்இவிளைதிறனுடனும் அடைவதற்கு தமது நிறுவன ஒழுங்கமைப்பையூம் வளங்களையூம் திட்டமிட்டு வழிப்படுத்தி ஒழுங்கமைத்து மேற்பார்வைசெய்து ஒருங்கிணைத்துக்கொள்ளும் உபாயங்களும் நுட்பங்களுமே முகாமை என்று கூறப்படுகிறது.எனவே பாடசாலை தனது அங்கீகரிக்கப்பட்ட கல்விக்குறிக்கோள்களை அடைவதற்கு வழிமுறைகளை தீர்மானித்தல் வேண்டும். இவை தமது வழிமுறைகளை காணும்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. புhடசாலைகளும் ஒழுங்கமைந்தநிறுவனமாகும் இவை சமூக பொருளாதார அரசியல் கலாசார தொழில்நுட்ப பரவல் போன்றவற்றால் ;;;;;;;;;;பலஇடையூ+றுகளை சந்தித்துக்கொள்கின்றன. தேசியவிளைவூகளான மக்கள் பண்பு விருத்தி மற்றும் மனிதவள விருத்தி என்பவற்றை சிறந்தமுறையில் உருவாக்க அதிபர் முக்கியமானவர் இவர் பாடசாலையின் சிறந்தமுகாமையாளராக இருப்பதனால் நாட்டின் குறிக்கோள்களை அடையமுடியூம்.
பாடசாiபைற்றிய சிந்தனை மாற்றம் தற்பொழுது உலகளாவியரீதியில் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்திற்கு ஏற்ப கல்விவடிவமைக்கப்டுகின்றது. மாணவன் உற்பத்திப்பொருளாக கணிக்கப்படுகின்றான். இவ்உலகளாவிய மாற்றங்களை நாமும் ஏற்றுக்கொள்ளும்போது முகாமைத்துவக்கட்டமைப்புக்குள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியதாகின்றது. பாடசாலை உயர்மட்ட அணியினரான அதிபர் பிரதிஅதிபர் உதவிஅதிபர் பகுதித்தலைவர்கள் பல்வேறுசந்தர்ப்பங்களில் முரண்பாடுகளை தோற்றுவிப்பவர்களாகவூம்; எதிர்கொள்பவராகவூம் உள்ளனர்.
பாடசாலை பலநூறு தனிநபர்களின் கூட்டுக்கட்டமைப்பாகும். மாணவர்; இஆசிரியர்இஊழியர்இ பெற்றௌர் இ கல்வித்திணைக்களஅலுவலர் சமூகநலன்விரும்பிகள்இவர்களின் கூட்டுச்சேர்மானத்தின்போது பல்வேறுபட்ட முரண்பாடுகள்தோன்ற வாய்பபுண்டு. முரண்பாடுகள் படிப்படியாகபரவி குழுநிலைஅம்சங்களாக வளர்;ச்சிபெறுவதுண்டு. எனவே இக்கட்டமைப்பை நிர்வகிக்கின்ற அதிபர் சிறந்தமுகாமை எண்ணக்கருவை வளர்த்தெடுப்பதன் மூலமே சமூகம் எதிர்பார்க்க்pன்ற பிரஜையை உருவாக்கமுடியூம்.
பொதுவாக எமது பாடசாலையை பொறுத்தவரை பல்வேறுபட்டகாரணங்களை கூறமுடியூம் அதிபர் அதிகாரங்களை தன்னகத்தே குவித்துவைத்திருத்தல் பரவலாக்கம் செய்யாதுஇருப்பதனால் இராணுவக்கட்டமைப்பமாதிரி கட்டளைக்காக காத்துநிற்கவேண்டிஉள்ளது. இதன்காரணமாக ஆசிரியரிடத்தே மனரீதியான தன்னிறைவூம் திருப்தியூம் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனைய பதவிநிலைகள் பகடைகாய்களாக உள்ளன அவர்களும்; திருப்தியைகாட்டுவதில்லை நீண்டகாலஅடிப்படையில் பாடசாலை தனது பொலிவை இழக்க இது ஏதுவாக அமையூம். நான் என்றுசிந்திக்காது நாம் என்று சிந்திக்க அதிபர் முயலவேண்டும் தகுதியூம் தலைமைத்துவமும் கூட்டுணர்வூம் பெற்றௌர் பங்களிப்பை அதிகரிக்க ஈடுபாடுகொண்ட அதிபர் தேவை கற்கும் ஆர்வமும் ஆசிரியர்; ஒழுக்கத்தை முன்னேற்றும் விருப்பமும் கொண்டவராக அதிபர் அமைதல்வேண்டும் எமது பாடசாலையில் இது குதிரைக்கொம்பாக உள்ளது. தகைமை தேர்ச்சி மாணவர் பகுத்தறிவூசிந்தனை வளர்ப்பதில்; ஈடுபாடு பயனுறுதிகொண்ட மாணவர் ஒழுக்கமேம்பாடு பெற்றௌர் தொடர்பு என்பவற்றை அதிபர்வளர்த்தெடுக்கவேண்டும். ஆசிரியரின் நலனில் அதிபர்; அக்கறைகொண்டவராக இருத்தல் வேண்டும் பெரும்பாலும் ஆண்;;;;;அதிபர்கள் பெண் ஆசிரியர்களின் நலன்களில் அக்கறை கொண்டவராக இருத்தல் பாடசாலை முகாமையில் பல இடையூ+றுகளை ஏற்படுத்தும். சமூகம் ஏற்றுக்கொள்கின்ற நியமங்களை அனுசரிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.பாடசாலையின் நாளாந்த பணிகளில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதில் தொடர்புடைய ஆட்களை நன்கு விளங்கிக்கொண்டு அதற்கேற்ப தமது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும்.அத்தகைய நிலையிலேயே ஆட்களுடன் முரண்படாது அதேசமயம் பணிகளையூம் நிறைவேற்றமுடியூம்.. ஆனால் எமது அதிபர்கள் பிரிட்டிஸ்காலத்து ஆட்சிமுறையிலேயே முகாமைத்துவத்தை கருதுகின்றார்கள். பொதுவாக வழமையாக அதிபர் மேற்கொள்ளும் நடத்தைகள் தவறானதாக பொருத்தக்கேடானதாக அமையமுடியூம் இத்தகைய நிலமைகளில் சுயவிமர்சனப்பாங்குள்ளவராகவூம் கீழ் பணியாற்றும் ;ஆசிரியரின் கருத்துக்களை கேட்கக்கூடியவராகவூம் இருத்தல் வேண்டும் அவ்வாறு அதிபர்கள் இல்லை நான் பிடிச்ச முயலுக்கே மூன்று கால்கள் என வாழ்கிறார்கள்.
தான்; நிறைய கற்பதுடன் ஏனைய சகபாடிகள் உயர்கல்வி கற்பதற்கும் பதவிஉயர்வூ பெறுவதற்கும் மேலதிகபதவிகளைப்;பெறுவதற்கும் அதிபர் உதவூதல் வேண்டும் சம்பளஉயர்வூளை உரியகாலத்தில் பெற்றுக்கொள்ள தடையாக இருத்தல் கூடாது ஆனால்; பெரும்பாலும் எமது அதிபர்கள் பழிவாங்கும் நடவடிக்கைக்காக இதனையே துருப்புச்சீட்டாக இதனையே கையாண்டு ஆசிரியர்களை பழிவாங்குகின்றார்கள். பெரும்பாலும் எங்கள் அதிபர் சுற்றுநிருபங்கள் நியமங்களை பின்பற்றி நடப்பதனால் சலிப்பு உண்டாகின்றது.
அதிபர் பாடசாலைக்கு வெளியே ஆசிரியர் மாணவர் பெற்றௌர்களின் சொந்தவைபவங்கள் நலன்கள்கலந்துகொண்டு உணர்வூகளை பகிர்ந்துஉதவி வழங்குதல் வேண்டும். இதுதனிநபர் உறவில் நம்பகத்தன்மையை ஏறப்படுத்தும். ஆனால் பெரும்பாலான அதிபர்கள்; இவ்வாறு இல்லை தமது குடும்பம் தொழில் ரீதியான பதவி என தம் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றார்கள். பெற்றௌரின் எதிர்பார்ப்பு எனது பிள்ளைகள் சிறந்த கல்வியை கற்று பொருளாதாரத்தை ஈட்டவேண்டும் என்பதாகும் . பிள்ளை பற்றி ஆசிரியரின் எதிர்பார்பு சமூகம் ஏற்றுக்கொள்கின்ற நியமங்களுக்கு அமைய மாணவனை உருவாக்கி அவனை உலகிற்கு அனுப்புதல் வேண்டும் அதாவது நற்பிரஜை அனுப்பதல் . இஙூகு முரண்பாடுகளை காணலாம.; பொதுவாக பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பினால் போதும் பிள்ளை படிப்பான் என்ற எண்ணக்கரு பெற்றார்களிடத்தே உண்டு. இது தவறானது பிள்ளைகளின் நலன்பற்றி ஆசிரியரிடத்தே தெரிந்து ஆசிரியருடன் இணைந்து செயற்பவதுடன் பெற்றார் பிள்ளையை நன்றாக வளர்த்தெடுக்க முடியூம். பேற்றார்கள் ஆசிரியரை சந்திப்பதற்கு பின்வரும் சந்தர்ப்பங்கள் அமையப்பெறுகின்றதுவிளையாட்டுப்போட்டிஇ பரிசளிப்புவிழாஇ அதிபர்தினவிழாஇ வருடாந்த பாடசாலை அபிவிருத்திச்சங்க பொதுக்கூட்டம் இ வினாத்தாள்களை பார்வையிடுவதற்கான தவனை சந்தர்ப்பங்கள் ஆகும்.ஆனால் இச்சந்தர்ப்பங்களை பெற்றார்கள் பயன்படுத்திக்கொள்வதில்லை வந்தோம் கையெழுத்திட்டோம் எல்லாம் ஆசிரிய்;ர்கள்; பார்த்துக்கொள்வார்கள் பிள்ளைகளின் வளர்ச்சி உங்கள் கையில் என வாய்வார்த்தையூடன் ஒடிப்போய்விடுகிறார்கள் . சேர் நல்லா அடியூங்கோ நாங்கள் கேட்க வரமாட்டம் என்று நசூக்கான வார்த்தைகளை பிரயோகித்து விட்டு செல்கின்றார்கள். புல வழிகளிலும் ;ஆசிரியர் பெற்றௌரையிட்டு இவ்வகையில் புளகாங்கிதம் அடைந்தாலும் மாணவனின் வளர்ச்சி பற்றி ஆசிரியர்;மட்டும் சிந்திக்கHது பெற்றௌரும் சிந்திக்கவேண்டும் பிள்ளை தொடர்பான பலயினங்களை பெற்றௌரும் சிந்திக்கவேண்டும்.பொதுவாக போட்டிகளில்; மாணவன் வெற்றியீட்டுகின்றபோது ஆசிரியரை வாழ்த்தும் பெற்றார்கள் பரிசு கிடைக்கப்பபெறாதவிடத்து ஆசியரையே பரிசு கெடுப்பது வழமை. இது பொதுவாக கற்ற பெற்றௌரிடத்தில் உள்ள குறைபாடு. தனது பிள்ளையை போட்டிக்கு தெரிந்துகொள்ளாதவிடத்து ஆசிரியரை குறைகூறுவது முரண்பாடுகளை வளர்த்துக்கொள்ளும்.ஆசிரியர்களிடத்தேயூம் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வல்;லமையம் அவர்களை பணிமாற்றம் செய்யூம் திறனும் பெற்றௌரிடத்தே உண்டு இது எமது கல்விப்புலம் சார்ந்த நிலையில் மாபெரும் குறைபாடு ஆகும். மாணவனின் நலனில் அக்கறை கொண்ட ஆசிரியர் ஆயின் பெற்றௌர்களை இடையிடையே அழைத்து மாணவனின் ;நலன் பற்றி விசாரிப்பதுடன்; நல் ஆலோசனை வழங்கவேண்டும். அவனின் பலயீனங்ககளை களைவதற்கு கல்விஅறிவூகுறைந்த பெற்றாருக்கு ஆலோசனை வழிகாட்டலைமேற்கொள்ள வேண்டும்.
புhடசாலைகள் எல்லா நாடுகளிலும் அவற்றின் மனித மற்றும் சமூகபொருளாதாரஅபிவிருத்திகளில் முக்கியமான பங்கு வகிக்கும் நிறுவனங்களின் முதன்மையானவை .குடும்பங்களின் பிள்ளைகள் பிறந்தாலும் வளர்ந்தாலும் சமூகத்தில் பொருத்திக்கொள்வதற்கும் சமூகத்திற்கு இணக்கமான பிரசையாக மாறவதற்கும் சில அறிவூம் திறன்களும் நம்பிக்கைகளும் நேர்மனப்பாங்குகளும் உருவாக்;க பாடசாலை பங்காற்றவேண்டும் இவற்றை பெற்றார் நிறைவான முறையில் வழங்க முடியாதுஎனவே அவற்றை ஆசிரியர்கள் வழங்குவதற்கு உதவூபவராக பெற்றார்; இருத்தல் வேண்டும் .தொகுத்து நோக்கும் போது சுபீட்சமான எதிர்காலத்தை கட்டிஎழுப்ப எமது தேசத்தின் ஜக்கியத்தைபேண ஆசிரியர் முக்கியம் பெறுகின்றார் அவர் அதிபருடன் பெற்றொருடன் நல்உறவை ஏற்படுத்துவதன் மூலம் வளமான எதிர்காலம் கட்டிஎழுப்பப்பட இலங்கையில் வாய்ப்புண்டு இதோபோல் இதன் தலைமகனான அதிபர் முகாமைபற்றிய எண்ணக்கருவை நன்கு விளங்கிக்கொண்டவராகவூம் சமூகம் பற்றி சிந்திக்கின்றவராக அமைவாராயின் வளமான சமூகம் கட்டிஎழுப்பப்படும்

லேபிள்கள்:

செவ்வாய், 28 ஜூன், 2011

பாடசாலை செல்லும் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்கள் என்னும் பட்டத்தை கையில் ஏந்தும நிலை

2002ம் ஆண்டின் புள்ளிவிவரத் தகவல்கள் அடிப்படையில் உலகில் சுமார் பத்தொன்பது கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தற்போது இருபத்து ஐந்து கோடி என்கின்றன பல புள்ளி விவரக் கணக்குகள். இவர்களில் அறுபது விழுக்காட்டினர் பன்னிரண்டு வயதுக்கும் கீழே உள்ளவர் கள் என்பது சமுதாய நலம் விரும்பிகள் அனைவருக்குமே அதிர்ச்சியளிக்கும் செய்தி.
குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு எனும் பெயரிலிருந்து ஆப்பிரிக்கா கீழே இறங்க முதலிடத்தில் இந்தியா அவமானகரமாக அமர்ந்திருப்பதாகச் சொல்கிறது யூனிசெஃப் அறிக்கை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வைரம் பட்டை தீட்டுதல், சிவகாசி சாத்தூர் அதைச்சுற்றிய பகுதிகளில் தீப்பெட்டி செய்தல் மற்றும் பட்டாசு செய்தல், பீடி சுற்றுதல், தென் மாவட்டங்களில் செங்கல் சூளைகள், முந்திரி ஆலைகள், காஷ்மீரில் கம்பளம் செய்யும் தொழில், உத்திரப்பிரதேச பானை செய்யுமிடங்கள், பிரோசாபாத்தில் கண்ணாடி தொழிற்சாலை இவை தவிர உணவகங்கள், சாலைகள், வீடுகள் எங்கும் இன்னும் இருக்கிறார்கள் பல இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள். பதினைந்து வருடத்துக்கு முந்திய கணக்கெடுப்பே இந்தியாவில் 8 கோடி குழந்தைகள் கல்வி கற்கவில்லை என்கிறது. இப்போது அந்த எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 5 இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக சில கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.
குமரி மாவட்டத்தின் செங்கல் சூளைகளில் சிறுவர்களும், சிறுமியர்களும் ஏராளமான அளவில் பணி செய்கிறார்கள். மண்ணைச் சேறாக்குவது, அதை மிதிப்பது, செங்கல் அறுப்பது, அதை அடுக்குவது, சுமப்பது என அனைத்து விதமான பணிகளையும் சிறுவர்கள் செய்கிறார்கள், மிகவும் குறைந்த ஊதியத்தில்.
இதைத் தவிர குமரிமாவட்டத்தில் சிறுவர்கள் முந்திரி ஆலைகளில் அதிகமாக வேலை செய்கிறார்கள். முந்திரி ஆலைகளில் பெரும்பாலும் பெண் குழந்தைகளே வேலைக்குச் செல்கிறார்கள். வறுக்கப்பட்ட முந்திரியை உடைப்பது, அதன் மெல்லிய தோலை நீக்குவது என பல வேலைகளை சிறுமிகள் செய்கிறார்கள். இவர்களுக்கு இந்த புகையினால் பல நோய்களும், முந்திரியின் திரவத்தினால் தோல் தீய்ந்து போதல் போன்ற பல அவஸ்தைகளும் ஏற்படுகின்றன.
பதிமூன்று, பதினான்கு வயதுக் குழந்தைகள் பலர் வீடுகளில் வேலைக்காக சேர்க்கப்படுகிறார்கள். வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது என எல்லா வேலைகளையும் அவர்களே செய்ய வேண்டிய சூழல். இரவில் தாமதமாய் தூங்கி பகலில் விடியும் முன்பே எழும்பும் இந்த சிறுமிகளின் மன உளைச்சல் அளவிட முடியாதது. படிக்கும் ஆர்வம் இருக்கும் பல சிறுமிகள் ஒரு அடிமை நிலையில் தங்கள் வாழ்க்கையை சமையல் கட்டில் இழந்து விடும் சூழல் இன்று பல இடங்களில்.
கடந்த ஆண்டு இறுதியில் தான் அரசு வீட்டு வேலை மற்றும் உணவகங்களில் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. எனினும் நிலமை சீரடைந்தபாடில்லை. இது மட்டுமன்றி குழந்தைத் தொழிலாளர்கள் தடை செய்யப்படவேண்டிய இடங்கள் பல உள்ளன. அரசு சார் நிறுவனங்கள் பலவற்றில் குழந்தைகள் இன்னும் இருக்கிறார்கள்!
நெசவுத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் பல ஆயிரக்கணக்கான குழந்தைத் தொழிலாளர்கள் பணி செய்கிறார்கள். நெசவுத் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்குக் காரணம் அவர்களுடைய சிறு கைகள் நூல் இழைகளை பக்குவமாய் சரிசெய்யும் என்பது தான். சிறுவர்களை வைத்து சிறு சிறு பொருட்களை விற்கச் செய்வது, அவர்களை ஷூ பாலிஸ் போன்ற வேலைகளில் ஈடுபடுத்துவதும் இன்று பரவலாக நடந்து வருகிறது.
சிறுவர் சிறுமியரை போரிலும் பல இயக்கங்கள் பயன் படுத்துகின்றன. அவர்களால் பிறருடைய கவனத்தைக் கவராமல் தப்பிக்க முடியும் என்பதும், அவர்களை எளிதில் கட்டளைகளால் கட்டுப்படுத்தலாம் என்பதும், அவர்களுக்கு மூளைச் சலவை செய்வது எளிது என்பதும் முக்கிய காரணங்களாகும்.
எண்பதுகளில் ஈராக் ஈரான் போரின் போது சிறுவர்கள் பெருமளவில் போரில் ஈடுபடுத்தப்பட்டதாக வரலாறு சொல்கிறது. கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கும் நிலங்கள் வழியாக சிறுவர்களை அனுப்பி சோதிப்பதும், அவர்களை போரில் வலுக்கட்டாயமாக நுழைப்பதும் என அரசுகள் சிறுவர்களை கொடுமைப்படுத்தின. சுமார் மூன்று இலட்சம் குழந்தைப் போர் வீரர்கள் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
இவர்களில் பலர் இறந்து, பலர் காயமுற்றும் தங்கள் வாழ்வின் மகத்துவமான பகுதியை இழந்துவிட்டனர் என்பது வேதனையான செய்தி. பல இயக்கங்கள் சிறுவர் சிறுமியரை போதைக்கு அடிமையாக்கி போரில் ஈடுபடச் செய்வதுண்டு. உள்ளூரிலேயே தேர்தல் காலங்களில் சிறுவர்கள் பல்வேறு விதமான அரசியல் வேலைகளில் ஈடுபடுத்தப் படுகிறார்கள், அதை அரசும் கண்டு கொள்வதில்லை.
சர்க்கஸ் போன்ற இடங்களில் சிறுவர் சிறுமியர் சாகசங்கள் செய்தும், கழைக்கூத்தாடிகளாகியும் வேலை செய்கின்றனர்.
இவை தவிர குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் சர்வதேச அளவில் கவலைக்குரிய ஒன்றாகவே மாறிவருகிறது. பாலியல் தொழிலில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது தான் சமுதாயத்தின் மிகப்பெரும் அவமானம் எனக் கருத வேண்டும். குறைந்த பட்ச பணத்திற்காக மழலைகளின் எதிர்காலத்தை பாலியல் பயங்கரத்துக்குப் பலியிடுவதில் பல பெற்றோரே உடந்தையாய் இருக்கிறார்கள் என்பது உறைய வைக்கும் உண்மை.
சமீபத்தில் இந்தியாவில் ராஜமுந்திரி என்னுமிடத்தில் பெற்றோர்களே பிள்ளைகளை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய செயலை cnn-ibn வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து இலட்சம் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள். யூனிசெஃப் கணக்கெடுப்பு, சுமார் ஒரு இலட்சம் குழந்தைப் பாலியல் தொழிலாளர்கள் ஒவ்வோர் இரவும் பத்து முறை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று கூறி பதை பதைக்க வைக்கிறது. இந்தக் குற்றங்கள் பெரும்பாலும் வழக்குகளாகப் பதிவு செய்யப்படுவதில்லை என்பது கவனிக்கப்படத் தக்க ஒன்று. பதினெட்டு வயதிற்குட்பட்ட சிறுமிகளில் ஐவரில் ஒருவர் ஏதோ ஒருவித பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்பது அதிர்ச்சித் தகவல்.
நோய்டா கொலையும், இந்தியாவின் பெருநகரங்களில் அடிக்கடி நடக்கும் குழந்தைகள் கடத்தலும், கொலையும் எல்லாமே குழந்தைகள் மீதான பாதுகாப்பு உணர்வு ஒரு சமூக உணர்வாக மாற வேண்டியதன் அவசியத்தைப் பறை சாற்றுகின்றன.
பண்டைக்காலங்களில் விவசாயத்தை நம்பியே வாழ்ந்த குடும்பத்தினர் தங்கள் குழந்தைகள் கல்வியறிவு பெறுவதைவிட அனுபவ அறிவு பெறுதல் சிறந்ததென்று விவசாயத்தில் ஈடுபடுத்தினர். அதை அவர்கள் குழந்தைத் தொழிலாகப் பார்க்கவில்லை. குடும்பத்திற்குத் தேவையான பணியாகவே கருதினார்கள். பின் காலம் செல்லச் செல்ல மாறிவரும் சூழலுக்கும், அமைப்புக்கும் ஏற்ப குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளும் மாறின.
நேபாளத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவில் உள்ளனர். சுமார் அறுபது சதவீதத்துக்கும் மேலான குழந்தைகள் இங்கே விவசாயம் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அகதிகளாக சொந்த நாட்டை விட்டு வெளியேறி பிற இடங்களில் குடிபெயரும் மக்கள் பெரும்பாலும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பரிதாப நிலையையே கொண்டுள்ளனர். மெக்சிகோ போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களும் இந்த நிலைக்கே தள்ளப்படுகின்றனர்.
குழந்தைத் தொழிலாளர் நிலை இன்று வளரும் நாடுகளில் மட்டுமே பெருமளவில் இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். வறுமையே இதன் முதன்மைக் காரணமாகச் சொல்லப்படுவதனால் அதற்குரிய மாற்று ஏற்பாடுகளை குடும்பங்களில் செய்யாமல் குழந்தைத் தொழிலை அறவே ஒழிப்பது சாத்தியமில்லை. சட்டங்களினால் குழந்தைகளை வேலைக்கு வருவதை நிறுத்தும் அதே நேரத்தில் அந்த குழந்தைகளுக்குக் கல்வியை அளிப்பதற்குரிய வசதிகளையும் அரசு செய்தல் அவசியம்.
நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் குழந்தைத் தொழிலாளர்கள் நிறைய பேர் இருந்த யூ.கே போன்ற பல மேலை நாடுகள் இன்று முழுவதும் அதிலிருந்து விடுபட்டு விட்டன. அதற்கு சட்டங்களும் அரசின் தொலைநோக்குப் பார்வையுமே காரணம் எனலாம்.
யூ.கேவில் குழந்தைப் பராமரிப்புக்கு ஏராளம் நலத் திட்டங்கள் உள்ளன. தாய்மை நிலையிலுள்ளவர்களுக்கு, குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு, தத்து எடுத்துக் கொண்டவர்களுக்கு என பல சலுகைகள் உள்ளன. பெற்றோருக்கு வரிகுறைப்பு , குழந்தை பராமரிப்பு நிதி என பல அமலில் உள்ளன.
தாய்மை நிலையில் உள்ளவர்களுக்கு முப்பத்தொன்பது வாரங்கள் வரை அரசே உதவி செய்கிறது. மருத்துவ செலவுக்காக சுமார் நாற்பதாயிரம் ரூபாயை யூ.கே அரசு குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அளிக்கிறது.
குழந்தையின் பதினாறு வயது முடியும் வரைக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தை நலத் திட்ட உதவிகளை அரசு செய்கிறது. கல்வி கற்றுக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு 20 வயது வரை அரசு உதவி செய்கிறது. குறைந்த வருமானம் உடைய பெற்றோரின் குழந்தைகளுக்கு உணவு, பள்ளிச் சீருடை, கட்டணம் முதலியவற்றை அரசே செலுத்துகிறது. குழந்தைகளைப் பராமரிக்கும் பாதுகாவலர்களுக்கும் அரசு பல சலுகைகள் நல்குகிறது.
பிரான்ஸ் அரசும் பல்வேறு நலத்திட்டங்களை குழந்தை நலனுக்காய் நல்குகிறது. தாய்மார்களின் மருத்துவச் செலவு, பெற்றோருக்கு உதவித் தொகை, கல்வித் தொகை தவிர ரெயில்வே போன்ற இடங்களிலும் 40 விழுக்காடு குறைந்த கட்டணத்தின் இருபது வயது வரை உள்ளவர்கள் பயணிக்க வகை செய்கிறது. வளர்ந்த நாடுகளில் அமலில் உள்ள இதுபோன்ற நலத்திட்டங்கள் அங்கே குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்துவிட்டது.
நெதர்லாந்து நாட்டில் 1900ல் ஆறாம் வயது முதல் பன்னிரண்டாம் வயது வரையுள்ள சிறுவர் சிறுமியருக்குக் கல்வி கட்டாயமாக்கப் பட்டது. முதலில் வெற்றி பெறாமல் இருந்த இந்த திட்டம் அரசின் தீவிர கண்காணிப்பினாலும், அதற்கென நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளினாலும் வெற்றியடைந்தது. முதலில் வெறும் 9 விழுக்காடு சிறுவர் சிறுமியர் மட்டுமே கல்விக்கு அனுப்பப் பட்டனர்.
அதன்பின் 1969ம் ஆண்டு ஆறாம் வயது முதல் பதினைந்தாம் வயது வரை கட்டாயக் கல்வி எனும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது மேலும் திருத்தப்பட்டு 1975ம் ஆண்டு ஆறு முதல் பதினாறுவயது வரை என்று நிர்ணயிக்கப்பட்டது.
பெல்ஜியம் நாட்டிலும் 1914ல் ஆறு வயதுமுதல் பன்னிரண்டு வயது வரை கட்டாயக் கல்விமுறை அமலுக்கு வந்தது. அது வளர்ச்சியடைந்து 1983ம் ஆண்டில் ஆறு வயதுமுதல் பதினெட்டு வயதுவரை என்றானது. பிரிட்டனிலும் 1857க்கு முன் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வியறிவற்றே இருந்தார்கள். ஆனால் இன்றைய நிலமையோ வியப்பூட்டுகிறது.
ஒருங்கிணைந்த நாடுகளின் கூட்டமைவு 1989ம் ஆண்டு ‘குழந்தைகளின் உரிமை’ பற்றிய ஒப்பந்தம் ஒன்றை இட்டன. அதன் படி சிறுவர்களுக்கு 52 உரிமைகள் இருப்பதாக அதில் வரையறுக்கப்பட்டுள்ளது. 189 நாடுகளில் இதுவரை அதில் கையொப்பமிட்டுள்ளன.
குழந்தைகள் குழந்தைத் தொழிலுக்கு ஈடுபடுத்தப்படாமலும், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளில் ஈடுபடவும், வீடுகளில் தங்கி வளரும் உரிமையையும், ஆரோக்கியமான வாழ்வுக்கு உரிமையுடையவர்களாகவும், கல்விக்கு உரிமையுடையவர்களாகவும், கருத்துச் சுதந்திரம் உடையவர்களாகவும், வன்முறைகளிலிருந்து காப்பாற்றப்படவேண்டியவர்களாகவும் குழந்தைகளை அந்த ஒப்பந்தம் சித்தரித்தது.
எளிய வேலையோ, கடினமான வேலையோ குழந்தைகள் தங்களுடைய வாழ்வின் அடிப்படையாகிய கல்வி போன்ற உரிமைகளை விட்டு விட்டு வேலை செய்வதே மனித உரிமைக்கு எதிரானதாகும் என்பதை அவை பல்வேறு ஒப்பந்தங்கள் மூலமாக வலியுறுத்தின.
மேலை நாடுகளில் 1851 ல் உருவாக்கப்பட்ட தொழிற்சாலை விதிகள் எட்டு வயதுக்குக் குறைந்தவர்களை வேலைக்கு வைப்பதை தடை செய்தது. தங்கச் சுரங்கம் போன்ற இடங்களில் வயது பத்து என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்பின் காலம் செல்லச் செல்ல அந்த வயது வரம்புகள் ஒத்துக் கொள்ள முடியாதவை என்று விலக்கிக் கொள்ளப்பட்டன. குழந்தைகள் வேலைக்குச் செல்வதே தவறு என்பது உணரப்பட்டது.
வீடுகளில் இருக்கும் புகைபோக்கிகளைச் சுத்தம் செய்வதற்காக பயிற்சி பெற்ற சிறுவர்கள் புகை போக்கிகளில் ஏறி சுத்தம் செய்வது மேலை நாடுகளில் முன்பு இருந்த வழக்கம். பல ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். புற்றுநோய் போன்ற பல நோய்களுக்கு இந்த சிறுவர்கள் ஆளாவதாகச் சொல்லி 1875ம் ஆண்டு அது தடை செய்யப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன் கூடிய ஒருங்கிணைந்த நாடுகளின் ‘மில்லேனியம் டெவலப்மெண்ட் கோல்ஸ்’ எனும் திட்டம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை முக்கியமான பிரச்சனையாகக் கையில் எடுத்துள்ளது. குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை ஒரு சமூக, இன, நாட்டுப் பிரச்சனை அல்ல எனவே அதை ஒரு சர்வதேசப் பார்வையில் பார்க்கவும், ஒழிக்கும் முயற்சிகள் எடுக்கவும் இந்த திட்டம் முயல்கிறது.
உலக குழந்தைத் தொழிலாளர்களில் 8 கோடி பேர் கடினமான ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. தெருவில் பிச்சையெடுத்து அலையும் சிறுவர்கள் ஆப்பிரிக்காவில் மட்டும் 10 இலட்சம் பேர் இருக்கின்றனராம்.
ஒரு குடும்பத்தின் வருமானத்தில் எட்டு முதல் பன்னிரண்டு விழுக்காடு வரை குழந்தைகள் சம்பாதிப்பதாகவும், இதனால் குழந்தைத் தொழிலின் முக்கியமான அம்சமாகக் கருதப்படுவது குடும்ப சூழல் என்றும் யூனிசெஃப் தெரிவிக்கிறது.
சமூகத்தின் வேர்களில் கரையானாக அரித்துக் கொண்டிருக்கும் இந்த சிறுவர் தொழில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து மனிதநேயமும், தொலை நோக்குப் பார்வையும், சமூக அக்கறையும் கொண்ட எவருக்கும் இருக்கப் போவதில்லை. இதை ஒழிக்க முக்கியத் தேவை என்ன ? கல்வி !
கல்வியைக் கட்டாயமாக்கும் எந்த ஒரு மாநிலமும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாகத் திகழ்கிறது கேரள அரசு. மத்திய அரசு கல்விக்கென ஒதுக்கும் நிதியை விட அதிகமாக சுமார் 12 சதவீதம் அளவுக்கு கேரள அரசு ஆரம்பக் கல்விக்கு ஒதுக்கியதால் இன்று கல்வியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாய் திகழ்கிறது. அங்கே குழந்தைத் தொழிலாளர்களே இல்லை எனலாம். அப்படி யாரேனும் தென்பட்டால் அவர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாய் இருப்பார்கள்.
கல்விக்கூடத்திற்கு குழந்தைகளை அனுப்பும்போது தற்காலிகமாய் தடைபட்டுப் போகும் குடும்ப வருமானம் எதிர்காலத்தில் ஒரு குடும்பத்தின் எழுச்சிக்கே அடித்தளமாக அமைகிறது என்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கல்வியறிவு பெறாமல் சிறு சிறு வேலைகளில் ஈடுபடும் சிறார்கள் தாங்கள் சூழ்ந்திருக்கும் மக்களின் பழக்கங்களைக் கற்றுக் கொண்டு விரைவிலேயே சமூக விரோத செயல்களைச் செய்யவும், தன்னை வாழவைக்காத சமூகத்தின் மீது வன்முறைக் கோபம் கொள்ளவும் பழகிவிடுகிறார்கள்.
2015ம் ஆண்டிற்குள் ஏழு வயதுமுதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்டுகளில் அனைவருக்கும் கட்டாயக் கல்வி வழங்கப்படும் என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இந்த சர்வதேசத் திட்டம் செயலாக்கம் பெற்றால் பல பின் தங்கிய நாடுகளின் வளர்ச்சிக்கு அது அடித்தளமாக அமையும்.
கல்வி அளிக்க முடியாத சூழலில் குழந்தைகளை வேலை செய்வதைத் தடுப்பதில் அர்த்தமில்லை. அவர்கள் வெறுமனே இருந்துவிட முடியாது வாழ்க்கைக்குரிய சூழல் அவர்களுக்காய் அமைக்கப்பட வேண்டும். இன்று பல நாடுகளில் குழந்தைத் தொழிலாளர் நிலைக்கு ஆண் பெண் ஏற்றத் தாழ்வும் ஒரு காரணமாக இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
எகிப்து, ஜிம்பாவே போன்ற நாடுகளில் அதிக அளவில் துவங்கப்பட்ட ஆரம்பப் பாடசாலைகளினால் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1997க்குப் பிறகு பெருமளவுக்குக் குறைந்திருக்கிறது.
குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அளிப்பதும், அந்த கல்வியைக் குழந்தை பெறுவதற்குரிய வாகன வசதிகளை செய்வதும் என உலக நாடுகள் பலவும் இப்போது குழந்தைத் தொழிலை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. தென்கொரியா, தைவான் போன்ற நாடுகளில் பெரும்பாலானோர் கல்வியறிவு பெறும் நிலை இன்று உருவாகியுள்ளது.
குழந்தைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்புவதால் குழந்தைகளின் கல்விச் செலவும், அந்த குழந்தையினால் வந்து கொண்டிருந்த வருமான இழப்பு எனும் இரட்டை இழப்பிற்கு குடும்பங்கள் தள்ளப்படுகின்றன. இதற்குரிய மாற்று வழிகளை குடும்பங்களும், அரசும் முன்னின்று செயல்படுத்த வேண்டும்.
வளர்ந்த நாடுகளில் குழந்தைகள் வேலைக்குச் செல்தல் என்பது ஒன்று முதல் இரண்டு சதவீதம் மட்டுமே. அது வளரும் நாடுகளைப் பொறுத்தவரையில் இருபதை எட்டுகிறது. காரணம் வளர்ந்த நாடுகளில் காணப்படும் சட்டங்களின் செயலாக்கமும், விழிப்புணர்வும், சமூக அக்கறையுமே.
இந்தியாவில் தேசியக் குழந்தைத் தொழிலாளர் சட்டம் அமலில் உள்ளது. குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனே அந்த விவரங்களைக் காவல் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் மூவாயிரத்து முப்பத்தெட்டு பள்ளிக்கூடங்கள் உள்ளன. தமிழகத்தில் 160 பள்ளிக்கூடங்களும், உத்திரப் பிரதேசத்தில் அதிக பட்சமாக 1075 பள்ளிக்கூடங்களும் உள்ளன.
உத்திரப்பிரதேசத்தில் தொழிலாளர் துறைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தான் சிறுவயதில் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப் பட்டதாகவும் அதை மறுத்து கல்வியே முக்கியம் என கைக்கொண்டதால் இன்று உயர் நிலையில் இருப்பதாகவும் சொல்லியிருப்பது குழந்தைத் தொழிலாளர் முறை எத்தனை உயரதிகாரிகளை முளையிலேயே கொல்கிறது என்பதைச் சொல்கிறது.
இந்தியாவில் குடும்பத்தாரால் நடத்தப்படும் தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை அரசு தடை செய்யவில்லை. எனவே பெரும்பாலான கிராமப்புறங்களில் சொந்த நிலத்தில் பணிசெய்யும் நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.
ஏராளம் சட்டங்கள் எழுத்து வடிவில் இருந்தும் இன்னும் நம் நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை ஏன் முற்றிலும் ஒழியவில்லை. ஒரு முக்கியமான காரணமாக தொழிற்சாலை நிறுவனத்தினர் கொடுக்கும் முட்டுக்கட்டை என்கின்றனர் விமர்சகர்கள். கம்பள ஆலை போன்றவற்றில் குழந்தைகளே பெருமளவில் வேலை செய்ய வைக்கப்படுகின்றனர். அரசு கண்டு கொள்வதில்லை !
குழந்தைத் தொழிலாளர் நிலைக்கு வறுமை மட்டுமே ஒரே காரணம் என்று சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலான கேள்விகளுக்கான விடைகள் பொருளாதாரம் சார்ந்ததாகவே இருக்கிறது. வறுமையுடன் சேர்த்து, பெற்றோர் வேலைக்குச் செல்ல இயலாத நிலையில் வயோதிகமாகவோ, ஊனமுற்ற நிலையிலோ இருத்தல், தாய் விதவையாக இருத்தல், பெற்றோர் குடி போன்ற போதைகளுக்கு அடிமையாய் இருத்தல் போன்றவையும் குழந்தைத் தொழிலாளர் நிலையை வளர்க்கின்றன.
மேலை நாடுகளில் நடைமுறையில் உள்ள சில பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டும். குறிப்பாக குழந்தைகளால் வரும் வருமானம் தடைபடும் குடும்பங்களுக்கு அரசு ஏதாவது நலத்திட்ட உதவிகள் வழங்குதல், நாடு முழுவதும் உள்ள குழந்தைத் தொழிலாளர்களை மீட்க காவல் துறையில் தனி குழு அமைத்தல், குழந்தைகளை வேலைக்கு அமர்த்துபவர்களை கடுமையாக தண்டித்தல், கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தைத் தொழிலாளர் நிலைக்கு இன்னொரு காரணமாக படிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் எனும் நம்பகத் தன்மை இன்மையையும் குறிப்பிடலாம். பொறியாளர் தேர்வு முடித்தவர்களில் அறுபது விழுக்காட்டினரும், எம்.பி.எ படித்தவர்களில் எழுபத்தைந்து விழுக்காட்டினரும் இன்று வேலையின்றி அலைவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை எந்த வகையிலும் கல்வி கற்க வேண்டும் என்னும் ஆர்வத்தை ஏற்படுத்தப் போவதில்லை. நம்பகத் தன்மையை அரசு உருவாக்க வேண்டும்.
கடனுக்காகவும், முன்பணத்துக்காகவும் கொத்தடிமைகள் போல உழைக்கும் சிறுவர்கள் பலர் பட்டாசு ஆலைகளில் உள்ளனர். இவர்களுடைய உளவியல் ரீதியான பாதிப்பு சொல்லக் கூடியதல்ல. கொத்தடிமை நிலையிலிருந்து மீட்கப்படும் சிறார்கள் அடைக்கப்படும் மறுவாழ்வு மையங்களின் நிலமையோ, சீர்திருத்தப் பள்ளிகளின் நிலமையோ கொத்தடிமை நிலையை விடப் பரிதாபம். மாதம் எட்டு ரூபாய் கூட இல்லை என்று அதிர்ச்சிச் செய்தி அளிக்கின்றன ஊடகத் தகவல்கள்.
2002ம் ஆண்டு மத்திய அரசு 2007க்குள் அனைவருக்கும் ஆரம்பக் கல்வியைச் சாத்தியமாக்குவோம் என்று சூளுரைத்து சர்வ சிக்ஸா அபிமன் என்றொரு திட்டத்தைத் துவங்கியது. இப்போது ஆண்டு 2007 ! நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நாமறிவோம்.
குழந்தைத் தொழிலாளர் நிலை என்பது ஏதோ சில இடங்களில் நிலவி வரும் பிரச்சனையல்ல. இது ஒட்டு மொத்த சமூகத்தின் மீதான களங்கமும், உலக அரங்கில் நமது தேசத்தின் மீது சுமத்தப்படும் அவமானமும் என்பதை அனைவரும் உணரவேண்டும். பிரச்சனைகளை களையெடுக்க அரசும், அதிகாரிகளும் முயற்சி எடுக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு உறுதுணையாய் நாம் இருக்கவேண்டியது நம் தார்மீகக் கடமை என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்

லேபிள்கள்:

தமிழ் மொழியை பாதுகாப்பது தமிழர் ஆகிய எமது கடமை

தமிழ் இனி மெல்லச் சாகும் என்று பாரதி உரைத்தது உண்மைதானா? அச்சிடும் ஆப்செட் போன்ற எந்திரங்களின் வருகையால் தமிழ் இனி மெல்ல அச்சாகும்.

சுவைக்கத்தக்கது இந்தச் சொல்நயம். கணினித் தட்டச்சு, ஒளிக்கதிர் அச்சு என்றெல்லாம் வந்துள்ள இன்றைய சூழலில் இந்தச் சொல்நயம் பொருத்தமாகவும் இருக்கிறது.

அண்மையில் வெளியான ஒரு செய்தி: ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) உலகில் வேகமாக அழிந்துவரும் மொழிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. தற்போதைய நிலைமை நீடிக்குமானால் அடுத்த ஐம்பதாண்டுகளில் தமிழும் இப்பட்டியலில் இடம்பெறும் என்றும் யுனெஸ்கோ கூறியுள்ளது.
இந்தச் செய்தி ஏற்படுத்துகிற ஆழ்ந்த தாக்கத்தில் மேற்படி சொல்நயத்தைச் சுவைக்க முடியவில்லை. தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற ஓலம் உண்மைதானோ என்ற கவலை சூழ்கிறது.

தமிழ் மக்களின் ஆங்கில மோகம்; சந்துக்குச் சந்து ஆங்கிலப் பள்ளிகள் திறப்பு; ஊடகங்களின் அலட்சியம்; அரசாங்கத்தின் அக்கறையின்மை... என்றெல்லாம் காரணங்கள் கூறப்படுகின்றன. கவிதைக்கும் காதல் கற்பனைக்கும் ஏற்ற தமிழ் இன்றைய கணினிக்கும் நவீன தொழில் வளர்ச்சிக்கும் ஈடுகொடுப்பதாய் இல்லை என்று கூறுவாரும் உண்டு. மாறிய சூழல்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாத எந்தவொரு மொழியும் அழிந்து வரும் அரிய மொழிகள் பட்டியலில் இடம்பெறுவது தவிர்க்க இயலாதது என்ற ஒரு வாதமும் வைக்கப்படுகிறது.

தமிழ் குறித்து உணர்ச்சிவசப்பட வைக்கும் எண்ணங்கள் ஊட்டப்பட்ட அளவுக்கு, அதன் வளர்ச்சிக்கான சிந்தனைகள் வளர்க்கப்படவில்லை, செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு, என்பன போன்ற வீர முழக்கங்கள் எந்த அளவுக்கு மொழியின் மேம்பாட்டிற்கு வழி வகுத்தன என்ற கேள்வியை இப்போதாவது எழுப்ப வேண்டியிருக்கிறது. இப்படியெல்லாம் முழங்காமலே தமிழின் பாதையைச் செப்பனிட முன்வந்தவர்கள் மொழிப்பற்றில்லாதவர்கள் என்று முத்திரையிடப்பட்டார்கள். இன்று கணினி மெல்லியத்திலும் இணையத்தளத்திலும் தமிழை உலாவரச் செய்தவர்களில் பலர் இப்படியான முழக்கங்களை எழுப்பாதவர்கள்தான்.

மக்களிடையே ஆங்கில மோகம் வளர்ந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லைதான். பல இனங்களைச் சேர்ந்த மக்களும் ஒரு இடத்தில் கூடியிருப்பார்களானால் எல்லோரும் இயல்பாக அவரவர் தாய்மொழியில்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். அங்கே ஆங்கிலம் தாய்மொழியல்லாத ஒரு இனத்தைச் சேர்ந்த இருவர் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருப்பார்களானால் அவர்கள் தமிழர்களாகத்தான் இருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். மற்றவர்களுக்குத் தெரியக்கூடாத ரகசியத்தை அவ்வாறு வேறு மொழியில் பேசிக்கொள்கிறார்கள் என்றாலாவது புரிந்துகொள்ளலாம். ஆனால் காலையில் என்ன சாப்பிட்டாய் என்பது போன்ற பேச்சுக்களைக் கூட ஆங்கிலத்தில் நிகழ்த்துகிறார்கள்!

இந்த மோகத்தை முதலீடாக்கித்தான் சிகரெட் கடைகள் போல் ஆங்கில வழிப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வீட்டிலும் வீதியிலும் பேசுகிற மொழி ஒன்றாக இருக்க இப்படி மூளையில் திணிக்கப்படுகிற இன்னொரு மொழியால் உண்மையான முன்னேற்றம் காண முடியுமா? தமிழர்கள் எத்தனை பேர் நவீன அடிமைகளாக எத்தனை வெளிநாட்டு நிறுவனங்களில் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் அலுவலர்களாகவும் வேலைசெய்கிறார்கள் என்பது தமிழ்ச்சமுதாயம் முன்னேறியதன் அடையாளமாகுமா?

அறிவியல் உண்மைகளைப் பயன்படுத்தி சாதனைகள் செய்கிற தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் அறிவியல் உண்மைகளைக் கண்டுபிடிக்கிற தமிழர்கள் இல்லை அல்லது மிகமிகக் குறைவாகவே இருக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் அவர்கள் அறிவியலைத் தாய்மொழியில் கற்கவில்லை, மொழிபெயர்ப்பின் மூலமாகவே கற்றார்கள் என்பதுதான். ஆங்கிலத்தில் ஒன்றைச் சொல்கிறபோது மூளை நேரடியாக அதை ஆங்கிலத்தில் யோசித்துச் சொல்வதில்லை, தமிழில் யோசித்துப் பிறகு மொழிபெயர்த்தே சொல்கிறோம். அதே போல் ஆங்கிலத்தில் ஒன்றைக் கேட்கிறபோது தமிழில் மொழிபெயர்த்தே புரிந்துகொள்கிறோம். எவ்வளவுக்கெவ்வளவு விரைவாக இந்த மொழிபெயர்ப்பை ஒருவரது மூளை செய்கிறது என்பது அவரவருக்குக் கிடைக்கிற பயிற்சியையும் வாய்ப்பையும் பொறுத்தது. இவ்வாறு மூளை இரட்டை வேலை செய்வது தேவையற்ற சுமை. அதனால்தான் தமிழர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகமாக இல்லை. இத்தகைய நிலைமை உள்ள எல்லா இன மக்களுக்கும் இது பொருந்தும். இவ்வாறு மூளைக்கு இரட்டை வேலை கொடுப்பது தமிழ் மக்கள் தாங்களாகவே ஏற்றுக்கொண்டதா அல்லது ஏற்றப்பட்டதா?

ஆங்கிலத்தில் படித்தால்தான் நல்ல வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தை ஏற்றியதில் அரசாங்கத்திற்குப் பங்கில்லையா? வேலைவாய்ப்புகளை உருவாக்காத தொழிற்கொள்கைக்கும் இதற்கும் தொடர்பில்லையா?
தமிழக அரசின் சட்டங்களும் ஆணைகளும் இப்போதும் ஆங்கிலத்தில்தான் தயாரிக்கப்படுகின்றன. பின்னர்தான் தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்றெல்லாம் மைக் தெறிக்கப் பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் இந்திய மொழிகளில் ஒன்றாகிய இந்தி திணிக்கப்படுவதைத் தடுத்தார்கள். ஆனால் அங்கே தமிழ் ஆள்வதற்கு வழிசெய்யவில்லையே! ஆங்கிலத்தின் ஆதிக்கத்திற்குத்தானே ரத்தினக் கம்பளம் விரித்தார்கள்! இன்றோ எங்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் பாடங்களும், இந்தி வகுப்புகளும் அமோகமாக நடக்கின்றன.

இதில் இந்தியாவின் மைய ஆட்சியாளர்களது பங்கு குறைந்ததல்ல. சொல்லப்போனால் அதுதான் மையமானது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிற சட்டங்கள், தீர்மானங்கள் யாவும் முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதப்படுகின்றன. பின்னர்தான் இந்தியில் - இந்தியில் மட்டும் - மொழிபெயர்க்கப்படுகின்றன. பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகிற மக்கள் பிரதிநிதிகள் ஆங்கிலம் அல்லது இந்தி தெரிந்திருந்தால் மட்டுமே விவாதங்களில் பங்கேற்க முடியும். இந்தி மாநிலங்கள் அல்லாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் தாய்மொழியில் பேச முன்னனுமதி பெற வேண்டும். அமைச்சர்களுக்கோ அந்த அனுமதியும் கிடையாது.
யாரும் அவரவர் மொழியில் பேசலாம், அதை மற்றவர்கள் அவரவர் மொழியில் கேட்கலாம் என்ற மொழிபெயர்ப்பு வசதியை நாடாளுமன்றத்தில் நிறுவுவது குறித்து மைய ஆட்சியாளர்களும் கவலைப்படவில்லை; மாநிலங்களில் மொழி உரிமை குறித்து நரம்பு தெரிக்கப் பேசி வந்தவர்களும் அலட்டிக்கொள்ளவில்லை. இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், நாடாளுமன்றத்தில் இவ்வாறு நொடிப்பொழுதிலேயே மொழிபெயர்க்கும் ஏற்பாட்டைச் செய்வது கடினமல்ல. வேடிக்கை என்னவென்றால், இந்த அடிப்படை மாற்றத்திற்கான கோரிக்கையை வலியுறுத்துகிறவர்கள், மொழிப்பற்று இல்லாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட மார்க்கியவாதிகள்தான்!

மைய அரசு மாநிலங்களுக்கு அந்தந்த மொழியிலேயே அறிக்கைகளையும் கடிதங்களையும் அனுப்ப வேண்டும்; மாநில அரசுகள் தத்தம் மொழியிலேயே மையத்திற்கு அறிக்கைகளையும் கடிதங்களையும் அனுப்ப வேண்டும். அந்தந்த மட்டத்தில் இவற்றை உடனுக்குடன் மொழிபெயர்த்துக்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதுவே தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளை மைய அரசு சமமாக மதிக்கிறது என்பதற்கான உறுதிப்பாடாக இருக்க முடியும்.
இதையும் மார்க்சியவாதிகளன்றி வேறு யாரும் வலியுறுத்துவதில்லை. சட்டங்கள், ஆணைகள் ஆகியவற்றின் உண்மைகள் மக்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதில் ஆள்வோரும், அதிகார வர்க்கமும், இவர்களை ஆட்டுவிக்கும் சக்திகளும் கவனமாக இருக்கிறார்கள் என்பதுதானே இதன் பொருள்?

நீதிமன்றத்தில் தமிழ், நிர்வாகத்தில் தமிழ், உயர் கல்வியில் தமிழ் என்ற கோரிக்கைகள் இதுவரை மைய அரசாலும் மாநில அரசாலும் குப்பைத் தொட்டிக்குத்தான் அனுப்பப்பட்டு வருகின்றன. மாநில அரசைப் பொறுத்தவரை வர்த்தக நிறுவனங்கள் பெயர்ப் பலகைகளைத் தமிழில் அமைக்க வேண்டும், அலுவலர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்பன போன்ற மேம்போக்கான ஆணைகளை அவ்வப்போது வெளியிடுவதோடு சரி. மேற்கூறிய அடிப்படை நடவடிக்கைகளுக்குத் தயாராக இல்லை.

இப்படியாகத்தான், தமிழிலேயே பயின்றால் உள்ளூரிலேயே முடங்கிவிடவேண்டியிருக்கும் என்ற அச்சம் மக்கள் மனங்களில் குடியேற்றப்பட்டது. அவையத்தில் தம் மக்கள் முந்தியிருக்கச் செய்ய வேண்டும் என்ற நியாயமான ஆசை உள்ள பெற்றோர், அவரவர் பொருளாதார வசதிக்குத் தக்கபடி ஆங்கில வழிப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்துக் குழந்தைகளை அனுப்புகிறார்கள். ஆம், இந்த ஆங்கில மோகம் என்பதே கூட வலுக்கட்டாயமாக ரத்தக்குழாயில் ஏற்றப்பட்ட போதை மருந்து போன்றதுதான்.

தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற அச்சத்திற்கு இதையெல்லாம் தாண்டிய வேறொரு காரணம் இருக்கிறது. அதுதான் இன்றைய உலகமய சந்தைப் பொருளாதாரம். சமூக அக்கறையோ, உரிமைகள் குறித்த விழிப்போ இல்லாத நவீன அடிமைகள்தான் தேவை என்கிறது இந்தச் சந்தை. அதற்கேற்ப இந்திய அரசு மண்டியிட்டு, நாட்டின் தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்கிறது. நிதிச் சட்டங்களை வளைத்துக்கொடுக்கிறது. அணு மின்சார உற்பத்திக்கான உடன்பாடுகளில், விபத்து ஏற்படுமானால் அதற்கான இழப்பீடு பொறுப்புகளிலிருந்து அமெரிக்க நிறுவனங்களை விடுவிக்கும் விதிகளுக்கு உடன்படுகிறது. இதன் இன்னொரு பகுதியாகத்தான் ஆங்கில ஆதிக்கத்திற்குக் கோட்டைக் கதவுகள் திறந்துவிடப்படுகின்றன.

எனது அன்றாட ரயில் பயணத்தில் ஐ.டி. செக்டார் எனப்படும் தகவல்தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்கள் பலரையும் காண்கிறேன். மடிக்கணினிகளை விரித்து வைத்துக்கொண்டு அவர்கள் உரையாடுவதைக் கவனிக்கிறேன். அந்தப் பேச்சில் ஜி.பி., பைட், மெகாபைட், ரெசல்யூசன், டிஜிட்டல்... என்ற அவர்களது தொழில்சார்ந்த சொற்களைத் தவிர வேறு எதையும் கேட்க முடிவதில்லை. ஒப்பீட்டளவில் உயர்ந்த ஊதியம் பெறுகிற அவர்கள் நாட்டின் அரசியல், சமூக நிலைமைகள் குறித்தெல்லாம் விவாதிப்பதையோ விமர்சிப்பதையோ கேட்க முடியவில்லை. சமுதாயத்தை விடுங்கள், இளைஞர்களுக்கே உரிய பாலின ஈர்ப்பு (அதாவது அவர்கள் சைட் அடித்த விவகாரங்கள்) சார்ந்த தகவல்களைக் கூட பரிமாறிக்கொள்வதில்லை! இப்படி வாழ்வியல் இயல்புகளிலிருந்தே துண்டிக்கப்பட்டுள்ள இவர்கள் தங்களது நிறுவனத்தில் நடக்கிற உழைப்புச் சுரண்டல் பற்றியோ, தொழிற்சங்க உரிமைகள் பற்றியோ பேசுவார்கள் என்று கற்பனை கூட செய்துபார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஒரு மெல்லிய வல்லுநர்களை வன்மையாய் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது உலகமயச் சுரண்டல்.

அரசியல் அதிகாரத்துடனோ, ராணுவ பலத்துடனோ அல்லாமல் இவ்வாறு அடிமைப்படுத்துவதற்கான நிதி முதலீடு, தொழில்நுட்பங்கள், எந்திரங்கள், வர்த்தக உடன்பாடுகள் போன்ற கருவிகளில் ஒன்றுதான் ஆங்கிலமும். அதுவும், முன்பு உலகத்தை அடக்கியாண்ட பிரிட்டிஷ் ஆங்கிலம் அல்ல; இன்று உலகத்தை ஆளாமலே அடக்க முயல்கிற அமெரிக்க ஆங்கிலம். இந்தியாவைப் பொறுத்தவரையில் இதன் தனித்தன்மையான சாதியப் படிநிலை ஏற்பாடு கூட நவீன உழைப்புச் சுரண்டலுக்கும், நவீன மூளைச்சலவைக்கும் உதவியாக இருக்கிறது. ஆகவேதான் சமூக நீதியை நோக்கிச் செல்வதற்கான இட ஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளை பிரம்மனின் தலையில் இருந்து பிறந்த வர்ணத்தவர் அல்லாத மற்ற மூன்று வர்ணத்தவர்களும் கூட எதிர்க்கிறார்கள். ஏன், வர்ண அடுக்கிற்குள்ளேயே சேர்க்கப்படாமல் வெளியே நிறுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளின் படித்த இளைஞர்களிடையே கூட, பள்ளிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்தினால்தான் சாதியை ஒழிக்க முடியும் என்பது போன்ற நுனிப்புல் சிந்தனைகள் பரவியுள்ளன. இப்படிப்பட்ட உலக - உள்நாட்டு நிலைமைகளிலிருந்து மொழி என்பதைப் பிரித்துக் கையாள முடியாது. யுனெஸ்கோ அமைப்பின் அறிக்கையில், தற்போதைய நிலைமைகள் நீடிக்குமானால் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் உலகில் அழிந்துவரும் மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம்பெற்றுவிடும் என்ற குறிப்பை, இந்த நிலைமைகளோடு இணைத்தே பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழ் இனி மெல்லச்சாகும் ஒரு பேதை உரைத்ததாக பாரதி பாடினான். உண்மையிலேயே அது பேதைமையான புலம்பலாகவே போய்விட வேண்டும், அழிந்துவரும் மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம்பெறுவதைத் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? உலக - உள்நாட்டுச் சுரண்டல் எதிர்ப்பு, சாதிய ஒழிப்பு போன்ற போராட்டங்களோடு இணைந்ததே மொழிப் பாதுகாப்புக்கான போராட்டமும். அடக்குமுறைகளுக்கும் துரோகங்களுக்கும் எதிராக ஆங்காங்கே ஒலிக்கும் குமுறல் ஒலிகள் இந்தப் போராட்டங்கள் பற்றிய நம்பிக்கையை விதைக்கின்றன. வர்க்கப் பிரச்சனை வேறு, வர்ணப் பிரச்சனை வேறு என்று பிரித்துவைத்து, ஒருங்கிணைந்த இயக்கத்தைத் தடம் மாற்ற முயல்வோர் குறித்த எச்சரிக்கையோடு மக்களை அணிதிரட்டினால் போராட்டம் வெற்றிபெறும். அந்த வெற்றியின் பலன்களில் ஒன்றாக தமிழ் இனி மெல்ல அச்சாகும் என்பது மட்டுமே நடப்பாகும்.

லேபிள்கள்: