புதன், 4 மே, 2011

பாலர் கல்வி என்பது முற்றிலும் உளவியல் மயப்படுத்தப்பட்ட கல்வி

பாலர் கல்வி என்பது முற்றிலும் உளவியல் மயப்படுத்தப்பட்ட கல்வியாக மாற்றுவகைப்பட்டதும், பன்முகமான செயற்பாடுகளை உள்ளடக்கியதுமான கல்வியாகக் கட்டியெழுப்பப்பட்டு வருகின் றது. இந்த அவதானிப்புக்களை உள்வாங்காது பாரம்பரியமான, நெகிழ்ச்சியற்ற வகுப்பறை மாதிரிகையினை இன்னமும் இறுகப்பற்றி நிற்றல் பொருத்தமற்றது.
சூழுலுடன் இடைவினைகளை விருத்தி செய்தல், சூழலை விளங்கிக்கொள்ளல், சூழலுடன் பொருத்தப்பாடு கொள்ளல். உடற் பலத்தைத் தனியாகவும் , கூட்டாகவும் பிரயோகித்தல், சமூக இசை வாக்கம் போன்ற கல்வியாற்றல்களை வளம்படுத்த அசைவுக் கல்வி க்கு பிரதியீடுகள் இல்லை. அசைவுகள் வாயிலாக ஆற்றல்கள் வெளிப் படுகின்றன, நெறிப்படுகின்றன. அனைத்துச் செயற்பாடுகளும் அசைவுகளும் தொடர்புடையன எழுதுதல், பேசுதல், பாடுகள் என்பவை நுண்ணிய அசைவுகளுடன் தொடர்புடையவை. உடலை இயக்கி உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் அசைவுகளே அடிப்படையாகின்றது. அழகியற் செயற்பாடுகள் அனைத்தும் அசைவுகளினாற் பிறப்பிக்கப்படுகின்றன.
உளவியலாளர் மட்டுமன்றி சமூக மானுடவியலாளரும் அசைவு கள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். பழங்குடி மக்களது சடங்கு களிலும், நடனங்களிலும், செயற்பாடுகளிலும், மரபுகளிலும் அசைவு கள் உன்னிப்பாக அவதானிக்கப்படுதல் குறிப்பிடத்தக்கது.
மேலை நாடுகளில், பாலர் பள்ளிகள் “விளையாட்டுப் பள்ளிகள்” (Pடயல ளுஉhழழட) என்ற அமைப்பையும் பெற்று வருகின்றன.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு