புதன், 4 மே, 2011

முன்பள்ளி கல்வியில் புலன் தழுவிய கற்றல் முக்கியத்துவம்

புலன் தழுவிய கற்றல்

கட்புலன்:

கற்றலை உள்வாங்கும் பலம் பொருந்திய புலன் உறுப்புக்களிற் கண் சிறப்பிடம் பெறும். வெறுமனே ஒரு நிழற்படக் கருவியின் செயல்களை மாத்திரம் கண்கள் புரியவில்லை. அறிகைச் செயல் முறையில் கண்கள் மூளையுடன் இணைந்து செயற்படுகின்றன.
வடிவங்கள், வண்ணங்கள் என்பவை கண்களால் உணரப்படு கின்றன. ஒளியின் நீள அளவுகளினாலே காட்சி தீர்மானிக்கப்படு கிறது. ஒவ்வொரு வண்ணமும் அவற்றைக்குரிய ஒளி நீளங்களைக் கொண்டிருக்கும்.
கட்புலச் செயற்பாடுகள் ஒளியின் செறிவோடு சம்பந்தப்பட்டி ருக்கும். முற்றான இருளில்;புலச் செயற்பாடு பூச்சியமாக இருக்கும். சிறி தளவு ஒளி பரவத் தொங்கியவுடன் கட்புலச் செயற்பாடு அரும்பத் தொடங்கிவிடும். கட்புலச் செயற்பாட்டினைப் பல காரணிகள் பாதிக்கின்றன. ஒரு பொருளின் உடனடிப் பின்னணியின் ஒளிச் செறிவு முக்கியமாகக் குறிப்பிடத்துக்கது. மென்பழுப்பு நிறப் பின் புலத்தின் மீது அமைந்த கரிய எழுத்துக்கள் நல்ல துலக்கமாகத் தெரி யும் படிக்கும் அறையின் முழுப்பகுதிகளிலும் ஒளி பரவியிருக்கு மாயின் கட்புலச் செயற்பாடு மேம்பாடு கொண்டதாக இருக்கும்.
சிறுவர்களின் கண் அசைவுகள், நிற்க்குருடு முதலியவை கட் புலன் தழுவிய கற்றலைப் பாதிக்கும். வாசிக்கும் பொழுது கண்கள் ஒரு தொடர்ச்சியான முறையில் அசைவதில்லை. வேகமான பாய்ச்ச லுடன் கண் அசைவுகள் இடம்பெறும். வேகமான பாய்ச்சலிடையே ஒரு நுண் செக்கனில் கண் ஓய்வெடுத்துக் கொள்ளும். இவை வாசிப்புத் திறனிலே செல்வாக்கினை ஏற்படுத்தும். ஒரே பார்வையில் உள்வாங்கக் கூடிய எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது வாசிப்பு வேகமும் வளர்ச்சியடையும்.

செவிப்புலன்:
ஒலியின் செறிவு, அதன் இயக்கவீச்சு, அடிப்படை சுருதி, பேசும் விகிதம் முதலியவை செவிப்புலன் தழுவிய கற்றலின் மீது செல்வாக் குச் செலுத்துகின்றன. ஒலி அலைகள் குறிப்பிட்ட அளவு மீடிறன் களையும் செறிவையும் கொண்டுள்ளன. ஒழுங்கற்ற முறையில் இடம்பெறும் பல்வேறு மீடிறன்களைக் கொண்ட ஒலி அலைகள் “இசைவற்ற சத்தங்கள்” என்று குறிப்பிடப்படும்.
காதிலுள்ள ஒலிப்பறைகள் மீது ஒலிபடும்பொழுது அதிர்வு ஏற்படுகின்றது. செவிப்பறைகளில் இருந்து உட்காதுக்கு ஒலி கடத்தப் படுகின்றது. அங்கிருந்து உடற்கூற்றியல் செயல் முறைகளினூடாக முளைக்கு ஒலிசார் உள்ளீடுகள் அனுப்பப்படுகின்றன. மிகவும் நுண்ணிதான ஒலிகளைச் செவிகளால் உணரமுடிவதில்லை. அவ் வாறே அதிஉயர் மீடிறன்களைக் கொண்ட ஒலிகளும் செவிகளினால் உணரப்படுவதில்லை. பொதுவாக நிமிடத்துக்கு இருபது தொடக்கம் இருபதாயிரம் மீடிறன்களை கொண்ட ஒலிகளை சாதாரணமான செவிகளால் உணரமுடியும்.
ஒலிகளின் குறுக்கீடு, ஒலிகளின் இசைவு, இசைவுப் பிறழ்வு என்பனவும் செவிப்புலன் தழுவிய கற்றலில் வேறுபடுத்திப் பார்க்கப் படவேண்டி யுள்ளன.
ஒலி எந்தத் திசையிலிருந்து வருகின்றது. எவ்வளவு தூரத்திலிருந்து வருகின்றது என்பவை பற்றிய உணர்வும் சிறுவர்களுக்கு முக்கிய மானவை.

முகர் புலன்:
காற்றுடன் செறிந்துவரும் மணங்கள் முகர்ந்து அறியப்படு கின்றன. நறுமணம், உப்புமணம், வெறுப்பு மணம் என்றவாறு அடிப்படை மணங்கள் வேறுபடுத்தப்படுகின்றன. மணங்களில் வேறு பாட்டுக்கேற்ப முகரும் செயல்முறையிலும் வேறுபாடுகள் காணப்படும். முகர்தலுடன் இணைந்து மனவெழுச்சிகள் தூண்டம் படுகின்றன. பொருந்தாத மணங்கள் சிறுவர்களுக்கு வெறுப்பை மட்டுமல்ல பயத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன. பல்வேறு மணங் களை இனங்காணக்கூடிய பயிற்சிகள் பாலர் பாடசாலைகளிலே அமைக்கப்படவேண்டியுள்ளன.

சுவைப்புலன்:
நாவிலுள்ள சுவைக்கலன்களினூடாக சுவைப்புலன் உணரப் படுகின்றது. உவர்ப்பு, புளிப்பு, இனிப்பு. கசப்பு ஆகியவை அடிப் படைச் சுவைகள் என்று குறிப்பிடப்படும். சுவைப்புலன் சார்ந்த உய்த்துணரும் பயிற்சி, வேறுபடுத்தும் பயிற்சி, தொடர்புபடுத்தும் பயிற்சி, பழக்கப் படுத்திக் கொள்ளும் பயிற்சி முதலியவற்றைப் பாலர் கல்வியில் வளர்த்தெடுத்தல் வேண்டும். முகர்புலனும், சுவைப் புலனும் ஒன்றிணைந்த வகையில் சிறுவர்களால் அனுபவிக்கப் படுகின்றன. சிறுவர் விரும்பாத சத்துள்ள உணவுகளுக்கு நறுமணம் ஊட்டி அவற்றிலே விருப்பத்தை ஏற்படுத்தலாம். உணவுப் பொருள் களின் வடிவமைப்பும், விநோதமான பெயர்களும் சிறுவர்களுக்கு உண்ணும் விருப்பத்தை ஏற்படுத்துவதால் அவற்றின் மீதும் கவனம் செலுத்துதல் வேண்டும்.

தோல் உணர்வுகள்:
தோல் உணர்வுகள் வழியாகவும் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டி யுள்ளது. தோற்பரப்பு முழுவதும் உணர்வுகள் சமமாக இருப்பதில்லை. சில பகுதிகளில் மீயுணர்வு நிலை காணப்படும். எத்தகைய அழுத்த நிலையில் தோல் உணர்வுகள் தூண்டப்படும் என்பதிலும் தோற்பரப்பில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. நாநுனி, உதடுகள், விரல்கள், கைகள் என்பவற்றில் மீயுணர்வு காணப்படும். கால்கள், இடுப்பு முதலியவை ஒப்பீட்டளவிற் குறைந்த அளவு தோல் உணர்வை வெளிப்படுத்தும்.
குத்தும் பொருள்கள், மென்மையான பொருள்கள், திண்மம், திரவம், களிப்பாங்கான பொருள், சூடு, குளிர், அழுத்தம் முதலியவை தோல் உணர்வுகளினால் அறியப்படுகின்றன. இத்துறைகளிலும் சிறுவர்களுக்குக் கற்றல் அனுபவங்களைக் கொடுத்தல் வேண்டும்.
புலன்கள் தழுவிய கற்றலும் கற்பித்தலும் சிறார் கல்வியிற் சிறப்பிடம் பெறுகின்றன.
விளங்கும் திறன் வளர்ச்சி

சூழலுடன் குழந்தைகள் மேற்கொள்ளும் இடைவினைகள் வாயிலாக செயற்பாடுகள் சார்ந்த திரளமைப்பு (யுஉவழைn ளுஉhநஅய) மூளையிலே வளர்த்தெடுக்கப்படுகின்றது. தன்மயமாக்கல், தன்மை வாக்கம் என்ற இரு இயக்கப்பாடுகளும் அனுபவங்களை உள்வாங் கிக் கொள்ள உதவுகின்றன.
சொல்சார்ந்த குறியீட்டாக்கத்துடன் விளங்கும் திறன் மேலும் வளர்ச்சியடைகின்றது. ஆனால் குழந்தைகளின் பிரச்சினைகள் சொல் சார்ந்த குறியீடுகளினால் மட்டும் அணுகப்படுவதில்லை. பாவனை செய்தல் பிரதிநிதித்துவம் செய்தல் முதலியனவும் விளங்கும் திறன் வளர்ச்சியோடு தொடர்புடையதாக இருக்கும்.
ஏற்கனவே உருவாக்கப்பட்ட திரளமைப்பை மீள்வடிவாக்கலு டன் விளங்கும் திறன் தொடர்புடையதாக இருக்கும் என்பது அறிகை உளவியலாளரின் கருத்து. அறிகையில் சொற்களுக்கு அதீத முக்கியத் துவத்தைக் கொடுப்போர் சொற்களின் வழியாகவே குழந்தை தனக் குரிய அனுபவங்களை உள்வாங்கிக் கொள்கின்றதென்றும் மீள் வடிவமைத்துக் கொள்கின்ற தென்றும் குறிப்பிடுகின்றனர். “பெரி யது” “சிறியது” போன்ற எண்ணக் கருக்களை சொல்சார்ந்த முறை யிலே குழந்தைகள் உள்வாங்கிக் கொள்ளுகின்றார்கள் என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. இந்த அடிப்படையிலிருந்து மேலும் சொல் சார்ந்த உள்வாங்கல்கள் இடம்பெறு கின்றன. “பெரிய பெட்டி” “சிறிய பெட்டி”, “பெரிய நீலநிறப் பெட்டி”இ “சிறிய பச்சை நிறப்பெட்டி” என்றவாறு உள்வாங்கி விளங்கும் திறன் சொற் கள் வாயிலாக முனைப்புப் பெறுகின்றது. சொற்கள், எண்ணக்கருக்களின் குறியீடுகளாக இருப்பதானால் இந்தப்பணி இலகுவாக்கப்படு கின்றது.
குழந்தைகளின் விளங்கும் உயிர் இரசாயனவியல் அடிப்படையி லும், நரம்பியல் அடிப்படையிலும் விளக்கப்படத்தக்கவை. இவை உள்ளார்ந்த நிலையில் நிகழும் உடற்கூற்றியல் மாற்றங்களாகவுள்ளன.
பொருள்களை வேறுபடுத்திக் காணும் ஆற்றல் குழந்தைப்பருவ விளங்கும் திறனில் முக்கியமாக வற்புறுத்தப்படுகின்றது. வேறுபட்ட வடிவங்களைக் காண்பதால் திரட்டப்படும் அனுபவத் தொகுதி, விளங்கும் ஆற்றலை வளப்படுத்துகின்றது. முரண்படும் வடிவங்கள் குழந்தைகளால் விரைந்து உள்வாங்கப்படுகின்றன. சில உதாரணங்கள் வருமாறு:
அ. மூடிய எழுத்தும் திறந்த எழுத்தும்
ழு - ஊ
ஆ. நேர்வடிவமும் தலைகீழ் வடிவமும்
ஆ - று
இ. நேர்கோடுகளும் வளை கோடுகளும்
டு - ழு
பொருள்களின் மேல் அதன் பெயரும் நிறமும் பதிந்திருக்கும் பொழுது, குழந்தைகள் அவற்றை இலகுவிலே விளங்கிக்கொள்கின்ற னர். உருவம், பின்புலம் என்பவற்றுக்கான தொடர்புகளையும், வேறு பாடுகளையும் தெரிய வைத்தல் குழந்தைப் பருவத்து விளங்கும் திறனை அதிகரிக்கச் செய்கிறது. இலைகளைப் பார்த்து வரையும்படி குழந்தைகளைக் கேட்கும் பொழுது, உருவம் பின்புலம் என்பவற் றைப் பிரித்தறியக்கூடிய குழந்தைகள், இலை நரம்புகளை நுட்பமாக வரைந்தார்கள்.
நிறங்களின் செறிவு, முரண்படும் நிறங்கள், நிறங்கள் மீது பெயர் பதித்தல், முதலியவை நிறங்கள் பற்றிய விளங்கும் திறனை அதிகரிக்கச் செய்கின்றன.
எண்பற்றிய அறிவு விலங்குகளுக்கு இல்லை. சேர்தல், இணைத் தல், திரட்டுதல், பிரித்தல், பகுத்துக் கொடுத்தல் முதலியவை குழந்தை களிடத்தே எண்பற்றிய எண்ணக்கருவை வளர்க்கத் துணைநிற் கின்றன.
விளங்கும் திறன் வளர்ச்சியை அனுசரித்தே சிறார் கல்வியைக் கட்டியெழுப்பவேண்டியுள்ளது

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு