புதன், 4 மே, 2011

பெருந்தோட்டப் பிள்ளைகளின் கல்வி பிரசினைகள்

நாட்டின் ஏனைய பிரிவு மக்கள் போலன்றி இவர்கள் கல்வி வரலாற்றில் மிகப் பிந்தியே கல்வித் துறையில் பங்கேற்றவர்கள். 1980 களில் தான் பெருந்தோட்டப் பாடசாலைகள் அரசால் பொறுப்பேற்கப்பட்டன. சுவீடன், உதவியுடன் இப்பாடசாலைகளின் அடிக்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. 1986 இல் 420 பாடசாலைகளைப் புனரமைக்கும் 12 ஆண்டு செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆயினும் 270 பாடசாலைகளின் மேம்பாட்டுக்குப் புதிய திட்டங்கள் தேவை.
பெருந்தோட்ட மக்களின் எழுத்தறிவு சதவீதம், கல்வி அடைவுக் குறிகாட்டிகள், இடைவிலகல் வீதம் என்பன தேசிய சராசிரியுடன் இணைந்து செல்லவில்லை.
இவ்வாறான பின்புலத்தில், வறுமை காரணமாகவும் சிறந்த பாடசாலைகள் இல்லாமையினாலும் பிள்ளைகள் பாடசாலை செல்வதைத் தவிர்க்கின்றனர். இப் பிரச்சினையை இனங்கண்ட குணவர்தனா குழுவானது, “சிரேஷ்ட இடை நிலை மட்டத்தில் பல்வேறுபட்ட பாடநெறிகளைக் கொண்ட பாடசாலைகள் பலவற்றை உருவாக்க வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளது.
மலையகப் பகுதிகளில் மேற்பார்வை மற்றும் முகாமைத்திறனுள்ள ஆளணியினரின் பற்றாக்குறையும் குழுவால் இனங்காணப்பட்ட ஒரு குறைபாடு. 2007 இல் கல்வி நிர்வாக சேவையில் காணப்பட்ட வெற்றிடங்கள் 120; சேவை கால ஆலோசகர் வெற்றிடங்கள் 160 இப்பதவிகள் யாவும் திறமையுள்ள அதிகாரிகளால் நிரப்பப்படல் வேண்டும் எனக் குணவர்தனா ஆலோசனை தெரிவித்துள்ளார்.
தெருவோரப் பிள்ளைகள்
உலகளாவிய ரீதியில் காணப்படும் இவ்வகையான பிள்ளைகள், கிராமப்புறங்களிலிருந்து தொழில் நாடி நகர்ப்புறங்களுக்கு வந்து சேரிகளில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், வீடில்லாத குடும்பம், பெற்றோரில்லாத பிள்ளைகள், குடும்பம் இருந்தும் அதனோடு தொடர்பற்ற பிள்ளைகள், போதை மருந்து விற்பனையாளர், யாசகர்களை வைத்து வேலைவாங்குவோர் ஆகியோரால் சுரண்டப்படும் பிள்ளைகள், பாதுகாப்பு இல்லங்களிலிருந்து தப்பியோடும் பிள்ளைகள் எனப் பலதரப்பட்ட “தெருவோரப் பிள்ளைகள்‘ இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குக் கல்வி உரிமை உட்பட பிள்ளைகளுக்கான சகல உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன.
இப்பிள்ளைகளின் பிரச்சினையைப் பற்றிச் சரியாக விளங்கிக் கொள்ளத் தேவையான தகவல் தளம் ஒன்றை ஏற்படுத்துதல், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இப்பிள்ளைகளின் பிரச்சினை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என்பன குணவர்தனா குழு வழங்கியுள்ள ஆலேசனைகளாகும்.
இலங்கை அரசு பின்தங்கிய மக்களின் கல்வி வளர்ச்சியில் கடந்த ஆறு தசாப்த காலத்தில் அக்கறை செலுத்திப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இன்னும் பல புதிய நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்பதையே குணவர்தனா குழுவின் ஆலோசனைகள் காட்டுகின்றன. எல்லாம் செய்து முடித்துவிட்டோம் என்றில்லாது பின்தங்கியவர்கள் கல்வியில் செலுத்தப்பட்டு வரும் அக்கறை ஆரோக்கியமானதாகும்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு