புதன், 4 மே, 2011

பாலர் கல்வியில் இசையாக்கல்

பாலர் கல்வி ஆசிரியர்கள் தமது மாணவர்களின் உள்ளத்தோடு உறவாடும் உளவியற் கடப்பாடு கொண்டவர்கள். இதனை ‘ஊhடைன ஆiனெநசள’ என்ற தொடர் தெளிவுபடுத்தும். இந்த உறவாடவில் ‘ஓசை’ சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றது. அவர்கள் அனுபவங்களோ டும், கற்பனைகளோடும் ஆக்க வெளிப்பாடுகளோடும், மனவெழுச்சி களோடும் உலா வருவதற்கு ஓசை நயமும், ஒத்திசைவும், ஒலிக் கோவைகளும் துணை செய்கின்றன.
பாலர் கல்வியில் இசையாக்கல், உடல் சார்ந்த ஒலிகளில் இருந்து ஆரம்பமாகின்றது. விரல்களால் சுண்டி ஒலி எழுப்புதல், உள்ளங்கை களைத் தட்டி ஒலி எழுப்புதல், துள்ளி ஒலி எழுப்புதல் முதலியன உடல்சார் ஒலி எழுப்புதலுக்கு உதாரணங்கள்.
எளிமையான ஒலிகளோடு இணைந்த உடலசைவுகள் ஒலி சார்ந்த ஆக்க வெளிப்பாடுகளுக்கு அடித்தளமிடுதலுடன் உடல், உள்ளம் , மனவெழுச்சி இணைப்புச் சுவடுகளையும் பலப்படுத்தும். ஒலிகளோடு இணைந்து வலம் திரும்புதல், இடம் திரும்புதல், வட்டமிடுதல், வடிவங்களை உருவாக்குதல், எழுத்துக்களை உருவாக் கல் என்றவாறு இணைப்புச் சுவடுகள் பலப்படுத்தல் பன்முகப்படும்.
மேற்கூறிய இசையாக்கலோடு இணைந்த முறையில் “இசை தழுவிய விளையாட்டுகள்” முன்னெடுக்கப்படும். இசையாக்கல், இசைகேட்டல் இரண்டும் ஒன்றையொன்று வலுவும் வளமும் படுத்தும். பாலர் கல்வியில் இசைகேட்டல் நன்கு திட்டமிட்டு வளர்க்கப்படல் வேண்டும். “வாய் சார்ந்த பன்முக இசையாக்கல்” இதற்குப் பக்கபலமாக அமையும். இதற்குரிய சில முன்மொழிவுகள் வருமாறு:
1. பறவைகள் போன்ற ஒலிகள்
2. விலங்குகள் போன்ற ஒலிகள்
3. மனிதப்பாங்கு ஒலிகள் - சிரித்தல், அழுதல், இருமுதல், மூசுதல், உரத்த குரல், தாழ்ந்த குரல் முதலியன.
4. வெளிக்கள ஒலிகள் - காற்றொலி, மழைஒலி, அலைஒலி, நீர்வீழ்ச்சி ஒலி முதலியவை.
5. உள்ளக ஒலிகள் - தொலைபேசி, மணிஒலி, தையற்பொறி ஒலி, கடிகார ஒலி முதலியவை.
பாலர் கல்வியில் இசைவாக்கல் மேலும் வளம் பெற “இசை ஓவிய இணைப்புப் பலம்” வேண்டப்படுகின்றது. இசைக்கு ஓவியம் தீட்டும் அனுபவம் உளவியற் சீராக்க உபாயமாக மட்டுமன்றி. உளக் கோல வெளிப்பாடுகளுடன் இணைந்த ஆக்கத்திறன் முயற்சிகளுக் குத் தூண்டுதலாகவும் அமையும்.
பாலர் பள்ளிக்கூடங்களில் இசைத் தொழில் நுட்பத்தையும் கட்டியெழுப்பவேண்டியுள்ளது. சூழலிற் கிடைக்கும் பொருள் களைப் பயன்படுத்தி இணக்கல் இசை உபகரணங்கள் செய்யும் திறன்களை மேம்படுத்த வேண்டியுள்ளது. சில முன்னெடுப்புக்கள் வருமாறு:

1. வட்டவடிவமான கொள்கலன்களைப் பயன்படுத்தி சிற்றொலி மேளங்களை உருவாக்குதல்.
2. உலோகத் துண்டுகளைப் பயன்படுத்தி கொங்கணங்கள் (புழபௌ) செய்தல்.
3. ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்பக்கூடிய சிலுப்பிகள் (துiபெடநள) செய்தல்
4. கொள்கலன்களுள் பரல்களை அல்லது உலோகத் துண்டு களை இட்டு அசையொலிப்பான்களைச் (ளூயமநசள)செய்தல்
5. மரத்துண்டு, சிறுதடிகள், எலும்புகள் முதலியவற்றைப் பயன்படுத்தி இருதள மோதல் உபகரணங்களை (ஊடயிpநசள)ச் செய்தல்.
6. துருவல் ஒலிச்சாதனங்களை (ளுஉசயிநச) ஆரை வடிவத் தட்டுக் களில் இருந்து உருவாக்குதல்.
மேற்கூறியவற்றோடு மேலும் நுண் உபாயங்களைப் பயன் படுத்தி நுண் ஒலிகளைப் பிறப்பிக்க முடியும். மென் தகடுகள் மீது காற்றழுத் தத்தைப் பிரயோகித்தல் வாயிலாக எழும் ஒலி, செப்புக் கம்பிகளைப் பயன்படுத்தி எழுப்பும் நரம்பு ஒலி, தண்ணீர்க் குவளை களைத் தட்டி எழுப்பும் ஒலி என்றவாறு பல்வேறு இயக்கல் முயற்சி களைப் பள்ளிக்கூடங்களிலே மேற்கொள்ளலாம்.
இசையாக்கத்தில் “ஒலி ஒழுங்குபடுத்தல்” ஓர் அடிப்படை ஆற்ற லாகும். யாதாயினும் ஓர் ஒலி அலகைத் தெரிந்தெடுத்து (உதாரணம் ஆ, ஏ, ஓ) அதனைக் குறுஒலி நீளத்திலிருந்து நீண்ட ஒலி நீளம்வரை ஒலித்துக் காட்டும்பொழுது ஒலி ஒழுங்குபடுத்தல் ஆற்றல்களையும், ஒலி இன்பதையும் மாணவர் பெறக்கூடியதாக இருக்கும்.
அ) இரண்டு அடுக்கு ஆ.
ஆ.
ஆ) மூன்று அடுக்கு ஆ.
ஆ.
ஆ.
மேற்காட்டியவாறு அடுக்குகளைத் தேவைக்கேற்றவாறு விரிவு படுத்தலாம். படிப்படியாக இரு வேறுபட்ட ஒலி அலகுகளை ஒழுங் கமைத்தல், வேறுபட்ட ஒலி அலகுகளை ஒழுங்கமைத்தல், பயிற்சி களை மாணவரின் முதிர்ச்சி நிலைகளுக்கேற்றவாறு வழங்கலாம். படிப்படியாக ஒலி அலகுகளை ஏறு நிரைப்படுத்தல், அதே அலகு களை இறங்கு நிரைப்படுத்தல் போன்ற பயிற்சிகளை செயல் பூர்வ மாக அறிமுகப்படுத்தல் பொருத்தமானதாகும்.
இசையாக்கல் உளவியலில் வேறுபட்ட ஒலிகளை ஒன்றிணைக் கும் “ஒலிக்கூடல்” (ளுழரனெ ஊழடடயபந) ஒரு முக்கியமான அனுபவமாகப் பாலர் கல்வியில் வலியுறுத்தப்படுகின்றது. வேறுபட்ட மிடற்றொலி களை ஒன்றிணைத்தல், வேறுபட்ட கருவிகளின் ஒலிகளை ஒன்றி ணைத்தல் என்ற அனுபவத்தில் மனவெழுச்சிச் சமநிலைகளுக்கு உயர்ந்த பயிற்சி தரப்படுகின்றது.
பாலர் பள்ளிகளில் நிகழும் இசையாக்கல் அனுபவங்க@டாக “காட்சி வடிவாக்கல்” மீது கவனம் செலுத்தவேண்டியுள்ளது. இசை யைக் காட்சிக் குறியீடாக்கும் பொழுது, அவை சிக்கலற்ற வகையில் மிக எளிதாக இருத்தல் வேண்டும். மெதுவாய் இசைத்தல், விரைவாய் இசைத்தல், மௌனித்து நிற்றல் முதலிய ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு வகை யான எளிய குறியீடுகளைப் பயன்படுத்தலாம்.
இசையாக்கலில் இன்னொரு பரிமாணம், இசை விளையாட்டா கும். இசை விளையாட்டுக்கள் சிறுவர்களின் உடலுக்கும், உள்ளத்துக் கும், மனவெழுச்சிகளுக்கும் சமகாலத்தில் அழகியல் நிலைப்பட்ட பயிற்சியைத் தருவதனதல் உளப்பிணிகளை நீக்கவல்ல வலிமையை அங்கே காண முடியும்.
சிந்தனையும் காரணங்காணலும்

நடத்தை அணுகு முறைகளின் மட்டுப்பாடுகள் தந்த உணர்வு களின் விளைவாக அறிகை உளவியல் வளர்ச்சியடையத் தொடங்கி யது. அறிகைச் செயல்முறை என்பது ஒன்றிணைந்தது. புலக்காட்சி, நினைவு, படிமவாக்கம், மொழி முதலிய அறிகை உள்ளீட்டுக் கூறுகள் இன்றி சிந்தனை நிகழமாட்டாது.
சிந்தனை என்பது மூன்று பரிமாணங்களைக் கொண்டது. சிந்தனை அறிகை பூர்வமானது. அது அறிகைத் தொகுதியின் தொழிற் பாடுகளைக் கையாளும் ஒரு செயல்முறையாக அமைகின்றது. அது ஒரு பிரச்சினையின் அமைப்பையும் தீர்வையும் நோக்கி நெறிப்பட்டு நிற்கின்றது.அளவையியல் சார்ந்த சிந்தனைக் கோலங்கள் காரணங் காணலாக இடம்பெறும்.
பாலர்களின் சிந்தனை, வளர்ந்தோரின் சிந்தனையிலும் பார்க்கப் பண்பளவில் வேறுப்பட்டது. அனுபவங்களை உள்ளார்ந்த வகை யாகக் கையாளலுடன் சிந்தனைச் செயல்முறை இணைந்துள்ளது. உள்ளார்ந்த அனுபவத்திரள் இடைவினைகள் காரணமாகத் தொடர் ந்து மாறிய வண்ணம் இருக்கும். இந்த இடைவெளியே வளர்ந் தோருக்கும் பாலர்களுக்குமிடையே சிந்தனையைப் பணப்பளவில் வேறுபடுத்துகின்றது.
மொழித்திறனோடு சிந்தனையும் காரணங்காணலும் மேலும் மேம்பாடு அடையும். எண்ணக்கருக்களைத் திரட்டிக் கொள்ளவும் குறியீட்டு விளக்கங்களை வளர்த்துக் கொள்ளவும் மொழி துணை செய்கின்றது. அனுபவப்படுதல், உளப்படிமங்களை ஆக்கிக் கொள்ளுதல், மொழிக் குறியீடுகளாக்குதல் தொடர்புகள் ஊடுருவி நிற்கின்றன.
தகவலின் அளவு அவற்றைக் கையாளக்கூடிய மூளையின் இயல்பு, உள்ளார்ந்த தந்திரோபாயம் ஆகியவை இடைவினை கொள் வதன் வாயிலாகவும், வளர்ச்சியடைவதன் வாயிலாகவும் சிந்தனை, காரணங்காணல் ஆகியவை விருத்தியடைகின்றன.
பாரம்பரிய உளவியல், குழந்தைகளை எதனையும் உள்வாங்கக் கூடிய தெறித்தல் அற்ற கொள்கலன்களாகக் கருதியது.ஆனால் நவீன உளவியல் பிரச்சினைகளுக்குத் தாமே முயன்று தொழிற்படும் தெறித் தல் செயற்பாடுகள் கொண்ட தொடர்வளர்ச்சி கொண்ட பொருள் களாகக் குழந்தைகளைக் கருதுகின்றது.
நவீன உளவியல் குழந்தைகளின் செயல்முனைய நடவடிக்கை களுக்கு (ளுவசயவநபநைள) முதன்மை கொடுக்கின்றது. ஆசிரியர்கள் இதனை வளர்ப்பதிலே தான் கூடியளவு கவனம் செலுத்தவேண்டி யுள்ளது.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு