வெள்ளி, 25 மார்ச், 2011

பெற்றோரின் மது பாவனையால் பிள்ளைகளின் கல்வியின் தாக்கம்

ஒரு நாட்டின் மிகப் பெரிய செல்வம் இளைஞர்க ளும் யுவதிகளும். எதிர்காலத்தில் நாட்டை நிர்வ கிக்கப் போகின்றவர்களும் நிர்மாணிக்கப் போகி ன்றவர்களும் அவர்களே. இளைய சந்ததியினர் தவ றான பாதையில் வழிநடத்தப்படுவதைத் தடுத்து ஆக்க பூர்வமான சக்தியாக அவர்களை வளர்த்தெடுக்கும் கட ப்பாடு அரசாங்கத்துக்கு மாத்திரமன்றி சமூகத்துக்கும் உண்டு.
ஒரு புறத்தில் அராஜக அரசியல் சக்திகள் இளைஞர்களை தங்கள் வழிக்குத் திசைதிருப்ப முயற்சிக்கின்றன. அண் மைக்காலமாக இடம்பெற்று வரும் பல்கலைக்கழக மாண வர்களின் ஆர்ப்பாட்டங்கள் இந்த வகையானவை. விர க்தியடைந்த அரசியல்வாதிகள் மாணவர்களைத் தவ றான பாதையில் வழிநடத்துகின்றார்கள். இந்த ஆபத்தி லிருந்து மாணவ சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அரசாங் கம் நடவடிக்கை எடுக்கின்ற அதேவேளை பெற்றோ ரும் இவ்விடயத்தில் தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.
இளைய சந்ததியினரின் எதிர்காலத்தைச் சிதைக்கும் பிரதா னமான இன்னொரு விடயம் போதை வஸ்துப் பாவனை க்கு அவர்களை அடிமைப்படுத்துவதற்கு மேற்கொள்ள ப்படும் முயற்சி. இந்த முயற்சி மிகவும் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றது.
அண்மையில் கஞ்சா கலந்த பெருந்தொகையான பாபுல் பைக் கற்றுகளும் பைக்கற்றில் அடைக்கப்படாதிருந்த பெரும ளவு பாபுல்களும் கொழும்பு வர்த்தக நிலையமொ ன்றிலிருந்து கைப்பற்றப்பட்டன. கஞ்சாவை அரைத்து டப்பிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மலையக நகரமொன்றிலிருந்து அவை கைப்பற்றப்பட்ட தாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
சிறிய அளவில் போதையூட்டப்பட்ட பாபுல் போன்றவை பெருமளவில் மாணவர்களுக்கே விற்பனை செய்யப் படுகின்றன. பாடசாலைகளுக்கு அண்மையிலுள்ள சில கடைகளில் இவை இரகசியமாக விற்கப்படுவதாகத் தக வல்கள் வெளியாகின்றன. அதேநேரம், மாணவர்கள் நடமாடும் இடங்களில் இவற்றைக் கொண்டுதிரிந்து விற் பனை செய்பவர்களும் உள்ளனர்.
சிறிய அளவுப் போதையுள்ள இவற்றைக் கணநேர இன்ப த்துக்காகப் பாவிக்கும் இளம் பராயத்தினர் காலப்போக் கில் கூடுதலான வீரியமுள்ள போதைப் பொருட்களைப் பாவிப்பது மாத்திரமன்றி அதற்கு அடிமைப்படும் நிலையும் ஏற்படும். இதற்கு உடனடியாக முடிவு கட்டா விட்டால் நாட்டின் எதிர்கால சந்ததி நலிவுற்றுவிடும்.
போதை வஸ்துக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்திருப்ப தாக பொலிஸ் மா அதிபர் அண்மையில் கூறினார். பெரு மளவில் போதை வஸ்து வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவ ர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கையை எடுப் பதன் மூலமே இந்த யுத்தத்தில் அவர் வெற்றியீட்ட முடி யும். போதை வஸ்து வர்த்தகம் முற்றாக ஒழிக்கப்படும் போது பாவனை தானாக இல்லாது போகும். பெரிய போதை வஸ்து வர்த்தகர்களுக்கும் அவர்களின் விற் பனை முகவர்களுக்கும் எதிரான நடவடிக்கை மாத்தி ரம் போதுமானது எனக் கருதிவிடக்கூடாது. இளம் பரா யத்தினரைப் போதை வஸ்துப் பாவனைக்குத் தூண்டும் பாபுல் போன்றவற்றின் விற்பனைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது நாட்டின் எதிர்கால சந்ததி யைப் பாதுகாப்பதற்கு அத்தியாவசியமானது.
இவ்விடயத்தில் பெற்றோரின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. தங்கள் பிள்ளைகள் என்ன செய்கின் றார்கள் என்பதையிட்டுப் பெற்றோர் அவதானமாக இரு ப்பார்களேயானால் அப்பிள்ளைகள் தவறான வழிக்குத் திரும்புவதைத் தடுக்க முடியும்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு