திங்கள், 14 மார்ச், 2011

ஆரம்பக் கல்வி கற்கும் மாணவர்களை புரிந்து கொள்ளுதல் அவசியம்

முதற்கோணம் முற்றும் கோணம்’ என்பார் மூத்தோர்கள்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா

என்ன! இதுவும் நாம் தரப்போகிற விடத்திற்கு ஒத்துழைக்கும் என நம்புகிறேன். சரி விடயத்திற்கு வருவோம். இன்று பாடசாலைகளில் தரம் ஒன்றில் பிள்ளையை சேர்ப்பதற்கு போட்டியோ போட்டி, ஆறு மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பித்தும் சிலவேளை தாம் எதிர்பார்த்த பாடசாலையில் தனது பிள்ளைக்கு இடம் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம் ஒருபுறம் பெற்றோருக்கு சில பாடசாலைகளில் பிள்ளைகளே சேரவில்லை என்கிற நச்சரிப்புக்கள் சில பாடசாலைகளின் அதிபர்களுக்கு, வகுப்பில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்கிற பிரச்சினை பெரிய பாடசாலைகளில். இவ்வாறு தரம் 1 இல் மாணவர்களை சேர்க்கின்ற நிலையில், அல்லல்படுகின்ற நிலையில் கல்வியமைச்சும் புதிய புதிய சுற்று நிருபங்கள் தரம் 1 இல் பிள்ளைகளை சேர்ப்பதில் இழுபறி இவற்றையும் தாண்டி பிள்ளை ஏதோர் பாடசாலையில் சேர்ந்த நிம்மதியில் பெற்றோர் இருந்து விடுகின்றனர்.
இனிமேல்தான் ஆரம்பிக்கிறது மாணவர்களின் தொழிற்பாடுகள். உண்மையில் பிள்ளை தரம் ஒன்றில் பாடசாலைக்கு வருமுன்னராக பெற்றோரையும் தன் சுற்றுத்தாரையும், குறிப்பிட்ட உறவினரையும் பார்த்துப் பழகிய பிள்ளைக்கு பாடசாலைச் சூழல் பாரியதோர் பிரச்சினையை தோற்றுவிக்கலாம். அப்போதுதான் தரம் ஒன்று கற்பிக்கின்ற ஆசிரியர் சரியான முறையில் மாணவர்களை இனங்கண்டு அவர்களை அறிந்து கொள்வதன் ஊடாக பாடசாலைக்கும், வீட்டுக்கும் இடையிலான தொடர்பை சிறந்த முறையில் பேணி மாணவர்களினது, கற்றலுக்கு தயாராகும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க உதவும் இச்செயற்பாட்டை கட்டாயம் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் செய்தேயாக வேண்டிய நிலைக்கு உட்படுகின்றனர்.
ஆதலால்தான் இதனை முறையாக செய்ய வேண்டும் என்பதற்காகவும் கடந்த 1999 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கல்வி மறுசீரமைப்பினைத் தொடர்ந்து, பின்ணூட்டல் வேலைத்திட்டங்களினூடாகவும் கண்டறியப்பட்ட பல்வேறு விடயங்களையும் கருத்திற்கொண்டு தேசிய கல்வி நிறுவகம் கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து முதலாம் தரத்தில் பாடசாலைகள் பிரவேசிக்கின்ற பிள்ளைகளை அறிந்து கொள்ளும் நோக்குடன் “பிள்ளைகளை அறிந்து கெள்வோம்” எனும் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றது.
இந்நடைமுறையானது பிள்ளைகளினது மனமகிழ்ச்சியைத் தொடராக வைத்திருந்து பாடசாலையும், வீடும் ஒரேயமைப்புடனே காணப்படுகிறது என்கிற உள்ளார்ந்த நிலையை இப்பாலக பிஞ்சுள்ளங்களில் படிப்படியாக உரமேற்றுவதற்குரிய வேலைத்திட்டங்களைத் தயாரித்து அதுனூடாக கற்றலை ஒரு யுக்தியாக மேற்கொள்ளும் நோக்காவே இவை கருதப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற விடயங்களை தேசிய கல்வி நிறுவகத்தின், ஆரம்பக் கல்வி, விசேட கல்விப்பிரிவு, பாடவிதான அபிவிருத்தி நிலையம் என்பன இணைந்து கல்வி வெயியீட்டுத் திணைக்களத்தின் உதவிகொண்டு இதனையொரு கையேடாக பாடசாலைகளுக்கு வழங்கியும் உள்ளன.
இதனில் காணப்படுகின்ற 16 வேலைத்திட்டங்கள் உண்மையாகவே பிள்ளைகளை அறிந்து கொள்வதற்கான வேலைத்திட்டத்திற்கு மேலும் வலுவூட்டி இரசனை மிக்கதாக்கும் நோக்குடன் பின்வரும் குறிக்கோள்களையும் அடையும் நோக்குக்கு அமைய இவைகள் திட்டமிடப்பட்டுள்ளன எனலாம். அவைகளாவன:
தரம் ஒன்றில் பிரவேசிக்கும் பிள்ளைகளிடத்தில் பாடசாலை தொடர்பான விருப்பை ஏற்படுத்த தரம் 1 இல் சேர்கின்ற மாணவர்களுக்கிடையிலான நட்பினை உருவாக்கிக் கெள்ள.
மாணவருக்கும் ஆசிரியருக்குமிடையிலான நட்பினை ஏற்படுத்தவும்.
இப்பருவ பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களை ஆரம்பத்தி லிருந்தே ஆசிரியர் இனங் காணவும்.
முறைசார்ந்த கல்விப் புலமான பாடசாலைக்கு வருகின்றமை யினால் அவர்களின் உளரீதியான ஆற்றல்களை எதிர்காலக் கல்விச் செயன்முறைக்கு வித்திடவும், இதுபோன்றவற்றுடன், பிள்ளையை அறிந்து கொள்ளவும், பெற்றோருக்கு மாணவர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்கள் மகிழ்ச்சியாக பாடசாலைக்கு வரவும், சக வகுப்பு மாணவர்களுடன் பங்கெடுத்து விளையாடவும், பாடசாலையைப் பற்றிய நடைமுறைகளை ஓரளவாவது கற்றுக் கொள்ளவும் வேண்டிய நிலையில்தான் பாடசாலையில் தரம் ஒன்று மாணவர்களுக்கான ‘ஏடுதொடக்க விழா’ என்று தரம் இரண்டு வகுப்பு (பெரிய வகுப்பு) மாணவர்களால் வரவேற்கப்படுவதும் இவைகளை முன்னிட்டேயாகும்.
இவைகள் காரணமாக பாடசாலையின் மாணவர்களிடம் எந்தவிதமான முரண்பாடுகளும் அற்ற நிலையில் மகிழ்ச்சியான சூழலில் ஒரு ஜனநாயகப் பண்புகளின் அடிப்படையில் சிநேகபூர்வமான முறையில் கல்வியைத் தொடரக்கூடிய வாறான நிலையிலும் தரமான கல்விச் சூழலை ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வகைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் ஊடாக வழங்கப்படுகின்ற 16 செயற்பாடுகளையும் இறுதியாக பிள்ளைகளை இனங்காணும் நியதிகளாக 28 உள்ளார்ந்த ஆற்றல்களும் ஒழுங்கு முறையாக செயற்படுத்தப்படுகின்ற போது நாமும், நாடும், பெற்றோரும் எதிர்பார்க்கின்ற ஒரு திடமான, உறுதியான சமூதாயத்தின் உறுப்பினரை உறுதிசெய்கின்ற அத்திவாரத்தை இடுகிறோம் என்ற நிலை ஆரம்பப்படிகளிலேயே இடப்படுவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்துதல் அவசியமாகும்.
இதன் மூலமாக விளையாட்டு வீடு, சுதந்திரமான செயற்பாடுகள், குழு விளையாட்டு 1,2, ஆடல் பால், அபிநயம், கதையில் வரும் பாத்திரங்களை பாவனை செய்தலும், பல்வேறு ஒலிகளை எழுப்புதலும், பாத்திரங்களைப் பாவனை செய்தலும் ஒலிகளை எழுப்புதலும் (குருவிகள் கிராமம்), விளையாட்டு முற்றம், வெட்டுதல் குறித்த எல்லையினுள் நிறந்தீட்டுதல், ஆக்கச் செயற்பாடுக்ள 1,2, கதை சித்திரம் வரைதல், ஊர்வலம், எண்ணுதல், பொருள்களை எண்ணுதல் / எண் விளக்கம் 1,2 போன்ற 16 செயற்றிட்டப் பயிற்சிகள் வழங்கப்பட்டு அதனது குறிக்கோள், வளங்கள், முன் ஆயத்தம், செயலொழுங்கு, இன்காணக்கூடிய உள்ளார்ந்த ஆற்றல்களை போன்றனவும் ஆசிரியரால் மாணவர்களிடமிருந்து பெறத்தக்க முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதனை வேறுவிதமானவாறு, சூழலுக்கேற்றவிதமாகவும் மாற்றியமைக்கின்ற சுதந்திரத் த
• பாடசாலைகள் தரமான கல்வியை வழங்கும் நோக்குடன் அன்றுதொட்டு இன்று வரையிலும் பல்வேறு காலகட்டங்களில் மாணவரின் நலன் கருதி அரசு கல்வியமைச்சின் ஊடாக பலவாறான செயற்றிட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. இச்செயல் திட்டங்கள் யாவும் இந்நாட்டுப் பிள்ளைகள் எந்தவிதமான தங்குதடையின்றி சீரான சீர்கல்வியை இடையறாது தொடரவும் அதற்கான ஊக்கவிப்பாக அவர்களுக்கான நூல்களும், சீருடை மற்றும் உணவு போன்றனவும் வழங்கப்பட்டு வருகின்றமை நாமறிந்த விடயம்தான்.
http://salasalappu.com/?p=1737

நூலகங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு மாணவர்களுக்குச் சிறு பராயத்திலிருந்தே பயிற்சியளிக்கப்படுதல் அவசியம். இந்த வகையில் ஆரம்பப் பாடசாலைக்குச் செல்லத் தொடங்கும் மாணவர்களுக்கு நூல்களை வாசிப்பதில் ஆர்வத்தையும், அக்கறையையும் ஏற்படுத்தக் கூடியனவாகச் சிறுவர் நூலகங்களும், பாடசாலை நூலகங்களும் செயற்படுகின்றன. பெற்றோர் தம் சிறார்களை சிறுவர் நூலகங்களுக்கு அழைத்து சென்று அவர்கள் விரும்பும் நூல்ககளை வாசிக்கும் வகையில் ஊக்கப்படுத்துதல் வேண்டும். பாலர் பாடசாலை ஆசியர்கள் தம் மாணவர்களை மட்டுமன்றி அம் மாணவர்களது பெற்றோர்ருக்கும் இவ்வகையில் ஊக்கமும் வழி காட்டலும் அளிக்க வேண்டும். அபிவிருத்தியடைந்த மேற்கு நாடுகளில் அனேகமான இடங்களில் பெற்றோர் தாம் நூலகங்களுக்குச் செல்லும்போது பிள்ளைகளையும் அழைத்துச் சென்று சிறு வயது முதலே நூலகங்களைப் பயன்படுத்துவதில் அவர்களை ஈடுபடச் செய்கின்றனர். வுளர்முக நாடுகளில் இவ்வாறு பெற்றோர் தம் பிள்ளைகளை நெறிப்படுத்தும் தன்மை குறைவாகவே காணப்படுகின்றது

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு