திங்கள், 14 மார்ச், 2011

பெற்றோர்களது முக்கியமான கடமை

தம் குழந்தைகளுக்குக் கல்விபுகட்ட முதன்மையான, விட்டுக் கொடுக்கமுடியாத உரிமையும் கடமையும் பெற்றோருக்கு உண்டு. எனவே கல்விக் கூடங்களைத் தேர்ந்தெடுப்பதில் உண்மையான சுதந்திரம் அவர்களுக்கு இருக்கவேண்டும். ஆகவே குடிமக்களின் உரிமைகளைக் காத்து ஆதரிக்கவேண்டிய பொறுப்புள்ள பொது அதிகாரிகள், பங்கீட்டு நீதியைக் கருத்தில் கொண்டு, பெற்றோர் தம் மனச்சான்றின்படி தங்கள் குழந்தைகளுக்கான கல்விக் கூடங்களை உண்மையான சுதந்திரத்துடன் தெர்ந்தெடுக்க இயலும் வகையில் பொதுநிதி உதவி பங்கிடப்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.20
எல்லாக் குடிமக்களையும் அறிவு வளர்ச்சியில் தகுந்த பங்கடையக் கூடியவர்கள் ஆக்குவதும், அவர்களுடைய கடிமைசார் கடமைகளையும் உரிமைகளையும் தகுந்தமுறையில் நிறைவேற்ற அவர்களைத் தயாரிப்பதும் அரசின் கடமையாகும். எனவேஈ பள்ளியல் கல்வி பெறுவதற்குச் சிறுவர்கள் கொண்டுள்ள உரிமையை அரசு பாதுகாக்கவேண்டும்; ஆசிரியர்களின் திறமையையும் கல்வியின் தரத்தையும் விழிப்பாயிருந்து கவனிக்கவேண்டும்; மாணவர்களின் உடல் நலத்தில் அக்கறை காட்டவேண்டும். பொதுப்படையாக, பள்ளிகளின் பணி முழுவதையும் அரசு ஊக்குவிக்கவேண்டும். கீழிருப்போர் செய்யக்கூடியதில் மேலிடம் தேவையின்றித் தலையிடக்கூடாது என்னும் கருத்தினை எப்போதும் கண்முன் கொண்டு, கல்விக் கூடங்களை நடத்த தனக்கே முழு உரிமை உண்டென அரசு கருதலாகாது. ஏனெனில் கல்விக் கூடங்களை நடத்த அரசுக்கே முழு உரிமை உண்டென்னும் பார்வை மனிதரின் பிறப்புரிமைகளுக்கும், பண்பாடு வளர்வதற்கும் பரவுவதற்கும், அமைதியுடன் குடிமக்கள் உடடினாத்து வாழ்வதற்கும், எண்ணிறந்த சமூகங்களில் இன்று நிலவும் பன்னோக்குக் கண்ணோட்டத்திற்கும் முரணாக அமைந்துள்ளது.21
எனவே, திருச்சங்கம் உகந்த கல்வி முறைகள், பயிலும் முறைகள் ஆகியவற்றை ஆய்ந்து கண்டுபிடிப்பதிலும்ஈ இளைஞருக்குத் தக்க கல்வி தரவல்ல ஆசிரியர்களை உருவாக்குவதிலும் தாமாக முன்வந்து ஒத்துழைக்கக் கிறிஸ்தவர்களைத் தூண்டுகிறது. மேலும் சிறப்பாகப் பெற்றோர் கழகங்கள் வழியாகப் பள்ளி பணி முழுவதற்கும், முக்கியமாகப் பள்ளி கொடுக்கவேண்டிய ஒழுக்கக் கல்விக்கும் தொடர்ந்து உதவியளிக்கவும் கிறிஸ்தவர்களைத் திருச்சங்கம் தூண்டுகிறது.22
கல்விக் கூடங்களில் அளிக்க வேண்டிய ஒழுக்க மற்றும் சமயப் பயிற்சி


திருச்சபை தன் குழந்தைகள் அனைவரின் ஒழுக்க மற்றும் சமயக் கல்வியைத் தளரா ஊக்கத்துடன் கவனிக்க வேண்டிய தன் முக்கியமான பொறுப்பைத் தெளிவாக உணர்ந்து, கத்தோலிக்கப் பள்ளிகளல்லாத மற்ற பள்ளிகளில் கல்வி பயிலும் எண்ணிறந்த தன் பிள்ளைகள் மத்தியில் தனிப்பட்ட அன்பு காட்டி உதவி செய்வதன் மூலம் உடனிருக்க வேண்டும். இவ்வுடனிருப்பு கீழ்வரும் வழிகளில் வெளிப்படும்: இப்பிள்ளைகளின் ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் தம் வாழ்க்கையால் சான்று பகர்தல்; உடன் மாணவர்களின் திருத்தூதுப் பணி;23 குறிப்பாகப் ;பிள்ளைகளின் வயதிற்கும் சூழ்நிலைக்கு;ம ஏற்றவகையில் நிறைவாழ்வுப் போதனையைப் படிப்பித்தும் கால இடச் சூழலுக்கேற்பத் தகுந்த முயற்சிகளால் அருள்வாழ்வு சார்ந்த உதவியளித்தும் வருகின்ற திருப்பணியாளர்கள், பொது நிலையினரது பணி.
மேலும் பெற்றோர்களது முக்கியமான கடமை ஒன்றினைத் திருச்சபை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறது. அதாவது, தங்கள் குழந்தைகள் மேற்கூறிய வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் உலகியல் கல்விப் பயிற்சியோடு கூடக் கிறிஸ்தவக் கல்விப் பயிற்சியிலும் சேர்ந்து இசையுற முன்னேறவும் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்வதிலும், ஏன் அவற்றை வேண்டிப் பெற்றுக்கொள்வதிலும் பெற்றோரின் இந்த முக்கியக் கடமை அடங்கும். ஆகவேதான் இன்றைய சமுதாயத்தின் பன்னோக்கு நிiயைக் கருத்திற்கொண்டு, நியாயமான சமயச் சுதந்திரத்தை மதித்து, குடும்பங்கள் தங்களது தனிப்பட்ட சய மற்றும் ஒழுக்குக் கோட்பாடுகளின்படி எல்லாப் பள்ளிகளிலும் தம் பிள்ளைகளுகு;குக் கல்வி அளிக்க இயலும் வண்ணம் உதவி செய்கின்ற குழமைச் சமூகங்களையும் அவற்றின் அதிகாரிகளையும் குழுக்களையும் திருச்சபை வெகுவாய்ப் புகழ்கிறது.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு