செவ்வாய், 5 அக்டோபர், 2010

திருவருட்பயன்

பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாள் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை. 11

திரிமலத்தார் ஒன்றுஅதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தார் ஆயும் உளர். 12

மூன்றுதிறத்து உள்ளாரும் மூலமலத்து உள்ளார்கள்
தோன்றலர்தொத்து உள்ளார் துணை. 13

கண்டவற்றை நாளும் கனவில் கலங்கியிடும்
திண்திறலுக்கு என்னோ செயல். 14

பொறிஇன்றி ஒன்றும் புணராதே புந்திக்கு
அறிவுஎன்ற பேர்நன்று அற. 15

ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவு இல்எனில் என்செய. 16

சத்துஅசத்தைச் சாராது அசத்துஅறியாது அங்கண்இவை
உய்த்தல் சத்சத்தாம் உயிர். 17

இருளில் இருளாகி எல்இடத்தில் எல்லாம்
பொருள்கள் இலதோ புவி. 18

ஊமக்கண் போல ஒளியும் மிக இருளே
யாம்மன்கண் காணா தவை. 19

அன்றுஅளவும் ஆற்றும் உயிர் அந்தோ அருள்தெரிவது
என்றுஅளவு ஒன்றுஇல்லா இடர். 20
திருவருட்பயன் - மூன்றாம் பத்து

3. இருள்மல நிலை

துன்றும் பவத்துயரும் இன்பும் துணைப்பொருளும்
இன்றென்பது எவ்வாறும் இல். 21

இருளானது அன்றி இலதெவையும் ஏகப்
பொருளாகி நிற்கும் பொருள். 22

ஒருபொருளும் காட்டாது இருளுருவம் காட்டும்
இருபொருளும் காட்டாது இது. 23

அன்றுஅளவி உள்ளொளியோடு ஆவி இடைஅடங்கி
இன்றளவும் நின்றது இருள். 24

பலரைப் புணர்ந்தும் இருள்பாவைக்கு உண்டென்றும்
கணவற்கும் தோன்றாத கற்பு. 25

பன்மொழிகள் என்உணரும் பான்மை தெரியாத
தனமை இருளார் தந்தது. 26

இருள்இன்றேல் துன்புஎன் உயிர் இயல்பேல் போக்கும்
பொருள் உண்டேல் ஒன்றாகப் போம். 27

ஆசுஆதியேல் அணைவ காரணமென் முத்திநிலை
பேசாது அகவும் பிணி. 28

ஒன்று மிகினும் ஒளிகவராதேல் உள்ளம்
என்றும் அகலாது இருள். 29

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு