வெள்ளி, 9 செப்டம்பர், 2011

அக்கரைப்பற்று அறிமுகம்

அறிமுகம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அமைந்துள்ள மூன்று மாவட்டங்களில் அம்பாறை மாவட்டமானது 21 பிரதேச செயலக பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதில் கிழக்குக் கரை ஓரமாக 12உம் மத்தியை அம்பாறை நகரைச் சுற்றி 09உம் அமைந்துள்ளது. மாவட்டத்தை நிர்வாகம் செய்வதற்கு ஒரு கச்சேரியை அம்பாறையில் அமைத்து அங்கே பல அரசாங்க திணைக்களங்களும் அமைத்து இம்மாவட்டத்தில் அரசு பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது. பல இன மக்கள் இப்பிரதேசத்தில் வசித்து வருகிறார்கள். இக்குடிசார் பரம்பலானது காலத்திற்குக் காலம் எல்லைகள் மாற்றப்பட்டு இப்போது சிங்களவர்களும் முஸ்லீம்களும் சம அளவு விகிதத்திலும் தமிழர்கள் மிகக் குறைந்த அளவு விகித்திலும் வசித்து வருகின்றனர். இங்கே பௌத்தம், இந்து ,இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்தோர் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இது ஒரு விவசாய மாவட்டமாக இனங்கானப்பட்டிருப்பதும் இலங்கையின் நெல்லை உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் முன்னனியில் இருக்கின்றது. இம்மாவட்டம் தனது எல்லைகளாக கடல் மட்டக்களப்பு மாவட்டம் , மொனறாகலை மாவட்டம் சபதுளை மாவட்டம் ஆகியவற்றுடன் எல்லைகளில் பாரிய மலைகள், நதிகள், குளங்கள், ஆறுகள், காடுகள், வயல் நிலங்கள் என்பவற்றைக் கொண்டுள்ளது.

விசேட சிறப்பம்சமாக கிழக்கில் கரையோரமாக துறைநீலாவணை தொடக்கம் குமணை வரையில் பாரிய கடல் பரப்பை கொண்டுள்ளதால் மீன்பிடி தொழிலுக்கு ஒரு சிறப்பான இயற்கை சூழலைக் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது. மேற்படி மாவட்டமானது பின்வரும் பிரதேச செயலாளர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன

1. ஆலையடிவேம்பு
2. அக்கரைப்பற்று
3. அட்டாளைச்சேனை
4. நிந்தவூர்
5. காரைதீவு
6. கல்முனை (தமிழ் பிரிவு)
7. கல்முனை (முஸ்லீம் பிரிவ)
8. திருக்கோவில்
9. பொத்துவில
10. லகுகல
11. தமணை
12. உகணை
13. பதியத்தலாவ
14. அம்பாரை
15. மகாஓயா
16. தெகியத்தக்கண்டிய
17. சம்மாந்துறை
18. சாய்ந்தமருது

19. நாவிதன்வெளி
20. இறக்காமம்

நிர்வாக எல்லை.


(ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவு)



அம்பாறை – அக்கரைப்பற்று பிரதான பாதையில் 6ம் மைல் கல்லில் தொடங்கி அக்கரைப்பற்றை நோக்கிய திசையில் செல்லும் போது வலது பக்கமாக உள்ள ஆலிம் நகர் ,கிறவல்குழி குடியிருப்பின் தெற்குப் புறமான பகுதியை உள்ளடக்கி தொடர்ந்து வரும் பாதையில் அல்-ஹிதாயா பாடசாலையில் மேற்குப் புறமான பாதையினூடாக வடக்காகச் சென்று அப்பாதை பெரியபள்ளிக்கு முன்பாக கிழக்காகச் செல்லும் மருத்துவர் வீதியினை சந்தித்து அதனைக் குறுக்கறுத்துச் செல்லும் முதலியார் வீதியினூடாக வடக்குப் புறமாகச் சென்று பின் தோம்பதோரின் சந்தியை அடைந்து


பின்னர் கிழக்காகச் செல்லும் இஸ்மாயில் ஸ்டோர் ஒழுங்கையின் ஊடாக கிழக்காகச் சென்று அக்கரைப்பற்று – கல்முனை பிரதான பாதையை அடைந்து பின்பு அதிலிருந்து தெற்கு நோக்கி சிறிது தூரம் சென்று அக்கரைப்பற்று சந்தை சதுக்கத்தை அடைந்து அதனூடாக பொத்துவில் வீதியில் கிழக்காகச் சென்று தொடர்ந்து அவ்வேலையானது அக்கரைப்பற்று தர்மரத்ண விகாரையின் எதிராகவுள்ள அக்கரைப்பற்று மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தையும் அதன் காணிகளையும் உள்ளடக்கி மீண்டும் பொத்துவில் வீதியை அடைந்து சிறிது தூரம் சென்ற பின் அக்கரைப்பற்று பத்திரகாளி கோவில் வீதியினூடாக சென்று பத்திரகாளி கோவிலையும் அதன் காணிகளையும் உள்ளடக்கி மீண்டும் பொத்துவில் வீதியை அடைந்து பின்னர் கிழக்காகச் சென்று அக்கரைப்பற்று பஸ் டிப்போவிற்கு அடுத்து வருகின்ற கடற்கரை வீதியானது சென்று கடற்கரையை அடையும் வரை.
பின் சின்னமுகத்துவாரம் அதன் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி பின் சின்னமுகத்துவாரத்தில் இருந்து பெரிய களப்பை ஊடறுத்து சாகாம வீதியில் உள்ள 7வது மைல் கல்லை அடைந்து அதிலிருந்து சாகாம வீதியினூடாக தாலிபோட்ட ஆற்றை அடைந்து அதிலிருந்து திருக்கோவில் பிரதேச செயலாளர் எல்லையையும், தமண பிரதேச செயலாளர் எல்லையையும் தொட்டு தமணை எல்லையில் உள்ள எகலகலகந்த மலை வரை செல்கிறது.











கிராம சேவை அலுவலர்களின் பிரிவுகள்

பிரிவின் பெயர் இலக்கம்

1. வாச்சிக்குடா ஏவி ஃ 01
2. ஆலையடிவேம்பு ஏபி ஃ 21ஏ
3. நாவற்காடு ஏவி ஃ 03
4. அக்கரைப்பற்று 7 ஏபி ஃ 21
5. அக்கரைப்பற்று 7ஃ1 ஏவி ஃ 05
6. அக்கரைப்பற்று 7ஃ2 ஏவி ஃ 6
7. அக்கரைப்பற்று 7ஃ3 ஏவி ஃ 07
8. அக்கரைப்பற்று 7ஃ4 ஏவி ஃ 8
9. அக்கரைப்பற்று 8 ஏபி ஃ 22
10. அக்கரைப்பற்று 8ஃ1 ஏவி ஃ 09
11. அக்கரைப்பற்று 8ஃ2 ஏவி ஃ 11
12. அக்கரைப்பற்று 8ஃ3 ஏவி ஃ 12
13 அக்கரைப்பற்று 9 ஏபி ஃ 22ஏ
14. சி;ன்னமுகத்துவாரம் ஏவி ஃ 14
15. கோளாவில் 1 ஏவி ஃ 16
16. கோளாவில் 2 ஏவி ஃ 17
17. கோளாவில் 3 ஏபி ஃ 23
18. பனங்காடு ஏவி ஃ 13
19. சின்னப்பனங்காடு ஏவி ஃ 19
20. கண்ணகிகிராமம் 1 ஏவி ஃ 20
21. கண்ணகிகிராமம் 2 ஏவி ஃ 21
22. அளிக்கம்பை ஏவி ஃ 22


அமைவிடம் :-

அம்பாறை மாவட்டத்தில் கிழக்குப் புறமாக அம்பாறை நகரில் இருந்து 16 மைல்களுக்கு அப்பால் அக்கரைப்பற்று பிரதேசம் அமைந்துள்ளது. இதன் தெற்குப்புறமாக ஆலையடிவேம்பு பிரதேசம் அமைந்துள்ளது. எமது பிரதேச செயலாளர் பிரிவும் மேலே குறிப்பிட்ட பிரிவையே உள்ளடக்கியுள்ளது. இப்பிரிவு 25628 ஆயிரம் மொத்த சனத்தொகையைக் கொண்டுள்ளது. 22 கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கிய பிரதேசமாகவும் காணப்படுகிறது. இதன் பரப்பளவு


90 சதுர கிலோ மீற்றராகும். ஆலையடிவேம்பு; பிரதேச செயலக பிரிவு பின்வரும் கிராமங்களை உள்ளடக்கியது.


1. அளிக்கம்பை
2. கண்ணகி கிராமம்
3. பனங்காடு
4. கோளாவில்
5. அக்கரைப்பற்று
6. ஆலையடிவேம்

இதனுடன் பல வயல் கண்டங்களையும் உள்ளடக்கியுள்ளது. பிரதானமான தில்லை ஆறு இதன் மேற்குப்புறமாக சென்று பனங்காட்டை ஊடறுத்து கிழக்குப்புறமாக செல்வதும் அக்கரைப்பற்று அண்மித்த பகுதிகளில் மட்டுமே குடியிருப்புக்களை மட்டும் கொண்டு அதனை சூழவுள்ள பகுதிகள் வயல்வெளிகளும் மேச்சல்தரைகளும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.




.
தரைத்தோற்றம்

இப்பிரதேசம் கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாள 75 – 120 உயரம் வரையுள்ளது. இது மணல்களையும் பாறைகளையும் கொண்ட பிரதேசமாகும். இப்பிரதேசம் கிழக்காக ¾ மைல் நீளமான கடல்வளமும் மேற்காக பயிர்ச்செய்கை நிலமும் வடக்காக குடிமனைகளும் தெற்காக வயலும் மலைசார்ந்த பிரதேசமும் காணப்படுகின்றன. இவற்றில் 10 ஏக்கர் சதுர அடிப்பரப்பும் 100 அடி உயரமும் கொண்ட இரண்டு மலைகளும் 10 ஏக்கர் சதுர அடிப்பரப்பும் 75 அடி உயரமும் கொண்ட ஒரு மலையும் குறகிய மலைத்தொடர்களும் காணப்படுகின்றன.

நீர்வளங்கள்
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அநேகமாக குடியிருப்பாளர்கள் குடிநீர் பெறுகின்றனர். இதில் கண்ணகி கிராம மக்கள் நல்ல குடிநீரைப் பெறுவது கஸ்டமாக உள்ளது. இவர்கள் வசிக்கின்ற பகுதியை அன்மித்து மலைகள் காணப்படுவது காரணமாகும். இப்பிரதேசத்தில் தில்லையாறு, பட்டியடிப்பிட்டிக் குளம், நீத்தையாறு, தாலிபோட்டாறு என்பனவும் காணப்படுகின்றன. மேலும் நீர் பெறுவதில் கஸ்டமான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் (கண்ணகி கிராமம் , அலிக்கம்பை) வாய்க்கால்களில் விடப்படும் தண்ணீர் மூலமும் குளாய் கிணறுகளில் பெறப்படும் தண்ணீர் மூலமும் தனது தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

கண்ணகி கிராமம் நில அடிப்பகுதியில் மலைப்பாங்கான பிரதேசமாக காணப்படுவதால் இங்கே கிணறுகள் தோண்டுவது மிகவும் கஸ்டமான ஒரு காரியமாகும். இங்கே வசிக்கின்ற மக்களுக்கு அரசாங்கம், பொதுத் தாபனங்கள் குளாய்க் கிணறுகள், பொதுக் கிணறுகள் என்பன அமைத்துக் கொடுக்க வேண்டும். இதே மாதிரியே அளிக்கம்பை கிராமமும் அமைந்துள்ளது.

ஆலையடிவேம்பு, வாச்சிக்குடா பகுதியில் வசிக்கின்ற மக்கள் அதிகம் சுத்தமில்லாத நீரையே தமது பாவனைக்கு பயன்படுத்திவருகின்றனர். பெரும்பான்மையான சலவைத் தொழிலாளர்கள் பட்டியடிப்பிட்டிக் குளத்தையும் வயற்செய்கைக்காக உப உணவுச்செய்கைக்காக தில்லையாற்றையும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கும் சுத்தமான நீரைப்பெறுவதற்கு பொதுக் கிணறுகள் நீர்வழங்கள் அமைப்புக்களை திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.


குறிப்பு

கண்ணகி கிராமம் தற்போது மீளக்குடியேற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டு;ள்ளது. இப்போது ஏற்கனவே உள்ள கிணறுகள் யாவும் தூர்ந்த நிலையிலேயே இடிபாடுகளுக்கு உட்பட்ட நிலையிலும் உள்ளது. இதனால் மீளக் குடியமர்வு செய்யும் போது பழைய கிணறுகளை புணரமைக்கவும் புதிதாக பொதுக் கிணறுகள் குளாய் கிணறுகளை அமைக்கவும் தேவை ஏற்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று குளம் ஃ பட்டியடிப்பிட்டி குளம்

பட்டியடிப்பிட்டி குளமானது வாச்சிக்குடாவில் அமைந்துள்ளது. இ;ப்பிரிவில் பெரும்பான்மையினராக சலவைத் தொழிலாளர்கள் வசிப்பதால் அவர்களே தமது தொழில் தேவைக்கு பயன்படுத்துகிறார்கள். இக்குளம் வருமாந்த மழை வீழ்;ச்சியினால் நிரப்பப்பட்டு வரட்சியான காலங்களில் வற்றிவிடுகிறது. ஆண்மைக்காலங்களில் ஆலையடிவேம்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட இக்குளத்தை முஸ்லீம்கள் ஆக்கிரமிப்பு செய்து சட்ட விரோதமாக கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதால் இக்குளம் விஸ்தீரணம் குறைந்து நீர் கொள்ளவு குறைந்து எதிர்காலத்தில் இக்குளத்தை நம்பி தொழில் செய்வோர்களும், விவசாயம் செய்வோர்களும் தொழிலை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.











கடல் வளம்

இப்பிரதேசத்தில் ¾ மைல் நீளமான கடல் வலயம் காணப்படுகிறது. இவ்வளமானது பல அடிப்படைத் தொழில்களுக்கு ஏதுவாகக் காணப்படுகின்றது. குறிப்பாக மீன்பிடித்தொழில் அபிவிருத்திக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் சின்னமுகத்துவாரம், கோளாவில், பனங்காடு போன்ற பகுதிகளில் வசிக்கும் அநேகர் மீன்பிடித்தொழிலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. போதியளவு தொழிலாளர் வசதி, சந்தை வாய்ப்பு, போக்குவரத்து, அனுபவம் என்பன செறிவாகக் காணப்படுவதனால் நவீன மீன்பிடி பயிற்சி அளிக்கும் அமைப்பினூடாக இத்தொழிலாளர்களுக்கு பயிற்சி, நிதி வசதி என்பன வழங்கினால் இப்பகுதியில் ஆழ் கடல் மீன்பிடித்தல் தொழிலை செய்து அதிகளவு வருமானத்தை இத்தொழிலைச் செய்யும் மக்கள் பெறக் கூடியதாக இருக்கும்.

தெங்கு வளம்:

ஆலையடிவேம்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் கிழக்காக கடற்கரை காணப்படுவதால் அதனை அண்மித்த பகுதியான சின்னமுகத்துவாரம் பகுதியில் பல தென்னம் தோட்டங்கள் காணப்படுகின்றன. அத்தோட்டம் அக்கரைப்பற்று 9, அக்கரைப்பற்று 7, அக்கரைப்பற்று 8 ங் குறிச்சியிலும் கோளாவில் பகுதிகளிலும் வீடுகளில் தென்னை மரங்கள் காணப்படுவதால் இப்பகுதியில் கிட்டத்தட்ட 150 ஏக்கர் காணப்படுகிறது. இவ்வளத்தினை அதிகரிக்க முடியும் ஏனெனில் சூறாவளி தாக்கியதில் பல தென்னந்தோட்டங்கள் சேதமாகின. அத்தோடு வீடுகளில் உள்ள பல மரங்கள் சேதமாகின. ஆனால் இருந்த அளவு இன்னும் மீளப் பெறப்படவில்லை. எனவே இப்பகுதியில் இப்போது தேங்காயின் விலையும் அதிகரித்து காணப்படுவதால் இப்பகுதியில் இலவசமாக நாற்றுத் தென்னை விநியோகம் செய்யப்படவேண்டும்.

இதனாலே இப்பகுதி தேவைகளை நிறைவேற்றவும் தும்பு, தெங்குப் பொருட்கள் தொடர்பான உற்பத்தித் தொழிற்சாலைகளை ஏற்படுத்த முடியும். இதனூடாக குடிசைக் கைத்தொழில் உற்பத்தியாக பிரஸ், தும்புத்தடி, கால் துடைப்பம், தென்னம் கள்ளு இது போன்ற பல உற்பத்திகளை செய்யலாம்.


ஆலையடிவேம்பு பிரதேசத்தின் அமைப்பும் பொதுவான கால நிலையும் (காலநிலை ஏற்கனவே தரப்பட்டுள்ளது. எனவே மண்ணமைப்பு மாத்திரமே இங்கு தரப்படுகிறது.)








இலங்கையின் கீழ் திசையான மட்டக்களப்பு மாநகரின் தென்புறமாக ஆலையடிவேம்பு பிரதேசம் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடக்கே அம்பாறை வீதியினையும் தெற்கே அளிக்கம்பையினையும் கிழக்கே கடலுடன் இணைந்த முகத்துவாரத்தினையும் மேற்கே இலுக்குச் சேனையையும் கொண்டு அமைந்துள்ளது. பொதுவாக இப்பிரதேசத்தின் தரைத்தோற்றம் வடமேல் திசையாக தாழ்ந்து அமைந்துள்ளதை இங்கே ஓடும் நீத்தை ஆறு விளக்குகிறது.

மண்

இப்பிரதேசத்தில் இறுகாத கடினமற்ற பொருட்களால் அமைந்து காணப்படுகிறது. மேற்போர்வையினை மட்படை எனலாம். இம்மட் பரம்பலானது சீராகப் பரவி காணப்படவில்லை. இப்படை 5 அடி – 20 அடிவரை ஆழமுள்ளதாக காணப்படுகிறது. இம்மண் தாய்ப்பாறையின் சிதைவினாலும் சேதன – அசேதன பொருட்களின் திரட்சியினாலும் இனங்காணப்படுகிறது.

பொதுவாக மண்ணியல் ஆளர்கள் ஆய்வு செய்தது போல் எமது பிரதேச மண்ணையும் ஆய்வுக்குட்படுத்தி ஆராய முடியும;




பொதுவாக ஆலையடிவேம்பு பிரதேசம் இடத்திற்கு ஏற்ப வேறுபட்ட மண் வகைகளை கொண்டமைந்தாலும் பொதுவான அயனமண் (ஊசுயுஏநுடு) என்ற வகையினுள் அடக்க முடிகிறது. இம்மண் வெப்பப்பகுதியிலும் வெப்பமும் ஈரமும் கொண்ட பருவகால காலநிலை உள்ள பகுதிகளில் பரம்பி உள்ளதால் எமது பகுதியிலும் இவற்றைக் காணலாம். எமது பகுதியில் எமது பகுதி மக்களின் அறிவுத்திறனைக் கொண்டு அதன் தன்மையினை மணல், களி, மணலும் களியும் சேர்ந்த இருவாட்டி என்ற 03 இனங்களாக பாகுபடுத்திக் கூறுவர். எமது பிரதேசத்தின் கிழக்கே கடற்கரை சார்ந்து மணலும் மேற்கே செல்லச் செல்ல இருவாட்டி மணலுமாகச் சென்று வயல் பாகங்களை அண்டிய பகுதி நீரைத்தேக்கி வைக்கக்கூடிய களியாக மாற்றமடைகிறது. மேலும் வடக்கே கருமணலும் தெற்கே செல்லச் செல்ல நரை நிறமுள்ள மணலும் கண்ணகிபுரம் மற்றும் அளிக்கம்பை சார்ந்த பகுதியில் பசைத்தன்மையுள்ள களி ஃ செம்மணலுமாக அமைந்து பரவலான நெற்செய்கையினை நிர்ணயித்துச் செல்கின்றது. மணல், இருவாட்டி சார்ந்த பகுதிகளில் தெங்குச் செய்கை, மரவள்ளி மற்றும் ஊடுபயிர்களையும் செய்கை பண்ணை மேற்கொள்ளப்படுகின்றது.

மழை வேளைகளில் வெள்ளம் பெருகும் போது மேற்படையிலுள்ள வளமுள்ள கனியுப்புக்கள் ஃ கூள்பொருட்கள் பி என்னும் படையில் தங்குகின்றது. இவை மஞ்சள், சிவப்பு நிறங்களைக் கொண்டு இரும்பு சத்துள்ள அமில மண்ணாக அமைந்துவிடுகிறது.

கடல் மண்வளம்:-

இப்பிரதேசத்தில் ¾ மைல் நீளமான கடற்கரையை கொண்டுள்ளதான அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில் இருந்து 500 யார் தூரத்தில் கிழக்கில் கடல் அமைந்துள்ளது. இங்கே கடற்கரை மணல் வளம் போதியளவு கிடைக்கின்றது. இந்த வளத்தை இப்பிரதேசத்தினதும் எமக்கு அடுத்ததாகவுள்ள அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினரும் கட்டடத் தேவைகளுக்கும் வேறு பல தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இப்பிரதேசத்தில் பொதுவாக மண்ணரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை குறிப்பிடல் வேண்டும். ஜனவரி-நவம்பரில் இடையிலான பகுதியில் மண்னெடுக்கப்படுகிறது. மணல் டிரக்டர், வண்டில்கள், கென்டர்களில் ஏற்றிச் செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

களிமண்வளம்

ஆலையடிவேம்பு உ.அ.அதிபர் பிரிவிற்கு மேற்குப்புறமாக அமைந்துள்ள வாச்சிக்குடா, அக்கரைப்பற்று – பட்டியடிப்பிட்டி குளத்தில் களிமண்ணும் அதை அண்மித்த பகுதியில் ஒரு வகை ஊத்தைக் களிமண்ணும் காணப்படுகின்றது. இவ்வகையான மண் அமைப்பு ஆலையடிவேம்பு, கோளாவில், பனங்காடு ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றது.

இந்தக் களிமண்ணை இப்பகுதியில் சட்டி, பானை செய்யவும் வேறு வகைகளில் வீட்டு அத்திவாரங்களை மூடுவதற்கும் வீதிகளின் ஓரங்களை நிரப்பவும் பாவிக்கிறார்கள். பட்டியடிப்பிட்டிக் குளத்தை சில முஸ்லீம்கள் அதிகாரமற்ற வகையில் நிரப்பி கடைகளைக் கட்டி வருவதால் குளத்தின் விஸ்தீரணம் குறைந்து கொண்டு செல்வதோடு எதிர்காலத்தில் இம்மண்ணினைப் பெறுவதற்கு வேறு இடம் ஒன்றைத் தேடவேண்டி இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.




கற்பாறைகள.;

அக்கரைப்பற்று மத்தியில் இருந்து 6 மைல்கள் தூரத்தில் கண்ணகி கிராமம் அமைந்துள்ளது. இது ஆலையடிவேம்பு பிரதேசத்தின் தெற்குப்புறமாக அமைந்துள்ள பகுதியாகும். இங்கே பாரிய மூன்று மலைகள் அமைந்துள்ளன. இவைகளில் 100 அடி உயரமும் 10 ஏக்கர் பரப்பும் கொண்ட 2 மலைகளும் 75 அடி உயரமும் 10 ஏக்கர் பரப்பும் கொண்ட ஒரு மலையும் காணப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து பல மலைத் தொடர்களும் காணப்படுகின்றன. 4 மைல் தொலைவில் அளிக்கம்பை கிராமமும் சூழ காடுகளும் காணப்படுவதால் விறகினைப் பயன்படுத்துவதாலும் வெடிமருந்துகளைப் பயன்படுத்தியும் கருங்கல்லை உடைக்கும் தொழிலை செய்யலாம். தற்போது இது நம்பிக்கை;குரிய சிங்கள முதலாளிமார்களுக்கு வெடிமருந்து வழங்கி அவர்கள் மூலமாக இ;ப்பிரதேசத்தின் கருங்கல் தேவையை அதிக விலை கொடுத்து பொது மக்கள் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

லேபிள்கள்:

புதன், 7 செப்டம்பர், 2011

மனித வளம்

மனித வளம் (human resources) என்பது மனிதர்களை நிறுவனங்கள் எவ்வாறு முகாமைத்துவப் படுத்துகின்றார்கள் என்பதை குறிக்கின்றது. இத் துறையானது பாரம்பரிய அதிகார ரீதியான செயற்பாட்டிலிருந்து தளத்தகைக்கு மாற்றம் பெற்றுள்ளது. இம் மாற்றமானது திறமை வாய்ந்த ஊக்கமுள்ள மக்களுக்கும் நிறுவனங்களின் வெற்றிக்கும் இடையிலான உறவு முறையை அறிந்து கொள்ள மிகவும் உதவுகின்றது. இத் துறையானது நிறுவனங்களின் உளவியலையும் அமைப்பு சார்ந்த கொள்கைகளையும் வளர்த்துள்ளது. மனித வளமானது உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டு இரண்டு வகையான மேல் விளக்கத்தை கொண்டுள்ளது.இது முதலாவதாக அரசியல் பொருளியலிலும் பொருளியலிலும் பயன்படுத்தப் பட்டது.


பயிற்சிநிறுவன தரத்தில் ஒரு வெற்றிகரமான மனிதவள முன்னேற்றத்திற்கான நிகழ்ச்சித் திட்டம் ஒரு தனிநபர் முக்கியமான தேவைகளை ஆற்றுவதற்கு தயார்ப்பத்துகின்றது. குறித்த காலத்தில் ஒழுங்கு படுத்தப்பட்ட அறிதலானது, செயற்பாட்டு ரீதியான ஒரு முன்னேற்றத்துடனான மாற்றத்தை வழங்குகின்றது என நட்வர் குறிப்பிடுகிறார். இந்த ஓழுங்கமைப்பில் மனித வள வளர்ச்சி என்பது ஒரு கட்டமைப்பைப் போன்றது.

முதலாவது கட்டமானது பயிற்சி, பின்பு தொழிலாழர்களை முன்னேற்றுதல், நல்லகல்வி, தனிப்பட்ட நபர்களினதும் நிறுவனங்களின் நீண்டகால தேவைகளையும், மனித வள மேம்பாடு சாதாரணமாக பின்வறுமாறு வரையறை செய்யப்படுகின்றது.

“ நிறுவனங்களின் விளைதிறனன முன்னேற்றும் முகமாக நிறுவனங்களின் அனைத்து தொழிலாளர்களினதும் திறமைகள் மற்றும் வெளிக்காட்களை தரமுயற்றுதல்”

மனித வள மேம்பாடுமனித வள மேம்பாட்டின் நோக்கமானது மனிதவளத்தின் முழுமையை வளர்ப்பதற்காக அறிவூத்துவன் ஊடகவூம் கல்வி, பயிற்சி சுகாதாரம் அனைத்து மட்டங்களில் ஊடாக வேலை வாய்ப்பு போன்றவற்றின் இணைந்த கொள்கைகளினால் பெறப்படுகின்றது.

முகாமைத்துவம்மனித வள முகாமைத்துவத்தில் மற்றும் ஒரு மறுபக்கத்தை பார்போமானால் நிறுவனத்தின் உடைய மனித மூலதனத்தை அதிகரிப்பதற்கு நிதி இடர்களை குறைப்பதற்கு உதவுகின்றது. திறமையாகவும் சட்டரீதியாகவும் ஒழுங்கான முறையிலும் செயற்படுத்துவது மனித வள முகாமையாளரின் பொறுப்பாகும்.

முக்கியமான செயற்பாடுகள்மனித வள முகாமைத்துவம் 7 முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

1.ஆட்சேர்ப்பும் தெரிவும்
2.பயிற்சியும் அபிவிருத்தியும்
3.செயற்பாட்டு மதிப்பீட்டு முகாமைத்துவம்
4.மேம்படல்,
5.இடமாற்றம்
6.கைத்தொழிலும் ஊழியர் உறவும்
7.எல்லா தனிப்பட்ட தரவுகளின் உடைய பதிவு பேணல்
8.மொத்த பரிசுகள் : ஊழியர் இலாபமும் நட்டமும்
9.வேலைகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் உள்ளக வாடிக்கையாளர்களுக்கு இரகசிய ஆலோசனை
10.தொழில் அபிவிருத்தி
11.தரமான இணைப்பு
12.மனித வள செயற்பாட்டோடு இணைந்த நேர அசைவு ஆய்வு
13.செயற்றிறன் மதிப்பீடு
மனித வளத்தின் நவீன கருத்துமனித வளமானது வணிகத்தினது நிறுவத்தினது ஒரு பகுதியாக இருந்தது மனித வள முகாமைத்துவ விவசாயத்தின் உடைய ஆரம்ப காலத்தில் இருந்து வளர்ந்து வந்துள்ளது 20ம் நூற்றாண்டின் நடுப்பபகுதில் இருந்து மனித வளம் தொடர்பான கருத்து வளர்ச்சி அடைந்து வந்துள்ளது எனினும் பல காரணங்களால் இதற்காக சவால்கள் எலுந்த போதிலும் மனித வளம் முன்னேறியது. நிறுவனங்களின் ஒரு நிரந்தமான இடத்தை பிடித்துள்ளது.

தனிப்பட்ட மறு மொழிஒரு தொழிலாளர் சந்தையின் மாற்றங்களுக்கு தனியார் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பது தொடர்பான கருத்துக்கள் புவியியல் பரப்பு துனியான இடமின்றி வேறு எவ்வளவூ தூரம் வேலைக்குச் செல்லும் தூரமானது நிறுவனத்தினாலும் போக்குவரத்து துறையினாலும் கட்டணம் செலுத்தப்பட்;ட முறையில் இருத்தல் வேண்டும். அது மட்டுமல்லாமல் யார் வேலைக்கு விண்ப்பிக்கின்;றார்களோ அதை தீர்மானிக்கும் அம்சம் வேலைப்பரப்பு உள்ளடக்கிதாக இருத்தல் வேண்டும் வேலைக் கட்டமைப்பு நிறுவனத்திக்குள் வேறுபட்ட வேலையினுடைய பெறுமதிகளும் மாதிகளும் இருத்தல் வேண்டும். மகோனே 1989ல் வேறுபட்ட வேலைக் கட்டமைப்புக்களை விருத்தி செய்தார்கள் அவையாவன தந்திரம் நிறுவன வேலை கட்டமைப்பற்றது உற்பத்தி சார்ந்த வித்தியாசம் ஊழியர்களுடைய வேறுபட்ட வயது வகை சரியான அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. உதாரணமாக அவர்களுடைய நடவடிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் நிறுவத்தின் உடையது

வேலை வாய்ப்புமனித வள மேம்பாடு நிறுவனதத்தினுள் மனித மூலதனத்தின் உடைய விரிவிக்கான ஒரு கட்டமைப்பாகும். அல்லது பிரதேசம் அல்லது தேசம் சார்ந்தது மனித வள மேம்பாடனது கல்வியிலும் பயிற்சியூடையதும் கட்டமைப்பாகும். வூpரிவாக பார்போமானால் போதுமான சுகாதாரமும் வேலைவாய்ப் கொள்கையூம் நிறுவனத்தின் உடையதும் தனியாரினதும் வளர்ச்சியையூம் தொடர்ச்சியான விருத்தியையூம் உறுதிப்படுத்துகின்றது. அடம்ஸ்மித் “தனிப்பட்டவரினது கொள்ளவது அவர்களுடைய கல்வியில் தங்கியூள்ளது” என கூறுகிறார். மனிதவள மேம்பாடானது நடுத்தரமானது அது பரந்த சுற்றாடலில் பயிற்சிக்கு கற்றலுக்கும் இடையில் உள்ள செயன் முறையில் இருந்து பெறப்படுகின்றது. முனித வள மேம்பாடானது விரிவான கருத்து அல்ல ஆனால் ஒரு அமைப்பு செயன் முறையின் தொடராகும். தேசிய உடன்பாட்டில் இது சுகாதாரமும் கல்வி வேலைவாய்ப்பு என்பவற்றிக் கிடையில் உள்ள தந்திரோபாய தொடர்பில் இருந்து பெறப்படுகின்றது.

கட்டமைப்பு மனித வள மேம்பாடானது ஒரு கட்மைப்பு அது தனிப்பட்ட அபிவித்திக்கவூம் நிறுவனத்தின் உடைய திருப்திக்காவூம் அனுமதி அளிக்கின்றது. தனிப்பட்டவரினது மேம்பாடானது தனியார் நிறுவனம் அல்லது தேசத்திற்கு நன்மை அளிக்கின்றது. ஓன்றிணைந்த பார்வையில் நோக்கும் போது மனித வள மேம்பாட்டு கட்டமைப்பானது ஊழியர்களை நிறுவனத்தின் உடைய செத்தாக நோக்குகின்றது. இது ஊழியர் விருத்தியினதும் வளச்சியினதும் பிரதான நோக்கு ஆகும். இது தனியான திறமையை விருத்தியை உறுதிப்படுத்துகின்றது. இந்த செயற்பாட்டின் மனித வள மேம்பாடானது உள்ளறை குழுப்பயிற்சிக்காக அல்லது வெளியீடானது தனிநபரின் உடைய செயற்பாட்டை விருத்தி செய்கின்றது.

லேபிள்கள்:

பாடசாலை முகாமைத்துவம்

பாடசாலைகள் சிறந்த முறையில் முகாமைசெய்யப்படுவதனால் நாட்டின் சுபீட்சகரமான எதிர்காலத்தை கட்டி எழுப்ப எனவே பாடசாலை முகாமை பற்றி சிந்திப்பது முக்கியமானது. இவ்புலமானது அதிபர் ஆசிரயர் மாணவர்கள் பெற்றௌர் சமூகம் நாட்டின் பொருளாதார அரசியல் உலககல்விப்போக்கு என்பவற்றை தன்னகத்தே சிந்தித்தல் வேணடும். முகாமைத்துவம் என்ற எண்ணக்கரு பல்வேறு பரிமாணங்களில் விளங்கப்படக்கூடியது. பொதுவாக ஒழுங்கமைந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிக்கோள்களை வினைத்திறனுடனும்இவிளைதிறனுடனும் அடைவதற்கு தமது நிறுவன ஒழுங்கமைப்பையூம் வளங்களையூம் திட்டமிட்டு வழிப்படுத்தி ஒழுங்கமைத்து மேற்பார்வைசெய்து ஒருங்கிணைத்துக்கொள்ளும் உபாயங்களும் நுட்பங்களுமே முகாமை என்று கூறப்படுகிறது.எனவே பாடசாலை தனது அங்கீகரிக்கப்பட்ட கல்விக்குறிக்கோள்களை அடைவதற்கு வழிமுறைகளை தீர்மானித்தல் வேண்டும். இவை தமது வழிமுறைகளை காணும்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. புhடசாலைகளும் ஒழுங்கமைந்தநிறுவனமாகும் இவை சமூக பொருளாதார அரசியல் கலாசார தொழில்நுட்ப பரவல் போன்றவற்றால் ;;;;;;;;;;பலஇடையூ+றுகளை சந்தித்துக்கொள்கின்றன. தேசியவிளைவூகளான மக்கள் பண்பு விருத்தி மற்றும் மனிதவள விருத்தி என்பவற்றை சிறந்தமுறையில் உருவாக்க அதிபர் முக்கியமானவர் இவர் பாடசாலையின் சிறந்தமுகாமையாளராக இருப்பதனால் நாட்டின் குறிக்கோள்களை அடையமுடியூம்.
பாடசாiபைற்றிய சிந்தனை மாற்றம் தற்பொழுது உலகளாவியரீதியில் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்திற்கு ஏற்ப கல்விவடிவமைக்கப்டுகின்றது. மாணவன் உற்பத்திப்பொருளாக கணிக்கப்படுகின்றான். இவ்உலகளாவிய மாற்றங்களை நாமும் ஏற்றுக்கொள்ளும்போது முகாமைத்துவக்கட்டமைப்புக்குள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியதாகின்றது. பாடசாலை உயர்மட்ட அணியினரான அதிபர் பிரதிஅதிபர் உதவிஅதிபர் பகுதித்தலைவர்கள் பல்வேறுசந்தர்ப்பங்களில் முரண்பாடுகளை தோற்றுவிப்பவர்களாகவூம்; எதிர்கொள்பவராகவூம் உள்ளனர்.
பாடசாலை பலநூறு தனிநபர்களின் கூட்டுக்கட்டமைப்பாகும். மாணவர்; இஆசிரியர்இஊழியர்இ பெற்றௌர் இ கல்வித்திணைக்களஅலுவலர் சமூகநலன்விரும்பிகள்இவர்களின் கூட்டுச்சேர்மானத்தின்போது பல்வேறுபட்ட முரண்பாடுகள்தோன்ற வாய்பபுண்டு. முரண்பாடுகள் படிப்படியாகபரவி குழுநிலைஅம்சங்களாக வளர்;ச்சிபெறுவதுண்டு. எனவே இக்கட்டமைப்பை நிர்வகிக்கின்ற அதிபர் சிறந்தமுகாமை எண்ணக்கருவை வளர்த்தெடுப்பதன் மூலமே சமூகம் எதிர்பார்க்க்pன்ற பிரஜையை உருவாக்கமுடியூம்.
பொதுவாக எமது பாடசாலையை பொறுத்தவரை பல்வேறுபட்டகாரணங்களை கூறமுடியூம் அதிபர் அதிகாரங்களை தன்னகத்தே குவித்துவைத்திருத்தல் பரவலாக்கம் செய்யாதுஇருப்பதனால் இராணுவக்கட்டமைப்பமாதிரி கட்டளைக்காக காத்துநிற்கவேண்டிஉள்ளது. இதன்காரணமாக ஆசிரியரிடத்தே மனரீதியான தன்னிறைவூம் திருப்தியூம் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனைய பதவிநிலைகள் பகடைகாய்களாக உள்ளன அவர்களும்; திருப்தியைகாட்டுவதில்லை நீண்டகாலஅடிப்படையில் பாடசாலை தனது பொலிவை இழக்க இது ஏதுவாக அமையூம். நான் என்றுசிந்திக்காது நாம் என்று சிந்திக்க அதிபர் முயலவேண்டும் தகுதியூம் தலைமைத்துவமும் கூட்டுணர்வூம் பெற்றௌர் பங்களிப்பை அதிகரிக்க ஈடுபாடுகொண்ட அதிபர் தேவை கற்கும் ஆர்வமும் ஆசிரியர்; ஒழுக்கத்தை முன்னேற்றும் விருப்பமும் கொண்டவராக அதிபர் அமைதல்வேண்டும் எமது பாடசாலையில் இது குதிரைக்கொம்பாக உள்ளது. தகைமை தேர்ச்சி மாணவர் பகுத்தறிவூசிந்தனை வளர்ப்பதில்; ஈடுபாடு பயனுறுதிகொண்ட மாணவர் ஒழுக்கமேம்பாடு பெற்றௌர் தொடர்பு என்பவற்றை அதிபர்வளர்த்தெடுக்கவேண்டும். ஆசிரியரின் நலனில் அதிபர்; அக்கறைகொண்டவராக இருத்தல் வேண்டும் பெரும்பாலும் ஆண்;;;;;அதிபர்கள் பெண் ஆசிரியர்களின் நலன்களில் அக்கறை கொண்டவராக இருத்தல் பாடசாலை முகாமையில் பல இடையூ+றுகளை ஏற்படுத்தும். சமூகம் ஏற்றுக்கொள்கின்ற நியமங்களை அனுசரிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.பாடசாலையின் நாளாந்த பணிகளில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதில் தொடர்புடைய ஆட்களை நன்கு விளங்கிக்கொண்டு அதற்கேற்ப தமது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும்.அத்தகைய நிலையிலேயே ஆட்களுடன் முரண்படாது அதேசமயம் பணிகளையூம் நிறைவேற்றமுடியூம்.. ஆனால் எமது அதிபர்கள் பிரிட்டிஸ்காலத்து ஆட்சிமுறையிலேயே முகாமைத்துவத்தை கருதுகின்றார்கள். பொதுவாக வழமையாக அதிபர் மேற்கொள்ளும் நடத்தைகள் தவறானதாக பொருத்தக்கேடானதாக அமையமுடியூம் இத்தகைய நிலமைகளில் சுயவிமர்சனப்பாங்குள்ளவராகவூம் கீழ் பணியாற்றும் ;ஆசிரியரின் கருத்துக்களை கேட்கக்கூடியவராகவூம் இருத்தல் வேண்டும் அவ்வாறு அதிபர்கள் இல்லை நான் பிடிச்ச முயலுக்கே மூன்று கால்கள் என வாழ்கிறார்கள்.
தான்; நிறைய கற்பதுடன் ஏனைய சகபாடிகள் உயர்கல்வி கற்பதற்கும் பதவிஉயர்வூ பெறுவதற்கும் மேலதிகபதவிகளைப்;பெறுவதற்கும் அதிபர் உதவூதல் வேண்டும் சம்பளஉயர்வூளை உரியகாலத்தில் பெற்றுக்கொள்ள தடையாக இருத்தல் கூடாது ஆனால்; பெரும்பாலும் எமது அதிபர்கள் பழிவாங்கும் நடவடிக்கைக்காக இதனையே துருப்புச்சீட்டாக இதனையே கையாண்டு ஆசிரியர்களை பழிவாங்குகின்றார்கள். பெரும்பாலும் எங்கள் அதிபர் சுற்றுநிருபங்கள் நியமங்களை பின்பற்றி நடப்பதனால் சலிப்பு உண்டாகின்றது.
அதிபர் பாடசாலைக்கு வெளியே ஆசிரியர் மாணவர் பெற்றௌர்களின் சொந்தவைபவங்கள் நலன்கள்கலந்துகொண்டு உணர்வூகளை பகிர்ந்துஉதவி வழங்குதல் வேண்டும். இதுதனிநபர் உறவில் நம்பகத்தன்மையை ஏறப்படுத்தும். ஆனால் பெரும்பாலான அதிபர்கள்; இவ்வாறு இல்லை தமது குடும்பம் தொழில் ரீதியான பதவி என தம் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றார்கள். பெற்றௌரின் எதிர்பார்ப்பு எனது பிள்ளைகள் சிறந்த கல்வியை கற்று பொருளாதாரத்தை ஈட்டவேண்டும் என்பதாகும் . பிள்ளை பற்றி ஆசிரியரின் எதிர்பார்பு சமூகம் ஏற்றுக்கொள்கின்ற நியமங்களுக்கு அமைய மாணவனை உருவாக்கி அவனை உலகிற்கு அனுப்புதல் வேண்டும் அதாவது நற்பிரஜை அனுப்பதல் . இஙூகு முரண்பாடுகளை காணலாம.; பொதுவாக பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பினால் போதும் பிள்ளை படிப்பான் என்ற எண்ணக்கரு பெற்றார்களிடத்தே உண்டு. இது தவறானது பிள்ளைகளின் நலன்பற்றி ஆசிரியரிடத்தே தெரிந்து ஆசிரியருடன் இணைந்து செயற்பவதுடன் பெற்றார் பிள்ளையை நன்றாக வளர்த்தெடுக்க முடியூம். பேற்றார்கள் ஆசிரியரை சந்திப்பதற்கு பின்வரும் சந்தர்ப்பங்கள் அமையப்பெறுகின்றதுவிளையாட்டுப்போட்டிஇ பரிசளிப்புவிழாஇ அதிபர்தினவிழாஇ வருடாந்த பாடசாலை அபிவிருத்திச்சங்க பொதுக்கூட்டம் இ வினாத்தாள்களை பார்வையிடுவதற்கான தவனை சந்தர்ப்பங்கள் ஆகும்.ஆனால் இச்சந்தர்ப்பங்களை பெற்றார்கள் பயன்படுத்திக்கொள்வதில்லை வந்தோம் கையெழுத்திட்டோம் எல்லாம் ஆசிரிய்;ர்கள்; பார்த்துக்கொள்வார்கள் பிள்ளைகளின் வளர்ச்சி உங்கள் கையில் என வாய்வார்த்தையூடன் ஒடிப்போய்விடுகிறார்கள் . சேர் நல்லா அடியூங்கோ நாங்கள் கேட்க வரமாட்டம் என்று நசூக்கான வார்த்தைகளை பிரயோகித்து விட்டு செல்கின்றார்கள். புல வழிகளிலும் ;ஆசிரியர் பெற்றௌரையிட்டு இவ்வகையில் புளகாங்கிதம் அடைந்தாலும் மாணவனின் வளர்ச்சி பற்றி ஆசிரியர்;மட்டும் சிந்திக்கHது பெற்றௌரும் சிந்திக்கவேண்டும் பிள்ளை தொடர்பான பலயினங்களை பெற்றௌரும் சிந்திக்கவேண்டும்.பொதுவாக போட்டிகளில்; மாணவன் வெற்றியீட்டுகின்றபோது ஆசிரியரை வாழ்த்தும் பெற்றார்கள் பரிசு கிடைக்கப்பபெறாதவிடத்து ஆசியரையே பரிசு கெடுப்பது வழமை. இது பொதுவாக கற்ற பெற்றௌரிடத்தில் உள்ள குறைபாடு. தனது பிள்ளையை போட்டிக்கு தெரிந்துகொள்ளாதவிடத்து ஆசிரியரை குறைகூறுவது முரண்பாடுகளை வளர்த்துக்கொள்ளும்.ஆசிரியர்களிடத்தேயூம் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வல்;லமையம் அவர்களை பணிமாற்றம் செய்யூம் திறனும் பெற்றௌரிடத்தே உண்டு இது எமது கல்விப்புலம் சார்ந்த நிலையில் மாபெரும் குறைபாடு ஆகும். மாணவனின் நலனில் அக்கறை கொண்ட ஆசிரியர் ஆயின் பெற்றௌர்களை இடையிடையே அழைத்து மாணவனின் ;நலன் பற்றி விசாரிப்பதுடன்; நல் ஆலோசனை வழங்கவேண்டும். அவனின் பலயீனங்ககளை களைவதற்கு கல்விஅறிவூகுறைந்த பெற்றாருக்கு ஆலோசனை வழிகாட்டலைமேற்கொள்ள வேண்டும்.
புhடசாலைகள் எல்லா நாடுகளிலும் அவற்றின் மனித மற்றும் சமூகபொருளாதாரஅபிவிருத்திகளில் முக்கியமான பங்கு வகிக்கும் நிறுவனங்களின் முதன்மையானவை .குடும்பங்களின் பிள்ளைகள் பிறந்தாலும் வளர்ந்தாலும் சமூகத்தில் பொருத்திக்கொள்வதற்கும் சமூகத்திற்கு இணக்கமான பிரசையாக மாறவதற்கும் சில அறிவூம் திறன்களும் நம்பிக்கைகளும் நேர்மனப்பாங்குகளும் உருவாக்;க பாடசாலை பங்காற்றவேண்டும் இவற்றை பெற்றார் நிறைவான முறையில் வழங்க முடியாதுஎனவே அவற்றை ஆசிரியர்கள் வழங்குவதற்கு உதவூபவராக பெற்றார்; இருத்தல் வேண்டும் .தொகுத்து நோக்கும் போது சுபீட்சமான எதிர்காலத்தை கட்டிஎழுப்ப எமது தேசத்தின் ஜக்கியத்தைபேண ஆசிரியர் முக்கியம் பெறுகின்றார் அவர் அதிபருடன் பெற்றொருடன் நல்உறவை ஏற்படுத்துவதன் மூலம் வளமான எதிர்காலம் கட்டிஎழுப்பப்பட இலங்கையில் வாய்ப்புண்டு இதோபோல் இதன் தலைமகனான அதிபர் முகாமைபற்றிய எண்ணக்கருவை நன்கு விளங்கிக்கொண்டவராகவூம் சமூகம் பற்றி சிந்திக்கின்றவராக அமைவாராயின் வளமான சமூகம் கட்டிஎழுப்பப்படும்

லேபிள்கள்: